என் மலர்
நீங்கள் தேடியது "Chandrayaan 3"
- சந்திராயன்-3 விண்கலம் ரூ.615 கோடி செலவில் உருவாகி வருகிறது. தற்போது இந்த விண்கலத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
- பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் விண்ணில் ஏவப்படும்.
திருவனந்தபுரம்:
இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி துறையிலும் சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக சந்திரனுக்கு இந்தியா விண்கலன்களை அனுப்பி பரிசோதனை செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலம் நிலவுக்கு சென்றது. இதில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்ட முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இதன்பயனாக கடந்த 2019-ம் ஆண்டு சந்திராயன் -2 விண்கலம் நிலவை நோக்கி பயணப்பட்டது.
இந்த விண்கலம் நிலவை தொட்டபோது குறிப்பிட்ட இலக்கை அடையும் முன்பு அதன் மேற்பகுதியில் தரை இறங்கியது. இதனால் இந்த சோதனையில் எதிர்ப்பார்த்த தகவல்கள் கிடைக்கவில்லை. என்றாலும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியின் அடுத்த கட்ட சோதனைகளை இந்திய விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.
இதையடுத்து சந்திராயன்-3 விண்கலம் உருவானது. இது முந்தைய விண்கலத்தை போல் அல்லாமல் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த விண்கலம் நிலவுக்கு வெகு அருகில் தரைஇறங்கும் வகையிலும் நிர்மானிக்கப்பட்டது.
அதாவது நிலவுக்கு 100 கிலோ மீட்டர் அருகில் தரை இறங்கும்படி விண்கலம் வடிவமைக்கப்பட்டது. அதோடு மெதுவாக தரை இறங்கும்படியும் உருவாக்கப்பட்டது. நிலவில் தரை இறங்கிய பின்பு அங்கு பல்வேறு சோதனைகளை நடத்துவதற்கான கருவிகள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த கருவிகள் மூலம் நிலவில் உள்ள தனிமங்கள் குறித்தும், அணு இருப்பு குறித்தும் சோதனை நடத்தப்படும். மேலும் வெப்பம் கடத்தும் திறன், நிலவில் தரை இறங்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனையையும் இந்த விண்கலம் மேற்கொள்ளும்.
இதன்மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும்போது என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார் கள். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சந்திராயன்-3 விண்கலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சந்திராயன்-3 விண்கலம் ரூ.615 கோடி செலவில் உருவாகி வருகிறது. தற்போது இந்த விண்கலத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் விண்ணில் ஏவப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் நடந்து வருகிறது. இறுதி கட்ட பணிகள் முடிவடைந்ததும் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
- விண்கலத்தை ஏவும் மார்க்-3 ராக்கெட்டும் தயார் நிலையில் உள்ளது.
திருவனந்தபுரம்:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது.
இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்தது. இதையடுத்து நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் திட்டத்தை தொடங்கியது.
நவீன கருவிகளுடன் உருவான சந்திராயன் 2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் மாதம் இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி செயல்இழந்தது. அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் சந்திராயன் 3 விண்கலம் ஏவும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
கேரளாவில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-
சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதுபோல விண்கலத்தை ஏவும் மார்க்-3 ராக்கெட்டும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கை கோள் மையத்தில் இருந்து சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.
அங்கு விண்கலத்தின் கம்ப்யூட்டர்கள், ஹார்ட்டிஸ்குகள் உள்ளிட்டவற்றை பரிசோதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஏவுதலின் போது எந்தவித இடையூறும் ஏற்பட கூடாது என்பதற்காக அனைத்து பரிசோதனைகளையும் விஞ்ஞானிகள் துல்லியமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுபோல சந்திராயன் 3 விண்கலத்தை ஏந்தி செல்லு ம் மார்க் 3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடந்து வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்து விடும். இதையடுத்து அடுத்த மாதம் ஜூலை 12 முதல் 19-ந் தேதிக்குள் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்திராயன் 3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்தது.
இதையடுத்து, நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன் 2 விண்கலம் ஏவும் திட்டத்தை தொடங்கியது. நவீன கருவிகளுடன் உருவான சந்திராயன் 2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் மாதம் இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதே நேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, சந்திராயன் 3 விண்கலம் ஏவும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும், விரைவில் சந்திராயன் ஏவும் தேதி அறிவிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
- சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
- பணிகள் நிறைவு பெற்று சந்திரயான்-3 விண்கலம் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2.35 மணிக்கு நிலவுக்கு ஏவப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவு குறித்து ஆய்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
இதில் சந்திரயான்-1 என்ற விண்கலம் 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம், நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய திட்டமிட்ட இஸ்ரோ, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. இதில் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது. இதனால் சந்திரயான்-2 திட்டம் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் நிறைவு பெற்று சந்திரயான்-3 விண்கலம் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2.35 மணிக்கு நிலவுக்கு ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா வில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.ஏ. ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டமைப்பு பணிகள் கடந்த வாரமே நிறைவடைந்த நிலையில் தொழில் நுட்ப ரீதியிலான பரிசோதனைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மின்னூட்ட பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த இரண்டு நாட்களில் கவுண்டவுன் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றி அடிப்படையிலான வடிவமைப்பிற்கு பதிலாக சந்திரயான்-3 திட்டத்தில் தோல்வி அடிப்படையிலான வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:-
சந்திரயான்-3 விண்கலம், அனைத்து வகையிலும் வெற்றிகரமாக திட்ட மிட்டபடி ஏவப்பட்டாலும், நிலவில் தரையிறங்குவதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. அந்த திட்டம் முழுவதும் வெற்றியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
ஆனால் தரையிறங்குவதில் தோல்வியடைந்தது. சந்திரயான்-3 விண்கலத்தை முழுவதும் தோல்வியின் அடிப்படையில் உருவாக்கியுள்ளோம். சென்சார் செயலிழப்பு, இயந்திர செயலிழப்பு, கணக்கீடு தோல்வி என பல தோல்விகளை நாங்கள் பார்த்தோம்.
எனவே தோல்வி எதுவாக இருந்தாலும், அது தேவையான வேகத்திலும், குறிப்பிட இடத்திலும் தரையிறங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
சரியாக தரையிறங்காவிட்டால் என்ன செய்வது, குறிப்பிட்ட இடத்தில் இறங்க முடியாவிட்டால் என்ன செய்வது, எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என தோல்விகள் எந்தெந்த வகையில் உருவாகும் என்பதை அடிப்படையாக வைத்து அதற்கு தீர்வு காணும் வகையில் வடிவமைத்துள்ளோம். தோல்வியின் அடிப்படையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் திட்டம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
முந்தைய விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கும் வகையில் வடிவமைத்தோம். தற்போது எந்த இடத்திலும் தரை இறங்கும் வகையில் திட்ட மிட்டுள்ளோம்.
தரையிறங்கும் பகுதியை 500 மீட்டருக்கு 500 மீட்டரிலிருந்து 4 கிலோ மீட்டருக்கு 2.5 கிலோ மீட்டராக உயர்த்தி உள்ளோம். இதனால் எங்கும் தரையிறங்கலாம். எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்டுப்படுத்ததாது.
சந்திரயான்-3 விண்கலம் அதிக எரிபொருளை கொண்டுள்ளது. விக்ரம் லேண்டரில் தற்போது கூடுதல் சோலார் பேனல்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.
- நாளை பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
சென்னை :
'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.
பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. முழுமையாக கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து,
நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- சந்திரயான்-3 சிறிய மாதிரியை ஏழுமலையான் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்.
திருப்பதி:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் புதிய சாதனையாக சந்திரயான்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2.35 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றி பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது சந்திரயான்-3 சிறிய மாதிரியை ஏழுமலையான் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினர்.
சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் அது பணி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4-வது நாடு என்ற பெருமையை நமது நாடு பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- 'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது.
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா:
'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.
பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மதியம் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
- சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.
திருமலை:
சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. அதையொட்டி நேற்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.
கோவிலில் இருந்து வெளியே வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந்தேதி சந்திரயான்-3 ரோவர் நிலவில் தரையிறங்கும் என்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக இயக்குனர் அமித்குமார்பத்ரா, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இணை திட்ட இயக்குனர் கல்பனா உள்பட பலர் இடம் பெற்றனர்.
- சந்திரயான்-2 தரையிறக்கம் தோல்வி அடைந்தது. தோல்விக்கு வழிவகுத்த காரணிகள் பற்றிய தரவுகளை பெற்றோம்.
- சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் லேண்டர் தரையிறங்குகிறது. அதில் சவால்கள் உள்ளன.
சந்திரயான்-3 இன்று விண்ணில் ஏவப்படுகிறது- சந்திரனின் மேற்பரப்பில் கால் தடம் பதிக்க தயாராகும் இந்தியா
சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் ஏவப்படுகிறது. அது ஆகஸ்ட் 23 அல்லது 24-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திராயான்-3 குறித்து விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் டாக்டர் உன்னிகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-
பணியில் பயன்படுத்தப்படும் லாஞ்ச் வெஹிக்கிள் மார்க்-3 ராக்கெட்டின் தனித்தன்மைகள் என்ன?
எல்.வி.எம்-3 இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் 4 அல்லது 5 டன் எடையுள்ள செயற்கைக்கோளை பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணியான ககன்யானை எளிதாக்கும் வகையில் அதே ராக்கெட் மாற்றியமைக்கப்படும். இது எல்.வி.எம்-ன் 3-வது பணியாக இருக்கும். ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், ராக்கெட் அடிப்படையில் அதே தான்.
ககன்யான் பணிக்கு ஏற்றவாறு ராக்கெட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
பணியாளர்களுக்கு இடமளிக்க ஒரு குழு தொகுதி மற்றும் விபத்து ஏற்பட்டால் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு வசதியை நாங்கள் சேர்த்துள்ளோம். மின்னணு அமைப்பு, மூட்டுகள் மற்றும் முத்திரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும் ராக்கெட்டை மிகவும் பயனுள்ளதாக மாற்ற மாற்றங்களைச் செய்தது. ககன்யான் ஏவுகணையை விஎஸ்எஸ்சி தயாரிக்கிறது. ககன்யான் தொகுதியை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு விஎஸ்எஸ்சி பொறுப்பாகும். பெங்களூருவில் விஎஸ்எஸ்சி இதற்கென பிரத்யேகமாக ஒரு மையம் உள்ளது. திட்டத்தின் 66 சதவீத பணிகள் விஎஸ்எஸ்சி-ல் செயல்படுத்தப்படுகிறது. பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்டால் பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு தொகுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.
2019-ல் சந்திரயான்-2 திட்டம் ஓரளவு தோல்வியடைந்தது. இதனால் சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்க முடியவில்லை. முந்தைய பணியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?
சந்திரயான்-2 தரையிறக்கம் தோல்வி அடைந்தது. தோல்விக்கு வழிவகுத்த காரணிகள் பற்றிய தரவுகளை பெற்றோம். அதன்படி சந்திரயான் 3-ல் மாற்றங்களை செய்தோம். உந்துவிசை அமைப்பு, மென்பொருள் மற்றும் அல்காரிதம்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் புதிய சென்சார்களை சேர்ந்துள்ளோம். சோலார் பேனலின் பரப்பளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2-ல் இருந்து கற்றுக்கொண்ட அனைத்து பாடங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம்.
உந்துவிசை தொகுதிக்கு அடுத்ததாக லேண்டர் உள்ளது. இந்த லேண்டர் சந்திரயான் 2-ஐ விட 300 கிலோ கிராம் அதிக எடை கொண்டது. லேண்டரில் அதிக அவன செலுத்த உந்துவிசை தொகுதியின் எடையை விகிதாசாரமாக குறைத்தோம், மேலும் லேண்டரின் உந்துவிசை அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் மோதினாலும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் அதன் கால்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. லேண்டரின் தரையிறங்கும் வேகம் மற்றும் திசையை கண்காணிக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தவறுகளை சரி செய்துவிட்டதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
சந்திரயான்-3 திட்டத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள சந்திர சூழலை செயற்கையாக உருவாக்கியுள்ளீர்கள். அவை என்னவாக இருந்தன?
த்ரஸ்டரை இயக்காமல் ஹெலிகாப்டரில் இருந்து லேண்டரை நிறுத்திவிட்டோம். சென்சார்கள் சரியாக வேலை செய்து தரவை அனுப்புகிறதா என்பதை நாங்கள் சோதித்தோம். பெங்களூருவில் செயற்கையான சூழல் உருவாக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் கிரேனில் இருந்து லேண்டரை நிறுத்திவிட்டு, த்ரஸ்டர்களை இயக்கினோம். இது சென்சார்கள் மற்றும் பிற செயல்பாடுகளை சோதிக்க இருந்தது. கூடுதலாக, லேண்டர் மற்றும் மென்பொருள்-வன்பொருள் அம்சங்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமா என்பதை நாங்கள் சோதித்தோம்.
நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவாக இருக்கும்?
நிலவில் இறங்குவது ஒரு சிக்கலான செயல். ஒரு விமானி தனது விமானம் தரையிறங்குவதைக் கட்டுப்படுத்துவார். குழ்நிலைக்கு ஏற்ப லேண்டரை கட்டுப்படுத்த யாரும் இல்லை. சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் லேண்டர் தரையிறங்குகிறது. அதில் சவால்கள் உள்ளன. பூமியின் இருக்கும்போது ஏதாவது நடந்தால் மனித தலையீடு என்பது சாத்தியமாகும்.
விண்வெளியில் லேண்டர் அல்காரிதம்கள் மற்றும் மென்பொருளின் உதவியுடன் நிலைமையை எதிர்கொள்கிறது. உந்துவிசை தொகுதியிலிருந்து லேண்டர் பிரிக்கப்பட்டவுடன், 4 உந்துதல் தீக்காயங்கள் லேண்டரை பாதுகாப்பாக தரையிறக்க அனுமதிக்க ஒரு எதிர்சக்தியை வழங்குகிறது. உந்துவிசை தொகுதி சந்திர மேற்பரப்பில் இருந்து 100 இலோமீட்டர் தொலைவில் லேண்டரை வழங்கும். மேலும் அது 30 கிலோ மீட்டர் வரை குறைக்கப்பட்டு படிப்படியாக தரையிறங்கும். முழு செயல்முறையும் பல கட்டங்களைக் கொண்டுள்ளது.
லேண்டரை தரையிறக்கும்போது நீங்கள் கவனம் செலுத்தும் பகுதிகள் என்ன?
லேண்டர் சந்திர மேற்பரப்பில் ஒரு சந்திர நாளுக்கு இருக்க வேண்டும். இது 14 நாட்களுக்கு சமம். சந்திரனின் ஒரு பகுதியில் சூரிய ஒளி 14 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். லேண்டர் முக்கியமாக சூரிய ஆற்றலைச் சார்ந்தது. மேலும் அது 14 நாட்களுக்கு மட்டுமே சூரிய சக்தியைப் பெறும். எனவே 14 நாட்களுக்குப் பிறகு போதுமான மின்சாரம் கிடைக்காது. லேண்டருக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துள்ளோம். லேண்டர் 1.4 டன் எடை கொண்டது. தூசி மற்றும் பாறைகள் சந்திரனின் மேற்பரப்பை 5 முதல் 10 மீட்டர் வரை மூடுகின்றன.
லேண்டர் தரை இறங்கும்போது, தூசியை கிளப்பும். சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியின் விசையில் 1/6 ஆகும். இதனால் தூசி படியை அதிக நேரம் ஆகும். தூசி படியும் வரை காத்திருக்க வேண்டும். தூசி படிந்தவுடன் லேண்டரின் வளைவு திறக்கப்பட்டு ரோவர் உருளும். 25 கிலோ எடை உள்ள ரோவரில் 2 பேலோடுகள் உள்ளன. அவை சந்திர மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் லேண்டரிடம் ஒப்படைக்கப்படும். ரோவர் பூமிக்கு தரவுகளை அனுப்ப இயலாது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிட்டுள்ளோம். அந்த பகுதியில் நீர்ச்சத்து இருப்பதால் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். சூரிய ஒளி மற்றும் வெப்பநிலை கூட பொருத்தமானது.
லேண்டரில் உள்ள மற்ற பேலோடுகள் என்ன?
உந்துவிசை தொகுதியில் ஷேப் எனப்படும் பேலோட் உள்ளது. லேண்டரை வெளியேற்றிய பிறகு உந்துவிசை தொகுதி சந்திர மேற்பரப்பில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றும். ஷேப் என்பது சந்திரனின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியை ஆய்வு செய்வதாகும். உயரமான சுற்றுப்பாதையில் இருந்து நாம் வாழும் கிரகம் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும். சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை அடையாளம் காணவும் ஷேப் உதவும். இந்த ராக்கெட் சந்திரயானை 170x36000 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும். பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட சந்திரயான் அதன் 4 உந்துதல்களை எரிக்கும். பின்னர் அது சந்திரனின் ஈர்ப்பு விசைக்குள் நுழையும்.
ஆகஸ்டில் சூரியனைக் கண்காணிக்க ஆதித்யா எல்-1 என்ற பணியைத் தொடங்குவோம். இதை அடைய பூமிக்கும், சூரியனுக்கும் இடையே 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த வேண்டும். அது பூமியின் ஈர்ப்பு விசைக்கு வெளியே இருக்க வேண்டும்.
- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே பழவேற்காடு கடல் உள்ளது.
- பழவேற்காட்டை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் இந்த கடல் பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம்.
பொன்னேரி:
நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக சந்திராயன் -3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடித்து உள்ளனர். முன்எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் அருகே பழவேற்காடு கடல் உள்ளது. வழக்கமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் இந்த கடல் பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். சந்திராயன்-3 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடாக பழவேற்காடு மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
- பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.
- விண்வெளித் துறையில் இந்தியா மிகவும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது.
சந்திரயான்- 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்படுகிறது. அது ஆகஸ்ட் 23 அல்லது 24-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான்- 3 ஏவப்படுவதற்கு தயாராகி வரும் நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் இன்றைய நாள் (14 ஜூலை 2023) எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்- 3, நமது மூன்றாவது சந்திரப் பயணமானது, அதன் பயணத்தைத் தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்.
சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதன் மூலம் நிலவில் கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கத்தை நிறைவேற்றும் நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.
நமது விஞ்ஞானிகளுக்கு நன்றி. விண்வெளித் துறையில் இந்தியா மிகவும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சந்திரயான்-1, நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதிப்படுத்தியதால், உலகளாவிய நிலவுப் பயணங்களில் ஒரு வழித்தடமாக கருதப்படுகிறது. இது உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட அறிவியல் வெளியீடுகளில் இடம்பெற்றது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே சந்திரனின் மேற்பரப்பில் விண்கலத்தை மென்மையாக தரையிறக்கும் சிக்கலான சாதனையை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழர்கள் தான் இருந்துவருகின்றனர்.
- நான்கு ஆண்டுகளில் பல சோதனைகள் மூலம் சந்திரயான் விண்கலம் படிப்படியாக மேம்பட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் ஏவப்படுகிறது. அது ஆகஸ்ட் 23 அல்லது 24-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்... இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல்!
விஞ்ஞானி வீர முத்துவேலுக்குக் கீழ் 29 துணை இயக்குநர்கள் உள்பட பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உழைத்து சந்திரயான் 3 விண்கல திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழர்கள் தான் இருந்துவருகின்றனர். முதல் இரண்டு திட்டங்களைப் போலவே சந்திரயான் 3 திட்ட இயக்குநராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே பணிபுரிந்துள்ளார். அவர்தான் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல்.
இவரது தந்தை பழனிவேல் ரெயில்வே ஊழியராக இருந்தவர். இவரும் ரெயில்வே பள்ளியில் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனால், விண்வெளியில் இருந்த ஈடுபாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை முடித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்படிப்பை நிறைவு செய்த வீரமுத்துவேல், அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.
நுணுக்கமான ஹார்டுவேர் பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்யக்கூடிய ஆர்வம் கொண்ட இவருக்கு, 1989-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் விஞ்ஞானியாகும் வாய்ப்பு அமைந்தது. இஸ்ரோவில் சேர்ந்த பின்பு அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், இஸ்ரோவில் பணியாற்றுவதையே அவர் விரும்பினார்.
2016-ம் ஆண்டில், விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அந்த கட்டுரை தொடர்பான சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்றது. வீர முத்துவேல் தன் ஆய்வில் கையாண்டிருக்கும் தொழில்நுட்பம் நிலவில் விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கவும், விண்கலத்தின் ரோவர் பகுதியை இயக்குவதற்கும் உதவக்கூடியது.
30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல பொறுப்புகளில், வெவ்வேறு திட்டங்களிலும் பணிபுரிந்த அனுபவம் மிக்க வீர முத்துவேல் கடந்த 2019-ம் வருடம் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பாராட்டுகளைக் குவித்த அவரது ஆய்வுதான் இதற்கு காரணமாக இருந்தது. சந்திரயான் 2 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா பணியாற்றினார். அவருக்குப் பின் விஞ்ஞானி வீர முத்துவேல் அந்தப் பொறுப்பை ஏற்றார். இவருக்குக் கீழ் 29 துணை இயக்குநர்களுடன் இன்னும் பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உழைத்து சந்திரயான் 3 விண்கலத்தின் திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.
நான்கு ஆண்டுகளில் பல சோதனைகள் மூலம் சந்திரயான் விண்கலம் படிப்படியாக மேம்பட்டுள்ளது. சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு சந்திரயான் 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கே பெருமை சேர்க்கும் இத்தகைய திட்டத்தில் தமிழர் ஒருவர் முக்கிய பங்காற்றி வருவது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்த பெருமை.