என் மலர்
நீங்கள் தேடியது "Councillor"
- வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் 2000-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய மொத்த, சில்லரை ரெடிமேட் ஜவுளி கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள், ஜூஸ் கடை, வளையல் கடை என பல்வேறு நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நடைபாதை கடைகளை அகற்றுவதற்காக லாரிகளை எடுத்து வந்ததாக தெரிகிறது.
லாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் எம்.சி.ரோடு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் கடைகளை அகற்றாமல் சென்றனர்.
இந்நிலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மோகனா (32) என்பவர் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் தன்னையும் நடைபாதை வியாபாரிகளையும் தகாத வார்த்தையில் மிரட்டல் விடும் தோரணையில் பேசி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
- தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் தி.மு.க கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
- அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் ஆணையாளர் முஸ்தபா தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் தனது வார்டில் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து ஆணையாளர் தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்களை வசித்த போது உறுப்பினர் வேதாச்சலம் வெளிநடப்பு செய்தார். அதனை தொடர்ந்து நகரமன்ற துணைத்தலைவர் தனம், திமுக உறுப்பினர் மைசூர், சுயேட்சை உறுப்பினர் முருகன், வி.சி.க. உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் தங்களது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு பதில் அளித்து பேசிய தலைவர் குணசேகரன் இந்த நிதி ஆண்டில் அனைத்து வார்டுக்கும் தேவையான நிதியை பெற்று அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.
- பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர். பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ள பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.
- ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுமிதாசிவக்குமார் உள்ளார். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டதால் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. எப்போதும் வறட்சியே ஏற்படாத பெரியகுளம் நகரில் வேண்டுமென்றே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஆணையாளரின் செயல்பாடே காரணம் என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என அனைத்து உறுப்பினர்களும் சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆனால் ஆணையாளர் இதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் கவுன்சிலர்கள் கோசமிட்டபடி இருந்தனர்.
ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார். அவரை வெளியேற விடாமல் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆணையாளருடன் சுகாதார ஆய்வாளர், மேலாளர் ஆகியோரும் மன்றத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் ஆணையாளர் உரிய விளக்கம் அளிக்கும் வரை உறுப்பினர்கள் யாரும் வெளியே செல்ல மாட்டோம் என நகராட்சி அரங்கிலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைவர் சுமிதா ஆணையாளருடன் பேசி மன்றத்திற்கு வந்து விளக்கம் அளித்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து வராததால் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
- இளைய தலைமுறையினர் பால் கறப்பதையே விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
- சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளுக்கும் புளியந்தோப்பில் ஒரே ஒரு இறைச்சி வெட்டும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது இது போதுமானது அல்ல.
திருவொற்றியூர்:
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட் அறிக்கை மீது அ.தி.மு.க. மாமன்ற குழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் பேசியதாவது:-
இந்த பட்ஜெட்டில் மாமன்ற உறுப்பினர் நிதியை 30 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தி உள்ளீர்கள் பாராட்டுக்கள். ஆனால் இந்த 40 லட்சத்தையும் நாங்கள் முழுவதாக செலவு செய்ய முடிவதில்லை.
ஏனென்றால் இதில் ஜிஎஸ்டி 7 லட்சம் போய் விடுகிறது மேலும் டெண்டர் விட்டு நாம் பணிகளை ஒதுக்குவதால் அதிலும் குறைந்து விடுகிறது. அதனால் அந்த ஜிஎஸ்டி தொகைக்கு ஈடாக தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும். அப்படி கொடுத்தால் நாங்கள் முழுமையாக 40 லட்சத்தையும் பயன்படுத்த முடியும். சுகாதாரத்தை பேணும் வகையில் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து உள்ளீர்கள். தெருவில் திரியும் நாய் மற்றும் மாடுகள் பிடிக்க கூடுதலாக வாகனங்களை வாங்க அனுமதி கொடுத்துள்ளீர்கள்.
நாம் சீர்மிகு சிங்காரச் சென்னை என கூறிக் கொள்கிறோம். அதனால் முக்கிய சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதை பிடிப்பதை குறை சொல்ல முடியாது அதை செய்ய வேண்டியது தான். ஆனால் நாங்கள் விரிவாக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்துள்ளோம்.
திருவொற்றியூர் பகுதியில் மாட்டு மந்தை என்ற ஒரு பகுதியே இருக்கிறது. அவர்கள் மாடுகளை வளர்க்கிறார்கள். உட்புற தெருவில் வளர்க்கிறார்கள். நீங்கள் இப்போது அங்கேயும் மாட்டை பிடித்தால் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இளைய தலைமுறையினர் பால் கறப்பதையே விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
ஆனால் இப்போது இருக்கும் மூத்தவர்கள் பால் கறந்து விற்பனை செய்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக உள்ளது. சென்னை மக்களுக்கும் நல்ல பால் கிடைக்கிறது. இதை நாம் தடுக்கும் வகையில் ஏதும் செய்யக்கூடாது. அவர்களுக்கு தொழில் செய்ய ஏதுவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு மாற்று இடம் ஏதாவது வழங்க முடியுமா என பார்க்க வேண்டும்.
சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளுக்கும் புளியந்தோப்பில் ஒரே ஒரு இறைச்சி வெட்டும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது இது போதுமானது அல்ல. நாம் சுகாதாரத்தை பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும் அப்போது தான் சுத்தமான சுகாதாரமான இறைச்சிகள் பொது மக்களுக்கு கிடைக்கும். இதை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமையில் நடந்தது.
- அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமை யில் நடந்தது.துணை சேர்மன் தேவகி ஆடல் அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீரா கோமதி, மேலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத் தீர்மானங்கண அலுவலக உதவியாளர் ராமநாதன் வாசித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்களி டையே நடந்த விவாதம் வருமாறு:-
அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.
ராமகிருஷ்ணன் (த.வா.க.): வேகா கொல்லை ஊராட்சி குள்ளஞ்சாவடி சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்களோடு இணைந்து அந்த டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவேன். காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை செல்லும் சாலை, சிவன் கோவில் செல்லும் தார் சாலை அமைத்து தரவேண்டும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.
விஜயதேவி தேவராசு (த.வா.க): அங்குசெட்டி பாளையம் - சிறுவத்தூர் செல்லும் பகுதியில் மாணவர்களின் நலன் கருதி மின்விளக்கு அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சேர்மன் சபா.பாலமுரு கன்: ஒன்றிய கவுன்சிலர்களின் அனைத்து குறைகளும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்திலேயே நம்பர் 1 ஊராட்சி ஒன்றியமாக மாற அனைத்து துறை அலுவலர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேசினார்.
- பெண் கவுன்சிலரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோமதி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புங்கனூர் ஊராட்சி. இங்குள்ள முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ். இவரது மனைவி கோமதி (வயது 33). கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புங்கனூர் ஊராட்சி மன்றத்தின் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (45) என்பவர் போட்டியிட்டு கோமதியிடம் தோற்றுப் போனார்.
இதனால் கோமதியின் மீது அவருக்கு தீராத கோபம் இருந்து வந்தது. இந்த நிலையில் பால்ராஜ், அவரது மகன் மனோஜ் (25), சிவா என்கிற சிவகுமார் (50) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அத்துமீறி அந்த பெண் கவுன்சிலரின் வீடு புகுந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட தவமணி (40) என்ற பெண்ணையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில் பெண் கவுன்சிலர் கோமதி மற்றும் தவமணி ஆகியோருக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து கோமதி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தோல்வி அடைந்த வேட்பாளர் பால்ராஜ், அவரது மகன் மனோஜ், சிவா என்கிற சிவகுமார் ஆகிய 3 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிவாவை கைது செய்தனர்.
தந்தை மகன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோற்றுப் போன முன் விரோதத்தில் பெண் கவுன்சிலரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
- அனைவரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் தம்பதியரின் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரி யேந்தல் டி. கண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த திருமண விழா சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது. திருமண விழாவை தி.மு.க. மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும்-அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வெங்க டேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான மு.பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்கின்ற னர்.ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, சோழவந் தான் ஒன்றிய கவுன்சிலர் பேரூர் செயலாளர் எஸ்.என். சத்யபிரகாஷ் ஆகியோர் நன்றி கூறுகின்றனர். இதில் உற்றார்-உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
- பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
- பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூடுவாஞ்சேரி:
நல்லம்பாக்கம் நடுநிலை பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து 5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, காந்திநகர், மல்ரோசாபுரம், அம்பேத்கார் நகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஊராட்சிகளின் 15-வது நிதி குழு மானியம் தூய்மை திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து கழிப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹேமமாலினிவாசு, ஒப்பந்ததாரர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் கஜா என்ற கஜேந்திரன் கலந்துகொண்டு 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொடுத்தார். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
- விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்காொள்ள வேண்டும்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் தெரு பலகைகள் அமைப்பது, திருவொற்றியூர் மண்டல அலுவலக மேல்தளத்தை ரூ. 75 லட்சம் செலவில் புதுப்பித்தல், நெட்டுகுப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரூ. 15.46 லட்சம் செலவில் மேற்கூரை அகற்றுதல் மற்றும் கட்டமைக்கும் பணி உட்பட 33 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர்களின் கேள்விக்கு பதிலளித்து மண்டல குழு தலைவர் தனியரசு பேசியதாவது:-
குடிநீர் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்ய வேண்டும். வார்டுகளுக்கு, தனி உதவி பொறியாளர்கள் நியமிக்கப் படுவார்கள். விடுபட்ட பாதாள சாக்கடை பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்காொள்ள வேண்டும்.
திருவொற்றியூர் மார்க்கெட் 8 கோடி ரூபாய் செலவில் 2 அடுக்குமாடியுடன் நவீனப்படுத்தப்படும். அதிகாரிகள், கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
- வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்தி வேலூர்:
வேலூர் பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலர் சுகந்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 17- வது வார்டு கவுன்சிலராக பா.ம.க.,வை சேர்ந்த சுகந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்திற்கு தனியாக வந்த கவுன்சிலர் சுகந்தி, பேரூராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு நின்று கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கவுன்சிலர் சுகந்தி கூறியதாவது:-எனது வார்டில் 450 வீடுகளில் 3000 பேர் வசித்து வருகின்றனர்.
6 மாதங்களாக பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், எனது வார்டுக்கு சரிவர வருவதில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளேன் .ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் எனது வார்டில் சாக்கடை தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இங்குள்ள குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தொட்டி உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனது வார்டில் கொசு மருந்து அடித்து பல மாதங்கள் ஆகின்றது. ஒவ்வொரு முறையும் வந்து கூறும் போது செயல் அலுவலர் செய்து தருவதாக உத்தரவாதம் அளிக்கின்றார் .ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. இதேபோல் தொடர்ந்தால் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் சுகந்தி யிடம் பேரூராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பணிகளையும் செய்து தருவதாக பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.