என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona virus"

    • சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.
    • தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்ப ட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டு ள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.

    கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர் களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • குவாங்ஷோவில் விதிக்கப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

    சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் திடீரென அதிகரித்தது. இதனால் நோய்த் தொற்று பரவாமல் இருக்க தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வீடுகளைவிட்டு பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது.

    கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைபடுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் ஜின்ஜியாங் உரும்கி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக உரும்கியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. அதிபர் ஜின்பிங் பதவி விலகுமாறு பொதுமக்கள் கோஷம் எழுப்பினார்கள். இந்தநிலையில் கொரோனா தடுப்பு மையத்துக்கும் பொதுமக்கள் தீ வைத்தனர். இந்த தொடர் போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி உருவானது.

    போராட்டம் வலுத்து வருவதால் சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. சீனாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 5வது பெரிய நகரமாக திகழும் குவாங்ஷோவில் விதிக்கப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று முன்தினம் இந்த நகரில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. காஸ்சே, செங்டு உள்பட பல இடங்களில் பல சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

    கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் மேலும் சில நகரங்களில் பொது முடக்க கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக அரசு செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.

    • சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

    பீஜிங்:

    ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடு மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தியை சீனாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோன்கள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் 5 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே உற்பத்தி செய்கிறது.

    2025-ம் ஆண்டுக்குள் மொத்த ஆப்பிள் தயாரிப்புகளில் 25 சதவீதத்தை சீனாவுக்கு வெளியே பிற ஆசிய நாடுகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

    இதையடுத்து பல ஒப்பந்த உற்பத்தியாளர்களை சீனாவில் இருந்து வேறு இடத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியா மற்றும் வியட்நாமில் தனது வணிகத்தை அமைப்பது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

    • பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
    • அனைத்து கொரோனா தடுப்பு மையங்களும் அங்கு மூடப்பட்டன.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தியும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

    இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடியும் ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. கொரோனா தடுப்பு மையங்களும் மூடப்பட்டன. இதனால் அங்கு தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் முதல் முறையாக சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசு ஊடகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 2 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றுக்கு பலியானதாக தகவல்கள் வெளியாகின.

    சீனாவில் கடைசியாக கடந்த 3-ந் தேதி கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியால் கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மயானங்களில் தினந்தோறும் 100-க்கும் அதிகமான பிணங்கள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது.
    • ஜப்பான், அமெரிக்கா, சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது.

    கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

    இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    • கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
    • வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி மணி. மகள் துர்கா பவானி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். தொற்று பரவல் குறைந்ததை அடுத்து சூரியபாபு மட்டும் வேலைக்கு சென்று வந்தார்.

    ஆனால் சூரியபாபுவின் மனைவி, மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்து வந்தனர். தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

    உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சூரியபாபு அழைத்தார்.

    ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரியில் சூரியபாபு தெரிவித்தார். டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சூரியபாபு வீட்டிற்கு வந்து தாயும், மகளையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்தனர்.

    அப்போது அவர்கள் உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாக கூறி கதவை திறக்க மறுப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
    • சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.

    சென்னை:

    சீனாவில் ஒமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது.

    இந்த புதிய வகை கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

    அது மட்டுமல்ல இந்தியாவிலும் கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் நுழைந்து விட்டது.

    இந்த வைரஸ் இதுவரை 3 பேருக்கு வந்து விட்டது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் இது பரவும் என்பதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவால் இறப்பு இல்லை என்றாலும் கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்த மீண்டும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில், தமிழ்நாட்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் அதை பரவாமல் கட்டுப்படுத்த என்னென்ன செய்யப்பட்டு உள்ளது என்பதை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    சீனா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளதால் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    கொரோனா பரவிய சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் கண்காணிக்கவும், அவர்களுக்கு கொரோனா அறிகுறி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக அரசு சார்பில் விரைவில் சுற்றறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
    • பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

    சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றை அடுத்து, இந்தியாவில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, மன்சுக் மாண்டவியா, ஜோதிராதித்ய சிந்தியா, ஜெய்சங்கர், அனுராக் தாக்கூர், பாரதி பிரவின் பவார் மற்றும் மத்திய அரசின் துறை சார்ந்த செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, நெரிசலான பொது இடங்களில் முககவசம் அணிவது உட்பட கொரோனா நடத்தை விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்றால் விரைவில் பாதிக்கப்படும் வயதானவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் வழங்குவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

    பரிசோதனைகளை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும். தினசரி அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும். இது நாட்டில் புதிய மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கு உதவும். கொரோனா இன்னும் முடிவடையவில்லை. சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.

    மருத்துவமனைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தயார் நிலையை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் விலை மற்றும் விநியோகத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உலக அளவில் பாராட்டை பெற்ற இந்தியாவின் முன்னணி சுகாதாரப் பணியாளர்களின் அதே தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அதல் கூறப்பட்டுள்ளது. 

    • இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படுகிறது.
    • நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும்.

    பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்க வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக நாசி கொரோனா மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

    சீனாவில் பரவி வரும் பி.எப்.7, பி.எப். 12 என்ற ஒமைக்ரான் புதிய வகை கொரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறு அதிகாரிகளை மோடி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்றத்தில் பேசும் போது, "வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். எனும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

    பிற்பகல் 3 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த ஆலோசனயில் பங்கேற்கிறார். கன்னியாகுமரியில் இருக்கும் அவர் காணொலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்றார்.

    • பிஎப்.7 வகை தொற்று தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
    • மாதிரிகள் மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆக்ரா:

    ஒமைக்ரான் கொரோனா தொற்றின் உருமாற்றமாக பிஎப்.7 வகை கொரோனா கருதப்படுகிறது. இது தற்போது சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று தற்போது மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி சீனாவில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா வந்த 40 வயதான நபருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தனியார் ஆய்வக பரிசோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் ஆய்வின் முடிவில் அந்த நபர் பிஎப்.7 ரக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரிய வரும்.

    ×