என் மலர்
நீங்கள் தேடியது "Assembly"
- முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.
- ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது.
மேட்டூர்:
தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.
இதில், மேட்டூர் நகர தலைவர் எஸ்.பி.ராஜா தலைமை வகித்தார். சங்க செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வீட்டுமனை இல்லாத சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் இறந்தால் அவருடைய குடும்பத்தாருக்கு சங்கம் சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது. சங்க உறுப்பினர்களின் குடும்ப பெண்கள் பிரசவ செலவிற்கு ரூ.3000, திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ரூ.1500 சங்கத்தின் சார்பாக வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
- மயிலாப்பூரை சுற்றுலாத் துறையும், அறநிலையதுறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்ற உதவிட வேண்டும்.
- ஆர்.ஏ. புரம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வள்ளீஸ்வரன் தோட்டத்திற்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்ட வேண்டும்.
சென்னை:
சட்டசபையில் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-
மாநகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணத்தை தாயுள்ளதோடு, பெண்களின் உணர்வுகளையும், சுமைகளையும் புரிந்து கொண்டு எந்த மாநிலமும் செய்யாத திட்டத்தை நம் முதல்வர் முன்மாதிரியாக செய்திருக்கிறார் அதுதான் "திராவிட மாடல் ஆட்சி" என்று சொல்லி எனது தொகுதியின் கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறேன்.
கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு கலைஞருக்கு பிடித்த இடம் மெரினா கடற்கரை, மெரினா கடற்கரை ஓரமாக மீனவ குடியிருப்புகளை ஒட்டியுள்ள லூப் சாலைக்கு முத்தமிழ் அறிஞர் பெயரை சூட்ட வேண்டும்.
நிறைவடையும் தருவாயில் உள்ள ஆர்.ஏ. புரம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வள்ளீஸ்வரன் தோட்டத்திற்கு கலைஞர் நகர் என்று பெயர் சூட்ட வேண்டும்.
எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டிடங்கள் பழுதடைந்த காரணத்தினால் மக்களிடம் பேசி 30 மாதங்களில் கட்டி முடித்து தருகிறோம் என்று உறுதியளிக்கிறோம். ஆனால் அது சரியாக பின்பற்றபடவில்லை. காரணம் இன்றைய சூழ்நிலையில் வீட்டு வாடகை அதிக சுமையாக இருக்கிற காரணத்தால் மக்கள் கொந்தளிக்கின்றனர்.
உதாரணம் தேனாம்பேட்டை வன்னியபுரம் காலி செய்து 11 மாதங்கள் ஆகியும் அடிக்கல் நாட்டப்படவில்லை அதேபோல், நாட்டான் தோட்டம், பருவா நகர், ஆண்டிமான்ய தோட் டம், பிள்ளையார் கோயில் தோட்டம், முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் மக்கள் வீட்டை காலி செய்துதர தயார் நிலையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்திட வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மயிலாபூருக்கு என்று ஒரு தனிபேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும். மயிலாப்பூரை சுற்றுலாத் துறையும் அறநிலையதுறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்ற உதவிட வேண்டும்.
மயிலாப்பூரில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வெங்கடேச அக்ரகாரம் சாலையில் உள்ள பழைய வணிகவளாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் மற்றும் மல்ட்டி லவல் கார்பார்க்கிங் கட்டி கொடுத்தால் கோயிலுக்கு வருமானமும், மயிலாப்பூரில் போக்குவரத்து நெரிசலும் குறையும். கால்நடைகள் பராமரிக்க ஒரு தனி இடம் சென்னை மாநகராட்சி அமைத்துதர வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் வாடகையை பல மடங்கு உயர்த்திய காரணத்தால் இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அதிகமான நிலுவை தொகை கட்ட கூடிய சூழ்நிலை இருக்கிறது. இதற்கு அரசு ஒரு சரியான, சுமூகமான முடிவை ஏற் படுத்தி ஏழை மக்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.
மீனவ மக்கள் அதிகமாக வசிக்கும் வாரிய குடியிருப்பு பகுதியில் சிங்கார வேலவரின் மார்பளவு சிலை அமைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- தென்பெண்ணையாற்றின் குறுக்கே, ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை, ஒரே மாதத்தில் உடைந்து சிதறியதால், சுமார் 62 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது
- விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட நரியாற்றினை புனரமைத்துத் தர வேண்டும். விழுப்புரம் நகர எல்லைக்குட்பட்ட வி.மருதூர் ஏரியை புனரமைத்துத் தர வேண்டும்.
விழுப்புரம்:
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகியவற்றுக்கான மானியக்கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தின் போது விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமனன் தொகுதியின் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தார் அதன்படி, கடந்த ஆட்சியில் விழுப்புரம் தொகுதியில் தளவானூர் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே, ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை, ஒரே மாதத்தில் உடைந்து சிதறியதால், சுமார் 62 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. எனவே, வெகு விரைவில் தளவானூர் அணைக்கட்டை கட்டி முடிக்க வேண்டும். விழுப்புரம் தொகுதி வேலியம்பாக்கம், திருப்பாச்சலூர், பில்லூர், சேர்ந்தனூர், அரசமங்கலம் மற்றும் ஏ.கே .குச்சிப்பாளையம் கிராமங்களில் மலற்றாற்றில், வெள்ளத்தடுப்பு கரைகளும், தடுப்பு சுவரும் அமைத்துத்தர வேண்டும். விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட நரியாற்றினை புனரமைத்துத் தர வேண்டும். விழுப்புரம் நகர எல்லைக்குட்பட்ட வி.மருதூர் ஏரியை புனரமைத்துத் தர வேண்டும்.
விழுப்புரம் தொகுதி கோலியனூர் வாய்காலின் எஞ்சியுள்ள பகுதியில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், தடுப்பு சுவர் அமைத்திடவும் வேண்டும். பில்லூர் - சேர்ந்தனூர் இடையே மலற்றாற்றில் அமைந்துள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தரவேண்டும். வி.புதூரில் இருந்து கரைமேடு வழியாக கெங்கராம்பாளையம் செல்லும் சுமார் 4 கி.மீ சாலையை ஊரக வளர்ச்சித் துறையிடமிருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றி புனாரமைத்து தரவேண்டும். வளவனூர் - பூவரசன்குப்பம் சாலையை முழுமையாக அகலப்படுத்தித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் பேசினார்.
- சிவகங்கையில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
- சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
சிவகங்கை
சிவகங்கையில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சென்ற பின்னர் சோதனைகளை எல்லாம் தகர்த்து பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு சிவகங்கை மாவட்டம் பெற்ற புண்ணியமாகும் . சிவகங்கை மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செய லாளர்கள் கருணாகரன், செல்வமணி, ஸ்டீபன்அருள்சாமி, சேவிவியர்தாஸ், சிவாஜி, கோபி, ஜெகதீஸ்வரன், பாரதிராஜன், சோனைரவி.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர் ராமநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
- புதுவையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- தொற்று அதிகரித்து வருவதால் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி 827 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் புதுவையில் 55 நபர்களுக்கும், காரைக்காலில் 23 நபர்களுக்கும், ஏனாமில் 2 நபர்களும், மாகியில் 2 நபர்களும் என 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 271 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று அதிகரித்து வருவதால் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வருவாய்துறை செயலரும், கலெக்டருமான வல்லவன் வெளியிட்டுள்ளார்.
புதுவை சட்டமன்றத்திற்குள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அனைத்து அமைச்சர்கள் அலுவலகத்திலும், முதல்-அமைச்சர் அலுவலகத்திலும் ஒட்டப்பட்டுள்ளது.
நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பார்க்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவையை பொருத்தவரை மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தளங்கள், வர்த்தக பகுதி போன்ற இடங்களில் மக்கள் முக கவசம் இல்லாமல் சுற்றி வருகின்றனர். அவர்களும் தாமாக முன்வந்து முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக கோவில்பட்டி இருந்து வருகிறது.
- எனவே கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.
கோவில்பட்டி:
சட்டசபையில் நடைபெற்ற வணிகவரி மற்றும் செய்திதுறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடக்கி வைத்து கடம்பூர்ராஜு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மையப் பகுதியாக கோவில் பட்டி இருந்து வருகிறது. எனவே கோவில்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இங்கு விவசாயத்திற்கு மாற்றாக, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக தீப்பெட்டி தொழில் உள்ளது.
தறபோது சீனாவில் இருந்து வருகிற லைட்டர் தீப்பெட்டி தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. எனவே மாநில அரசு லைட்டருக்கு தடை விதித்து பல்லாயிரக்க ணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை கணக்கில் பார்த்தால் சராசரியாக 52 சதவீதம் தான் மழை பெய்துள்ளது.
நிலத்தடிநீர் மிகவும் குறைந்த நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தை அரசு உடனடியாக இந்த ஆண்டு வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.
- தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட, தெற்கு பகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று திருநகரில் நடை பெற்றது. பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
புதிய உறுப்பினர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும். கட்சி கொள்கைகளை கூறி அதிக இளைஞர்களை உறுப்பி னர்களாக்க வேண்டும். தி.மு.க.வின் திட்டங்களை பொது மக்களிடம் தெரி வித்து வீடுகள் தோறும் பாரா ளுமன்ற தேர்த லுக்கான பிரசாரத்தை தொடங்குங்கள்.
விரைவில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட உள்ளது. மகளிர்கள் அனைவரும் தி.மு.க. உறுப்பினர்களாக சேர்வதற்கு முன் வரு வார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் இலக்கு வன் கலந்து கொண்டு பேசும்போது, தொகுதிக்கு 50 ஆயிரம் உறுப்பினர்கள் வீதம் மாநிலம் முழுவதும் 1 கோடி புதிய உறுப்பி னர்களை சேர்க்க கட்சியின் தலைவர் மு. க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாம் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, வட்டச் செயலாளர் சாமி வேல், மாநில நிர்வாகி கொடி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
- முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.
விழுப்புரம் :
தமிழக சட்டசபையில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி பேசியதாவது:-
எனது கோரிக்கையை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்னியூர் பகுதியில் தீயணைப்பு மீட்பு நிலையம் வழங்கி கடந்த திங்கட்கிழமை அன்று காணொலி கட்சி மூலம் திறந்த முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராமங்களில் குறைந்த மின் பற்றாக்குறை உள்ளதால் காணை ஊராட்சி பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.
கல்பட்டு ஊராட்சியில் இருந்து நத்தமேடு. ஆரியூர் ஊராட்சியில் இருந்து சாணிமேடு, மாம்பழப்பட்டு ஊராட்சியில் இருந்து ஒட்டங்காடுவெட்டி,கெடார் ஊராட்சியில் இருந்து செல்லங்குப்பம், கருவாச்சியிலிருந்து இருந்து புதுகருவாச்சி, பனமலை ஊராட்சியில் இருந்து பனமலைபேட்டை, பனமலை ஊராட்சியில் இருந்து உமையாள்புரம் மற்றும் அய்யூர் அகரம் ஊராட்சியில் இருந்து சிந்தாமணி ஆகிய ஊராட்சிகளை பிரித்து தருமாறு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். விக்கிர வாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்ப ணித்துறை கட்டுப்பா ட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர் தேக்கமாக மேம்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
வாக்கூர் ஊராட்சி மேல்பாதியில் பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தருமாறு நீர்வளத்துறை அமைச்சரை கேட்டு க்கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் கல்பட்டு மற்றும் பனம லைபேட்டை ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவும், வேம்பி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையமாக தரம் உயர்த்தி தரவும். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி (100 மாணவியர்கள்) கட்டிடம் வி.சாலையில் கட்டும் பணிக்கு ரூ.4.10 கோடியும் நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. இந்த 4 பணிகள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கட்டணம் செலுத்தி மண் எடுக்கும் முறைக்கு அனுமதி வழங்க வேண்டும்.
- அரசின் அனுமதியோடு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்
நெல்லை:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
அதில் பேசும்போது, செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருபவர்கள் மற்றும் விவசாயிகள், ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களால், அதை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அதனால், 2011-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தபடி, அதாவது, அரசுக்குச் சொந்தமான குளங்கள், ஏரிகள் மற்றும் தனியார் நிலங்களில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு, அரசாங்கத்திடம் உரிய கட்டணம் செலுத்தி, அந்த வண்டல் மண்ணை எடுக்கும் முறைக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான மண்பாண்ட தொழில் செய்வோர், செங்கள் சூளை நடத்துவோர் மற்றும் விவசாயிகள் பயன் அடைவார்கள், என்றார்.
அமைச்சர் பதில்
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து கூறியதாவது:-
செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட கலைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எளிதாக கிடைக்கும் வகையில் இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 வகைகள்
அரசு விதிகளின்படி மூன்று வகையில், அவர்கள் அரசின் அனுமதியோடு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். முதல் விதியின்படி, மணல் எடுக்கக்கூடிய பட்டா நிலத்தில், அங்கே மணல் குவாரி செயல்படவில்லை என்கிற சான்றிதழ் பெற்று, ஒரு வருட காலத்துக்கு அனுமதி பெற்று மணல் எடுக்கலாம்.
இரண்டாவது, உரிய இடத்தில் மணல் எடுக்க, மாவட்ட கலெக்டரிடம் அனுமதிக் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மணல் எடுக்கக்கூடிய இடத்தில் குவாரி செயல்படவில்லை என்கிற தடையில்லாச் சான்று பெற வேண்டும். கலெக்டர் அனுமதி தந்த பிறகு, ஒன்றரை மீட்டர் ஆழம் வரை அங்கே மணல் எடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாவது, ஏரி, குளம் ஆகியவற்றில் மணல் எடுக்கக்கூடிய அனுமதியை மாவட்ட கலெக்டரே வழங்குவார். அந்த அனுமதியைப் பெற உரிமைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.
செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட கலைஞர்கள், விவசாயிகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்கிற வகையில், முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், அவர்கள் வண்டல் மண் எடுக்க எளிமையான விதிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
- நாகூர் அனிபா நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
- நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கை விவாதத்தில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
திராவிட இயக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தன்னுடைய குரலால் அரும்பணியாற்றிய அவருக்கு சிறப்பு செய்யும் வகையில், நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
நாகூரில் அவருக்கு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.
மேலும் நாகூர் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.
இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.
- தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மன்றப் பொருளாளர் ராம.முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கோ.முருகன், அனைத்து வியாபரிகள் சங்கத் தலைவர் சேகர், செயலர் குசேலன், அரிமா மாவட்டத் தலைவர் வேலு முன்னிலை வகித்தார்கள்.
அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார். ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் விஜயகுமார் முன்னிலையில் முழு அகவல் படித்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை சன்மார்க்கக் கொடியினை ஏற்றி வைத்தார். ரோட்டரி முன்னாள் தலைவர் ஆறுமுகம், பிரகாசம் சன்மார்க்க இளைஞர் அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சந்திர சேகரன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
- முல்லை பெரியாறு அணையை கர்னல் ஜான் பென்னி குயிக் கடும் போராட்டத்திற்கு இடையில் கட்டி முடித்தார்.
- உண்மை நிலை என்ன என்றும், மூடிய சிலையினை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து பேசியதாவது:-
ஐந்து மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது முல்லை பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை வறட்சியைப் போக்கி 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி ஏற்படுத்தி 10 மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது முல்லை பெரியாறு அணை.
இந்த அணையை தன் சொந்த செலவில், தன் சொத்துக்கள், மனைவியின் நகை ஆகியவற்றையெல்லாம் விற்று, கர்னல் ஜான் பென்னி குயிக் கடும் போராட்டத்திற்கு இடையில் கட்டி முடித்தார். தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற கர்னல் ஜான் பென்னி குயிக்கிற்கு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு மணி மண்டபம் அமைத்து அம்மா திறந்து வைத்தார்.
இந்த அரசு கர்னல் ஜான் பென்னி குயிக்குக்கு லண்டன் மாநகரில் மார்பளவு சிலை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து அமைச்சர்கள், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் திறந்து வைத்தார்கள்.
தற்போது கர்னல் ஜான் பென்னி குயிக் சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும், சிலை சேதமடைந்திருப்பதாகவும் தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த கர்னல் ஜான் பென்னி குயிக்கின் சிலை அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சிலை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளர் பீர்ஒளி என்பவர் தனது பேட்டியில் தமிழ்நாடு அரசாங்கம் எங்களையும், கர்னல் ஜான் பென்னி குயிக்கின் குடும்பத்தாரையும் தொடர்பு கொண்டு லண்டன் மாநகரில் உள்ள கேம்பர்லி பார்க்கில் மார்பளவு சிலை வைக்க வேண்டும் என்றும், ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அட்லாண்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் தமிழக அரசு தொடர்பு கொண்டு ரூ.26 லட்சம் பணத்தை வழங்கியதாகவும், ரூ.92 லட்சம் மொத்தம் செலவானதாகவும், ரூ.20 லட்சம் கர்னல் ஜான் பென்னி குயிக்கின் குடும்பத்தினர் வழங்கியதாகவும், மீதமுள்ள ரூ46 லட்சம் தொகையினை அட்லாண்ட்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்காத காரணத்தினால் அந்நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் லண்டன் மாநகர கவுன்சில் சிலை அகற்றப்படும் என்றும், தற்போது கருப்புத் துணியால் மூடி சீல் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்மை நிலை என்ன என்றும், மூடிய சிலையினை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலை சேதமடைந்திருந்தால், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென்றும், தொடர்ந்து சிலை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் இதே பிரச்சினையை திடீரென கொண்டு வந்துள்ளார். அரசு இதன் விவரங்களை அறிந்து தேவையான நடவடிக்கை எடுக்கும். இது குறித்து முழுமையாக விசாரித்து சபைக்கு அறிவிப்போம்" என்றார்.