என் மலர்
நீங்கள் தேடியது "coconut tree"
- உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- நோய் தாக்கப்பட்ட மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி தனிமைப்படுத்த வேண்டும்.
உடன்குடி:
தென்னை பயிரை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து திருச்செந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிர மணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் வாடல் நோயின் ஆரம்பநிலை அறிகுறிகள் வாடல், ஓலைகள் மஞ்சள் நிறமடைதல், வெளிச்சுற்று இலைகள் தொங்கி விடுதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து தண்டின் அடிப்பாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து அது மேல்நோக்கி பரவும். கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும். சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி தண்டின் அடிப்பகுதியும் அழுகி விடும். மரப்பட்டை எளிதில் உடையக் கூடியதாக மாறி அடிக்கடி செதில்களாக உறிந்து திறந்த வெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும்.
மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து சிதைந்து துர்நாற்றம் வீசும் தண்டின் அடிப்பகுதியில் அரைத்திட்டு காளான் வித்து தோன்றும் கடைசியில் மரம் மடிந்து விடும். இதனை கட்டுப்படுத்த நோய் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விடவேண்டும். பசுந்தாள் உரங்களை வளர்த்து பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த வேண்டும். பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்ட வேண்டும். மருந்தை பாலித்தீன் பையில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும். வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார் உடனிருந்தார். மேலும் தவல்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி ஆலோசனைகளை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் பிற விவசாயிகள் மூலம் காண்பிக்கப்பட்டது.
- கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூரில் வட்டார குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் உத்தரவுபடி, விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் தென்னை மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசேரன் ஆகியோரின் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் தென்னை விவசாயிகள் ராஜேந்திரன், கண்ணன்சாமி ஆகியோரின் தென்னையில் மரம் ஏறும் கருவி மற்றும் ஊட்டச்சத்து டானிக் மூலம் பிற விவசாயிகளை கொண்டு செய்து காண்பிக்கப்பட்டது.
தென்னை ஊட்டச்சத்து குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-
தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் தென்னையை கைவிடாமல் இருக்க மண்ணின் வளம் குறையும் வகையில் தென்னையில் அதிக சத்து பற்றாக்குறை குறைந்து வருகிறது.
இதனால், தென்னை ஊட்டச்சத்து டானிக் தென்னை மர வேர் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் தென்னை டானிக்கை கலந்து 200 மில்லி பாலித்தீன் கவரில் ஒரு மரத்து வேரில் நுனியை சீவி விட்டு அதில் கட்டி வந்தால் மரத்திற்கு சத்து அதிகரித்து நல்ல காய்ப்பு தரும் என்றார்.
தென்னையில் மரம் ஏறும் கருவி குறித்து உதவி தொழில் நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்:-
இந்த கருவியை பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆட்கள் தேவைப்படுகிறது. தேங்காய் மேலிருந்து கீழே விழும் போது சேதம் ஏற்படாது, குறைந்த நேரத்தை பயன்படுத்தவும் மிக எளிய முறையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றார்.
இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- வைத்தீஸ்வரன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது
சீர்காழி:
தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான சுவாமிநாதன் ஏற்பாட்டில் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், பேரூராட்சி செயலாளர் அன்புச்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அவை தலைவர் சந்திரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த், துணை செயலாளர் இராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், பேரூர் கழகப் பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் திமுக பேரூராட்சி கழகம் சார்பில் திமுகவின் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு தென்னங்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
- ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 16,290 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நிலஅதிர்வு, ஆழிப்பேரலையால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்க ப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னைமர காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
தென்னை சாகுபடி விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்த பட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் குட்டை மற்றும் ஒட்டுரக தென்னை மரங்களை 4 ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7 ஆண்டு முதலும் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஒரு ஹெக்ேடருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.
காப்பீடு செய்ய வேண்டிய தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3.. என எண்கள் குறித்து விவசாயியுடன் புகைபடம் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
4 முதல் 15 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25-ம், 16 வயது முதல் 60 வயதுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50-ம், பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.
காப்பீடு செய்வதற்கு முன்மொழி படிவத்துடன், ஆதார் நகல், வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், விவசாயியின் புகைப்படம், சுய அறிவிப்பு கடிதம்,
காப்பீடு செய்வதற்கன வேளாண்மை உதவி இயக்குநரின் சான்றிதழ், கட்டணத்திற்கான வரைவோலை ஆகியவற்றை இணைத்து, அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்க ளுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்கமையத்தை தொடர்பு கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
- யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு, நீர் தேடி வன எல்லையிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.
திருமூர்த்தி நகர், வலையபாளையம் கிராமங்களில் இரு குட்டிகளுடன் கூடிய 10 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.
மேலும் மலையடிவாரத்தில் 1 கி.மீ., வரையில் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன் சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின. யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதையடுத்து உடுமலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வன எல்லை கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குருமலை, மாவட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
- தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.
தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
- தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அகரவெளி சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கொல்லையிலுள்ள வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எறிய துவங்கியது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக நீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர் இருப்பினும் தீ மளமளவென பரவி சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கரும்புகை மண்டலம் போல காட்சியளித்தது.
தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் நீரை பீச்சு அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.
தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின் கம்பியில் அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ வைக்கோல் போரில் பற்றியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மின் கசிவு ஏற்பட்ட இடத்தில் திருக்குவளைத் துணை மின் நிலைய பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்குவளை அருகே மின் கசிவு காரணமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ யானது 200-க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
- இதற்கு தீர்வாக விவசாயிகள் தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக தென்னை ஒலையின் அடிப்புறத்தில் பீச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம்.
உடன்குடி:
உடன்குடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
திருச்செந்தூர், உடன்குடி வட்டாரத்தில் அதிகமாக தென்னை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை பயிரில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. வறண்ட காலநிலை நிலவும் சமயங்களில் இதன் தாக்குதல் பரவலாக காணப்படும். எனவே தென்னை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களை முறையாக கண்காணித்து பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். சுருள் வெள்ளை ஈக்கள் வட்ட அல்லது சுருள் வடிவிலான மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்பரப்பில் தனித்தனியாக இட்டு மெழுகுப் பொருளால் ஒன்றி இணக்கப்பட்டு அரை வட்டமாக காட்சியளிக்கும்.
குஞ்சுகளானது இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இவை கூட் டம், கூட்டமாக தென்னை ஓலையின் அடிப்பகுதியில் காணப்படும். 20நாட்களில் முழுவளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்க ளில் பாதிப்பை ஏற்படுத்து கின்றன.
மேலும் இந்த ஈக்களில் இருந்து வெளியேற்றப்படும் பசை போன்ற கழிவு திரவம் கீழே உள்ள இலைகளின் மேல் படர்ந்து கேப்னோடியம் என்ற கரும்பூசணம் வளர ஏதுவாகிறது. இவ்வாறு மேற்புறம் கருப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயல் இழந்து மகசூல் குறையும் வாய்ப்புள்ளது. ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ யானது 200-க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. வாழை, கொய்யா, சீதாப்பழம், மா, பலா போன்றவையும் இதன் தாக்குதலுக்கு உள்ளாகும். ஆனால் தென்னையை மிக அதிகளவில் தாக்கும் தன்மை வாய்ந்தது. இதற்கு தீர்வாக விவசாயிகள் டிராக்டரில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக தென்னை ஒலையின் அடிப்புறத்தில் பீச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகள் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையது. எனவே 3அடி நீளம் மற்றும் 1அடி அகலமுடைய பாலிதீன் தாள்களால் ஆன ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 20எண்ணிக்கையில் தென்னை தோட்டங்களில் 5முதல் 6அடி உயரத்தில் வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட மரங்களுக்கு 0.5சதவீதம் வேப்ப எண்ணெய் 5சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தேவையான அளவு ஒட்டும் திரவகத்துடன் கலந்து தென்னை ஒைல யின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து தாக்குதலை குறைக்கலாம். மாறாக ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
- கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
பல்லடம் :
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே தென்னை மரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் வகையில் கோவை வேளாண் பல்கலைகழகம் சார்பில்தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் எளிதாக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து டானிக் மானியத்தில் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது :- தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய் தாக்குதல், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் கோவை வேளாண் பல்கலைகழகம் தென்னை ஊட்டச்சத்து டானிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.ஆனால் தென்னை ஊட்டச்சத்து டானிக் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. எனவே தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அதனை கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்/ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சதாம் உசேன் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார்.
ஈரோடு:
கேரளா மாநிலம் பாலக்காடு, கன்னிமாரி, தண்ணிகூண்டு பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). இவர் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். செம்பூத்தாம்பாளையத்தில் உள்ள நாய் பண்ணையில் நண்பருடன் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சதாம் உசேன் தென்னை மரத்தில் இளநீர் பறிக்க வேண்டி மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் தொடை, இடுப்பு, கை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதாம் உசேன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது.
- சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.
பல்லடம்:
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயில் அதிகமாக இருந்தது. சில நேரங்களில் இது ஆகஸ்ட் மாதமா?, அல்லது ஏப்ரல்,மே மாதமா? என நினைக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் பகுதியில் இடி,மின்னலுடன் மழை பெய்தது.இந்த நிலையில் பல்லடம் பெரியார் நகரில் உள்ள சுந்தர்ராஜ் என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தென்னை மரத்தில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் தென்னை மரம் தீயினால் முழுவதும் எரியாமல் தப்பியது. சுமார் 30 நிமிடம் தொடர்ந்து பெய்த மழையால் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக மாறியது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம் கருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
- கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் தென்னை மரத்தின் உற்பத்தி குறித்து சிறப்புரை ஆற்றினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் வட்டார வேளாண்மை துறையின் மூலம் உலக தென்னை தின விழிப்புணர்வு முகாம் கருங்குளம் கிராமத்தில் நடைபெற்றது. கருங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவர் ருக்கு சத்யா தலைமை தாங்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஆமினி தென்னை மரத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
தேங்காய் உற்பத்தியை அதிகப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டிற்கு இனகவர்சி பொறியின் பயன்பாடு, நீர் மேலாண்மை, வறட்சி காலத்தில் தென்னையில் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு, ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலுக்கு கண்ணாடி இறக்கை பூச்சி ஒட்டுண்ணியின் பயன்பாடு, உர மேலாண்மை, தென்னை நுண்ணூட்ட உரம், தென்னை மரக்கன்று சாகுபடி, தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் உற்பத்தி, தென்னையில் ஊடுபயிர் சாகுபடி ஆகியவற்றை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் தென்னை மரத்தின் உற்பத்தி குறித்து சிறப்புரை ஆற்றினார். முகாம் ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் திரிசூலம் ஏற்பாடு செய்திருந்தார்.