என் மலர்
நீங்கள் தேடியது "Auto"
- ஆதரவற்ற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலவசமாக ஆட்டோக்கள் வழங்கப்படும்.
- இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுரை
மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம் 3000. இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற2-ந்தேதி பதவி யேற்க உள்ளார்.
இதை முன்னிட்டு மதுரையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
எங்களது ரோட்டரி சங்கம் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக்கொடுத்து இ-ஆட்டோ வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி களுக்கு சவாரி எடுக்கவும், ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்களின் வருமானம், வாழ்க்கை தரம் உயர ரோட்டரி சங்கம் உறுதுணையாக இருக்கும். 2024-ம் ஆண்டுக்குள் ரூ. 4 கோடி மதிப்பில் ஒரு சங்கத்துக்கு ஒரு ஆட்டோ வீதம் 127 ஆட்டோ ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு வழங்கப்படும்.
சுகாதார வசதி இல்லாத மாணவிகள் பயிலும் அரசு பள்ளியை கண்டறிந்து கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும். 12 மாதங்களில் 12 திட்டங்கள் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வருகிற 1-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மண்டல ஒருங்கிணைப் பாளர் அசோக், உதவி ஆளுநர் கவுசல்யா, ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் நெல்லை பாலு, மகிழ்ந்திரு, மகிழ்வித் திரு திட்ட ஒருங்கிணைப் பாளர் மாதவன் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
- ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை:
மெட்ரோ ரெயில் பயணிகள் தங்களது இருப்பிடத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்லவும், மெட்ரோ நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் பல்வேறு இணைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் இணைப்பு மினி பஸ் சேவை மற்றும் ஆட்டோ இணைப்பு சேவை, திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலைய பயணிகளுக்காக தொடங்கப்பட்டு உள்ளது.
இவற்றை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் மெட்ரோ பயணிகள் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள இடங்களுக்கு பயணிக்க முடியும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப் போக்குவரத்துக்கழக மினி பஸ் திருமங்கலம் மற்றும் கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை இடையே இயக்கப்படுகிறது.
- தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகைகார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யும் வகையில் சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். நகர பஸ்கள் மட்டுமின்றி தொலைதூரம் செல்லும் புறநகர் பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரி ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ் உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் தனியார் பஸ்கள், வாடகைகார்கள், ஆட்டோக்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. வருவாய் பாதிப்பு மட்டுமின்றி இழப்பும் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகன டாக்சியை அனுமதிப்பதால் ஆட்டோக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை. காப்பீடு செலுத்த முடியவில்லை. வாழ்க்கையை நடத்துவதே கடினமாகிவிட்டது. இதனால் 23 வெவ்வேறு வகையான தனியார் போக்குவரத்து வாகன சங்கங்கள் இணைந்து வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தம் செய்கிறோம். அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் கோவில், வீட்டில் கொள்ளை நடந்தது.
- ஆட்டோவை களவாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் ஈஸ்வரன் கோவில் தெரு–வில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.5 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இந்த திருட்டு குறித்து கோவில் நிர்வாகி பிச்சை அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணை நடத்தி இரண்டு சிறுவர்களை கைது செய் தனர்.
வீடு புகுந்து திருட்டு
மதுரை தல்லாகுளம் ராதாகிருஷ்ணன் ரோடு உழவர் சந்தை பகுதியில் வசிப்பவர் ரோஷன் பானு (23). இவர் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவில் வைத்தி–ருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகள் பணம் ரூபாய் 10 ஆயிரத்தை திருடப்பட்டி–ருந்தது.
இந்த சம்பவம் குறித்து ரோஷன் பானு தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பாலை உச்சபரம்பு மேடு ஜானகி அம்மாள் தெருவை சேர்ந்த–வர் ராஜேந்திரன் மகன் முத்துப்பாண்டி (32). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அரசு மருத்துவம–னையை அடுத்த கேண்டீன் அருகே ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.
இவர் அருகில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அந்த ஆட்டோ திருடு போயி–ருந் தது. இதுகுறித்து முத்துப்பாண்டி அரசு மருத்து–வமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட் டோவை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இதில் பெத்தானியாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (42), தத்தனேரி சிவ–காமி நகர் கணேஷ்குமார் (43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடிச்சென்ற ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மதுரை கே.கே.நகரில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார்.
- ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.
மதுரை
மதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (51). கே.கே.நகர் பகுதியில் சொந்த வேலை காரணமாக மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆறுமுகம் சென்றார்.
அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் ஒரே பாதையில் வாகனங்கள் சென்று வந்தன. சுந்தரம் பார்க் அருகே வந்தபோது எதிர்திசையில் ஒரு இருசக்கர வாகனம் ஆட்டோ வின் குறுக்கே வந்துள்ளது. இதனால் பிரேக் அடித்து ஆட்டோவை ஆறுமுகம் நிறுத்த முயன்றார்.
ஆனால் ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் மீனாட்சிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மார்க்கெட் சிக்னல் வளைவில் திரும்புவதற்காக பிரேக் போட்டுள்ளார்.
- அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆவுடை யார்புரம் பாலவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்.
சாலை விபத்து
இவர் மார்க்கெட் அருகே உள்ள பகுதியில் பயணியை இறக்கி விட்டு விட்டு மீண்டும் பழைய பஸ் நிலைய ஸ்டாண்டை நோக்கி ஆட்டோவை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட் சிக்னல் வளைவில் திரும்புவதற்காக பிரேக் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
அதே நேரத்தில் அவர் ஓட்டி வந்த ஆட்டோவும் அவர் மீது கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் மீட்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இது குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆறுமுகத்திற்கு திருமணம் ஆகவில்லை. இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட ஏராளமான வழக்குகள் தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு குற்ற பதிவேட்டில் ரவுடி பட்டியலில் இருந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஆட்டோக்களில் மதுரை அ.தி.மு.க., மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார்.
மதுரையில் ஆகஸ்ட் 20 ந் தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க திருப்பூர் அ.தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாநகரில் ஆட்டோக்களில் விளம்பர பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணியை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் தொடங்கி வைத்தார். மாநகரில் 1 லட்சம் வாகனங்களில் மாநாட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் பணிகள் நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கட்சி நிர்வாகிகள் கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், சி.எஸ்.கண்ணபிரான், ஆண்டவர் பழனிசாமி, சின்னசாமி, யுவராஜ் சரவணன், தனபால், அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
- மோட்டார்சைக்கிளில் வருபவர்களும் அதே பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
தென்காசி:
நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூரில் ஒருபுறம் சாலை போடும் பணி முழுமையாக முடிவுற்ற நிலையில், மற்றொரு பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளன.
குழாயில் உடைப்பு
இதில் சாலை பணி முடிவடைந்த பகுதியில் திடீரென சாலையின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
மேலும் அதே பகுதியில் பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் அதன் வழியே அணிவகுத்து செல்லும்போது பள்ளத்தில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. நேற்று மாலையில் பாவூர்சத்திரம் வழியாக நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ ஒன்று சாலைப்புதூரில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இருப்பினும் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.
கோரிக்கை
அதேபோன்று மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வருபவர்களும் அதே பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர் என்றும், நான்கு வழிச்சாலை பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக சாலைப்புதூரில் சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து செல்லும் பகுதியை சீர் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்,
- மீண்டும் காலையில் வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39). ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.
அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். ஆனால் ஆட்டோ கிடைக்கவில்லை. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் பதிவான ஆட்டோவை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ காணாமல் போனது.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39).
ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.
அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆட்டோவை திருடி சென்றவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாலாஜி மகன் கட்டக்கால் கலியமூர்த்தி என்கிற கலியமூர்த்தி (36) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த திருடி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த கலியமூர்த்தி மீது தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் திருடியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- கழிவு நீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு பைக்கிற்குள் புகுந்துள்ளது.
- வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு அருகில் இருந்த ஆட்டோவின் உள்ளே புகுந்தது.
பைக்கில் புகுந்த பாம்பையும், பொதுமக்கள் பைக்கின் உள்ளே வெந்நீர் ஊற்றி அதனை வெளியேற்றுவதையும் படத்தில் காணலாம்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பகுதியில் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளது. மாநகர பகுதிகளுக்குள் செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இப்பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலைய
கட்டுமான பணி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்ட பின்னர் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்துவரும் சூழலில் பஸ் நிலையத்தை சுற்றி பஸ் நிறுத்தங்கள் அமைக்கப் பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த பஸ் நிலையம் வழியாக நெல்லையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதிக்கு வரக்கூடிய பொதுமக்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு தங்களது பணிகளை மேற்கொள்வார்கள்.
'பைக்'கிள் வாகனத்தில்
புகுந்த பாம்பு
இந்நிலையில் இன்று காலை வழக்கமான பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு நபர் பழைய பஸ் நிலையம் அருகே இருக்கக் கூடிய தனியார் வங்கி முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சென்றபோது அப்பகுதியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று பைக்கிற்குள் புகுந்துள்ளது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வாகனத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்க அவர் வாகனத்தில் இருந்து பாம்பை அப்புறப்படுத்துவதற்கான பல்வேறு கட்ட முயற்சி களை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.
வெந்நீர் ஊற்றினர்
பின்னர் அருகில் இருந்த டீக்கடையில் இருந்து வெந்நீர் வாங்கி வந்து 'பைக்'கிள் ஊற்றிய நிலையில் பாம்பு வாகனத்தில் இருந்து வேகமாக வெளியேறி அருகில் இருந்த மற்றொரு ஆட்டோவின் உள்ளே புகுந்தது.
தொடர்ந்து அங்கிருந்தும் பாம்பை அப்புறப்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு பாம்பை பிடிக்க முயன்றபோது அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் பாம்பு சென்று மறைந்து கொண்டது.
- லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயபுரம்:
பூந்தமல்லி கூடம்பாக்கம் சேர்ந்தவர் இளங்கோ (வயது 44) லாரி டிரைவர். தண்டையார்பேட்டை இளைய முதலில் தெருவை சேர்ந்தவர் மதன்குமார் (37) சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்து காசிமேடு சிங்காரவேலன் நகரில் லாரி மற்றும் ஆட்டோவை நிறுத்திவிட்டு சென்றனர்.
பின்னர் லாரி ஆட்டோவின் கண்ணாடிகள் மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி இளங்கோ, மதன்குமார் ஆகியோர் காசிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
அதில் காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த பிரதீப் (20), அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சூர்யா (26) ஆகியோர் குடி போதையில் லாரி, ஆட்டோ கண்ணாடியில் கல்லை வைத்து உடைத்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பிரதீப் மீது 1 கொலை, 3 கொலை முயற்சி உள்பட 13 வழக்குகளும், சூர்யா மீது 1 கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும் உள்ளன. இருவரும் ரவுடிப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.