என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civilians"

    • சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்குள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் இன்று காலை இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்க ம்பட்டி -ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளது.

    இந்த வழியாக அதிக கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் தூசி பரவி காற்று மாசு ஏற்படுகிறது.

    மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடனடியாக தார் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தை கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சீட்டு பணம் கட்டி ஏமாந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
    • குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ரூ. 50 ஆயிரம், ரூ.1 லட்சம் , ரூ. 2 லட்சம் என பல்வேறு மதிப்புகளில் சுமார் ரூ. 10 கோடிக்கு மேல் ஏல சீட்டு நடத்தி வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கணேசபுரம் புது தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ரூ. 50 ஆயிரம், ரூ.1 லட்சம் , ரூ. 2 லட்சம் என பல்வேறு மதிப்புகளில் சுமார் ரூ. 10 கோடிக்கு மேல் ஏல சீட்டு நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏல சீட்டிற்கு பணம் கட்டியவர்களுக்கு குறிப்பிட்ட காலம் முடிந்தும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இந்த நிலையில் கலை செல்வி திடீரென்று தலைமறைவாகி விட்டார். இதனால் ஏல சீட்டு பணம் கட்டிய ஏமாந்தவர்கள் கடந்த 2019 -ம் ஆண்டு நாமக்கல் போலீசில் கலைச்செல்வி உட்பட 7 பேர் மீது புகார் கொடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்து 2019 -ம் ஆண்டு கலைச்செல்வி சேலம் கோர்ட்டில் சரணடைந்தார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்த போது அவரது உறவினர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இதனால் தன்னிடம் ஏல சீட்டுக்கு பணம் கட்டியவர்களுக்கு திருப்பி கொடுக்க பணம் இல்லை என கூறினார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.

    இதனிடையே சீட்டு பணம் கட்டி ஏமாந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் போலீஸ்

    சூப்பிரண்டு அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    இந்த வழக்கை பொரு ளாதார குற்றப்பிரிவுக்கு அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு மாற்றி விசாரித்து இருக்க வேண்டும். ஆனால் அவர், வழக்கை மாற்ற வில்லை, எங்களை ஏமாற்றி வாங்கிய பணத்தின் மூல மாக குற்றவாளிகள் வாங்கிய சொத்துக்களை முடக்கி இருக்க வேண்டும், ஆனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கினை விசாரித்து எந்த சொத்துக்களையும் ஜப்தி செய்யாமல் சாதாரண மோசடி வழக்காக பதிவு செய்துள்ளனர்.

     முக்கிய நபர்களை வழக்கிலிருந்து காப்பாற்றும் வகையில் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்கம் செய்துள்ளனர்.எனவே இந்த வழக்கினை மறு விசாரணை செய்து கோர்ட்டு அனுமதி பேரில் அனைத்து குற்ற வாளிகளையும் வழக்கில் சேர்த்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து சீட்டு தொகையை பெற்று தர போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • முகாமில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே அரங்கக்குடி-வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் அரவிந்தநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் மஜினா பர்வீன் ஷேக் அலாவுதீன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அர்ஷத் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல்அன்சாரி வரவேற்றார்.

    இதில் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    முகாமில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட மருத்துவ குழுவினர், ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், பொதுமருத்துவம், இசிஜி, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை களை செய்தனர்.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர். இந்த முகாமில் இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவுகள், குழந்தை களுக்கான ஊட்டச்சத்து தரக்கூடிய உணவுகள் குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டி ருந்தது.

    இதில் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், அரங்கங்குடி குட்டி ராஜா மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதாரம் மேற்பார்வையாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • பொதுமக்களுக்கு இலவச முககவசம் மற்றும் இனிப்புகளும் வழங்கி கொரோனா விழிப்புணர்வு.
    • பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்.

    தஞ்சாவூர்:

    சீனா , அமெரிக்காவில் மீண்டும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிவேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    பிரதமரின் வேண்டு கோள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் சாண்டா கிளாஸ் என்ற ழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் பொதுமக்களிடம் இலவச முககவசம் மற்றும் இனிப்புகளும் வழங்கி கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அந்த வழியாக சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இலவச முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் . ஜோதி அறக்கட்டளையை சேர்ந்த மாணவ தன்னார் வலர்கள் நாசிகா மற்றும் சிவனாசிக்வரன் ஆகியோர் சாண்டா கிளாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்திலும் நேரு வேடத்திலும் பொது மக்களுக்கு முககவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதுடன் மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளை பின்பற்ற கேட்டுக்கொண்டு இனிப்பு களை வழங்கினார்கள் .

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • மதுரை பசுமலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி 93-வது வார்டுக்கு உட்பட்ட பசுமலை முனியாண்டிபுரம் கருணாநிதி நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இவர்கள் பலகாலமாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மிகவும் சிரமப்பட்ட இப்பகுதி மக்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், திருமங்கலம் கோட்டாட்சியர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

    அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பசுமலையில் மதுரை திருமங்கலம் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சாலையின் இரு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசார் பொதுமக்களிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.மறியலால் சுமார் அரை மணி நேரம் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நகரின் முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
    • மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் தமிழகத்தின் மையப்பகுதியாக அமைந்து உள்ளது. தினமும் மதுரைக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ,அழகர் கோவில், அரசு மருத்துவமனை, மதுரை ஐகோர்ட்டு உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.பல சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

    நகரின் முக்கிய இடங்க ளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. அவைகள் பெயரளவில் அகற்றப்படுகின்றன. பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்புகள் வந்து விடுகின்றன. இதற்கு சில அதிகாரிகளும், அரசி யல்வாதிகளும் உடந்தை என்று கூறப்படுகிறது.

    மேம்பால வசதி குறை வாக உ ள்ளதால் தினமும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. சிக்னல்களில் பொதுமக்கள் விதிமுறைகளை கடை பிடிக்காமல் சென்று வரு கின்றனர். இவர்களை கண்டுகொள்ளாத போக்கு வரத்து போலீசார் சில இடங்களில் சோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கின்றனர்.

    முக்கிய சாலைகளை கடக்கும் இடத்தில் போலீசார் பொதுமக்களுக்கு உதவி செய்ய வருவதில்லை.சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே வயதானவர்கள் சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்கள், முதிய வர்கள் வசித்து வரு கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வசிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.

    ஒரு நகரின் வளர்ச்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சேவையில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை காண முடிகிறது. எனவே நகர வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முக்கியமாக ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நகரில் சுகாதார பணிகளை இரவிலேயே செய்து எப்போதும் நகரம் சுத்தமாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். கொசு மருந்தடித்து கொசு தொல்லையை ஒழிக்க வேண்டும். மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கும்பாபிஷேகத்தை அனைத்து குடும்பத்தி னரையும் இணைத்து நடத்த வலியுறுத்தியும் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்துவதை கண்டித்தும் கோவில் முன்பு 60 குடும்பங்களை சேர்ந்த 40 பெண்கள் உட்பட 100 பேர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
    • அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தை அடுத்த செண்பகமா தேவி ஊராட்சி பகுதியில் கொங்கு குலால பருத்திப்பள்ளிநாடு வசிஷ்ட ரிஷி கோத்ர குல பங்காளிகள் 65 குடிகளுக்கு சொந்தமான ஸ்ரீஅண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருதரப்பினர் இடையே திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் கருத்து வேறுபாடு இருந்தது.

    இது குறித்து வழக்கு போட்டதால் தற்காலிகமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்துள்ளது. இந்த நிலையில் 60 குடும்பங்களை தள்ளி வைத்து விட்டு 5 குடும்பங்களை சேர்ந்த வர்கள் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருதலைபட்ச மாக அனுமதி அளித்திருப்ப தாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

    கும்பாபிஷேகத்தை அனைத்து குடும்பத்தி னரையும் இணைத்து நடத்த வலியுறுத்தியும் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்துவதை கண்டித்தும் கோவில் முன்பு 60 குடும்பங்களை சேர்ந்த 40 பெண்கள் உட்பட 100 பேர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் இந்த போராட்டம் 2-வது நாளாக நடந்தது. இந்த போராட்டம் குறித்து குலால சாலிவாகனமக்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-

    மல்லசமுத்திரம் அருகே உள்ள செண்பகமாதேவி அண்ணமார் கோவில் குலால குலத்தைச் சேர்ந்த ஒரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டது. இதில் இரு தரப்பினர் இடையே பிரச்சனை இருந்ததால் தற்போது தற்காலிகமாக கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. 65 குடும்பங்க ளில் 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஒப்புதலை மட்டுமே பெற்று குறுகிய காலத்திற்குள் கும்பாபிஷேகத்தை ஏற்பாடு செய்து 60 குடும்பங்களை புறக்கணித்துவிட்டு கும்பாபிஷேகத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அனைத்து மக்களையும் இணைத்து கும்பாபிஷேக விழா நடத்து வதற்கு அறநிலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு சென்னையிலும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கொடுத்தோம்.

    யாரும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. கலெக்டர் தற்காலிகமாக நிறுத்தி வைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தி கும்பாபிஷேகத்தை அனைவரையும் இணைத்து நடத்த வாய்மொழி உத்தரவு

    கொடுத்தார். அதை அறநி லையத்துறை அதிகாரிகள் பின்பற்றாமல் செயல் அலுவலர் நந்தகுமார், உதவி ஆணையர் இளையராஜா ஆகியோர் ஒரு தரப்பினருக்கு கும்பாபிஷேகம் நடத்து வதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். அரசு இதை கவனத்தில் கொண்டு அனைத்து குடும்பங்களையும் இணைத்து கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டும். அதுவரை தற்காலிகமாக விழா நடத்த தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • அலுவலகத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் மண் சாலையாக உள்ளது.
    • பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டியில் தாசில்தார் அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் தங்கள் பணி நிமித்தமாக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், அலுவலகத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் மண் சாலையாக உள்ளது. அதுவும், தற்போது பெய்து வரும் கனமழையால் சாலை குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியமாகவும் காட்சியளிக்கிறது.

    இதனால், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த சாலையை தார்சாலையாக அமைத்திடவும் மற்றும் அலுவலக வளாகம் முழுவதும் சிமெண்டு கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செம்மினிபட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • கிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சியில் விளை நிலங்கள் உள்ள பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் தொடங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாககிராம சபை கூட்டத்தில் 5 முறை எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தாசில்தார், கலெக்டர், ஆர்.டி.ஓ., வரை மனுக்கள் கொடுக்கப்பட்டு விசா ரணை நடந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அட்டைப்பெட்டி கம்பெனி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், நிலத்தடி நீர் பாதிக்காது என்பதாலும் தொடங்கிக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அட்டைப்பெட்டி கம்பெனியினர் இடத்தை சுத்தம் செய்ய தொடங்கினர். இது குறித்து வாடிப்பட்டி போலீசில் பொதுமக்கள் புகார் செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையின் முடிவு தங்களுக்கு இதுவரை வரவில்லை என்றும், மீண்டும் அட்டைப்பெட்டி கம்பெனி பணியை தொடங்குவதை கண்டித்து நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு செம்மி னிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மண்டல துணை தாசில்தார் தமிழ்எழிலன், வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன், வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.டி.ஓ.வுக்கு மேல் முறையீடு செய்ய கேட்டுக்கொண்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ விநாயகர்- மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படை யில் இந்த ஆண்டு வருகின்ற 8-ம் தேதி முதல் 12 -ம் தேதி வரை திருவிழா நடத்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் திருவிழாவின் போது அப்பகுதியில் உள்ள மக்கள் தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது திருவிழா நடைபெறுவதை யொட்டி அங்கு தற்காலிகடை அமைப்பதற்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை ெபாதுமக்களிடம் தி.மு.க.வினர் சிலர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பொதுமக்களுக்கும் தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அறிந்து அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் தற்காலிக கடை அமைக்க பணம் கேட்ட திமுக பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்பொழுது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார், பிரச்சினை நடைபெறாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஆண்டாண்டு காலமாக திருவிழாவின் போது தற்காலிக கடை அமைக்க பணம் ஏதும் கொடுக்காமல் தொழில் செய்து வந்தோம். தற்போது திமுகவிவை சேர்ந்த சிலர் தற்காலிக கடை அமைப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். மிரட்டி வருகின்றனர். இல்லை என்றால் கடை நடத்த முடியாது என மிரட்டுவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டி வரும் திமுகவினர் மீது நடவடிக்கை கோரி முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மாரியப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்கினர்.
    • பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குச்சா வடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வாக்காளர்கள் ஆதார் எண், செல்போன் நம்பர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து சிறப்பு முகாமில் வழங்கினர்.

    இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    சிறப்பு முகாமினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, தேர்தல் துணை தாசில்தார் விநாயகம், துணை தாசில்தார்கள் விவேகானந்தன், பிரியா ஆகியோர் பார்வை யிட்டனர்.

    இப்பணியில் மேற்பார்வை யாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலைய அலு வலர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ×