என் மலர்
நீங்கள் தேடியது "Competitions"
- ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.
- படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 13.4.2022 அன்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் "வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்" நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் நாளை, "சமத்துவ நாளாக" கொண்டாடுவது என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.
அதனடிப்படையில், ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம் (எக்ஸ்), படவரி (இன்ஸ்டாகிராம்), முகநூல் (பேஸ்புக்), புலனம் (வாட்ஸ்அப்), வலையொளி (யூடியூப்) வாயிலாக இன்று முதல் 30-ந்தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
"சமத்துவம் காண்போம்" என்கிற முழக்கம் சமூகநீதி என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இப்போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
எனவே, பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்கு மாறும், தங்களது படைப்புகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.
போட்டி 1 :- ஒரு கதை சொல்லட்டுமா?
சமூகநீதி அல்லது கல்வியின் முக்கியத்துவம் (அல்லது) உங்களுக்குப் பிடித்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எது? என்பது குறித்துக் கதைக ளைப் பதிவிட வேண்டும். வடிவங்கள் : ரீல்ஸ் (1 நிமிடம்) அல்லது ஒரு பக்கக் கதை.
போட்டி 2: ஓவியம் வரைதல் போட்டி, சமத்துவம் காண்போம், அளவு : 1 எம்பி
போட்டி 3: வினாடி - வினாப் போட்டி, அடிப்படை உரிமைகள் (அல்லது) இந்திய அரசியல் அமைப்பு - அடிப்படைகள்.
போட்டி 4: மீம்ஸ் போட்டி
போட்டியாளர்கள் பெண் கல்வி, சமத்துவம் அடிப்படையில் மீம்ஸ்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். அளவு : அளவு1 எம்பி
போட்டி 5: வலையொலி, "நான் அண்ணல் அம்பேத்கராக இருந்தால்" - நீங்கள் அண்ணல் அம்பேத்கராக மாறினால், தற்போதைய உலகில் எந்தெந்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்? (அல்லது) அண்ணல் அம் பேத்கரின் கொள்கைகள் - இன்றைய காலத்திற்கேற்ற அதன் பங்கு. அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி), படைப்பாளிகள் தங்களது படைப்பினை ஒலி வடிவில் (தமிழில்) பகிர்ந்து கொள்ள வேண்டும்.
போட்டி 6: உரிமைகளுக்கான ராப் பாடல் அனைவரும் சமம் என்ற தலைப்பில் பிரீ ஸ்டைல் ராப் செய்து ஒலி வடிவில் அனுப்ப வேண்டும். அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி)
போட்டி 7: செல்பி மற்றும் ஹாஷ்டாக் போட்டி அண்ணல் அம்பேத்கர் சிலை அல்லது போஸ்டர்க ளுடன் செல்பி "இந்திய அரசியலமைப்பு" புத்தகத்து டன் செல்பி, அரசியல் அமைப்பின் முன்னுரையுடன் செல்பி என்ற ஹாஷ்டாக்குடன் பதிவு களை உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு, tndipr சமூக ஊடகக் கணக்கை குறிச்சொல் செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் பின் தொடர்பவர்களும் சமத்துவத்திற்கான உயர்வு என்ற ஹாஷ்டாக்குடன் இப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். (அளவு: 1 எம்பி)
போட்டி 8: சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு பங்கேற்பா ளர்கள் தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ் டாகிராம் ஸ்டோரியில் அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் அல்லது அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட வேண்டும். அதைத் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும் பத்தினரையும் பகிர்ந்து கொள்ளச் செய்யவேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்சார்ட் பகிரப்பட்ட தன் அடிப்ப டையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேற்கண்ட இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் tndiprmhsamathuvamkanbom @gmail.com என்ற மின்ஞ்சல் மற்றும் (கியூ ஆர் கோடு) வாயிலாகத் தங்கள் படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடந்தன.
- மாவட்ட அளவிலான நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கில், வாய்ப்பாட்டு இசை செவ்வியல், வாய்ப்பாட்டு இசை பாரம்பரிய நாட்டுப்புற வகை, கருவி இசை தாள வாத்தியம், கருவி இசை மெல்லிசை, நடனம் செவ்வியல், நடனம் பாரம்பரிய நாட்டுபுற வகை, காட்சிக்கலை இருபரிமாணம், காட்சிக்கலை முப்பரிமாணம், உள்ளூர் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள் மற்றும் நாடகம், தனிநபர் நடிப்பு போன்ற கலைப் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் குழந்தைராஜன், அண்ணாதுரை, சண்முகசுந்தரம், மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர் என்று மாவட்ட திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்."
- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது
- வரும் 14-ந் தேதி நடைபெறுகிறது
புதுக்கோட்டை:
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் வரும் 14-ந் தேதி நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2022-23ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப்பள்ளிகள், கல்லூரிகளில் படித்துவரும் மாணவர்களுக்க தனித்தனியே அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வரும் 14-ந் தேதி (திங்கள் கிழமை) அன்று புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
இப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே பரிசு தொகை மற்றும்; பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (04322-228840, 99522 80798) தொடர்பு கொள்ளலாம். இப்பேச்சுப்போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர; கவிதா ராமு தெரிவித்துள்ளார;.
- ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன.
- இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட அளவிலான இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர். நாளை (11-ந் தேதி) 230 மாணவிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் நடத்தினர்.
- தொண்டியில் செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டி நடந்தது.
- முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மேம்படுத்தப்ப ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அதில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொண்டி செ.மு.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமை தாங்கினார். தொண்டி அரசு மருத்துவர் அருண் வரவேற்றார். நேசம் அறக்கட்டளையின் நிறுவனர் கோட்டைச்சாமி முன்னிலை வகித்தார். திருவெற்றியூர், பாண்டுகுடி, எஸ்.பி.பட்டிணம், வெள்ளையபுரம், மங்களக்குடி ஆகிய துணை சுகாதார நிலையங்களிலிருந்து மருத்துவர்கள் கௌதமன், டார்லிங்டன், அல்ஷிபா ஆகிய மருத்துவர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், இளம்பரிதி, சந்தானம் உட்பட சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், என ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டி முடிவில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் ராகுல் நன்றி கூறினார்.
- தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
- தமிழக அணி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
அரியலூர்
தேசிய அளவிலான மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பீட் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 9 மாநிலங்கள் பங்கு பெற்றன. அரியலூரை சேர்ந்த ராஜ்மகேஷ்வரன் தலைமையிலான தமிழக அணி இறுதிப்போட்டியில் பாண்டிச்சேரி அணியை வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி 17 ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில் முதன் முறையாக தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் சிறந்த மட்டை வீரராக அரியலூரை சேர்ந்த சன் மேக்கர் 258 ரன்கள், சிறந்த பந்துவீச்சாளராக கோபிநாத் 6 விக்கெட், முத்து ராசா 6 விக்கெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொடருக்கான நாயகன் விருதை சன் மேக்கர் பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்ற வீரர்கள் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
- மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் குழந்தைகள் தினவிழா ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 6 குறுவளமையங்களின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் தங்களது மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளை நடத்தினர். முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு ஓட்டு மொத்த அளவிலான போட்டிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். தன்னார்வலர் முத்துலட்சுமி வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையும், போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பங்கேற்பாளருக்கான சான்றிதழையும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக்கோட்ட கண்காணிப்பாளர் சபரிநாதன் வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வர்கள் சூர்யா, சிவரஞ்சனி, மகாலட்சுமி, சிவகாமி, கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர். தன்னார்வலர் சாந்தினி நன்றி கூறினார்.
- மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது.
- மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து தேசப்பற்றை வெளிப்படுத்தினர். இதில் ஆசிரியர்கள்- மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வகுப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் மதியம் சிறப்பு விருந்தாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
- மாணவர்களுக்கு பேச்சுப்*போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
- மாணவர்களுக்கு பரிசுகளை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் வழங்கினார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் அரசு கிளை நூலகம் சார்பில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத்தலைவர் லைலா பானு ஆகியோர் தலைமை தாங்கினர். நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், நூலக ஆய்வாளர் கணேசன், வாசகர் வட்ட தலைவர் கணேசன், அய்யன் திருவள்ளுவர் அறப்பணி மன்றம் தலைவர் மாரியப்பன், வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், காந்திஜி சேவா சங்க செயலாளர் தவமணி, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்க தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெற்றது. இதில் காமராஜர் மகளிர் உயர்நிலைப்பள்ளி, நாடார் உறவின்முறை தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய ஜவகர் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசுகளை பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலாபானு, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், தவமணி ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சுமங்கலி கோமதி சங்கர், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள், நூலக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை நூலகர் அமுதா நன்றி கூறினார்.
- இதுவரை 50,327 பேருக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
- ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.
திருவாரூர்:
திருவாரூர்மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்கு ட்பட்ட தெற்கு வீதியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி னார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமை ச்சர் தெரிவித்ததாவது, அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டு தோறும் நவம்பர்-14ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்பட்டு தொட ர்ந்து ஏழு நாட்கள் நடத்தப்ப ட்டு வருகிறது.இந்தியாவிலேயே முதன் முதலாக கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். திருவாரூர் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஏதுவுமில்லை.
டெல்டா மாவட்டங்களில் கும்பகோ ணம் மற்றும் தஞ்சாவூர் என இரண்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மானியக்கோரியின் போது திருவாரூக்கு மத்திய கூட்டுறவுவங்கி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரி க்கையின் அடிப்படையில் விரைவில் திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி திறப்ப தற்கு உண்டான உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.
முதலமைச்சர் சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைக டைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். 2022-2023ஆம் நிதியாண்டில் இதுவரை 50327 நபர்களுக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பண்ணை சாராக் கடன்கள், சிறு வணிகக் கடன்கள், மாற்றுத்திறனாளி களுக்கான கடன்கள், டாம்கோ மற்றும் டாப்செ ட்கோ உள்ளிட்ட கடன்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பி லான கடனுதவிகளும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போ ட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் அமைச்சர்அர.சக்கரபாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருவாரூர் கூட்டுறவு சங்க ங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா, தஞ்சாவூர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் ப.உமா மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது
- வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனிநபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.
மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), 3.கருவி இசை 4.நடனம், 5.நாடகம், 6.மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.
9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), .கருவி இசை-தோற்கருவி, 4.கருவி இசை (துளைகாற்றுக்கருவிகள்), 5.கருவி இசை (தந்திக்கருவிகள்), 6.இசை சங்கமம், 7.நடனம், 8.நாடகம், 9.மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் நடைபெறவுள்ளது.
அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு 1.கவின்கலை-நுண்கலை, 2.இசை (வாய்ப்பாட்டு), 3.கருவி இசை, 4.நடனம், 5.நாடகம், 6.மொழித்திறன் உள்ளிட்ட 9 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்குபெற முடியும்.
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வட்டார (முதலிடம்) அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட (முதலிடம் மற்றும் இரண்டாம் இடம்) அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் அட்டவணையின்படி கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி அளவில் 23.11.2022 முதல் 28.11.2022-க்குள்ளும், வட்டார அளவில் 29.11.2022 முதல் 05.12.2022-க்குள்ளும், மாவட்ட அளவில் 06.12.2022 முதல் 10.12.202- க்குள்ளும், வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவர் களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
அனைத்து வகை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இக்கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க செய்ய பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
- மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
- ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது.
குமாரபாளையம்:
மாணவர்களின் கலைத்தி றன்களை வெளிக்கொ ணரும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இதன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான தனிதிறன் வெளிக்கொணர ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி அளவிலான போட்டியிலும், வட்டார அளவிலான போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுவதுடன் கல்வி சுற்றுலா செல்லவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.