என் மலர்
நீங்கள் தேடியது "bus station"
- பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர்.
பெங்களூரு:
தெலுங்கு வருட பிறப்பான யுகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதே போல் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக பெங்களூரு பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஹூப்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெங்களூரு மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ்நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் திரண்டனர். அவர்கள் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் ஏறி இடம்பிடித்துக் கொண்டனர். இதனால் முன்பதிவு செய்தவர்கள் இடம் கிடைக்காமல் தவித்தனர்.
சாளுக்யா வட்டம், ஆனந்த்ராவ் வட்டம், மைசூரு சாலை, யஷ்வந்த்பூர், ஆர்.எம்.சி. யார்டு, தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மெதுவாக நகர்ந்தன.
பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர். மேலும் தனியார் பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது. குறிப்பாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 17 பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.
- பெரியார் பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் மணிபர்சை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
- ரூ.2,200 அடங்கிய மணி பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை கே.புளியங்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் வெற்றிமாறன். ராணுவ வீரர். இவரது மனைவி பிரேமலதா (வயது 32). இவர் நேற்று காலை மதுரைக்கு வந்திருந்தார்.
பின்னர் ஊருக்கு செல்வதற்காக பெரியார் பஸ் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் காத்திருந்தார். அங்கு பதுங்கியிருந்த பெண், பிரேமலதா வைத்திருந்த மணிபர்சை பறித்துக்கொண்டு தப்பி முயன்றார்.
பிரேமலதா, 'திருடி, திருடி' என்று கூச்சல் போட்டார். அப்போது திடீர்நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லோகே ஸ்வரி தற்செயலாக பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். பிரேமலதாவின் கூச்சலை கேட்டதும் அவர் சக போலீசாருடன் தப்பி ஓடிய பெண்ணை மடக்கி பிடித்தார்.
அந்த பெண்ணிடம் இருந்து ரூ.2,200 அடங்கிய மணி பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் உசிலம்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் மனைவி காந்தி என்ற லட்சுமி (28) என்பது தெரிய வந்தது.
இவர் மீது வழிப்பறி செய்ததாக திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்றார். அதன் பிறகு ஜாமீனில் வந்த லட்சுமி மீண்டும் பெரியார் பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் மணிபர்சை திருடியபோது போலீசில் சிக்கினார்.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் 16 கடைகள் ஏலம் விடப்பட்டது.
- கட்டப்பட்டு 4 வருடம் கழித்து நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நி லையம் கட்டப்பட்டு நான்கு வருடங்கள் ஆன நிலையில் திறக்கப்படா மல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் விரைவில் பேருந்து நிலையத்தை திறக்க கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று பேருந்து நிலையத்தி ல் உள்ள 16 கடைகள் பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டன. ஏல தாரர்கள் டோக்கன் அடிப்படையில் உள்ளே அனுமதிக்கபட்டனர்.
அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.3000 வாடகைக்கு குறையாமல் உச்சபட்ச ஏலத்தொகையான ரூ.10,100 வரை ஏலம் விடப்பட்டன. ஏலமானது துவக்கத்தில் சலசலப்புடன் ஆரம்பித்து இறுதியில் சுமூகமாக நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், மற்றும் பல அரசு அதிகாரிகள் பங் கேற்றனர்.
மேலும் பேருந்து நிலையம் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அப்பகுதி பொதுமக்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- மதுரை பஸ் நிலைய கடைகளில் கோடிக்கணக்கில் வரி பாக்கி செலுத்தாதது தகவல் அறியும் சட்டத்தில் அம்பலமானது.
- அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது
மதுரை
மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பனகல் சாலை ஆகிய 3 இடங்களில் பஸ் நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 317 கடைகள் உள்ளன.
இதில் அரசு போக்கு வரத்து கழக அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஏ.டி.எம். மையம் உட்பட 277 கடைகள் இயங்கி வருகின்றன. மதுரை 3 பஸ் நிலையங்களில் உள்ள சுமார் 277 கடைகள் வாடகை, வரி செலுத்துகிறதா? என்பது தொடர்பாக சமூக ஆர்வலர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மாநகராட்சி தகவல் தொடர்பு அதிகாரி பதிலளித்துள்ளார். அதில், மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் உள்ள வியாபார கடை உரிமையாளர்கள் ரூ.1 கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370-க்கு வரி பாக்கி வைத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3 பஸ் நிலையங்களில் ஒரே நபருக்கு 3, 4 கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பஸ் நிலையங்களில் செயல்படும் சில கடை உரிமையாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது இந்த சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
வரி பாக்கி வைத்து உள்ள வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பாக்கியை வசூல் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்
- பஸ் நிலையம் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட உள்ளது.
- மெட்ரோ ரெயில் இணைப்பு பயணிகளுக்கு சிறந்த பயணத்தை வழங்க உதவும்.
சென்னை:
சென்னையை அடுத்த திருமழிசை அருகேயுள்ள குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பஸ் நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, பெங்களூர் போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 70 அரசு பஸ்களும், 30 தனியார் பஸ்களும், 36 மாநகர பஸ்களும் நிறுத்தும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1600-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 200 கார்கள், நிறுத்தும் வகையில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடமும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் எக்கலேட்டர்கள் குடிநீர் வசதிகள், கழிவுநீர் ஆலை, சி.சி.டி.வி. கேமராக்கள் போன்ற வசதிகளம் உருவாக்கப்படுகின்றன. மேலும் இங்கு மெட்ரோ ரெயில் சேவையும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இங்கிருந்து பல பஸ்கள் பெங்களூருக்கு இயக்கப்படுவதால் ஐ.டி. ஊழியர்களிடம் இருந்து நல்ல ஆதரவை எதிர் பார்க்கிறோம்.
பலர் வேலை நிமித்தமாக வந்து செல்ல வாய்ப்புள்ளது. இரவு நேர பஸ்களுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே அவர்களுக்கு விருப்பமான உணவு மற்றும் பானங்களை வழங்கும் வகையில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.
சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் விரும்பும் வகையில் இந்த உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும் இந்த பஸ் நிலையம் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட உள்ளது. கிட்டத்தட்ட இது விமான நிலையம் போல இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வைஃபை வசதியுடன் பயணிகள் குளிரூட்டப்பட்ட வளாகத்தில் ஓய்வெடுக்கலாம். மேலும் தேவைப்பட்டால் பயணிகள் தங்கள் லேப்டாப்பில் அங்கிருந்த படியே வேலையும் செய்யலாம்.
இந்த பஸ் நிலையத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை வசதியும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. பூந்தமல்லிக்கு மெட்ரோ ரெயில் இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வந்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் குழுவினர் கடந்த வாரம் குத்தம்பாக்கம் பஸ் நிலையத்தை பார்வையிட்டனர்.
எதிர்காலத்தில் பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் நீட்டிக்கப்படும்போது அது குத்தம்பாக்கம் பஸ் நிலையம் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் இணைப்பு பயணிகளுக்கு சிறந்த பயணத்தை வழங்க உதவும். மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களுக்கு பயணிகளின் ஆதரவு நன்றாக இருக்கும் என்பதால் போக்குவரத்து சேவையும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
- இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.
ஈரோடு:
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை, பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதன் மறுநாள் காணும் பொங்கல் எனத் தொடர்ந்து இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.
இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ஈரோடு ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். ஏராளமான பேர் குடும்பத்துடன் நேற்று இரவு முதல் ரெயில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.
இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
இதேபோல் ஈரோடு பஸ் நிலையங்களிலும் நேற்று இரவு முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் போட்டா போட்டி போட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
இதேபோல் இன்று இரவும் ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்கா ணித்து வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு மாநகரில் முக்கிய வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்கே.வி. ரோடு பகுதிகளில், கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் குவிய தொடங்கியது.
பெரிய ஜவுளி கடைகள் முதல் சாதாரண நடை பாதை ஜவுளி கடைகள் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களுக்கான பேன்சி கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
- இரவு நேரங்களில் வரும் பயணிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
- இலவச கழிவறையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் கோவில் வழி பேருந்து நிலையத்தில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வரும் பயணிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
முக்கியமாக பெண்கள் கழிவறை செல்லும் இடங்களில் இரவு சூழ்ந்துள்ளதால் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் கவனத்தில் கொண்டு திருட்டு சம்பவங்கள் ,வழிப்பறிகள் உள்ளிட்டவைகள் நடைபெறாமல் இருக்க மின்விளக்குகளும் சி.சி.டிவி கேமராக்கள் அமைக்க வேண்டும். மேலும் பொதுக்கழிவறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
பயனாளிகள் அங்கு செல்லவே முடியாத சூழ்நிலை உள்ளதால் இலவச கழிவறையை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கீழக்கரை பஸ் நிலையத்திற்கு புறநகர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கீழக்கரை
கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கீழக்கரை வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவைகளில் புறநகர் பஸ்கள் திருநெல்வேலி டெப்போ, தூத்துக்குடி டெப்போ, கன்னியாகுமரி டெப்போ கும்பகோணம் டெப்போ நாகப்பட்டினம் டெப்போ உள்ளிட்ட புறநகர் பஸ்கள் கீழக்கரை நகருக்குள் உள்ள பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன.
இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற னர்.
முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே அனைத்து பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நகரில் உள்ள பஸ் நிலை யத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களையும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- புதிய பஸ்நிலையம் கட்ட முதல் தவணையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி ஆகும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சில் மாதாந்திர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் அண்ணா சிலை அருகே கருணாநிதி நினைவு கொடிக்கம்பம் அமைக்க தலைவர் கொண்டு வந்த தீர்மானத் திற்கு பா.ஜ.க. கவுன்சிலர் குமார் எதிர்ப்பு தெரி வித்தார். நகர் மன்ற தலை வரின் விளக்கத்திற்கு பின் மற்ற கவுன்சிலர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் குமார்: ராம நாதபுரம் நகரில் பாதாள சாக்கடை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க பல கோடி ரூபாயில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது இதனை கண்காணிக்க தனியாக பொறியாளர், அலுவலர்கள் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன்: தற்போது தான் ராமநாதபுரம் சிறப்பு நகராட்சிக்குரிய அரசு உத்தரவு வந்துள்ளது இதன்படி புதிதாக அலுவ லர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்ட பராமரிப்பிற்கு தனியாக பொறியாளர் நியமிக்க வேண்டும்.
ராஜாராம் பாண்டியன் (காங்) : முகவை ஊரணியில் வேலை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். நகராட்சி நிர்வாகம் பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.
கமிஷனர்: பாதாள சாக்கடை குழாயை மாற்றி புதிய குழாய் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்போது முகவை ஊரணியில் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் மணிகண்டன் (காங்) : காவிரி குடிநீர் முழுமையாக வராததால் எனது வார்டில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அல்லி கண்மாய் சுடுகாட்டில் போதுமான வசதிகள் இல்லை. ஓய்வு எடுக்க இடம் இல்லாததால் தகனம் செய்ய வரும் மக்கள் அவதிப்படு கின்றனர்.
தலைவர்: அல்லி கண்மாய் சுடுகாட்டில் ஓய்ெவடுக்கும் இடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குடிநீரை பொறுத்தவரை ராமநாதபுரத்திற்கு 33 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால் 25 லட்சம் லிட்டர் தான் வருகிறது. அதனை வைத்து சப்ளை செய்து வருகிறோம். விரைவில் 55 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் ராமநாதபுரத்தில் புதிய பஸ்நிலையம் கட்ட ரூ.20 கோடியில் பணிகளை தொடங்க அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி யாக இருந்தாலும் முதல் கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு சந்தை கடை பகுதியையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் கட்டப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
- அடுத்த மாதம் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்கும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் வேடங்கிநல்லூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த இடத்தை திருவள்ளூர் தொகுதி எம். எல். ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
அதன்படி புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.33 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரே நேரத் தில் 56 பஸ்கள் நிறுத்தம் செய்யவும், நகரப் பேருந்துகள் வந்து செல்லவும் முடியும். மேலும் 103 வணிக வளாகம், முதல் தளத்தில் 93 கடைகளும் இடம் பெற உள்ளன.
மேலும், குடிநீர் வசதி, கழிப்பறைகள், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைய இருக்கிறது. இதற்கான ஒப்பந்தப் பணி ஒரு வாரத்தில் நடைபெறும்.
அடுத்த மாதம் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்கும். இதையடுத்து புறவழிச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொ டங்க நடவடிக்கை எடுக்கப் படும்.
இன்னும் 10 ஆண்டுகளில் பூந்தமல்லி வரை வந்துள்ள மெட்ரோ ரெயில் திட்டம் திருவள்ளூர் வரை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, வட்டாட்சியர் மதியழகன், நகர்மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
- பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஸ் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
- மனிதநேய ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுச செயலாளர் ஹாரூன் ரசீது சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநில துணைச் செயலாளர் சைபுல்லா முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் சலீம், அபூபக்கர், சிராஜுதீன், அசாருதீன், உஸ்மான், அல்லாபிச்சை, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சிவகங்கை மாவட்டத்தில் பேரூர்களை இணைக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானா மதுரை, இளையான்குடி, காளையார் கோயில், சிவகங்கை வழித்தட ங்களில் இரு மார்க்கங்களிலும் வட்ட பஸ்கள் இயக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை நேரு பஜாரில் குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை மற்றும் மதுக்கூடம் மீண்டும் திறக்க முயற்சி நடப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இளையான்குடியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அமைப்புகளின் எதிர்ப்புகள், போராட் டங்களை மீறி நகருக்கு வெளியே பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணி களை ஆரம்ப நிலையில் உடனே நிறுத்தி தற்போ துள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல இடங்களில் ஆட்டோ சங்கங்கள் மற்றும் பெயர் பலகைகளை திறந்து வைத்து கட்சி கொடிகளை பொதுச் செயலாளர் ஹாருன்ரசீது ஏற்றி வைத்தார்.
- அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர்.
- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், தனது கணவருடன் வெளியூருக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது கணவர் மொபட் எடுத்து வருவதற்கு சென்றிருந்தபோது அந்த பெண் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (வயது 34) என்பதும், இவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.