என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "claim"

    • விடுதலை செய்யப்பட்ட 7 பேருக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    மதுரை

    அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பின் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதனை உலகத் தமிழினமே கொ ண்டாடி மகிழ்கிறது,

    7தமிழர்களின் விடுதலைக்காக மனித நேய ஆர்வலர்கள், அனைத்து தரப்பு மக்களும் போராடி இருக்கிறார்கள். அவர் களுக்காக அ.தி.ம.மு.க. சார்பில் என் நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 7தமிழர்களின் விடுதலையை சட்டப் போராட்டம் மூலம் நிறை வேற்றி இருக்கும் திமுக அரசை பாராட்டுகிறோம்.

    இந்நிலையில் 32 ஆண்டு களாக இளமையையும், வளமையையும் சிறையி லேயே கழித்து விட்டு வெளியில் வந்திருப்ப வர்களுக்கு இளமையை நம்மால் திரும்பித் தர முடியாது, வளமையை நம்மால் உருவாக்க முடியும், இவர்களின் எதிர்கால நலன் கருதி 7பேருக்கும் தலா 50 லட்ச ரூபாய் நிதி அளித்திட தமிழக அரசையும், முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன்,

    தமிழகத்திலேயே 7 பேரும் வாழ விரும்பினால் ஒன்றிய அரசிடம் வற்புறுத்தி இந்திய குடிமகன்களாக வாழ சட்ட வழிவகை செய்திட மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    • விவசாயிகளுக்கு வழங்குவது போல் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். குறிப்பாக அபிராமம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் பல ஆயிரம் ஏக்கர் இருந்த போதிலும் குறிப்பிட்ட நஞ்சை நிலங்களில் மட்டும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    விளைச்சல் இல்லாமல் பயிர்கள் கருகிப்போவது அல்லது புயல், வெள்ள காலங்களில் மழையால் பயிர்கள் அழுகியும், தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாகி வருகிறது.

    அபிராமத்தை சுற்றிலும் பெரிய அளவில் வேறு எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லை. இந்த பகுதியில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியால் பல ஆண்டுகளாக விவ சாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. அபிராமம் பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டும் நம்பி 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.

    விவசாய தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் மட்டுமே தினக்கூலிகளாக ஈடுபட்டு வருகிறார்கள். குறைந்தது மாதத்திற்க்கு 25 நாட்களாவது வேலை இருந்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்திற்கான செலவினங்களை செய்ய முடியும்.

    ஆனால் விவசாய தொழிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வறட்சி மற்றும் கூடுதல் மழையால் பயிர் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்போது விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

    இதுபற்றி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டு களாக விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் நிலை தொடர்கதையாகி விட்டது. ஆண்டுதோறும் ஒரே மாதிரியான மகசூல் விவசாயத்தில் கிடைப்பதில்லை. இதனால் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் வேலையின்றி கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    அந்த வேலையும் நிரந்தரம் இல்லாமல் வெளி மாவட்டகளில் கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. விவசாய தொழி லாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு மழை, வெள்ளம். வறட்சி காலங்களில் இழப்பீட்டுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இனிவரும் காலங்களில் நிவாரணம் வழங்க தமிழக அரசும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாத புரம் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த 31.3.2003 முன்பு வரை தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்சன் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வுக்கு பிறகு அவர்கள் எந்த உறவுகளையும் சார்ந்து இருக்க தேவையில்லை. தன்னுடைய இறுதிக்காலத்தில் நிம்மதி யாக இருப்பார்கள்.

    மத்திய அரசின் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான கொள்கையால் கடந்த 31.3.2003 பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இந்த திட்டம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான திட்டம். பழைய ஓய்வூதிய திட்டத்தில் கீழ் பணத்தை சேமிக்கும் பணியாளர்கள் சேமித்த தொகையில் 6 மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டு அதனை மீண்டும் செலுத்தலாம். இது குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சேமித்த பணத்தை பணி ஓய்வு பெறும் வரை சிறிதளவு கூட முன்தொகையாக பெற முடியாது.

    இதனால் தங்களுடைய குழந்தைகளின் படிப்புப் செலவு, திருமண செலவு போன்ற அத்தியவாச செலவுகளுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வரும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பணி ஓய்வுக்கு பிறகு இவர்களுக்கு மாதாந்திர ஓய்வவூதியம் இல்லாததால் உணவு, உடை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவை களுக்கு மற்றவர் களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் ஓய்வுக்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து வருபவர்கள் பெரும் மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறார்கள்.

    கடந்த ஆட்சியில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டி போராடிய ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின் ஆசிரியர், அரசு ஊழியர்க ளின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கைப்பற்றிய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள பாதரக்குடி ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். தற்போது மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது. இந்த சாலையானது ஊரின் மையப்பகுதியில் செல்கிறது. இதனால் வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. புஞ்சை, நஞ்சை நிலங்கள் கையகப்படுத்தும் நேரத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் கலெக்டர்-ஆணைய அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து கைப்பற்றப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பு தருவதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் விலை போகும் சென்ட் இடத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனர். இதை கண்டித்து பாதரக்குடி ஊராட்சியில் இந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் இத்தகைய செயலுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சாலைப் பணிக்காக நிலங்களை இழந்தவர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும், தங்களது நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    • ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல், முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசி அருகே ஊராம்பட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

    ஆனால் இது போதாது. ரூ.500-க்கும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பட்டாசு தொழிலாளர்கள் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பம் போதிய வருமானம் இன்றி தவிக்கும். எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

    சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியதைபோல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறக்கும் தொழிலாளர்களுக்கும் இனி வரும் காலங்களில் அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.
    • மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர்.

    சேலம்:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வாழப்பாடி வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வருதராஜன், பொருளா:ளர் ராணி உள்ளிட்ட நுஇர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    மாநில செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் செல்லதுரை சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.80-இல் இருந்து ரூ.150 ஆகவும், மருத்துவ காப்பீடு ரூ.300-இல் இருந்து ரூ.497 ஆகவும் உயர்த்தியுள்ளதை மாற்றி அமைக்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காட்டு பன்றிகள், குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
    • விவசாயி களின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    மதுரை

    மதுரை மேற்கு வட்டாட்சி யர் அலுவ லகத்தில் விவசா யிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விவசா யிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    சேதமடைந்துள்ள துவரிமான் கண்மாய் ஷட்டரை சரி செய்ய வேண்டும். கீழமாத்தூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், கீழக் குயில்குடி தட்டானூர் பொட்டக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், துவரிமான் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் குரங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது.

    அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    கூட்டத்தில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ.க்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேல்பாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் விவசாயி.
    • வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கால்பாச்சேரி, மேல்பா ச்சேரி, கேடார், சின்ன திருப்பதி, மடவாச்சி உள்ளி ட்ட பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. மேலும் இந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் காட்டு பகுதி வழியாக ஒரு வழிபாதையில் சின்னசேலம் பகுதிக்கு வந்து தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மீண்டும் தங்களது பகுதிக்கு காட்டு பகுதி வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சமீபகலமா காட்டு பகுதி வழியாக வரும் பொதுமக்கள் வனவிலங்குகளால் தாக்கி படுகாயம் அல்லது உயிர் இழப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சம்பவதன்று மேல்பா ச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கிணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 40) விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து சின்னசேலம் அருகே ஊனத்தூர் பகுதிக்கு சென்றார். அப்போது ஊனத்தூர் வனப்பகு தியில் இருந்து திடீரென வெளிய வந்த கரடி ஒன்று இவர் நடந்து சென்ற பாதையின் குறுக்கே வந்து கோவிந்தசாமியை தாக்கியது.

    கால்களில் கடித்ததால் படுகாயம் அடைந்த கோவிந்தசாமி வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். இதையடுத்து இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டதில் கரடி ஊனத்தூர் வனப்பகுதிக்கு சென்றது. இதன்பின்னர் படுகாயம் அடைந்த கோவிந்தனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லாததால் நாங்கள் நீண்ட காலமாக காட்டு பகுதி வழியாக செல்கிறோம். அப்போது செல்லும்போது வனவிலங்குகள் எங்களை தாக்கி படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் வனத்துறை சார்பில் இந்த பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி ெபாதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போதுமான மருத்துவ வசதியில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த பகுதியில் ஏராளமான கிராமங்களும் அபிராமம் நகரில் குடியி ருந்து வருபவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகின்றனர்.

    அபிராமம், அகத்தாரிருப்பு நத்தம், அச்சங்குளம், அ.பச்சேரி, பாப்பனம் தீர்த்தாண்டதானம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு போதுமான மருத்துவ வசதியில்லை.

    அவசர தேவைக்கு அபி ராமத்திலிருந்து கமுதி அல்லது 50 கிலோமீட்டர் தூரம் உள்ள பரமக்குடிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நத்தம் ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்த பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், விவசாயிகள், கூலி தொழி லாளர்கள் நிறைந்த பகுதி யாகவும் உள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் அரசு ஆஸ்பத்திரியை நம்பி செல்லும் நிலை உள்ளது.

    பாம்பு கடி மற்றும் சாலை விபத்து போன்ற அவசர சிகிச்சைக்கு வரும் நோயா ளிகளுக்கு போதுமான மருத்துவ வசதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை.

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை போதுமான மருத்துவ வசதிகளுடன் அரசு மருத்துவமனையாக செயல்படுத்திட சுகாதார துறையும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்க ளின் கூட்டமைப்பு செய லாளரும், வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவ ருமான செந்தில்குமார் கூறிய தாவது:-

    வெங்கலகுறிச்சி, கருங்காலக்குறிச்சி, தொட்டியவலசை, திரு வாக்கி, கீழப்பனையடி யேந்தல், கிருஷ்ணாபுரம் ஆகிய 6 கிராமங்களை உள்ளடக்கியது வெங்கல குறிச்சி ஊராட்சி. 6 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது.

    இந்த ஊராட்சியில் மொத்தம் 2000 குடும்பங்கள் உள்ளன. வெங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம பகுதிகளில் குடிதண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெங்கலகுறிச்சி, கருங்காலகுறிச்சி கிராமங்க ளுக்கு போதுமான சாலை வசதி இல்லாமல் மழை காலங்களில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த 2 கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும்.

    கருங்காலக்குறிச்சியில் தடுப்பு சுவர், வெங்கலகுறிச்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை, அரசு உயர்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கலகுறிச்சி, கிருஷ்ணாபுரம், தொட்டிய வலசை, கருங்காலக்குறிச்சி பகுதியில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைக்க வேண்டும்.

    எங்கள் ஊராட்சியில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அவசர காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி இல்லாததால் சிகிச்சைக்காக 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைத்து 24 மணி நேரம் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிக்கு போதுமான நிதி இல்லாததால் அடிப் படை வசதி செய்ய முடியாமல் உள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரசு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழபனையடியேந்தல், வெங்கலகுறிச்சி கிராமங்களுக்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க வேண்டும். கீழபனையடியேந்தல் கிராமத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

    ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பங்கள், மின் வயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிக ளுக்கும் பயிர் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டை உடனடி யாக வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர் சாகுபடி மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நம்பி கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கிய தால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்வது டன் பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு வறட்சி நிவா ரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக புதிய கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியில் பெண்கள் திரண்டனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக அரசு அறிவித்தபடி கடந்த சில நாட்களாக ரேசன் கடைகள் மூலமாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பொது மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போதே டோக்கனில் முகாமிற்கு செல்லும் நாள், டோக்கன் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கினால் தான் கலைஞர் உரிமை தொகை பெற முடியும் என ரேசன்கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கும்போதே கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதனடிப்படையிலேயே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நரிக்குடி கிளை யில் நேற்று கணக்கு தொடங்க ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் பதிவு முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் முதல் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் கள் தொடங்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் விண்ணப்ப பதிவு முகாம் களுக்கு சென்று பதிவுகள் செய்யவும் வேண்டியுள்ள தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஆனால் அதற்கான சரியான நேரம் இதுவல்ல எனவும் பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்தனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டருக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் அருகே உள்ள மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வேண்டும்.
    • அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழை சரிவர பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஊருணிகளும் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளித்து வருகின்றன. ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மல்லல் கிராமம் உள்ளது.

    இந்த கிராமம் ராமநாத புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது. இந்த மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாயும் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றது. கண்மாய்க்கு அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் வருகிறது.

    ஆனால் மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வராததால் கண்மாய் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு காட்சி யளிக்கிறது. அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, உள்ளிட்ட பல கிராமங்களில் வைகை தண்ணீரை பயன்படுத்தி அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் மற்றும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால் மல்லல் கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் நெல் விவசா யம், மிளகாய், பருத்தி விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வராததால் இந்த கிராம மக்கள் மழையை மட்டும் நம்பி இருக்கிறார்கள். மழை பெய்து கண்மாய் நிரம்பினால் தான் விவசாய பணியை தொடங்கி வந்தனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் கண்மாய் வறண்டு விவசாய பணி மேற்கொள்ள முடியாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கண்மாயில் தண்ணீர் இல்லாததால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அலைந்து வருகின்றன. எனவே இந்த மல்லல் கிராமத்திற்கு வைகை தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். தண்ணீர் வரத்து வரும் கால்வாயை தூர்வார வேண்டும்.

    மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு வருவ தற்கு தேவையான நடவ டிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×