என் மலர்
நீங்கள் தேடியது "bar"
- திருமங்கலம் அருகில் உள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் பட்டிமன்றம் நடந்தது.
- ‘‘இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
மதுரை
திருமங்கலம் அருகில் உள்ள ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் ஷகீலா ஷா ஆகியோது ஏற்பாட்டில் ''இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் நிர்மலாதேவி வரவேற்றார். கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார், துணை முதல்வர் பூஜா சக்கரபோர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த பட்டிமன்றத்தில் அன்னை பாத்திமா கல்விக்கு ழுமத்தின் தாளாளர் எம்.எஸ்.ஷா நடுவராகப் பொறுப்பேற்றார். இரு அணியினரும் பாடல், திரைப்படக்கதை, நடை உடை பாவனைகளை எடுத்து கூறி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர்.
இருதரப்பு வாதங்க ளையும் சீர்தூக்கிப் பார்த்து இன்றைய திரைப்படங்கள் குடும்ப வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன என்ற தீர்ப்பை நடுவர் வழங்கினார். இந்த பட்டி மன்றம் மாணவர்களின் சிந்தனை யைத் தூண்டியதோடு விழிப்புணர்வையும் ஏற்படு த்தியது.
பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ராமுத்தாய் நன்றி கூறினார்.
கல்லூரி ஒருங்கிணை ப்பாளர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனியாண்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ்த்துறைப் பேராசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர்.
அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு கண்ணன் அவர்கள்- நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பேரில் ஆலம்பட்டி ஊராட்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான பேரணியை அன்னை பாத்திமா கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி தூய்மை பணி வாகனம் ஒன்றும் கல்லூரின் சார்பில் ஆலம்பட்டி ஊராட்சி அலுவ லகத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் 260 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டு ஆலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி , ஆலம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
- குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர்.
- தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.
தாராபுரம் :
தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன . பயணிகளும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் 2 சப்வேக்கள் உள்ளன.
இதில் மேல்புறமுள்ள மாடிக்கு செல்லும் படிக்கட்டில் 24 மணி நேரமும் குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர். தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் தகவல்
- திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு நடவடிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மதுபானக் ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16.01.2023 (திங்கட்கிழமை) திருவள்ளுவர் தினம் அன்றும் மற்றும் குடியரசு தினமான 26.01.2023 (வியாழக்கிழமை) அன்றும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கலெக்டர் உத்தரவின்படி மேற்படி இந்நாட்களில் ராணிப்பேட்டை மாவட்டதில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மற்றும் தனியார் மதுகூடங்கள் இயங்காது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். அன்றைய தினங்களில் மது பார்கள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
- தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது.
- ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .
கடலூர்:
நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் தனியார் தங்குவிடுதி பின்புறம், தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது. தனைக் கண்டித்து பா.ம.க வடக்கு மாவட்டத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாலினி சண்முகவேல் தலைமை தாங்கினார். முக்கிய அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ஜெகன் இதுகுறித்து பேசியதாவது: இந்திரா நகர் ஊராட்சியில் தனியார் மதுபானக் கூடத்தை அனுமதிக்க மாட்டோம். அருகேயுள்ள வடக்குத்து ஊராட்சி மதுஇல்லா ஊராட்சியாக உள்ளது.
இதற்கு நீதிமன்றம் உரிய சட்ட முறைகளை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகளுக்கு, தடை விதித்த நிலையில், மதுபானக் கூடம் விதிமுறைகளை மீறி அமைக்கப் பட்டுள்ளது. என்எல்சி மறுகுடியமர்வு வணிகபகுதியில், குடியிருப்புகள், அரசு பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் மதுபானக் கூடம் அமைந்துள்ளது. ,அமைதிப் பூங்கவாக திகழும் இங்கு, இந்த மதுபானக் கூடம் இயங்கினால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த மதுபான கூடத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அய்யா, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் குறிக்கோளான மதுவில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவோம், இவ்வாறு அவர் கூறினார். =இந்த ஆர்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மு.மாவட்ட துணைசெயலாளர் சண்முகவேல், அமைப்பு செயலாளர் கயல்ராஜன், இந்திரா நகர் ஊராட்சி துணைத் தலைவர் உமாராமதாஸ், வார்டு உறுப்பினர் சுமதி ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், பிரகாஷ், ராஜா, பிரபாகரன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், அமிர்தலிங்கம், மணிக்கண்ணன், குமரவேல், ஹரி, மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.ெே
- சித்திரகுப்தர் கோவிலில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- மதுக்கடையை அகற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் பிரசித்தி பெற்றது.
இந்த கோவில் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அதனை அகற்றக்கோரி ஏற்கனவே அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தனர்.
ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சித்திரகுப்தர் கோவில் அருகே உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சிவானந்தம் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் மனு அளித்தனர்.
- மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
- மே தினம் கொண்டாடப்பட்டது.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டா டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடி யேற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் மே தினம் கொண்டா டப்பட்டது. சென்னையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி முதன் முதலாக நடந்தது. இந்த நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மசோதாவை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் அந்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம் அதனை ஏற்று 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெற பரவுவதாக இன்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்ப்பரேட் முதலாளி அதானிக்கு காவடி தூக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. தற்போதைய சூழலில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ள தாகவும் தகவல்கள் வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தாலும் அல்லது எப்போது நடந்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
திருமண மண்டபங்களில் மது விருந்துக்கு அனுமதி, தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை என தமிழக அரசு சில குழப்பமான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இவற்றை கைவிட்டு தமிழகத்தில் படிப்படியாக அனைத்து மதுக்கடை களையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது
- 2 பேரையும் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூரில் உள்ள தனியார் மதுக்கடை யில் 2 பேர் மது அருந்திவிட்டு அங்கிருந்தவர்களிடம் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் சென்று அங்கு ரகளை ஈடுபட்ட கோபாலன் கடையை சேர்ந்த குமார் என்கிற கலைகுமார்(23), ராஜா(21) ஆகிய 2 பேரையும் பிடித்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். கைதான குமார் என்கிற கலைக்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரவு பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது.
- அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்ததையொட்டி டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை:
சென்னையில் டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி சம்பந்தமாக கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகிறது.
இதை மீறி சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. இரவு பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது.
இது தொடர்பாக அடிக்கடி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகாரை தொடர்ந்து அடிக்கடி அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்து வருகின்றனர்.
இதுபோல் அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி வட்டாரங்களில் அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்ததையொட்டி டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் 95 பார்களும், செங்குன்றத் தில் 53 பார்களும், பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் 66 பார்கள் உள்பட முறை கேடாக செயல்பட்ட 214 பார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை பார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விருதுநகா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது.
- அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களை சாத்தூா் தாசில்தார் வெங்கடேசன், மதுவிலக்கு போலீசாா் பூட்டி சீல் வைத்தனா்.
விருதுநகர்:
விருதுநகா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது. இது தொடர்பாக சோதனை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, விருதுநகா் வட்டாரத்தில் 18, சிவகாசி பகுதியில் 25, அருப்புக்கோட்டை பகுதியில் 11, ராஜபாளையம் பகுதியில் 25, சாத்தூா் பகுதியில் 8, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 20, திருச்சுழி பகுதியில் 14 என மொத்தம் 121 பார்கள் அனுமதியின்றி செயல்பட்டதை கண்டறிந்து சீல் வைத்தனா்.
இதேபோல் சாத்தூா், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி பார்கள் செயல்படுவதாக சாத்தூா் வருவாய்த் துறையினருக்கும், மதுவிலக்கு போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாத்தூா், இருக்கன்குடி, நென்மேனி, படந்தால், ஓவைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பார்களின் உரிமங்களை போலீசாா் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனா். அப்போது அந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களை சாத்தூா் தாசில்தார் வெங்கடேசன், மதுவிலக்கு போலீசாா் பூட்டி சீல் வைத்தனா்.
வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், மதுவிலக்கு போலீசாா் ஆய்வு நடத்தினா். அப்போது அந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு அவா்கள் சீல் வைத்தனா்.
மேலும் பல்வேறு பார்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
- பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மதுபான கூடங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அனுமதி பெற்று இயங்கி வரும் தனியார் மதுபானம் அருந்தும் கூடங்களை மாவட்ட கலால் உதவி ஆணையர் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மேலாளர் திருமாறன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் மது அருந்தும் கூடங்களில் போலி மது மற்றும் டாஸ்மாக் தவிர மற்ற மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் தனியார் மதுபானம் அருந்தும் கூடங்களை மாவட்ட கலால் உதவி ஆணையர் ஷோபா தலைமையில், டாஸ்மாக் மேலாளர் திருமாறன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது.இதில் மதுபானக்கூடங்களில் விற்கப்படும் மதுக்கள் டாஸ்மாக்கில் வாங்கப்பட்டதா? என்றும் மேலும் வேறு போலியான மது பானங்கள் விற்கப்படுகிறதா? என்றும் மது பாட்டில்களை நேரில் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுபான கூடத்தில் மதுபானங்கள் இருப்பு மற்றும் போதுமான கழிவறை வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் மதுபானம் அருந்தும் கூடத்தில் நேற்று தொடங்கிய ஆய்வு தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நடைபெறும் என்றும், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 37 டாஸ்மாக் கடைகளில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 28 மது அருந்தும் கூடங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது அனுமதி பெற்ற மதுபான கூடங்கள் மட்டும் இயங்கி வருவதாக டாஸ்மாக் மேலாளர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
- சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ஆண்கள் 100-க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளைப்பாறைமேடு என்ற பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி திடீரென குருமந்தூர்-கொளப்பலூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
கொளுத்தும் வெயிலில் பெண்கள் சாலைமறியல் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தெரிய வந்ததும் சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்த மதுக்கடையில் குடித்துவிட்டு இங்கேயே தங்கி விடுகின்றனர். எந்த வேலைக்கும் செல்லாமல் மதுக்கடையிலேயே இருப்பதால் குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெண்கள் சாலைமறியல் காரணமாக இன்று டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க காலை 11 மணியில் இருந்தே ஏராளமான ஆண்கள் மதுகுடிக்க காத்து இருந்தனர். ஆனால் பெண்கள் போராட்டம் காரணமாக 12 மணி ஆகியும் மதுக்கடை திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த ஆண்கள் 100-க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து 12.30 மணி அளவில் மதுக்கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
இந்த போட்டி போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
- வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது.
புதுவை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி இறக்க வரும் கனரக வாகனங்கள் நிறுத்த சரியான இடம் இல்லாததால் கடந்த காலங்களில் பிரதான சாலைகளின் ஒரம் நிறுத்தினர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் டிரைவர்கள் சாலையிலேயே தங்கி சமைத்து உண்டு இருந்தனர்.
இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு லாரி முனையம் தொடங்கப்பட்டது. இந்த பகுதி தமிழகத்தோடு ஒட்டிய பகுதியாகும். இதனால் எல்லை பகுதிகளில் அதிக அளவில் மதுக்கடைகள் உள்ளது. லாரி முனையம் தொடங்கப்பட்டபோது நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் அங்கு வந்து நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுனர்களும், கிளினர்களும் அங்கேயே சமைத்து ஓய்வெடுத்தனர்.
கொரோனா காலத்திற்கு பிறகு 24 மணி நேரமும் இயங்கும் திறந்தவெளி மதுபாராக லாரிமுனையம் மாறியுள்ளது. பெரும்பாலும் காலை நேரத்தில் மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட பயில்பவர்கள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவர்.
இங்கு போக்குவரத்து கிளை அலுவலகமும் உள்ளது. சமீப காலமாக அங்கு பெண்கள் வாகன லைசென்ஸ் வாங்க பயிற்சிக்கு வருவதையே கைவிட்டுவிட்டனர். காரணம் காலை நேரங்களிலேயே மதுபிரியர்கள் லாரி முனையத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
நள்ளிரவு வரை அங்கு குடிமகன்கள் மது அருந்துகின்றனர். குடிபோதைக்காரர்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. காலையில் பார்க்கும் போது அந்த இடம் முழுவதும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில், பாக்கெட் என பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.
சமீப காலமாக இங்கு நிறுத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூற்றுக்கணக்கான லாரிகள் நின்றிருந்த இடத்தில் 50-க்கும் குறைவான லாரிகள் தான் நிற்கிறது. இவையும் உள்ளூர் லாரிகள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லாரி ஓட்டுனர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. குடிமகன்கள் லாரி ஓட்டுனர்களுடன் தகராறில் ஈடுபட்டு, சிலர் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதன் மறுபுறம் ஆரோவில் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது
பெயரளவில் 2 மாநில போலீசாரும் குடிமகன்களை மிரட்டி அனுப்பி வைக்கின்றனர். இரவில் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் கூட்டம் குடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் குடிமகன்களுக்கு திறந்த வெளி காற்றும், விளக்கு வசதியும் இலவசமாக கிடைக்கிறது. இதனால் எத்தனை முறை விரட்டினாலும் குடிமகன்கள் மீண்டும் படையெடுக்கின்றனர்.
லாரி முனையம் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்த பகுதியில் சுற்றுசுவருடன் கூடிய பெரிய விளையாட்டு திடல் அமைக்கலாம் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோரிமேடு இன்ஸ்பெக்டர் பால முருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் லாரி முனைய பகுதியில் மாலையில் ரோந்து சென்ற போது குடிமகன்கள் அங்கிருந்து தப்பி ஒடினர். அவர்களில் சிக்கியவர்களை பிடித்த போலீசார், குடிமக்களால் அங்கு போடப்பட்டுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக போதை தெளியும் வரையில் குடிமகன்களை போலீசார் குப்பைகளை அள்ள வைத்தனர். 3 சாக்கு பைகள் நிறைய குப்பைகளை அள்ளிய குடிமகன்கள், இனி மேல் இங்கு குடிக்க வரமாட்டோம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினர். அடுத்த முறை சிக்கினால் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் இரவில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் முனையத்தில் வழக்கம் போல் அமர்ந்து குடித்தனர். வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.