என் மலர்
நீங்கள் தேடியது "bike theft"
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார்.
- 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பைச்சேர்ந்தவர் மாதவன். மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இவர் காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, 3 நபர்கள் சாலையில் தள்ளிகொண்டு சென்றதை பார்த்து, நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை தள்ளிகொண்டு சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.
தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ராஜகண்பாதி, சார்லஸ் மற்றும் போலீசார் 2 பேரையும் விசாரித்தபோது, திருவாரூர் அண்ணாநகர் பின்னவாசலைச்சேர்ந்த சதீஷ்(வயது18) அவருடைய நண்பர் திருவாரூர் தாமரைக்குளம் தெருவைச்சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து, இருவரும் ஏற்கெனவே திருடிய ஒரு மோட்டார் சைக்கிளுடன் 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- பைக் பறிமுதல்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அப்துல் வாஹித் (வயது 36). இவர் சேத்துப்பட்டில் மோட்டார் சைக் கிளை நிறுத்திவிட்டு பொருட் கள் வாங்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடியவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருவண் ணாமலை-செஞ்சி செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சேத்துப்பட்டு இருதய ஆண்ட வர் தெருவை சேர்ந்த வாசன் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பைக் திருடியதை ஒப்புகொண்டார். இதையடுத்து அவரை போலீ சார் கைது செய்து, மோட் டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- வாகன தணிக்கையின் போது சிக்கினார்
- பைக் பறிமுதல்
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த வங்கப் பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 38). இவர் கடந்த 30-ந் தேதி உடல்நிலை சரியில்லாததால் சோளிங்கர் அரசு மருத் துவமனைக்கு பைக்கில் சென்றார். சிகிச்சைக்கு பின்னர் வெளியே வந்தபோது அவரது பைக் காணவில்லை.
இதுகுறித்து அவர் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று சோளிங்கர் அடுத்த பில் லாஞ்சி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கல்மேல் குப்பத்தைச் சேர்ந்த யூசப் (40) என்ப வரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் சோளிங்க ரில் ராஜாவின் பைக்கை திருடியது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
- வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் மற்றும் ஆம்னி வேன் திருடுபோனது
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே குச்சனூரை சேர்ந்தவர் பக்கீம்ராஜா(42). இறைச்சிகடை நடத்தி வருகிறார். கேரள மாநிலம் முருக்கடியை சேர்ந்த கதிரேசன் என்பவரிடம் ஆம்னிவேன் வாங்கி வந்தார்.
அந்த வண்டியை குச்சனூரில் உள்ள தனது வீட்டுமுன்பு நிறுத்திவிட்டு தூங்க ச்சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வேனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சின்ன மனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வேனை திருடி ச்சென்ற மர்மநப ர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(42). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின்முன்பு நிறுத்திவிட்டு தூங்கச்செ ன்றார். காலையில் எழுந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்ைல. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை கீரைத்துறை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சிந்தாமணி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள்களின் எண்களை ஆய்வு செய்தபோது போலி என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை வாழைத்தோப்பை சேர்ந்த முத்து மகன் சரவணபாரதி (வயது 22), திருச்சி சுப்புர மணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் மணி (27), மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சங்கர் மகன் சீனிவாசன் (23), பாஸ்கரன் மகன் கண்ணன் (19) என தெரியவந்தது.
இவர்கள் மீது திருச்சி, சிவகங்கை, கரூர், சிலை மான் மற்றும் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது, கூட்டுக்கொள்ளை அடித்தது, வழிப்பறி செய்து நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து சென்றது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
- மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.
- திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
தேனி:
பழனிசெட்டிபட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் பழனிக்குமார். இருசக்கர வாகன காண்டிராக்டர் பணி செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனக்குசொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும் தகவல் கிடைக்காததால் பி.சி.பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படும் பைக்குகள் திருடு போனது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து வேலூர் தெற்கு போலீசார் பைக் திருடு போன இடங்களில் பதிவான காட்சிகளை வைத்து பைக் திருடர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியை சேர்ந்த தனசேகர் (வயது 45) என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் தனசேகரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 10 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எங்கெங்கு பைக்குகளை திருடினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோந்து பணியின் ேபாது சிக்கினர்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் தடுத்த ரங்காபுரம் ஜங்ஷன் அருகே போலீசார் ரோந்து பணியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
பின்னர் வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
பின்னர் தீவிர விசாரணையில் அவர்கள் மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (35 ) மற்றும் பாராஞ்சி கிராமத்தை சேர்ந்த விஜய் (22) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் பைக் திருடியதும் தெரிய வந்தது.
மேலும் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாகன தணிக்கையில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த பரதன் தாங்கள் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (வயது 45) விவசாயி. இவர் சம்பவத்தன்று இரவு பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
பின்னர் மறுநாள் அதிகாலை வெளியே வந்து பார்த்தபோது வீட்டில் முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயமானது.
இது சம்பந்தமாக மோரணம் போலீஸ் நிலையத்தில் வேலு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த பைக் திருடிய கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று செய்யாறு போலீஸ் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் ஆரணி கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
தீவிர விசார ணையில் விவசாயி பைக் என்பது தெரிய வந்தது. பின்னர் செய்யாறு போலீசார் மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வாலிபர்களை மோரணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த நேதாஜி (20), குளிய லம்பாக்கம் பாடசாலை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (19) என்பதும் தெரிய வந்தது. போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உரிமையாளரே பின்தொடர்ந்து வந்து பிடித்தார்
- உரிமையாளரே பின்தொடர்ந்து வந்து பிடித்தார்
ஆம்பூர், பிப்.8-
தஞ்சாவூர் மாவட்டம் எடையம் பாளையம் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் ஜெய பெருமாள் வயது (23) பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஜெயபெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் தங்கி உள்ள வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
நேற்று அதிகாலை ஜெயகாந்தனின் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பைக்கில் பொருத்திருந்த ஜிபிஎஸ் கருவியில் இருந்து ஜெயபெருமாள் செல்போனில் குறுஞ்செய்தி வந்தது. விழித்துக் கொண்ட ஜெயகாந்தன் மற்றும் அவரது நண்பர்கள் பைக் செல்லும் பாதையை காரில் பின் தொடர்ந்து வந்தனர்.
கர்நாடகாவை கடந்து சென்னை தேசிய நெடுங்சாலைக்கு வந்தனர்.
அப்போது ஜெய பெருமாளின் பைக் வாகனம் நீண்ட நேரமாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள காட்டு கொல்லை என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஜிபிஎஸ் கருவி காட்டி கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து ஆம்பூர் பகுதியை சேர்ந்த நண்பர்களின் உதவியுடன் காட்டுக் கொல்லை பகுதிக்கு விரைந்த ஜெயபெருமாள் அங்கு பைக்குடன் நின்று கொண்டி ருந்த கொள்ளையர்கள் 5 பேரை கையும் களவுமாக பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை உரிமை யாளரே ஜிபிஆர்எஸ் வசதியுடன் பின்தொ டர்ந்து வந்து கண்டறிந்து கொள்ளையர்களை பிடித்துக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் பைக்கை பறிமுதல் ெசய்து விசாரணை
- வேலூர் ஜெயிலில் அடைப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பைக் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தது.
அதனை யாரும் வந்து எடுத்துச் செல்லவில்லை என்று போலீசாரிடம் சைக்கிள் ஸ்டாண்ட் ஊழியர்கள் கூறினர். இது சம்பந்தமாக போலீசார் பைக்கை பறிமுதல் செய்து அதில் உள்ள என்னை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த பைக் ஆம்பூர் எஸ் கே ரோடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பைக்கை மாதனூர் நாச்சார் குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 26) என்பவர் திருடி சென்றதும், பின்னர் பைக்கை ஆம்பூர் சைக்கிள் ஸ்டாண்டில் விட்டதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
- ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி டவுன் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( வயது 51). பட்டு சேலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பகலில் ஆரணி தச்சூர் சாலையில் உள்ள கனரா வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் எடுத் தார். பின்னர் ஆரணி பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய் தார். மீதித்தொகை ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கையில் வைத்திருந்தார்.
அப்போது வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ததற்கு ஆதார் கார்டு, மற்றும் பான்கார்டு நகலை கேட்டதால் அவர் தனது கையில் வைத்திருந்த பணத்தை ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் உள்ள பாக்சில் வைத்தார். பின்னர் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று அங்கு சீட்டுக்கடியில் இருந்த ஆதார் கார்டு, பான்கார்டைஎடுத்து ஜெராக்ஸ் போடச் சென்றார்.
ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்கும்போது சீட் டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களி டம் கேட்டு பார்த்தார். ஆனால் யாரும் பார்க்கவில்லை என கூறினர்.
இதையடுத்து ஆரணி டவுன் போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் மற் றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங் குள்ள கண்காணிப்பு கேமராவில் பதி வாகி உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும் பணத்தை திருடி சென்ற மர்ம தபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணியில் பட்டப்பகலில் ஸ்கூட்ட ரில் வைக்கப்பட்ட பணம் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.