என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boycott"

    • முன்னாள் மத்திய மந்திரியான ப.சிதம்பரத்தின் எக்ஸ் வலைதள பதிவு.
    • பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிட உத்தரவு.

    மதுரை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புக ழேந்தி காலமானதைடுத்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. தலை மையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

    அதே வேகத்துடன் தி.மு.க. சார்பில் விக்கிர வாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைய டுத்து பா.ஜ.க. தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.

    அதன்படி அங்கு பா.ம.க. மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி வேட்பாள ராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் யார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிரடியாக அறிவித்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் இன்று காலை பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க.வின் முடிவானது, அங்கு போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிடத்தில் (பா.ஜ.க.வில்) இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு இதுவே தெளிவான சான்று ஆகும்.

    எனவே விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்று ப.சிதம்பரம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் நேற்று கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறிவிட்டு தற்போது அவர்களுக்காக தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    • தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பா.ம.க. மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா நிற்கிறார்.

    இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.

    ஆளும் தி.மு.க. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் என்பதால் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

    அ.தி.மு.க.வை தொடர்ந்து அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், `ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது. தொண்டர்களின் உைழப்பு, நேரம், பணம் என அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை.

    எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கிறது என்று கூறிவிட்டார். விக்கிர வாண்டி இடைத் தேர்தலை பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்து உள்ளதால் பா.ம.க. தலை வர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காரணம் அ.தி.மு.க. ஓட்டுகள் இம்முறை பா.ம.க.வுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிககையில் உள்ளனர்.

    இந்த தொகுதியை பொறுத்தவரையில், தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் தி.மு.க. ஆதரவுடன் 39.57 சதவீத ஓட்டுக்களை பெற்றது. அ.தி.மு.க. 35.83 சதவீதம், பா.ம.க. 17.64 சதவீதம், நாம் தமிழர் கட்சி 4.57 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

    அதாவது பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட 3.7 சதவீதம் மட்டுமே அ.தி.மு.க. குறைவாக பெற்றுள்ளது.

    எனவே இப்போது இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் ஓட்டுகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    1996க்கு பிறகு தமிழ கத்தில் பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்குகள் ஒட்டு மொத்தமாக பா.ம.க. வேட்பாளருக்கு சென்றால் அது தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பேசப்படுகிறது.

    பா.ம.க. வேட்பாளரை ஆதரிப்பதற்காகவே அ.தி.மு.க., தே.மு.தி.க. மறைமுக மாக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக தி.மு.க. வினர் கூறி வருகின்றனர். அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் அவ்வாறு ஒருசேர பா.ம.க.வுக்கு செல்லாமல் தடுப்பதற்கு இப்போதே தி.மு.க. தேர்தல் வியூகம் வகுக்க தொடங்கி உள்ளது.

    அங்கு தேர்தல் பணி யாற்றுவதற்காக ஒன்றியம் வாயிலாக 9 அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர் களாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.

    ஒவ்வொரு அமைச்ச ருக்கும் 20 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கு வீடு எடுத்து தங்கி ஊழியர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஓட்டுக்களை கவனித்து யார்-யாரை நியமிக்க வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்து வைத்துள்ளனர்.

    இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கியதற்கு பா.ஜனதா வுடன் இருக்கும் மறைமுக உறவு தான் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்து உள்ள நிலையில் தி.மு.க. இந்த தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

    ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையிலான ஓட்டு வித்தியாசம் மிக குறைவாகவே உள்ளது. தி.மு.க. (வி.சி.க.) 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும் பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

    4 முனை போட்டி நிலவினால் ஓட்டுகள் பிரிந்து எளிதில் தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்ட நிலையில் இப்போது தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி தான் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அ.தி.மு.க., தே.மு.தி.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு தான் செல்லும் என்று பலரும் கணித்து வருகின்றனர். இதெல்லாம் மறைமுக காரணமாக இருக்கும் என்று அ.தி.மு.க. தொண்டர்களும் பேசி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தனி செல்வாக்கு உண்டு. அப்படிப்பட்ட நிலையில் அவரே தேர்தலை சந்திக்காமல் புறக்கணிக்கும் ஆலோசனையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி இருக்கிறார் என்றால் இதில் ஏதோ உள்குத்து இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக தி.மு.க. இந்த தேர்தலில் தான் தன் செல்வாக்கை நிலைநிறுத்த கடுமையாக போராட வேண்டி இருக்கும். இதற்காக 9 அமைச்சர்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து தி.மு.க.வினர் தேர்தல் பணியாற்ற விக்கிரவாண்டிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

    • பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார்.
    • 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான்.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில்தான் எந்த கலவரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது.

    ஜனநாயகத்தை காப்பாற்றியது தமிழ்நாடு என்று சொல்லத்தக்க அளவில் தேர்தல் நடந்தது.

    ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் போக வேண்டும் என்பதற்கு ப.சிதம்பரம் குறிப்பிட்டது போல, ஒரு நொண்டி சாக்கை கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறுகிறது.

    ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பல இடங்களில் டெபாசிட் போய்விட்டது. இந்த தேர்தலிலும் டெபாசிட் போனால் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாகி விடும்.

    சசிகலா அ.தி.மு.க.வினரை ஒன்று சேர்க்க போவதாக கூறுகிறார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உங்கள் மூலமாக நான் சவால் விடுகிறேன். விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்புதாக கூறுகிறீர்களே? அப்படி புறக்கணிக்கிறது என்றால் அக்கட்சியில் உள்ள யாரும் ஓட்டு போடக்கூடாது. அதை அவரால் சொல்ல முடியுமா? நாங்களும் ஒரு கணக்கு எடுக்க போகிறோம்.

    தேர்தலில் அன்றைய தினம் யார்-யார் ஓட்டு போடுகிறார்கள் என்பது ஏஜெண்டுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் இவர்கள் அனைவரும் ஓட்டு போட்டார்களா? என்று கணக்கெடுப்போம்.

    அப்படி அவர்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து விட்டதாக அர்த்தம்.

    எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணியுங்கள் என்று கட்சிக்கு சொல்லி விட்டு அதையும் மீறி கட்சிக்காரர்கள் ஓட்டு போட்டால் என்ன செய்வீர்கள்? உங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவேன். நடவடிக்கை எடுப்பேன் என சொல்ல எடப்பாடி பழனிசாமி தயாரா? ஆனால் அவர் அப்படி சொல்ல மாட்டார்.

    ஏதோ அவர் பா.ஜனதாவுடன் மறைமுக உறவுக்கு அடித்தளம் அமைக்க பார்க்கிறார். ஆனால் எதையும் சந்திக்கிற ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது.

    காரணம் வன்னிய பெருமக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் செய்தது போல வேறு யாரும் செய்யவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். 20 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொடுத்ததே எங்கள் தலைவர்தான். இதன் மூலம் எத்தனை பேர் டாக்டர் ஆனார்கள். என்ஜினீயர்கள் ஆனார்கள்.

    குரூப்-1 தேர்வு எழுதி பணியாற்றி அதன்பிறகு ஐ.ஏ.எஸ். ஆனார்கள். இதையெல்லாம் அங்குள்ள மக்கள் மறந்திடுவார்களா என்ன?

    ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கி வரும் நிகழ்வு தாய்மார்கள் எப்படி நன்றி உணர்வோடு வாக்களித்து வெற்றிபெற செய்தார்களோ அதேபோல் வன்னிய பெருமக்கள் இந்த ஆட்சியின் மூலமாக 20 சதவீதத்தால்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றோம் என்பதை உணர்ந்து ஆயிரம் ராமதாஸ் சொன்னாலும், மனசாட்சி உள்ளவர்கள், நல்லவர்கள், இதயம் படைத்த வன்னியர்கள் அத்தனை பேரும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    எங்களுக்கு விக்கிரவாண்டியில் அடித்தளம் நன்றாக உள்ளது. நிர்வாகிகள் எழுச்சியோடு உள்ளனர். கூட்டணியும் ஒன்றாக உள்ளது. போன தேர்தலில் ஒரு சின்னத்தில் ஓட்டு கேட்டு விட்டு இந்த இடைத்தேர்தலில் இன்னொரு சின்னத்தில் ஓட்டு கேட்டால் அவர்களை மதிப்பார்களா? எங்களுக்கு அப்படி இல்லை.

    தி.மு.க. 2019-ல் இருந்து ஒரே அணியில் ஓட்டு கேட்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க.தான். ஆனால் இப்போது அவர்கள் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. அதனால் புறக்கணிப்பதாக கூறுவதற்கு தோல்வி பயம் மட்டுமின்றி வேறு காரணமும் உள்ளது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    • சுதந்திர இந்தியாவில் இன்றைய நாள் கருப்பு நாள்.
    • நாட்டில் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வீடியோ உரையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர இந்தியாவில் இன்றைய நாள் கருப்பு நாள். ஜனநாயகத்தின் குரல்வலையை நெறித்து அவசர நிலையை காங்கிரஸ் அமுல்படுத்திய தினம்.

    இன்று பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. தி.மு.க.வும் அதற்கு துணைபோகிறது.

    அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் நாட்டில் அவசர நிலையை இந்திரா பிரகடனப்படுத்தினார். பத்திரிகைகள் முடக்கப்பட்டன. தலைவர்களை கைது செய்தனர். யாரை எங்கு வைத்துள்ளார்கள் என்பதுகூட தெரியாத இருண்ட சூழ்நிலை நிலவியது.

    ஒரு நாட்டில் அவசர நிலை அமுல்படுத்தினால் அந்த நாட்டில் ஜனநாயகம் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

    ஆனால் இன்று பிரதமர் மோடியை பார்த்து அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார் என்கிறார்கள். ஆனால் எனது புனிதநூல் எங்கள் அரசியல் அமைப்பு சட்ட புத்தகம்தான் என்று நம் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்க பாராளுமன்றத்திலும் மோடி முழங்கினார்.

    இன்று அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கப் போவதாக காங்கிரஸ் கூச்சல் போடுகிறது. அதற்கு தி.மு.க.வும் துணைபோகிறது.

    அரசில் அமைப்பு சட்ட நகலை கிழித்து எறிந்து போராட்டம் நடத்தியவர்கள்தான் தி.மு.க.வினர். இதனால் வழக்கை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் அரசியல் அமைப்பு சட்ட நகலை எரிக்கவில்லை. வெறும் காகிதத்தைதான் எரித்தோம் என்று பல்டி அடித்தார் கருணாநிதி.

    அப்போதும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க குரல் கொடுத்தது பா.ஜனதா தலைவர்கள்தான். நாடு முழுவதும் ஜனதா, பா.ஜனதா, காமராஜ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    எனது தந்தை காமராஜரின் பழைய காங்கிரசில் இருந்தார். 6 மாதங்கள் அவர் சிறையில் இருந்தார். நான் பள்ளி மாணவியாக இருந்தேன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அம்மாவை கவனிக்க யாருமில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நானே அழுதுகொண்டு ஆபரேசனுக்கு கையெழுத்துபோட்டுக் கொடுத்தேன். அந்த நிகழ்வுகள்தான் காங்கிரசை வெறுக்க வைத்தது.

    இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பது மோடி அரசு. ஆனால் அதன் குரல்வளையை நெறித்த காங்கிரசையும், அதற்கு துணைபோன தி.மு.க.வையும் புறக்கணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.
    • நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயராக தி.மு.க.வை சேர்ந்த மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். மாநக ராட்சியில் தி.மு.க., அ.தி. மு.க., பா.ம.க., காங்கிரஸ், த.மா.கா, சுயேட்சை என 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    இதில் அ.தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தி.மு.க. கவுன்சிலர்களே மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    மாநராட்சி கூட்டங்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி போர்க் கொடி தூக்கி உள்ள தி.மு.க. உள்ளிட்ட கவுன்சிலர்கள் 33 பேர் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்தனர்.

    ஏற்கனவே பணிக்குழு கலைக்கப்பட்ட நிலையில் பொது சுகாதார குழு, கணக்கு குழு, நகரமைப்பு குழு, வரிவிதிப்பு குழு உறுப்பினர்கள் பதவியை தி.மு.க. கவுன்சிலர்கள் உட்பட 18 எதிர்ப்பு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து உள்ளனர்.

    மீண்டும் மாநகராட்சி ஆணையரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 33 எதிர்ப்பு கவுன்சிலர்களின் பிரமாணம் பத்திரங்களையும் தாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் 13 கவுன்சிலர்களை உள்ளடக்கி செயல்பட்டு வரக்கூடிய 2-வது மண்டல குழுவின் தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறி 7 எதிர்ப்பு கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 33 பேர் மீண்டும் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், என்ற எங்கள் கோரிக்கையை தவிர்க்கும் வகையில் மேயருக்கு ஆதரவாக செயல்படும் கமிஷனரை மாற்றி, மன்ற கூட்டத்தை வேறொரு ஆணையரை வைத்து நடத்திட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

    • தமிழக கவர்னர் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம்.
    • தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை.

    சென்னை:

    நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    இதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

    தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தை தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் தலைவர்கள் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டனர்.

    அதில் அவர்கள், "கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • 6 மாதம் முன் நடந்த மக்களவை தேர்தலில் 48 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் இந்தியா கூட்டணி கைப்பற்றியது
    • அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

    நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. 10 நாட்களாக நீடித்த குழப்பத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார். என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார். கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.

    288 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றிய நிலையில் எதிர்த்து போட்டியிட்ட மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] மொத்தமே 46 இடங்களில் தான் வென்றது.

    முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 6 மாதத்துக்குள் மக்கள் எப்படி மாற்றி வாக்களிப்பார்கள் என்றும் இது பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி செய்து பெற்ற வெற்றி என்றும் காங்கிரஸ் கூட்டணி குற்றம் சாட்டி வருகிறது.

    புதிதாக அமைக்கப்பட்ட 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவையின் சிறப்பு மூன்று நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பாஜகவை சேர்ந்த இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் தலைமையில் , எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம், சபாநாயகர் தேர்தல், புதிய அரசாங்கத்திற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் ஆளுநர் உரை ஆகியவை இந்த கூட்டத்தில் இடம்பெறும்.

    அந்த வகையில் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ஆனால் இவிம் இயந்திர முறைகேட்டை முன்னிறுத்தி எதிர் கூட்டணியாகக் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் இன்றைய தினம் பதவிப் பிரமாணத்தை புறக்கணித்துள்ளனர்.

     

    எங்கள் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ இன்று பதவியேற்க மாட்டார் என்று இன்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். EVM மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் இன்று பதவியேற்கவில்லை. ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என்று ஆதித்திய தாக்கரே தெரித்துள்ளார்.

     

     

    தேர்தல் முடிவுகள் கேள்விகளை எழுப்பியுள்ளன, முழு செயல்முறையும் கறைபடிந்ததாகத் தெரிகிறது. மக்கள் மகிழ்ச்சியடையவில்லை, ஏதோ தவறாக தோன்றுகிறது என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேட்டிவார் குற்றம் சாட்டியுள்ளார். 

    • ஈரோடு இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
    • இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது என சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாள் என்பதால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்தத் தேர்தலில் தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது. பா.ஜ.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகின.

    இதகிடையே, தமிழக வெற்றிக் கழகமும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என சசிகலா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சென்னை போயஸ் கார்டனில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும்.

    இன்று தி.மு.க. அரசாங்கம் வீண் செலவு செய்து கொண்டிருக்கிறது, உருப்படியாக எதையும் செய்வது இல்லை.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை அவர்கள் செய்த அனைத்தையும் பாமர மக்களுக்குப் புரியும் வகையில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

    • மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா?
    • இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளன.

    செல்வப் பெருந்தகை (காங்கிரஸ்)

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை கண்டிக்கும் வகையில் கவர்னரின் குடியரசு தின வரவேற்பு தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பார்கள்.

    பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)

    அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடு களையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக் காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் கவர்னராக நீடிக்கிற தகுதியை இழந்து விட்டார். ஆகவே கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.

    இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு)

    சட்டசபையில் நிறை வேற்றி அனுப்பும் மசோ தாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவது, பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில உரிமையை மறுத்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான சிந்தனைகளை கவர்னர் திணித்து வருகிறார். எனவே கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிக்கிறது.

    கு.கா.பாவலன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர்)

    தமிழ்நாட்டிற்கு கவர்னராக வருகின்றவர்கள் மாநில சுயாட்சி நிலைப் பாட்டிற்கும், இருமொழி கொள்கைக்கும் எதிராகவே செயல்பட்டு வருகின்றனர்.

    ஆகவே மக்களின் நலன் கருதி கொள்கை அளவில் கவர்னரோடு முரண் நடவடிக்கைகளில் தலைவர் திருமாவளவன் தலை மையில் வி.சி.க. ஈடுபட்டு வருவதால் கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.

    (மனித நேய மக்கள் கட்சி)

    கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது. சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்துவது, சட்டமன்றத்தின் மரபைப் பேணாமல் வெளி நடப்பு செய்வது பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது என்று தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு விரோத மாக நடந்து கொண்டிருக்கும் கவர்னரின் செயல்பாடு களுக்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.

    கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? அல்லது புறக்கணிப்பாரா? என்பது இன்று தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை.
    • அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வக்கீலா பணியாற்றி வருகிறார் . நேற்று மாலை ஜமீலா பானு அவரது அலுவலகத்தில் இருந்தபோது ரகுமான்கான் என்பவர் அரிவாளால் ஜமீலா பானுவையும், அவரது மகளையும் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ,அரசு வக்கீல் மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் (வயது 48) வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
    • இரு பள்ளிகளை சேர்ந்த 405 மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

    ேசலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி மல்லிகுந்தம் அருகே வன்னியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் (வயது 48) வாழதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இேதபோல் அங்கிருந்த தலைமை ஆசிரியை ெஜயசித்ரா, வன்னியனூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி முதல் வாழதாசம்பட்டி மற்றும் வன்னியனூர் ஆகிய இரு பள்ளிகளை சேர்ந்த 405 மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டம் 9 நாட்களாக நீடித்தது. இைதயடுத்து சேலம் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மேட்டூர் சப்-கலெக்டர் வீர்பிரதாப்சிங் தலைமையில் வன்னியனூரில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 4 மாதங்களுக்கு வன்னியனூர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சசி தலைமையில் பள்ளி செயல்படும், அதன்பிறகு சிவகுமாரை பணி அமர்த்த முயற்சி எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 9 நாட்களாக நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

    கோவை மாவட்டத்தில் இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு மற்றும் வக்கீல்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் வக்காலத்தில் போட்டோ ஒட்ட எதிப்பு தெரிவித்தும், விபத்து வழக்குகள் மற்றும் வீட்டு உரிமையாளர், வாடகை தாரர் வழக்குகளை அதற்கான நீதி மன்றத்தில் மட்டுமே விசாரிக்க வேண்டும். சமரச தீர்வு மையம் மூலம் நிலுவை வழக்குகளை முடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற கட்டண உயர்வை மாற்றியமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சூலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழக்கு விசாரணை தேக்கம் அடைந்துள்ளது.
    ×