என் மலர்
நீங்கள் தேடியது "Assignments"
- இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.
- இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது.
உடுமலை:
மத்திய அரசின் 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைஅமைக்கப்படுகிறது.
உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் குறிஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே அமையும்நான்கு வழிச்சாலையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில்உயர்மட்டபாலம்கட்டும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.இதில் தற்போது உயர் மட்டபாலத்தின் இருபுறங்களையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது. பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த தற்காலிக பாதை வழியாக சென்று வருகின்றன.பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே சாலையின் மேல்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்நதும், அதன் கீழ்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
- இது போன்ற இயக்க பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.
- மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்தம் நகரில் மாநகர தி.மு.க. அலுவலகம் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான துரை. சந்திரசேகரன் , எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி.நீலமேகம் , அண்ணாதுரை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாநகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணா சொன்னது போல் எங்கு சென்றாலும் தி.மு.க.விற்க்கென்று அலுவலகம் இருப்பது அவசியம். மாவட்டங்களில் மாவட்ட கழக அலுவலகங்கள் இருப்பது போல் தஞ்சையில் மாநகர தி.மு.க.வுக்கென்று புதிய அலுவலகம் திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாள் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், இது போன்ற இயக்கப் பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.
கனமழை, மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அவ்வப்போது அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப் ஒன்று உள்ளது.
அதை கவனித்து வருவோம். மழைகாலங்களில் தேவைக்கேற்ப்ப பள்ளிகள், மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- கீழ பட்டினச்சேரிக்கும் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம், நாகூர், பட்டினச்சேரியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள் விழுந்தன. ஆடுகள் பலியாயின.
இதையடுத்து அங்குள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கடல் அரிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினேன்.
அப்போது பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரத்தை அரசு உணர்ந்துள்ளதாகவும் எனவே விரைவில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதன்படி விரைந்து அதை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
அதன் அடிப்படையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதுபோல் கீழப் பட்டினச்சேரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையும் விரைவில் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, நாகை நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் அஞ்சலைதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
- நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் ஊராட்சி நர்சரி பகுதியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், வட்டார வன அலுவலர் சுகுணா, மாவட்ட வன அலுவலர் செந்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை அருளாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த ஆண்டு கபிஸ்தலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை செய்து தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கூட்டத்தில் தணிக்கை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், பணிதல பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- காதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேக்கம் ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில், நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பல்லடம் 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் நடைபெற்ற சுகாதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொசு உற்பத்தியை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது :-
பொதுமக்கள் தங்களது வீட்டில் குப்பைகள்,பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொதுமக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது. எனவே பொதுமக்கள் அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.
- ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 21-22-ம் ஆண்டு முதல் ரூ.114 கோடி மனித சக்தி நாள் உருவாக்கப்பட்டு உள்ளது. 22-23-ம் ஆண்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தூய்மை இந்தியா இயக்கத்தில் வல்லம் பேரூராட்சியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.
அதனைப் பின்பற்றி மற்ற பேரூராட்சிகள், நகராட்சிகளில் கழிவுகள் மேலாண்மை அமைக்க ஆலோசிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை துறையில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் பூண்டி, அம்மாபேட்டை வழியாக அந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மின்சாரத் துறையின் மூலம் மாநகராட்சிகளில் நடைபெறும் சாலை விரிவாக்கங்களில் மின்சார துறைகளின் தேவைகளை நிறைவேற்றி தரவும், இரும்புதலையில் மின் துணை நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள மின் இலாகா அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.
அதனை கட்டுப்படுத்துவதற்கு வேளாண்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை சட்டரீதியாக பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.966.62 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீ்ழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.966.62 கோடி மதிப்பீட்டில் பொழுது போக்கு பூங்கா, பஸ் நிலையம், குடிநீர் வினியோகம், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல், குளங்களை பாதுகாத்தல், புதிய பஸ்நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்ட பணிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாகவும், தரமாகவும் முடித்து கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. உத்தரவிட்டார்.
இதில் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.3.32 கோடியில் பணிகள் நடந்து வருவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
- உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலமாக தேசிய ரூர்பன் திட்டம் வாணியங்குடி தொகுப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் வாணியங்குடி, சோழபுரம், சக்கந்தி, காஞ்சிரங்கால், அரசனிமுத்துப்பட்டி, கொட்டகுடி, கீழ்பாத்தி மற்றும் இடையமேலூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தலா ரூ.47.42 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பஞ்சா யத்திலும் சூரிய உலர்த்தி, கடலைமிட்டாய், பால்கோவா உற்பத்தி, கால்நடை தீவனம் உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு ஆகிய 6 எந்திரங்கள் அமைக்கப்பட்டு உற்பத்தி பணி நடைபெற உள்ளது.
உற்பத்தி பணியை அந்தந்த பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் தோட்டக்கலைத்துறை மூலம் எந்திரங்கள் நிறுவும் பணி மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து கிராமத்தில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஹெக்டேர் பரப்ப ளவில் செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை ரூர்பன் நர்சரி செயல்பாடுகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட அலுவலர் வானதி, தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சீர்காழி விளந்திடசமுத்திரம் முதல் பள்ளிவாசல் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
- சாலையின் இருபுறமும் கூடுதலாக அகலப்படுத்தப்பட்டு முழுமையாக தார்சாலை அமைக்கப்படுகிறது.
சீர்காழி:
சீர்காழி விளந்திடசமுத்திரம் முதல் பள்ளிவாசல் வரை சுமார் 800 மீட்டர் தூரம் உள்ள சாலை கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணிக்காக ரூ.1.90கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் சாலையின் இருபுறமும் கூடுதலாக அகலப்படுத்தப்பட்டு முழுமையாக தார்சாலை அமைக்கப்படுகிறது.
இந்த பணிகளை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.
அப்போது சாலை ஆய்வாளர் பிரபு உடனிருந்தார்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.
- தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.
திருவாரூர்:
திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மைய கட்டிடம், மருத்துவ மாணவர் மன்றம் நவீன சமையலறை கூடம் ஆகியவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்விற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது, பான் மசாலா, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.
இப்போது அடிப்படை பணிகளை தொடங்கினாலும் கட்டுமான பணிகளை தொடங்க 6 மாதம் ஆகும்.
மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கிய அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தொடங்கப்பட்ட பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.
மாவட்டத்திற்கு ஒரு அரசு செவிலியர் கல்லூரி என்ற கொள்கை முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கல்லூரி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.
குடிமங்கலம்:
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மரப்பயிர்களுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்ளது. இதனால் அதிகப்படியான இடங்களில் மா விவசாயத்தில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.அதன்படி மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. ஏப்ரல் முதல் இவை காய்ப்புக்கு வரும் என்பதால் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் பூக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் விளைச்சலும் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மாங்கன்றுகள் நட்டு 4 ஆண்டுகளில் இருந்து பலன் தரும். கோடை காலங்களில் இதன் விளைச்சல் உச்சநிலையில் இருக்கும்.இப்பகுதியில் விளையும் மாங்காய்கள் அதிக தசைப்பிடிப்புடன் இனிப்புத்தன்மை நிறைந்ததாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பூக்கள் அதிகம் இருந்தாலும் அவை உதிராமல் இருந்தால் தான் அதிக காய்களை மகசூலாக பெற முடியும்.
குறைவான பராமரிப்பு, கூலி ஆட்கள் தேவை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலரும் மா விவசாயத்திற்கு மாறி கொண்டிருக்கின்றனர். விளைச்சல் அதிகரிப்புக்கு பராமரிப்புப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன.
- முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது.
உடுமலை:
பி.ஏ.பி., பாசன திட்டத்தில் விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை அத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஓட்டுப்பதிவு முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்டக்குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இம்முறையில் முதல் கட்டமாக கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் நிர்வாக முறை இருந்தால் மட்டுமே பாசன திட்டங்கள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும்.
மேலும் தேர்வு செய்யப்படும் பாசன சபை நிர்வாகிகள், தண்ணீர் வழங்குவது, விவசாயிகளுக்கு நீர் பிரித்து கொடுப்பது, வாய்க்கால் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவர். இந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது. பதவியில் இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பின் 8 ஆண்டாக தேர்தல் நடத்துவது இழுபறியாகி வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.
பி.ஏ.பி., திட்டத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்த நிலையில் தொடர்ந்து நடத்த வேண்டிய பகிர்மான குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு தலைவர் தேர்தல் 10 மாதமாக நடத்தப்படவில்லை.தொடர்ந்து நடத்த வேண்டிய தேர்தல்களையும் உடனடியாக நடத்த வேண்டும் என பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட, எண் 2 மற்றும் 3க்கான பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 18ந் தேதி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பகிர்மான குழு தலைவர் மற்றும் 10 பகிர்மான குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 112 பாசன சங்க தலைவர்கள் ஓட்டளித்து 7 பகிர்மான குழு தலைவர் மற்றும் ஒரு பகிர்மான குழுவிற்கு 5 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் 35 பேர் தேர்வு செய்ய வேண்டும்.
கோவை மாவட்ட பகுதியில் தேர்தல் நடந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக பதவிகள் உள்ளதால் திருப்பூர் மாவட்ட பகுதியிலும் உடனடியாக நடத்த வேண்டும். திட்ட குழு தலைவர் தேர்தலையும் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 10-ந்தேதி நடக்கிறது.உடுமலை, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.