என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cancer"

    • சமீபகாலமாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    பெண்கள்தான் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்றில்லை. சமீபகாலமாக இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிகள் அல்லது வீக்கம் இருப்பதாக உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அலட்சியம் செய்தால் புற்றுநோயின் வீரியம் அதிகமாகி உயிரிழப்புக்கும் வழிவகுத்துவிடும்.

    ஆண்களில் சுமார் 81 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றியோ, அதனை கண்டறிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் பற்றியோ தெரிந்திருக்கவில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் முறையாக சிகிச்சை அளித்து நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட முடியும்.

    குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தாலோ, மரபணு ரீதியாகவோ, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தாலோ எளிதில் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக பரம்பரை ரீதியாக யாருக்கேனும் புற்றுநோய் இருந்து வந்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

    அது நோய் உருவாகுவதற்கு முன்பே கண்டறிய உதவும். புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும். தகுந்த சிகிச்சை பெறுவதற்கும் உதவும் என்கிறார்கள்.

    • புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நடைபெற்றது.
    • டாக்டர் அபிராமி மற்றும் டாக்டர் பாண்டிச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    நெல்லை:

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக நடைபெற்றது. இதில் வாசுகி வரவேற்று பேசினார். ரோட்டரி கிளப்பின் நைனா முகம்மத், ரோட்டரி கிளப்பின் தலைவர் ஹாஜி இப்ராகிம் அறிமுகவுரை ஆற்றினார். நெல்லை கேன்சர் கேர் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.முருகன் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, தனி மனித ஒழுக்கம் மற்றும் சமூக சுய கட்டுப்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். டாக்டர் எம்.அபிராமி மற்றும் டாக்டர் பாண்டிச்செல்வி சிறப்புரையாற்றினார். புற்றுநோய்களின் வகைகள் மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பேராசிரியர், திட்ட அலுவலர்கள் சென்றாய பெருமாள், பேராசிரியர் லெனின் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கணைய புற்றுநோய் சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது.
    • இது நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை

    இன்றைய தலைமுறையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் பெண்களுக்கு கணைய புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் கணைய புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பொதுவாக கணைய புற்றுநோய் சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை மற்றும் அறிகுறிகள் வெளிப்பட்டாலும் அது கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகள் தான் என்று அடையாளம் காண்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.

    55 ஆண்களை காட்டிலும், 55 வயதுக்குட்பட்ட பெண்களில் கணையப் புற்றுநோய் 2.4 சதவீதம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களிடையே கணைய புற்றுநோயின் விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2001 மற்றும் 2018ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட டேட்டாக்களின்படி, இரு பாலினத்தவர்களிடமும் புற்றுநோய்க்கான விகிதங்கள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை தான் முதல் அறிகுறியாக வெளிப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் வந்தால் நோயாளியின் கண்கள் மற்றும் தோலின் நிறம் மஞ்சளாக காட்சியளிக்கும். பித்த நாளத்திற்கு அருகில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும் போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது, இந்த புற்றுநோய்கள் குழாயில் அழுத்தி மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும்.

    • 500- க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
    • மருத்துவர்கள் கீதா, தீபிகா உள்ளிட்டோர் பொது மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட சுகா தார நலபணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமை தாங்கினார்.

    தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்காசி எம்.பி.தனுஷ் குமார் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் முரளிசங்கர், தென்காசி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி, இந்திய மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் அஜீஸ் கலந்து கொண்டனர்.

    முகாமில் 500- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோ தனை செய்து கொண்டனர்.

    மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் பொதுமக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்து, புற்றுநோய் இல்லா தென்காசி மாவட்டத்தினை உருவாக்கு வதற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எப்போதும் தயாராகவும் அதற்க்கான முயற்சிகளை எப்போதும் மேற்கொண்டிருப்பதாக கூறினார்.

    முகாமில் மருத்துவர்கள் கீதா, லதா, ஸ்வர்ணலதா, விஜயகுமார், கார்த்திக் அறிவுடை நம்பி, ஷெரின், நாகஜோதி, தீபிகா ஆகியோர் பொது மக்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.

    ரத்தமாதிரிகள் அங்கேயே சேகரிக்கப்பட்டு அதற்கான முடிவுகளும் 10 நிமிடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சைக்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    மேலும் முகாமில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, திருப்பதி, முத்துலட்சுமி, வசந்தி மற்றும் செவிலியர்கள், மருந்தாளு னர்கள், பணியாளர்கள் அனை வரும் கலந்து கொண்டனர். உறைவிட மருத்துவர் ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.

    • ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது நிறுவப்பட்டுள்ள டெலிகோபால்ட் கதிர்வீச்சு சிகிச்சை கருவி ரூ.2.76 கோடி மதிப்பிலானது.
    • ‘ஈக்வினாக்ஸ்’ என்று அழைக்கப்படும் கருவியானது உலகத்தர தொழில்நுட்பத்திலானது.

    சென்னை:

    புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை அளிப்பதற்கான டெலிகோபால்ட் கருவி சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    வழக்கமான கதிர்வீச்சு சிகிச்சைகளைக் காட்டிலும் துல்லியமாக புற்றுநோய் செல்களை இது அழிக்கவல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோ தெரபி, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிசிச்சை என வெவ்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. நோயின் தன்மை மற்றும் வீரியத்தை பொருத்து அவை வேறுபடுகின்றன.

    அதன்படி, மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், தோல் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு தேவையின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் அதற்காக தனி துறைகளும் செயல்பட்டு வருகின்றன.

    கதிரியக்க சிகிச்சைகளைப் பொறுத்தவரை அதி நவீனமான ஒன்றாகக் கருதப்படுவது 'ட்ரூபீம் ரேடியேஷன்' முறை மற்றும் டெலிகோபால்ட் முறை தான். அந்த வகையான சிகிச்சை மூலம் மிகத் துல்லியமாக புற்றுநோய்க் கட்டிகளை அகற்றலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

    பிற கதிரியக்க சிகிச்சைகளில் புற்றுநோய் கட்டிகளுக்கு அருகே உள்ள உறுப்புகளுக்கு சிறிய அளவிலான பாதிப்புகளோ அல்லது எதிர்விளைவுகளோ ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், புற்றுநோய் புறக் கதிர்வீச்சு சிகிச்சைக்காக அதிநவீன டெலிகோபால்ட் கருவி மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் நிறுவப்பட்டு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மருத்துவமனையின் கதிர்வீச்சு சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எஸ்.சரவணன் கூறியதாவது:-

    ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது நிறுவப்பட்டுள்ள டெலிகோபால்ட் கதிர்வீச்சு சிகிச்சை கருவி ரூ.2.76 கோடி மதிப்பிலானது.

    'ஈக்வினாக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த கருவியானது உலகத்தர தொழில்நுட்பத்திலானது. இந்த சிகிச்சையின் கீழ் காமா கதிர்கள் உருவாக்கப்பட்டு, அதனை புற்றுநோய் பாதித்த உடல் திசுக்களின் மீது மட்டும் செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்க முடியும்.

    இக்கருவியின் மூலம் உயர் ஆற்றல் காமா கதிர்களை செலுத்துவதற்கு முன்பு சி.டி. சிமுலேட்டர் என்ற துணைக்கருவி மற்றும் மென் பொருள் உதவியுடன் சிகிச்சை விவரங்கள் பதிவேற்றப்படுவதால் மிகத் துல்லியமாகவும், துரிதமாகவும் புற்றுநோய் செல்களை அழிக்க இயலும்.

    கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்று நோய், உணவுக் குழாய் புற்று நோய் போன்ற பல்வேறு புற்று நோய்களை முழுமையாக குணப்படுத்த இத்தகைய சிகிச்சை முறைகள் உதவும்.

    புற்று நோய் 4 நிலைகளாக இருக்கும். முதல் மற்றும் 2-ம் நிலைகளில் கண்டு பிடித்து விட்டால் இந்த நவீன கதிர்வீச்சு கருவிகள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

    3 மற்றும் 4-ம் நிலை நோயாளிகளுக்கு பலவிதமான சிகிச்சை முறைகள் தேவைப்படும். அதாவது அறுவை சிகிச்சை, ஹீமோ தெரபி, கதிர்வீச்சு தெரபி போன்ற சிகிச்சை முறைகள் தேவைப்படும்.

    தமிழக அரசு புற்று நோயை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ராயப்பேட்டை மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள 'லீனியர் ஆக்சல ரேட்டர்' கருவியின் விலை மட்டும் ரூ. 22 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே இருந்த 'கோபால்ட்' கருவி நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் ஆகி விட்டதால் பழமையாகி விட்டது. எனவே இப்போது புதிய கருவி நிறுவப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூடுதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். நோயாளிகள் காத்திருப்பு நேரமும் குறையும்.

    இந்த கோபால்ட் கருவி தமிழகம் முழுவதும் 15 ஆஸ்பத்திரிகளில் நிறுவ திட்டமிட்டு 7 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. விரைவில் 8 இடங்களில் நிறுவப்படும். அரசின் ஒத்துழைப்பால்தான் இவ்வளவு அதி நவீன சிகிச்சை கிடைக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளில் ராயப்பேட்டை மருத்துவமனையில் மட்டும் கோபால்ட், லீனியர் ஆக்சலரேட்டர் மற்றும் எச்.டி. ஆர். முறையின் கீழ் 12 ஆயிரம் புற்றுநோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய இந்த சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக இங்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரிசோதனையில் அவருக்கு 4-வது நிலை வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
    • 90 சதவீத நாக்கின் பகுதியை இழந்திருந்தார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா வீக்ஸ் என்ற 37 வயதான பெண், நாக்கில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டார்.

    அவருக்கு நாக்கில் வெள்ளை திட்டுக்கள் தோன்றின. பல ஆண்டுகளில் அந்த பிரச்சினையுடன் இருந்த அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாக்கில் ஒரு பெரிய துளை உருவானது.

    இதனால் அவரால் சாப்பிட முடியவில்லை. பரிசோதனையில் அவருக்கு 4-வது நிலை வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதில் அவர் 90 சதவீத நாக்கின் பகுதியை இழந்திருந்தார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நாக்கின் பெரும்பகுதியை அகற்றிவிட்டு, அங்கு கையில் இருந்து திசு ஒட்டுதல்களை எடுத்து நாக்கில் பொருத்தப்படும் என்று தெரிவித்த டாக்டர்கள், மீண்டும் அவரால் பேச முடியாது என கூறினார்கள். இந்த அறுவை சிகிச்சையில் கை தசைகளை நாக்கில் வெற்றி கரமாக டாக்டர்கள் பொருத்தினார்கள். மீண்டும் பேச முடியாது என்று டாக்டர்கள் கூறியிருந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு சில நாட்களில் ஜெம்மாவால் பேச முடிந்தது. அவரை பார்க்க வந்த உறவினர்களிடம் ஹலோ என்று கூறினார்.

    இதுகுறித்து ஜெம்மா வீக்ஸ் கூறும்போது, "அறுவை சிகிச்சைக்கு பிறகு என்னால் பேசவே முடியவில்லை. அது அப்படியே இருக்கும் என்று டாக்டர்கள் நினைத்தனர். சில நாட்களில் என் வருங்கால கணவரும், மகளும் என்னை பார்க்க வந்தபோது அவர்களிடம் ஹலோ என்று கூறினேன். அந்த குரல் முன்பு போல் இல்லை. ஆனால் அது நல்ல முன் னேற்றமாக இருந்தது. உண்மையில் நான் பேசு வதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

    • ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும்
    • மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால் தாக்கப்படுகின்றனர். இவற்றில், 8.8 மில்லியன் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன

    நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் என பலவகை உள்ளன. குழந்தைகளையும் புற்றுநோய் விட்டு வைப்பதில்லை. 2012-ம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் பரவுகிறது.

    உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயாளியின் நிலையை சிக்கலாக்குகிறது.அத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.

    இந்நிலைதான் பெரும்பாலான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணம். கட்டி செல்கள் ரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேறி மற்ற உறுப்புகளுக்கு பரவுகின்றன.

    இதனை தடுக்க அமெரிக்க, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) மற்றும் பிரிட்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசி) விஞ்ஞானிகள் மெட்டாஸ்டாசிஸின் வழிமுறைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்தனர்.

    முதன்முறையாக, விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்கள் உறுப்புகளில் ஊடுருவும் முறையை விரிவாக கண்டுபிடித்தனர். புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    புதிய மருந்துகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    உடலில் ஒரு இடத்தில் புற்றுநோய் தொடங்குகிறது. அங்கிருந்து கட்டி செல்கள் உடைந்து, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.

    இதன் விளைவாக மற்ற உறுப்புகளில் 2-ம் நிலை கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் மண்டலத்தில் நுழைவதற்கு முன்பு முதன்மைக் கட்டியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். கட்டி பெரிதாகி, அருகில் உள்ள திசு, நிணநீர், ரத்த நாளங்களில் பரவும் போது அந்த செல்கள்தான் முதன்மையான தளமாக அமைகிறது.

    புற்றுநோய் பரவலை தடுக்க விஞ்ஞானிகள் அதன் முன்மாதிரியை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.

    ரத்த ஓட்டத்திற்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் எண்டோடெலியம் எனப்படும் ஒரு அடுக்கு உள்ளது. விஞ்ஞானிகள் இதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.

    ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.

    "சேற்றில் சிக்கிக் கொண்டால், வெளியே வருவதற்கு கல் போன்ற சுவர் வேண்டும். புற்றுநோய் செல்கள், எண்டோடெலியத்தில் இருந்து வெளியேறி, மற்ற சுவர்களில் பரவுவதையே தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    உடலில் உள்ள திசுக்களில் அதிக நுண்துளைகள் உள்ளன. மென்மையானதாக இருப்பதால் மேலும் வேகமாக புற்றுநோய் செல்கள் ஊடுருவ முடியும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உடலில் உள்ள குறிப்பிட்ட திசுக்களின் புதிய வேதியியல் பண்புகள் 2-ம் நிலை கட்டிகள் எங்கு உருவாகின்றன என்பதை தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை இந்த ஆராய்ச்சி எழுப்பியுள்ளது.

    மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    இந்த ஆராய்ச்சி மூலம் உடலில் புற்றுநோய் பரவலை தடுக்க முடியுமா? எனவும் மருத்துவ வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன.
    • புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    முன்பு புற்றுநோய்(கேன்சர்) வந்து விட்டால் குணப்படுத்த முடியாது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. புற்றுநோய் வந்து விட்டால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் இறந்து விடுவார்கள் என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது புற்றுநோய்க்கு பல்வேறு அதிநவீன அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன. புற்றுநோய் கட்டிகளை அகற்றி குணப்படுத்தப்பட்டவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பெருங்குடல் புற்று நோய் எளிதில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் குடல் நோய் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெ.பாலமுருகன் கூறியதாவது:-

    பெருங்குடல் புற்று நோய்

    புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று பெருங்குடல் புற்று நோய். இந்த புற்று நோய் ஜீரண மண்டலத்தின் கடைசி பகுதியான பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் ஏற்படும்.

    பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படும். ஆண்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக பெருங்குடல் புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுகிறது.

    மரபணு கோளாறு

    பெருங்குடலில் தான் நீர்சத்து உறிஞ்சப்பட்டு மனித கழிவு உருவாகுகிறது. இந்த பெருங்குடல் புற்றுநோய் மரபணு கோளாறு, குடும்பத்தில் மூதாதையர்களுக்கு யாருக்காவது(பரம்பரையாக) இருந்தால் வரும். உணவு பழக்க வழக்கங்களாலும் ஏற்படும். புகை பிடித்தல், மது அருந்துதல், இறைச்சி வகைகளை அதிகமாக உண்பதாலும் இந்த புற்றுநோய் ஏற்படும்.

    தற்போது யாரும் கீரை போன்ற நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவது இல்லை. குறிப்பாக மேலை நாட்டு உணவு வகைகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் இந்த புற்று நோய் ஏற்படுகிறது. இந்த புற்று நோயை கண்டறிய வயிற்று பகுதியில் ஸ்கேன் மற்றும் குடல் உள்நோக்கி கருவிகள்(colonoscopy) செய்து பார்க்க வேண்டும்.

    மூல நோய்

    குடல் புற்று நோய் அறிகுறி இருந்தால் மலக்குடல் வழியாக ரத்தம் வரும். அதனால் நாம் மூல நோய் வழியாகத்தான் ரத்தம் வருகிறது என எண்ணக்கூடாது. 85 முதல் 90 சதவீதம் வரை மூலநோய் இருக்கலாம். 15 சதவீதம் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இதேபோல வலது பக்க பெருங்குடல், மேல் பகுதியில் ரத்தக்கசிவு இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம்.

    உடலில் ஹீமோகுளோபின்(ரத்த அளவு) குறைந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு உடல்சோர்வு, பசியின்மை, மலச்சிக்கல், ரத்தசோகை போன்றவை காரணமாக இருக்கும். இடது பக்க பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டு பின்னர் அடைப்பு ஏற்படும். மேலும் மலச்சிக்கலுடன், ஒரிரு நாட்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி என அடிக்கடி ஏற்பட்டால் கூட பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாக தென்படும்.

    தொடக்க நிலை

    இதை கவனிக்காமல் விட்டால் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதற்கு தகுந்த அறுவை சிகிச்சை முறை மூலம் குணப்படுத்தலாம். இதை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். இதற்கு அறுவை சிகிச்சை ஹீமோதெரபி, மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் இதில் எந்த நோயாளிக்கு எந்த வகையான சிகிச்சை முறை தேவை என்பதை புற்றுநோய் மருத்துவக்குழு தான் முடிவு செய்யும்.

    அறுவை சிகிச்சைகளும் 2 வகையாக மேற்கொள்ளப்படும். ஒன்று வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்யப்படும். மற்றொரு முறை நுண்துளையிட்டு அறுவை சிகிச்சை(laparoscopy) மூலம் புற்றுநோய் கட்டிகள் அகற்றப்படும். இந்த சிகிச்சை முறையை சிறந்த அறுவை சிகிச்சை டாக்டர்களை கொண்டு செய்ய வேண்டும். வயிற்றை திறந்து அறுவை சிகிச்சை செய்வதை காட்டிலும், லேப்ராஸ்கோப்பி மூலம் நுண்துளை அறுவை சிகிச்சை முறை என்பது மிகவும் துல்லியமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையாகும்.

    கதிர்வீச்சு சிகிச்சை

    வயிற்றை திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சை செய்தால் அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தால் மறு நாளே நோயாளி எழுந்து நடக்கலாம். 4 நாட்களில் வீடு திரும்பலாம். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    பெருங்குடல், மலக்குடல் புற்று நோயை முதல் மற்றும் 2-வது நிலைகளிலேயே கண்டறிந்தால் துல்லியமாக குணப்படுத்தி விடலாம். ஆரம்ப நிலையில் அலட்சியமாக இருந்து விட்டு நோய் முற்றிய நிலையில் சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்துவது சற்று கடினம். தற்போது இந்த பெருங்குடல் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரோபோடிக் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் வந்து விட்டது. எனவே நாம் விழிப்புடன் இருந்தால், பெருங்குடல் புற்று நோயை குணப்படுத்தி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல் பருமன் அதிகரிக்கும்போது புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது
    • தெருவுக்குத் தெரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் முளைத்துவிட்டன.

    இன்று உலகை அச்சுறுத்தும் முக்கிய நோயாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது புற்றுநோய். இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் ரொம்பவே அதிகம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் கூட இந்நோய் ஆழமாக ஊடுருவிவிட்டது. அதனால் தெருவுக்குத் தெரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் முளைத்துவிட்டன.

    நல்ல வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து சரியான சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். ஆனால், வசதி, வாய்ப்பில்லாத பலர் இறுதிக் கட்டத்தில் நோயை கண்டறிந்து மரணத்தைத் தழுவுகின்றனர். இந்நிலையில், ''புகைப்பிடித்தலை விட உடல் பருமன்தான் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது...'' என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ நிறுவனம் பல ஆண்டுகளாக புற்றுநோய் குறித்து ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பால் புட்டியால் குழந்தைகளுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை உலகுக்குத் தெரிவித்ததும் இந்த நிறுவனம்தான்.

    குடல், சிறுநீரகம், கல்லீரல், கருப்பை புற்றுநோய் உட்பட 13 வகையான புற்றுநோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது உடல் பருமன் தான் என்று அடித்துச் சொல்கிறது அந்த ஆய்வு. இந்த வகையில் உலகம் முழுவதும் உடல் பருமன் காரணமாக பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

    'புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்' அளவுக்கு 'அதிகமான உடல் பருமனும் புற்றுநோயை உண்டாக்கும்' என்று நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது அந்த ஆய்வு முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

    உடல் பருமன் உடைய எல்லோரையுமே புற்றுநோய் தாக்காது என்பது இதில் சின்ன ஆறுதல். ஆனால், தேவையில்லாமல் உடல் பருமன் அதிகரிக்கும்போது புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்று ஆலோசனை தருகிறார்கள் மருத்துவர்கள்.

    • முடி திருத்தும் தொழிலாளி ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயின் தலைமுடியை மொட்டையடிக்கிறார்.
    • தாய்க்கு ஆதரவாக தொழிலாளியும் தனக்கு தானே மொட்டை அடித்து கொள்கிறார்.

    புற்றுநோய் வந்தவர்களுக்கு அளிக்கப்படும் ஹீமோ தெரபி போன்ற சிகிச்சைகளால் அவர்கள் முடி கொட்டும் என்பதால் அவர்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடித்து கொள்வார்கள். உணர்வு ரீதியாக இந்த வலியை கடப்பது சற்று கடினமானது என்பதால் அந்த நேரத்தில் மற்றவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். இதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், முடி திருத்தும் தொழிலாளி ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயின் தலைமுடியை மொட்டையடிக்கிறார். பின்னர் தாய்க்கு ஆதரவாக அந்த தொழிலாளியும் தனக்கு தானே மொட்டை அடித்து கொள்கிறார். இதை கவனித்த அந்த தொழிலாளியுடன் வேலை செய்யும் சக தொழிலாளர்களும் தங்கள் தலைமுடியை சேவிங் செய்கிறார்கள். இதை கண்ட புற்றுநோயாளி கண்ணீர் விட்டு அழுவது போன்று காட்சிகள் உள்ளன. வைரலாகி வரும் இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து இதுவரை 47.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 3.8 மில்லியன் விருப்பங்களையும் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது உருக்கமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    • மருத்துவ சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை
    • ரூ.16 லட்சம் செலவாகும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாதன வலசை கிராமம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகள் ரித்திகா (வயது 12).

    இவர் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.கோடை விடுமுறையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது தெரியவந்தது.அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் செலவாகும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மத்திய,மாநில அரசின் காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.3 லட்சம் வரை மட்டுமே மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நிலை உள்ளது. மீதித்தொகை யை எப்படி ஈடு கட்டுவது என ரித்திகாவின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    • நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும்.

    பெண்களுக்கு ஏற்படுகிற புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது.

    இந்த நோய் வருவதற்கு பரம்பரைதான் முக்கிய காரணம். குடும்பத்தில் அம்மா, அக்கா, தங்கை மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மார்பக புற்றுநோய் வந்திருக்குமானால், அந்த குடும்பத்தில் பிறந்த மற்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தராத பெண்களுக்கும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்திய பெண்களுக்கும் இது வருவதுண்டு.

    சிறு வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதும் இந்த நோய்க்கு வரவேற்பு தருகிறது. கோவிலுக்கு செல்லும்போதும், வீட்டில் விசேஷ நாட்களின்போதும் மாதவிடாயை தள்ளிப்போடுவதற்காக பெண்கள் சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இளம் வயதில் இதை எடுத்துக்கொண்டாலும் 20 வருடங்கள் கழித்து மார்பகப் புற்றுநோய்க்கு அது வழி அமைத்து விடுகிறது. பெண்களுக்கு மார்பக வளர்ச்சிக்கு பெரிதும் துணைபோவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவுக்கு மீறி சுரந்து விட்டால் மார்பக வளர்ச்சியை அதிகப்படுத்தி விடும்.

    இளம் வயதில் இது அழகாக இருக்கலாம். 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும். குறிப்பாக, இன்றைய இளம் பெண்கள் விரைவு உணவையும் பாக்கெட் உணவையும் மிகவும் விரும்பி உண்கிறார்கள். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதே வேளையில் மார்பகத் திசுக்களும் பெருகுகின்றன. இது இயற்கையை மீறி நிகழ்வதால், மார்பகத்தில் கட்டிகள் உருவாகவும் இது வழி செய்கிறது. அந்தக் கட்டி புற்றுநோயாக மாறுவதற்கும் இடம் தருகிறது.

    குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொண்ட பெண்களுக்கும், குழந்தையே இல்லாத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம். அதேபோல 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்பவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. கணவர் புகைபிடிப்பவராக இருந்தால், அந்தப் புகையைச் சுவாசிக்கிற மனைவியையும் இது தாக்கும் ஆபத்து பல மடங்கு அதிகம்.

    மார்பக தோலின் நிற மாற்றம், தோல் சுருங்குதல், மார்பக காம்புகள் உள்நோக்கி இழுத்தல், காம்பிலிருந்து நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்பகத்தில் கட்டி, வலி, அக்குளில் கட்டி போன்றவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள். இவற்றை அலட்சியம் செய்யாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொண்டால் முழுவதுமாக குணம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, நோயைக் கவனிப்பதில் தாமதப்படுத்தி, நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் இந்த நோயால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகம்.

    ×