என் மலர்
நீங்கள் தேடியது "ceremony"
- மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் துணை மருத்துவ பாடப்பிரிவு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடந்தது.
- பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் துணை மருத்துவ பாடப்பிரிவு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணைதலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர். ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால் வரவேற்றார்.
மணக்குள விநாயகர் என்ஜீனியரிங் கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, கல்லூரியில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகள், உலகத்தர கட்டமைப்போடு கூடிய ஆய்வக வசதிகள், சர்வதேச சான்றிதழ் படிப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கினார்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மற்றும் டீன் கலைசெல்வன், மயக்கவியல் துறை தலைவர் சுனித் லாசர், பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு துறை அதிகாரி ஜெயகுமார், அகடாமிக் டீன் அன்புமலர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம், விவசாய துறை டீன் முகமதுயாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் அனைத்து துறை டீன்கள், துறை தலைவர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
- புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள வலம்புரி வித்யா விநாயகர் கோவில் 34 ஆண்டுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவில் பல்லைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள வலம்புரி வித்யா விநாயகர் கோவில் 34 ஆண்டுக்கு பிறகு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மண்டலாபிஷேக விழா நடந்தது.இதன் நிறைவு விழா கணபதி ஹோமம், யாக வேள்வி, கடம் புறப்பாடு, சங்காபிஷேகம் ஆகியவை நடந்தது. துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமை தாங்கி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பிரசாதம் வழங்கினார்.
விழாவில் பல்லைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
- ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்குச்சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது.
- ஒன்றிய பகுதிகளில் உயிர் நீத்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மேலவெளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் முன்னோடிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 27-ம் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒன்றியம் மற்றும் கிளை கழகங்களால் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் கிளை கழகங்களில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்குசாவடி முகவர்களை நியமிப்பது, ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்கு சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஒன்றிய பகுதிகளில் உயிர் நீர்த்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது .
இதில் ஒன்றிய குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மல்லிகா உத்திராபதி, ராமநாதன், பால துரையரசன், கோவி. ராஜேந்திரன், சதீஷ்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மோகன், ஸ்டாலின் ராஜன், செல்வ கலைமணி, ஒன்றிய பிரதிநிதி ஆற்காடு புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் கர்ணன் நன்றி கூறினார்.
- அலங்காநல்லூர் அருகே முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் வெள்ளிமலை கரட்டு காலனியில் அமைந்துள்ள சிவன், அங்காள ஈஸ்வரி அம்மன், பெருமாள், அனுமார், முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களுடன் யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. அனைத்து தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கரட்டு காலனி சிவனடியார்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.
- அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இல்ல திருமண விழா மதுரையில் விமரிசையாக நடந்தது.
- இதில் முன்னாள் அமைச்சர்கள்-முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரை
மதுரை மத்திய 6-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளரும், ஆர்.கே. குரூப் ஆப் கம்பெனிஸ் மற்றும் ஸ்ரீ வெற்றி பார்மா மேனேஜிங் டைரக்டர்மான எம்.ஜி. ராமச்சந்திரன்-கொன்னலட்சுமி தம்பதியின் மகள் ராஜிக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் -உமா மகேஸ்வரி தம்பதி மகனுமான மோகன் ராஜூக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இவர்களது திருமணம் நேற்று (20-ந் தேதி) அழகர் கோவில் ரோடு சூர்யா நகரில் உள்ள விஜய் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. திருமணத்தை மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் எம். கணேசன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் எம்எஸ். பாண்டியன், அண்ணாதுரை, ராஜா, ஜெயபாலன், சக்தி மோகன், குமார், சோலை எம். ராஜா, சக்தி விநாயகர் பாண்டியன், தளபதி மாரியப்பன், பரவை ராஜா, திரவியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் அரசியல் கட்சியினர், தொழிலதி பர்கள், முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண ஏற்பாடுகளை எம்.ஜி. ராமச்சந்திரன்- கொன்னலட்சுமி மற்றும் குடும்பத்தினர் உதயகுமார்- புனிதா, நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.
- மயிலம் நர்சிங் கல்லூரி, துணை செவிலியர் படிப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் 4-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
- கல்லூரி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்,
புதுச்சேரி:
மயிலம் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான மயிலம் நர்சிங் கல்லூரி, துணை செவிலியர் படிப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் 4-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலம் நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி வரவேற்று பேசினார். கல்லூரி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். விழாவில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ராஜப்பன் மற்றும் மயிலம் கல்விகுழுமத்தின் அனைத்து துறை தலைவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் மயிலம் நர்சிங் கல்லூரி துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.
- 113-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா
- துளிகள் அமைப்பு சார்பில் 20,340 மரக்கன்றுகள்
காங்கயம்:
காங்கயம் துளிகள் அமைப்புசார்பில் 20,340 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்தநிலையில் 113-வது கட்ட மரக்கன்றுகள் நடும் விழா குண்டடம் யூனியன் தும்பலப்பட்டியில் நடைபெற்றது. குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நந்தவனம்பாளையம் ஊராட்சி தலைவர் தனசெல்வி நாச்சிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் என்.பி. பாண்டியன், 6-வது வார்டு உறுப்பினர் பிரியா பூபதி, ஊராட்சி செயலாளர் ஜெயமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரியூர் வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்கள் அறிமுக விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசு செயலர் டாக்டர் அருண் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்கள் அறிமுக விழா மற்றும் துவக்க விழா நடைபெற்றது. அரியூர் ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திரன் வழி காட்டலின் படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணா, முதன்மை இயக்க அதிகாரி டாக்டர்.வித்யா, பொது மேலாளர் சௌந்தர்ராஜன், டீன் துரைவேல், முதல்வர் சரோஜினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசு செயலர் டாக்டர் அருண் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுவை மதர்தெரேசா பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர்.கோபால், சென்னை ரெகுலேட்டரி கார்ப்பரேஷன் டேப்லெட்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர்.சதீஷ் ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை பாராட்டி பேசினார்கள். வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரி இணை பேராசிரியர் நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் இணை பேராசிரியர் சென்னியப்பன் நன்றி கூறினார்.
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 25-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் முதலா மாண்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 25-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கல்லூரியின் துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.
முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக கல்லூரியில் இயங்கிவரும் அப்துல் கலாம் மாணவர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் முதலாமாண்டு மாணவர்க ளுக்கு நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் முதலா மாண்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். முடியில் முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் நன்றி கூறினார்.
- தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது.
- 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே கள்ளகிணறு பகுதியில் தனியார் நிறுவனத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் வனப்பரப்பு 22.98 சதம் உள்ளது. அதனை அதிகப்படுத்தும் வகையில் பசுமை தமிழகம் திட்டத்தை முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் 2032 ம் ஆண்டுக்குள் வனப்பரப்பை 33 சதமாக உயர்த்தும் வகையில், இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது 3.50 கோடி இலக்கை தாண்டி மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 15 கோடி மரக்கன்று நடப்படும் .அதற்கு அடுத்த ஆண்டு 25 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,சோமசுந்தரம்(பல்லடம்), அசோகன் (பொங்கலூர்), பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா.
- நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஊட்டி :
தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா குன்னூரில் இளைஞர் அணி சார்பில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமைவகித்து கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். நிகழ்சியில் நகர அவை தலைவர் தாஸ், நகர துணை செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஜெகநாத், நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ், ஜெகநாதன் ராபர்ட், குமரேசன், கோபிசாந், சந்திரன், வசந்தி, காவேரி, செல்வி, உமா மற்றும் நிர்வாகிகள் சிவா, பாலாஜி, சுரேஷ், ஹரி, விவேக், சதீஷ், மதி, அல்தாப், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் பயிர்காப்பீட்டு திட்ட வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் பயிர்காப்பீட்டு திட்ட வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், காலத்தோடு பயிர் காப்பீடு விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் உண்டான பயிர் காப்பீட்டு தேதியை வெளிப்படையாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
வேளாண்துறை அதிகாரியை உடனடியாக மாற்றக் கோரியும் விவசாயிகள் நிகழ்ச்சியை புறக்கணித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.