என் மலர்
நீங்கள் தேடியது "Apply"
- சேலம் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடி யிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.
- பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.
சேலம்:
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி, தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்,பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள். நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை, கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக சேலம் மாவட்டத்தில் செயல்ப டுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடி யிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள்,உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலை மையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளமான www.tnpcb.gov.in
பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும் எனவே தகுதி
யானவர்கள் விண்ணப்பிக்கு மாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
- 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்–குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-
நாமக்கல் 50 சதவீத மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
நடப்பாண்டில் மானிய கோரிக்–கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடையும் விதமாக சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு 200 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த விவசாயத்தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
முத்திரை தாள் கட்டணத்தில் விலக்கு இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிலம் வாங்க உத்தேசியுள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் அழகு கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
- பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலம் புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், சுயதொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & hair Dressing) பயிற்சி தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.
இதில் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development of India) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம்.சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோவே வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பத்தினை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவும் வகையில், தேர்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வு வெற்றியாளர்கள் ஆகியோர் https://bit.ly/facultyregistrationform என்ற Goolge Link-ல் உள்ள விண்ணப்பத்தினை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04329228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04329228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகு பவர்களுக்கு உதவும் வகையில், கைதேர்ந்த பயிற்சியா ளர்களை கொண்டு பயிற்சி வகுப்பு கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டி த்தேர்வு வெற்றியாளர்கள் ஆகியோர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04329228641 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055914 என்ற கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது
- இத்திட்டம் தொடர்பான பணிகளில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது- பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 10 வட்டார ஒருங்கி ணைப்பாளர் பணியிட த்திற்கு பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள் : ஒரு பட்டப்படிப்புடன் கணினியில் 6 மாத கால சான்றிதழ் MS OFFICE பெற்றிருத்தல் வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும், இத்திட்டம் தொடர்பான பணிகளில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய வட்டாரத்திற்குள் வசிப்ப வராக இருத்தல் வேண்டும். ஊதியமாக மாதம் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். தகுதிக ளையுடைய விண்ணப்ப தாரர்கள் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலகம் பெர ம்பலூர் என்ற முகவரியில் வரும் 20ம்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
- ஆதிதிராவிடர், பழங்குடியின முதல் தலைமுறை இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
- இந்த திட்டத்தின் கீழ் இலக்கீட்டில் 25 சதவீதம் நகரும் அலகு விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை (NEEDS) மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சமாக வழங்கப்படுகிறது.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசிய மயமா க்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் மற்றும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இலக்கீட்டில் 25 சதவீதம் நகரும் அலகு விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர்களிடம் இருந்து எண்ணிக்கையில் கட்டுபாடுகளின்றி விண்ணப்பங்கள் பெற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
விண்ணப்பங்கள் வணிக நோக்கத்திற்கான (Commercial Purposes only) பயண வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஜே.சி.பி, ரோடு ரோலர், கலவை எந்திரம் டேங்கர் டிரக், கிரேன்கள் மற்றும் போர்க்லிப்ட் கருவி கள், காங்கிரீட் மிக்சர் கருவிகள், ஆழ்துளை கிணறு வாகனங்கள், நடமாடும் உணவக வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய தொழில்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை – 630 562 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 89255 33989 மற்றும் 89255 33990 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலக அலுவலகத்தை 04328-296213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
பெரம்பலூர்:
இந்திய அரசு, இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேசிய இளையோர் தொண்டராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய அரசு, இளையோர்களின் வளங்களையும், திறன்களையும் ஒருங்கிணைத்து தேச நிர்மாணப்பணியில் ஈடுபடும் பொருட்டு தன்னார்வ இளையோர் குழுக்களை உருவாக்க எண்ணுகிறது.
அதன்படி சுகாதாரம், கல்வி, பாலின பாகுபாடு போன்ற சமூக பிரச்சினைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், பிரசாரங்களையும் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அவசர காலத்தில் நிர்வாகத்திற்கு உதவவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் தாங்கள் அழைக்கப்படலாம். கல்வி தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 1.4.2023 அன்று 18 முதல் 29 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும் (மாணவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்).
மதிப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் (அதிகப்பட்சம் 2 ஆண்டுகளுக்கு) மட்டும் வழங்கப்படும். இப்பணியினை அரசு நிரந்தர பணியாக சட்டப்படி கோர இயலாது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள முகவரி www.nyks.nic.in-ல் திட்டத்தின் முழு விவரங்களையும், விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து அல்லது பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட இளையோர் அலுவலர் அலுவலகத்தில் நேரில் பெற்று, வருகிற 9-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளையோர் அலுவலக அலுவலகத்தை 04328-296213 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
- விவசாய நிலம் வாங்க ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது
- இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான http://application.tahdco.com., http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, அவர்கள் சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி இந்த ஆண்டு 200 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த விவசாய தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையிலும் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். மேலும் நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான http://application.tahdco.com., http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் மற்றும் துரிதமின் இணைப்பு திட்டம் ஆகிய விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு மானியம் பெற்று பயனடைந்த பயனாளிகள், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் "ஒருதுளி அதிகப்பயிர்" திட்டத்திலும் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலைதுறையை அணுகுமாறு தாட்கோ மேலாண்மை இயக்குனரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.
- இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம்.
சேலம்:
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், அதன் தன்னாட்சி நிறுவனமாகிய இந்தியா நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பும் இணைந்து இளையோர் கலந்துரையாடல் - 2047 எனும் நிகழ்ச்சியை சமூக அடிப்படை மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடத்த உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த சமூக மேம்பாட்டு வல்லுநர்கள் மற்றும் அறிஞர்கள் தலைமை யிலான இளையோர் கலந்துரையாடல், 5 உறுதிமொழிகள் குறித்த நேர்மறை விவாதம் நடை பெறும். இதில் குறைந்த பட்சம் 500 இளையோர் (இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்) பங்கேற்பர்.
இதன் நிறைவில் எதிர்கால இந்தியாவிற்கான திட்டங்கள் உருவாக ஆணை செய்வார்கள். இந்நிகழ்ச்சியை சிறப்பாக திட்டமிட்டு அமைப்ப தற்கான செலவு தொகை யாக ரூ.20 ஆயிரம் பொறுப்பேற்று நடத்தும் சமூக அடிப்படை நிறுவ னத்திற்கு நிகழ்ச்சி முடிந்தபின் தரப்படும்.
இந்த நிகழ்வை பொறுப்பேற்று நடத்த விரும்பும் சமூக அடிப்படை நிறுவனங்கள் நேரு யுவ கேந்திராவை அனுகி இதற்கான விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிப்போர் எவ்வித அரசியல், கட்சி சார்பற்றவர்களாகவும், எந்த வித களங்கமும், இல்லாத முன்வரலாறு கொண்டவர்களாகவும் இருப்பதோடு நிறுவனங்கள் மீது எவ்வித குற்ற வழக்கும் இருக்கக் கூடாது.
மேலும் இளையோர் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தி முடிக்க போதிய நிறுவன அமைப்பு பலம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் டர்வின் சார்லஸ்டன் தெரிவித்து உள்ளார்.
- அழகு சாதனவியல், சிகை அலங்காரம் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணாக்கர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலுள்ள மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்கு வதற்கும் அழகு சாதன வியல் மற்றும் சிகை அலங்காரம் செய்வதற்கான பயிற்சியினை தாட்கோ சார்பில் அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் ஆதி திராவிடர், பழங்குடியி னத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும்.
சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம். மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
- நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் குதிரைத் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிராவி டர்களுக்கு 900 எண்ணிக்கை யும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையிலும் மொத்தம் 1000 விவசா யிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.27 ஆயரத்து 500-ம், 10 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பங்குத் தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோ லை அளிப்பவ ர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும், தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், "அ" பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைப்படம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண். 106, முதல் தளம், பழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை-625 020 என்ற முகவரியிலும், 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.