என் மலர்
நீங்கள் தேடியது "Controversy"
- பல வீரர்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது.
- பல சம்பவங்கள் பேசு பொருளாக மாறியுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வெறும் டி20 கிரிக்கெட் தொடர் என்ற நிலையை கடந்துவிட்டது. இன்று கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தொடராக ஐ.பி.எல். மாறியுள்ளது. அணி மாறும் வீரர்கள், சொந்த ஊர், வீரர்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள் போட்டியின் போது ஏற்படும் பரபர சம்பவங்கள் இந்த தொடர் பிரபலமாகவே விளங்குவதற்கு காரணமாக இருக்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே ஐ.பி.எல். தொடர் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை கண்டே வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் பல வீரர்கள் வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது. மேலும், பல வீரர்கள் வாய்ப்பை இழக்கவும் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில், ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை அரங்கேறிய, பேசு பொருளாக மாறிய ஐந்து சர்ச்சைக்குரிய சம்பவங்களை தொடர்ந்து பார்ப்போம்..

ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன் சிங்:
2008ல் அறிமுக தொடரின் போது தான் முதல் சர்ச்சைக்குரிய சம்பவம் அரங்கேறியது. தொடரில் கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது தான் அந்த சம்பவம் நடந்தது. போட்டி முடிந்த பிறகு மும்பை வீரர் ஹர்பஜன் சிங் களத்தில் வைத்தே பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தை கண்ணத்தில் அறைந்துவிட்டார்.

பாதுகாவலர்களிடம் ஷாருக் கான் வாக்குவாதம்:
2012ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சீசனில் அந்த ஆண்டு மே 16ம் தேதி நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டிக்கு பிறகு ஷாருக் கான் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக அவர் அந்த மைதானத்திற்குள் நுழைய ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

ஸ்பாட் ஃப்கிசிங் விவகாரம்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் கருப்பு பக்கங்களில் சிக்கிய விவகாரம் தான் ஸ்பாட் ஃபிக்சிங். பெட்டிங் தரகர் சுனில் பாட்டியா கைதுக்கு பிறகு நடந்த விசாரணையில் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலியா மற்றும் அங்கீத் சாவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி இணை உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோரும் சட்டவிரோத பெட்டிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விராட் கோலி - கவுதம் கம்பீர் மோதல்:
2013ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றின் போது இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் களத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியின் போதும் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவத்திற்காக இருவரின் போட்டி ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டது.

களத்தில் வாக்குவாதம் செய்த எம்.எஸ். தோனி:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 2019ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரின் சென்னை - ராஜஸ்தான் அணிகள் இடையிலான போட்டியின் போது களத்திற்குள் நுழைந்து அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. எனினும், எம்.எஸ். தோனிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
- பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்தபோது பஸ்சை, மாணவியின் நண்பர்கள் வழிமறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
- கண்டக்டர் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
சூலூர்,
கரூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று கோவைக்கு புறப்பட்டு வந்தது. காங்கேயம் பஸ் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அந்த பஸ்சில் ஏறினார். பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனது கல்லூரி பஸ்நிறுத்தத்தில் இறங்குவதற்காக அவர் டிக்கெட் எடுத்தார்.
பஸ் பல்லடம் அருகே வந்தபோது, அதில் பணியாற்றிய கண்டக்டர் மாணவியிடம் பேச்சு கொடுத்தார். அவர் மாணவியின் ஆடை குறித்து ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததுடன் கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
பஸ் பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்தபோது பஸ்சை, மாணவியின் நண்பர்கள் வழிமறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பஸ்சை போலீஸ்நிலையத்துக்கு திருப்பி கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பாக அவர்கள் போலீசாரிடம் மனுவாகவும் எழுதிக் கொடுத்தனர்.
சம்பந்தப்பட்ட கண்டக்டரிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மாணவர்களை சமாதானப்படுத்தினர். கண்டக்டர் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கண்டக்டரிடம் உயர் அதிகாரிகள் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவத்தால் சூலூர் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
- மதுரை விமானநிலையத்தின் பெயர் கூகுள் மேப்பில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என காட்டுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
- மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக பல வருடங்களாக சர்ச்சை இருந்து வருகிறது. பல்வேறு சமூகத்தினர் அவர்களது சமூகத் தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
மதுரை விமான நிலை யத்திற்கு முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகர், முத்தரையர் என பெயர்கள் சூட்ட வேண்டும் என கோரிக்கை பல ஆண்டு களாக இருந்து வருகிறது.
கடந்த வருடம் மதுரை விமான நிலையத்தின் பெயர் கூகுள் மேப்பில் முத்துராமலிங்க தேவர் விமான நிலையம் என காட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து செய்திகள் வெளியான பின்னர் மீண்டும் மதுரை விமான நிலையம் என திருத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கூகுள் மேப்பில் மதுரை விமான நிலையம் இருக்கும் இடத்தின் பெயர் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என காண்பிக்கிறது. அதே வேளையில் ஆங்கிலத்தில் madurai airport என காண்பிக்கிறது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- 6 மணி நேரத்தில் தரமற்ற சாலை போட்டதாக குற்றச்சாட்டு
- அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேரட்டி ஊராட்சி. இந்த பஞ்சாயத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
சம்பவத்தன்று பேரட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து 600 மீட்டருக்கு தார் சாலை 6 மணி நேரத்தில் போடப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள எந்த திட்டத்தின் கீழ் இருந்து பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இச்சாலை பணி மேற்கொள்வது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பல ஆண்டுகளாக இச்சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை. ஆனால் திடீரென எந்த ஒரு தகவல்களும் இல்லாமல் ஆறு மணி நேரத்தில் தூரத்திற்கு அவசர கதியில் தரமற்ற சாலை போடப்ப ட்டுள்ளதால் பொதுமக்க ளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடு க்க வேண்டும் என கூறினர்.
- ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
- அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகின்றன.
சத்திய சாய் மாவட்டம், புட்டபர்த்தி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குட்டகுண்ட ஸ்ரீதர் ரெட்டி நேற்று தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர் அனில் குமார் என்பவர் மேளம் அடித்தபடி கட்சிப் பாடல்களை பாடினார்.
கொத்த செருவு பி.சி காலனியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அரசு அரசு ஊழியராக வேலை செய்யும் தன்னார்வலர் ஹர்ஷத் என்பவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் துண்டை தோலில் அணிந்து கொண்டு தன்னிலை மறந்து விசில் அடித்தபடி நடனம் ஆடினார்.

ஷர்ஷத் தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து நடனம் ஆடுவதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோவை பார்த்த எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து நடனமாடிய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆந்திராவில் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் 11 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
- பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கிடையே, கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்த நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி, முன்னதாக பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து சூரியமூர்த்திக்கு பதிலாக வேறு வேட்பாளரை நியமிக்க கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாதேஸ்வரனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடிபோதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், காவல் துறையினருக்கு சவால் விடுவதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கை இழந்து வருவதுடன், இதுபோன்ற சர்ச்சையான வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட அறிவிக்க கூடாது எனவும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.
- காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம்.
சென்னை:
திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பேசும்போது, பிரசாரத்திற்கு குறைந்த கால கட்டமே உள்ளதால் துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட்டால் பிரசாரம் சுலபமாக இருக்கும். வெற்றி வாய்ப்பும் மிக பிரகாசமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் துரைவைகோ பேசுகையில், செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவேன். பதவிக்காக வேறு சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என திடீரென ஆவேசப்பட்டு பேசினார்.
துரை வைகோ உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்தி பேசிய தருணத்தில் அமைச்சர் கே.என்.நேரு செல்போனை நோண்டிய படி இருந்தார். ஒரு கட்டத்தில் துரை வைகோ அழத் தொடங்கியதும் அமைச்சர் கே.என்.நேரு அதை பொருட்படுத்தாமல் அருகில் இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் ஏதோ கூறியபடி இருந்தார்.
துரை வைகோ பேச்சு எரிச்சலூட்டும் வகையில் இருந்ததால் மேடையில் இருந்தவர்கள் தர்மசங்கடத்து டன் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இந்த கூட்டம் முடிந்ததும் தி.மு.க. நிர்வாகி கள் பலர் அமைச்சர்களிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.
இந்த தருணத்தில் துரை வைகோ தி.மு.க.வினரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அவர் இஷ்டத்துக்கு பேசுவதா? என்று ஆதங்கப்பட்டனர். இந்த விசயத்தில் அமைச்சர் கே.என்.நேரு வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவரது முகபாவம் கடும் கோபத்தில் இருந்ததை காண முடிந்தது.
தொலைக்காட்சியில் துரை வைகோவின் ஆவேசம் மாறி மாறி காண்பிக்கப்பட்டதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் இதை பார்த்தனர்.
திருச்சி தொகுதி தி.மு.க. வின் கோட்டையாக இருக்கும் சமயத்தில் தேவையில்லாமல் துரை வைகோ பேசியது இரு கட்சியினர் மத்தியிலும் கசப்புணர்வை ஏற்படுத்தி விடுமோ என கவலைப்பட்டார். இதனால் தனது கட்சிக்காரர்களை ம.தி.மு.க.வுடன் அனுசரித்து போகுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.
கூட்டணிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. நமது எண்ணம் எல்லாம் வெற்றியை நோக்கிதான் இருக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
தி.மு.க.வை உடைத்து ம.தி.மு.க. வெளியேறிய சமயத்தில் எவ்வளவோ சோதனைகள் ஏற்பட்டது. இழப்புகள் ஏற்பட்டது. அதையெல்லாம் எதிர்கொண்டு தி.மு.க.வை கட்டிக்காத்தவர்கள் கலைஞரும், தளபதியும்தான்.
கால மாற்றத்தால் கசப்புணர்வுகளை மறந்து ம.தி. மு.க.வை சகோதர கட்சியாக அரவணைத்து கூட்டணியிலும் கழக தலைவர் தளபதி இடம்பெற செய்து உள்ளார். இந்த சூழ்நிலையில் தி.மு.க.வினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் துரைவைகோ பேசுவது தேவைதானா? என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.
காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம். அப்படி இருக்கும்போது செத்தாலும் பரவாயில்லை தனி சின்னம்தான் வேண்டும் என்று பேசினால் தி.மு.க. வினரின் மனது புண் படாதா? எனவே யாராக இருந்தாலும் யோசித்து பக்குவமாக பேச வேண்டும். அனைவரும் உழைத்தால்தான் வெற்றி பெற முடியும் இதுதான் உண்மை நிலை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையில் துரை வைகோ, அவ்வப்போது அரசியலை விரும்பவில்லை என்று கூறுவது அவருடன் உள்ள நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சிக்காரர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்த நிலையில்தான் துரை வைகோ வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு நிருபர்களிடம் பேசும்போது, தி.மு.க.-ம.தி.மு.க. தொண்டர்களிடையே எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை. நான் பேசியது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இது இயல்பானது என்று கூறி உள்ளார்.
- நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அவர் தனது Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அந்த Audi A4 சொகுசு காருக்கு தமிழ்ச்செல்வி இன்சூரன்ஸ் கட்டவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்சூரன்ஸ் இல்லாத Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்த தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
- இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது
- பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.
நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை இன்று நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி நடநத ராமநவமி கொண்டாட்டத்தின் போது
ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவது போன்ற செய்கை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில் ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்த தெலுங்கானா அரசை மாதவி லதா கடுமையாக கண்டித்து உள்ளார்.
இது குறித்து மாதவி லதா கூறியதாவது :-

"சமீபத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின் போது தான் ரம்ஜான் கொண்டாட்டம் இருந்தது.
தற்போது ராஜா சிங்கிற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. அவர் நீண்ட காலமாக ராம நவமி ஷோபா யாத்திரை நடத்தி வருகிறார். தற்போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது " என அவர் கூறினார்.
- யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.
நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி
பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-
'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.
- புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது.
- இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேபால்:
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா,கலாபானி ஆகிய பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய பகுதிகளை இணைத்து புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படம், நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது.
100 ரூபாய் நோட்டுகளில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி உள்ளிட்ட பகுதிகள் உள்ள நேபாளத்தின் புதிய வரைபடத்தை அச்சிட பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தித்தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்தார். நேபாளத்தின் இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
- நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார்.
இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.
இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார். இதன்மூலம் இளையராஜாவை மறைமுகமாக அவர் சாடியுள்ளார் என்ற விவாதம் எழுந்தது.
இந்த விவாதத்தை மேலும் வளர்க்கும் வகையில், இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன், அறிக்கை வெளியிட்டு வைரமுத்துவை சாடினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.