என் மலர்
நீங்கள் தேடியது "Councilor"
- கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
- இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சாதாரண கூட்டம் நேற்று அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஒன்றிய துணைச் சேர்மன் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. மேலும் கவுன்சிலர்களின் வார்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைபெறாமல் இருப்பதும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர். தூர்வாராமலேயே செலவு செய்ததாக பெயர் பலகை வைத்துள்ளனர். மேலும் 10 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அப்போது கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜா திடீரென பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கோரிக்கை மனுக்களை ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முகத்தில் கிழித்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர்.
- மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
திருப்பூர் :
அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் 42 வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது :- திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடைக்கு அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ., சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதை போல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியை முன்மாதிரியாக கொண்டு திருப்பூர் மாநகராட்சியிலும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ளகோவில், பள்ளி, மருத்துவமனை பகுதிகளில் உள்ள மதுபானக்கூடங்களை அகற்ற மாநகராட்சி முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் :- குமார் நகர் தொடங்கி காவிரி பாளையம் புதூர் வரை அரசு பேருந்து போதிய அளவில் இல்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் ,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அன்றாடம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மாநகராட்சி போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் பல்வேறு இடங்களில் தரமற்ற முறையில் உள்ளது. அதனை கண்காணித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- கமுதி யூனியன் கூட்டத்தில் கோரிக்கைகளை வேற்றக்கோரி கவுன்சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றினார்.
- கூட்டத்தில் மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்விபோஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், உதவி சேர்மன்.சித்ரா தேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.
அ.தி.மு.க. (ஒ.பி.எஸ்.அணி) பேரையூர் கவுன்சிலர் அன்பரசு, கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து தலையில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது மண்எண்ணை மற்ற கவுன்சிலர்கள் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
சேர்மன் தமிழ்செல்வி போஸ் 11-வது வார்டு பேரையூர் கவுன்சிலில் நடந்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் பேரையூரில் ரூ.50 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
அப்ேபாது கவுன்சிலர் அன்பரசு, பிற துறை அதிகாரிகள் யாரும் யூனியன் கூட்டத்திற்கு வருவதில்லை. மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளதை மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். உடனே மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுந்து, பழுதடைந்துள்ள மின்கம்பங்களை படிப்படியாக மாற்றி வருகிறோம் என்றார்.
- கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றபின் பல்வேறு கனவுகளுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
- தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரம் கடலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்குட்பட்டது சிலமலை ஊராட்சி. இங்கு 3-வது வார்டு கவுன்சிலராக சுயேட்சை சின்னத்தில் கலாவதி என்பவர் போட்டியிட்டார். அதன்பிறகு தற்போது தி.மு.க ஆதரவு நிலையில் உள்ளார். விவசாய கூலிேவலை பார்த்து வந்த இவர் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றபின் பல்வேறு கனவுகளுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
ஆனால் அவர் நினைத்த எதுவும் நடக்கவில்லை. தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் கூறும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை நிைறவேற்ற வலியுறுத்தி ஊராட்சியிடம் தெரிவித்தாலும் எதுவும் நடப்பதில்லை என உணர்ந்து கொண்டார். அதன்பின்புதான் தேர்தல் வெற்றி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதையும் மற்றவர்களுக்கு எப்போதும் உள்ளதைபோலவே இருப்பதையும் உணர்ந்து கொண்டார்.
பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை கூட நிறைவேற்ற முடியாத தன்னால் கவுன்சிலர் ஆனதை நினைத்து ஒருசில சமயங்களில் வேதனையும் அடைந்தார். இந்நிலையில் தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரம் கடலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். அவரை பார்த்தால் கவுன்சிலர் என்றே உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அடையாளம் தெரியும். இவரது கணவரும் இதேபோல சாலையோரத்தில் மொச்சை, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
கடைக்கோடி மக்களுக்கும் அரசின் சலுகைகள் கிடைக்கவேண்டும் என்பதை நினைத்து செயலாற்றும் இந்த கால கட்டத்தில் ஒரு பெண் கவுன்சிலரின் கோரிக்கை ஏற்கப்படாமல் உள்ளத வேதனையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
- இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இது சுற்றுலா தளமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பஸ்கள், மருத்துவ வாகனங்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் அடிக்கடி பழுதடைகின்றன. மேலும் இந்த மோசமான சாலையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் இப்பகுதிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதி கவுன்சிலர், சமூக ஆர்வலர்கள் சாலையை சீரமைக்கக்கோரி முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், வனத்துறையினர் என பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து மனு அளித்த நிலையில், விரைவில் சாலை அமைப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இருப்பினும் இந்த சாலையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அவதியடைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஊத்து எஸ்டேட்டை சேர்ந்த 11 -வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் தலைமையில் ஊத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 50 பேர் இணைந்து ஊத்து பகுதியில் இருந்து நாலுமுக்கு நோக்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் உள்ள குண்டு, குழிகளை மணலால் மூடி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.
கவுன்சிலர் தலைமையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்ட இந்த செயலை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
- நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் தனது சொந்த செலவில் 12 குப்பை சேகரிப்பு தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி மேலுார் 14-வது வார்டு பகுதிகளில் ரோட்டோரம் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் வகையில் அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் தனது சொந்த செலவில் 12 குப்பை சேகரிப்பு தொட்டிகளை தனது வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் நிறுவி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவா் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனா். 14-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நகராட்சி பணியா ளா்கள், சுகாதார மேற்பார்வையா ளா்கள் முத்து மாணிக்கம், காளியப்பன் பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- தென்திருப்பேரை பேரூராட்சியில் முற்றிலும் பழுதடைந்து பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாத படித்துறைகள் கட்ட வேண்டும்.
- அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணியை விரைவில் சிறந்த முறையில் செய்து கொடுக்க வேண்டியும் கவுன்சிலர் குமரேசன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் மனு வழங்கினார்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சியில் முற்றிலும் பழுதடைந்து பல ஆண்டுகளாக போடப்படாத குண்டும் குழியுமான சாலைகள், புதுப்பிக்கப்படாத படித்துறைகள் மற்றும் புதிய படித்துறைகள் கட்ட வேண்டும். கடந்த 20 வருடங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதியில் மிகவும் பின்தங்கியுள்ள தென்திருப்பேரை பேரூராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பணியை விரைவில் சிறந்த முறையில் செய்து கொடுக்க வேண்டியும் கவுன்சிலர் குமரேசன் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் மணிமேகலை ஆனந்திடம் மனு வழங்கினார்.
- திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம் மண்டல தலைவர் தலைமையில் நடைபெற்றது.
- தெரு விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம் மண்டல தலைவர் இல.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறி பேசினார்கள். அப்போது பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை, குப்பை எடுத்து செல்வதற்கு போதிய வாகனங்கள் தேவை, பாதாள சாக்கடைக்காக தோண்ட ப்பட்ட ரோடுகளை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
அதேபோல் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42 வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு சரிவர எரிவது இல்லை அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதேபோல் கோடை காலம் தொடங்கியதால் குடிநீர் பிரச்சினை அபாயம் உள்ளது எனவே மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்து கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
அதேபோல் மாமன்ற உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் குறைகளை கவுன்சிலர்கள் செய்து கொடுக்க முடியாமல் உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதில் அளித்து மண்டல தலைவர் இல.பத்மநாதன் பேசியதாவது:- நான்காவது மண்டல த்துக்குட்பட்ட வார்டுகளில் தெரு விளக்குகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எந்தெந்த பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது என தனி அதிகாரிகளை நியமித்து அதனை கணக்கெடுத்து அது சரி செய்யப்படும். அதேபோல் நான்காவது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் ஆகையால் குடிநீர் பிரச்சினைக்கு வாய்ப்பு இருக்காது. கவுன்சிலர்கள் கூறிய பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்புகளை கண்டறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
- 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.
திருப்பூர் :
மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 24 வது வாா்டு மாமன்ற உறுப்பினருமான ஆா்.நாகராஜ், மேயா் என்.தினேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாநகராட்சி 24 ஆவது வாா்டுக்குள்பட்ட சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
இது தொடா்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 4 வது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும்போது இந்தப் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், தற்போது வரையில் எந்தவி தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சிவசக்தி நகரில் 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். அதேபோல நாகாத்தம்மன் கோயில் வீதி, சத்யா நகா் பகுதியில் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனதில் அவர் கூறியுள்ளார்.
- போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டாக 42 வது வார்டு உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக கே.வி.ஆர்.நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக கேவிஆர் நகர் பகுதியில் .வி.ஆர் நகர் மைதானம், அன்னமார் கோவில், கேவிஆர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
இதனை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும் 42வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில் 42 வது வார்டு முழுவதும் இது போன்ற சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
- நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முஸ்தபா. துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் தீர்மானங்கள் வாசிக்க தொடங்கும் முன்பு வார்டு குறைகளை உறுப்பினர்கள் எடுத்து கூறினர்.
அப்போது 23-வது வார்டு தி.மு.க உறுப்பினர் வேதாச்சலம் ஒரு மஞ்சள் பையுடன் ஆணையாளர் மற்றும் தலைவர் முன்பாக வந்தார். என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை, பதிலாக நிதி இல்லை என்று கூறுகின்றீர்கள். இதனால் நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தார்.
அதனை தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி 24-வது வார்டு தி.மு.க உறுப்பினர் மைசூர் மற்றும் 22-வது வார்டு வி.சி.க உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் அவை முன்னால் வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் வேதாச்சலம் 13-வது வார்டு பகுதியில் உள்ள குட்டையை பராமரிப்பு பணியை மேற்கொள்ள அரசு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குட்டையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் குட்டையை வருவாய் துறை மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அடுத்து பேசிய 12-வது வார்டு தி.மு.க உறுப்பினர் அனுராதா சீனிவாசன் கீழ் சின்னாகவுண்டம்பட்டியில் உள்ள மயான நிலத்தை நகராட்சி தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடிவு செய்து உள்ளதை நான் பொதுமக்கள் சார்பாக ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்று கூறி ஆணையாளரிடம் மனு வழங்கினார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
- இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
- மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவும் கவுன்சிலருமான கண்ணப்பன் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட44 வது வார்டு பகுதியில் குருநாதர்வீதி , அர்த்தனாரிவீதி , செளண்டம்மன் கோவில் வீதி , கோவிந்தர்வீதி , எம்.என்.ஆர். லைன் , சின்னத்தோட்டம் ,செல்லப்பபுரம் , குப்புசாமிபுரம் , எல்.ஐ.சி.ரோடு ,காமாட்சி அம்மன் கோவில்வீதி பகுதிகளில் இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
ஆகவே , மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்துவதோடு தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ள வேண்டும். 44-வது வார்டு பகுதி மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.மேலும் காணாமல் போன இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.