என் மலர்
நீங்கள் தேடியது "bullock cart"
- வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மாட்டு வண்டியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவரிடம் நடத்தி விசாரணையில், அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பதும், ஆற்றில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
- கூத்தங்குடியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கூத்தங்குடி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ லண்டன் முனீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 53 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 44 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை கூத்தங்குடி கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- ஏரியூர் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயம் சிங்கம்புணரி ஒன்றியம் ஏரியூர் கிராமத்தில் உள்ள மலைமருந்தீஸ்வரர், முனிநாதன் மற்றும் தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏரியூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 66 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் விஜயவேல் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை அலவாக்கோட்டை பன்னீர்செல்வம் வண்டியும், 3-வது பரிசை புதுசுக்காம்பட்டி குணசேகரன் வண்டியும் பெற்றது.
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொண்குண்டுப்பட்டி செல்லை வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி சுந்தர்ராஜ் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தம்பட்டி கதிரேசன் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு பந்தயத்தில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் வண்டியும், 2-வது பரிசை ஆபத்தாரணப்பட்டி பிரபுபழனிச்சாமி வண்டியும், 3-வது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை மேலூர் புவனேஸ்வரி எலக்ட்ரிக்கல்ஸ் வண்டியும், 2-வது பரிசை மாம்பட்டி செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை மாம்பட்டி சிதம்பரம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.
- தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ஆறாவயல் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 22 ஆம் ஆண்டு குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம் இன்று காலை நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் கும்பகோணம் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த13 மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. பெரியமாட்டு வண்டி, குதிரை வண்டிகளுக்கு போக வர 8 மைல் தூரமும் சென்று வந்தன.
பெரியமாடு பிரிவில் முதலாவதாக வெளிமுத்தி வாகினி, 2-வதுவெட்டிவயல் சுந்தரேசன், 3-வது பீர்க்கலைக்காடு, வாளரமாணிக்கம் மாடுகள் பரிசு பெற்றன. சின்னமாடு பிரிவில் முதலாவது ஆலத்துபட்டி, 2-வது கண்டதேவி மருதுபிரதர்ஸ், வெளிமுத்தி வாகினி, 3-வது கோட்டையூர் மாட்டுவண்டிகள் பரிசு பெற்றன. குதிரை வண்டி பந்தயத்தில் முதலாவது உஞ்சனை புதுவயல், 2-வது கார்குடி தேவர்மகன் குனா, 3-வது ஆறாவயல் காளிதாஸ் குதிரை வண்டிகள் வெற்றி பெற்றது.ஆறாவயல் காரைக்குடி சாலையில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையாக நின்று கண்டு களித்தனர். வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
- பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.
- மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை, மே.1-
பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது. மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியானது மேலக்குளம் பகுதியில் இருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்க்கிட் மாநகரம் வரை சென்று மீண்டும் மேலக்குளம் வந்தடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி போட்டியினை தமிழ்நாடு மாட்டு வண்டி போட்டி யாளர் சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குதிரை வண்டி போட்டி மேலக்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் மேலக்குளத்தை வந்தடைந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளுக்கு கோப் பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனக ராஜ், சுப்பையா, நவீன்போஸ், பரமராஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி களுக்கான ஏற்பாடு களை மேலக்குளம் பெரிய பெருமாள், சுஜித்வேல், விஜய வேல் மற்றும் விழாக் கமிட்டி யினர் செய்திருந்தனர்.
- விருதுநகர் அருகே மாட்டுவண்டி தலையில் ஏறி வாலிபர் பலியானார்.
- இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பொன்ராஜ்(வயது 30 )இவர் மாட்டு வண்டி ஓட்டி வந்தார். நேற்று அவர் கும்பமலை அடிவாரத்தில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அவர் தலையில் மாட்டுவண்டி ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
- குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.
தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் மாட்டு வண்டிகளில் புறப்பட்டு தங்களது குல தெய்வங்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வார்கள். இதற்காக 15 நாட்களை செலவிட்டு கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் புறப்பட்டு செல்வார்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.
இவர்களின் குலதெய்வ கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வரை ஒன்றாக செல்வார்கள். அதன் பின்னர் அங்கிருந்து 3 பிரிவாக பிரிந்து புதுப்பட்டி கூடமுடை அய்யனார் கோவில், கீழராஜகுலராமனின் உள்ள எர்ச்சீஸ்வரர் பொன் இருளப்பசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தைலாபுரம் மல்லி வீரகாளியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்வார்கள்.
முதலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்த 56 கிராம மக்கள் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறும் குலதெய்வ வழிபாட்டுக்காக கடந்த 17-ந்தேதி 215 மாட்டு வண்டிகளில் 56 கிராம மக்கள் புறப்பட்டனர். அவர்கள் அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் அணிவகுத்து சென்றனர்.
தற்போதைய கால கட்டத்தில் போக்குவரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மாட்டு வண்டியில் செல்வது பழைய கால வழக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த 56 கிராம மக்கள் காலங்கள் கடந்தாலும் தங்களது பாரம்பரியத்தை மீறக்கூடாது என்ற நோக்கத்தில் மாட்டு வண்டிகளில் செல்வதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக ஒரு மாட்டு வண்டிக்கு 15 நாட்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை வாடகை கொடுத்து தங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர்.
சொந்த மாட்டுவண்டி வைத்திருப்பவர்கள் தங்களது மாட்டு வண்டிகளில் வந்து விடுகின்றனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மாட்டு வண்டிகளை வாடகைக்கு எடுத்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு சமைக்க தேவையான பொருட்களையும் மாட்டு வண்டிகளில் எடுத்து செல்கின்றனர்.
குலதெய்வ கோவிலை அடைந்ததும் அங்கு தங்கி இருந்து வழிபாடுகளை செய்கின்றனர். இதன் மூலம் 56 கிராம மக்களும் ஒருவரை யொருவர் அறிந்து கொண்டு குடும்ப சம்பந்தமான உறவுகளை மேம்படுத்தி கொள்கின்றனர். நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதனை நாகரீகமாகவும் கருதுகின்றனர்.
தனித்தனி தீவுகளாக மாறிபோன மனிதர்களுக்கு மத்தியில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் 56 கிராம மக்கள் குல தெய்வ வழிபாட்டுக்கு ஒன்றாக செல்வது வேறு எங்கும் காண முடியாத காட்சியாக உள்ளது. மாட்டு வண்டிகளில் செல்லும்போது இயற்கையை ரசித்து செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இது சிறுவர், சிறுமிகள் மனதை மிகவும் கவருகிறது.
இந்த மாட்டுவண்டி பயணம் 15 நாட்கள் தொடர்கிறது. சில நாட்கள் மட்டும் குல தெய்வ கோவில்களில் தங்கி இளைப்பாறுகின்றனர். அங்கு ஒன்றாக சமைத்து சாப்பிட்டு உறவினர்களுடன் உரையாடி மகிழ்கின்றனர்.
இந்த பயணத்தில் சிறுவர், சிறுமியர் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்கின்றனர். குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
100 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்கள் கடந்து சென்று 7 நாட்கள் தங்கி இருந்து 3 கோவில்களிலும் வழிபாடுகள் நடத்தி விட்டு மீண்டும் மாட்டு வண்டியில் சொந்த கிராமங்களை சென்றடைவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளோம். மாட்டு வண்டி சொந்தமாக இல்லாதவர்களும் ரூ.35 ஆயிரம் வாடகை செலுத்தி மாட்டுவண்டி பூட்டி செல்கின்றோம்.
மாட்டு வண்டி இல்லாதவர்கள் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மாட்டுவண்டிகளை ஏற்பாடு செய்து குல தெய்வ கோவில்களுக்கு செல்கிறோம்.
மாட்டு வண்டிகளில் சென்று வழிபட்டால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி கிடக்கிறது. பல ஆண்டுகளாக சென்று வந்தபோதிலும் எங்களுக்குள் எந்தவித மோதல்களும் ஏற்பட்டதில்லை. எங்கள் உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. சொந்த பந்தங்களுடன் உறவாட இது வாய்ப்பாக இருக்கிறது.
இந்த வழிபாட்டில் முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், கொம்பூதி, கமுதி, பரமக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்கிறோம்.
தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த முறை செல்ல முடியவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் செல்கின்றோம். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் சென்றால் பல நன்மைகளை அடையலாம். ஆனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.
இந்த வழிபாட்டை முதலில் தொடங்கியவர்கள் பாத யாத்திரையாக சென்று வந்துள்ளனர். அதன் பின்னர் மாட்டு வண்டிகளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது மாட்டு வண்டி கிடைக்காதவர்கள் கார் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களில் சென்று வருகிறோம். குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அழியாநிலையில் மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு அறந்தாங்கி தாலுகா அழியாநிலை கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 54 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 17 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 27ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை வீரமுத்திரையர் சங்க இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- மாவடிபட்டி கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே மாவடிபட்டி கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் மாட்டின் பல் அடிப்படையில் நடைபெற்றது.பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள், மாட்டு வண்டிகளுடன் வந்திருந்தனர்.
முதலாவதாக நான்கு பல் கொண்ட மாடுகளுக்கு பந்தயம் நடத்தப்பட்டது. பந்தய தூரம் போய் வர 4 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக பிரித்து நடத்தப்பட்டது. பந்தயமானது மாவடிபட்டி- கல்லூர் சாலையில் நடைபெற்றது.பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட இளம் காளை கன்றுகள் குதிரையை போல் சீறிப்பாய்ந்து ஓடியதை அப்பகுதியில் இருந்த மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.
- அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள வீழனேரி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பாசறை இணை செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் மாட்டு வண்டி பந்தயத்தை செந்தில் நாதன்
எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டீபன், செல்வமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
- இதில் கென்னடி பரிதாபமாக இறந்தார்
திருவாரூர்:
திருவாரூர் வடுவூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி (வயது63). விவசாயி. இவர் தனது மோட்டார்சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிக்குடிகாடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கென்னடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கென்னடி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குறித்து வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
- ஒரு குழந்தைக்கு காதணி விழா நடந்தது.
மதுரை :
தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர்.
மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.