என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court"

    • திருமங்கலம் கோர்ட்டில் நாளை சிறப்பு லோக் அதாலத் நடக்கிறது.
    • மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் நாளை (11-ந்தேதி) சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் நலன்கருதி நடைபெறும் இந்த சிறப்பு லோக் அதலாத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்த மனுக்களையும், திருமங்கலம் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல்நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், பிற கோரிக்கைள் தொடர் பாகவும் உடனடியா தீர்வு காண மனுசெய்து உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம்.

    • ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது.
    • சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது. இதனை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது, சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

    சமரச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. சமரச மையம் மூலம் தீர்வு காண்பவர்கள் உறவினர்களிடமும், பொதுமக்களிடமும், விளக்கி இம்மையம் மூலம் தீர்வு காண உதவிட வேண்டும். இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி சுமதி பேசினார்.

    சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கார் மோதி தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த படுகாயம் அடைந்தார். சிகிச்சை பின் குணமடைந்த அவர், சமரச தீர்வு மையம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை நீதிபதிகள் விசாரித்து படுகாயம் அடைந்த பார்த்திபனுக்கு ரூ.52 லட்சத்து 78 ஆயிரத்து 642 நஷ்ட ஈடு தொகை வழங்க உத்தரவிட்டனர். பார்த்திபனுக்காக வழக்கறிஞர் ரகுபதி வாதாடினார்.

    இதற்கான காசோலையை, இன்று நீதிபதிகள் பார்த்தீபனிடம் வழங்கினர். இதேபோல் ராணி என்பவரின் மகன் விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து ராணிக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெகநாதன், தங்கராஜ், ஸ்ரீ ராம ஜெயம், மதிவாணன் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது.
    • சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது. இதனை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது, சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.

    சமரச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. சமரச மையம் மூலம் தீர்வு காண்பவர்கள் உறவினர்களிடமும், பொதுமக்களிடமும், விளக்கி இம்மையம் மூலம் தீர்வு காண உதவிட வேண்டும். இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி சுமதி பேசினார்.

    சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கார் மோதி தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த படுகாயம் அடைந்தார். சிகிச்சை பின் குணமடைந்த அவர், சமரச தீர்வு மையம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    இதனை நீதிபதிகள் விசாரித்து படுகாயம் அடைந்த பார்த்திபனுக்கு ரூ.52 லட்சத்து 78 ஆயிரத்து 642 நஷ்ட ஈடு தொகை வழங்க உத்தரவிட்டனர். பார்த்திபனுக்காக வழக்கறிஞர் ரகுபதி வாதாடினார்.

    இதற்கான காசோலையை, இன்று நீதிபதிகள் பார்த்தீபனிடம் வழங்கினர். இதேபோல் ராணி என்பவரின் மகன் விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து ராணிக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெகநாதன், தங்கராஜ், ஸ்ரீ ராம ஜெயம், மதிவாணன் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • சாலை விபத்துகள், வங்கி காசோலை வழக்குகள், கல்விக் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் மூலம் செய்து தீர்வு செய்யப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நீதிமன்றத்தில், குடும்ப நலநீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரையா, தலைமை குற்றவியல் நீதிபதி வடிவேல், கூடுதல் சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நீதிபதிகள் கலந்துகொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்தனர். சாலை விபத்துகள், வங்கி காசோலை வழக்குகள், கல்விக் கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரசம் மூலம் செய்து தீர்வு செய்யப்பட்டன.

    இதில் ராசிபுரம், கோனே ரிப்பட்டியைச் சேர்ந்த, கவிதா என்பவர், அவரது 3 சக்கர வாகனத்தில் கடந்த 18.2.2012 ல் அன்று நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் செல்லும் போது, கருங்கல்பாளையம் அருகே ரோட்டில் சென்றபோது, போது அவ்வழியாக வந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது. இதற்காக தொடரப்பட்ட வழக்கு, மக்கள் நீதிமன்றத்தல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருக்கு, ரூ17.66 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு செயலாளர் விஜய்கார்த்திக் செய்திருந்தார்.

    • வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • புதுவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 பிப்ரவரி 19-ந் தேதி காவல் துறையினரால் வக்கீல்கள் தாக்கப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி வருவதால், தமிழகம் மற்றும் புதுவையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, புதுவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். மூத்த வக்கீல்பக்தவச்சலம் மற்றும் 15 நீதிமன்றங்களை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • 30 வழக்குகள் சமரசம்
    • பலருக்கு இழப்பீடாக ரூ.1.63 கோடி பெற்றுத்தரப்பட்டது

    குளித்தலை, 

    குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குளித்தலை வட்ட சட்டம் பணிகள் குழு நடத்தும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதி சண்முககனி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நலம், வாகன விபத்துக்கள் இழப்பீடு வழக்கு, என நிலுவையில் உள்ள 100க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்டு இதில் 30 மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு வழக்குகளுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் சமரசம் பேசி முடித்து வைக்கப்பட்டது. இதில் இழப்பீட்டு தொகையாக 1 கோடியே 63 லட்சத்து 33 ஆயிரம் ருபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்று தரப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், நிகில்அரவிந்த், மதியழகன், செந்தில்குமார், அரசகுமார், திராவிடமணி மற்றும் வழக்கறிஞர்கள், காப்பீடு நிறுவன அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 17 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • ரூ.35.56 லட்சம் நஷ்டஈடு பெற்ற தரப்பட்டது

    பெரம்பலூர்

    உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பல்கீஸ் தலைமையிலும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) அண்ணாமலை முன்னிலையிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி முத்துகுமரவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கீதா சேகர் ஆகியோர்களை கொண்டு ஒரே அமர்வாக அமைக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 81 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 17 வழக்குகளுக்கு ரூ.35 லட்சத்து 56 ஆயிரத்து 500-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதிபதி பல்கீஸ் உத்தரவு சான்றினை வழங்கினார். இதில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் மணிவண்ணன் மற்றும் திருநாவுக்கரசு, அருணன் உள்ளிட்ட வக்கீல்கள், போலீசார், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • 17 வழக்குகள் சமரச தீர்வு
    • பெரம்பலூரில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு ஒருங்கிணைந்த கோர்ட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமமான பல்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

    இதில் மகிளா கோர்ட் நீதிபதி முத்துகுமரவேல், குற்றவியல் கோர்ட் நீதிபதி சங்கீதா ஆகியோர் கொண்ட அமர்வு அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையிலுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். இதில் ரூ.35 லட்சத்து 56 ஆயிரத் மதிப்பிலான 17 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதையடுத்து மோட்டர் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு சமரச தீர்வுக்கான சான்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்கள், போலீசார், கோர்ட் பணியாளர்கள் மற்றும் வழக்கு தாரர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது
    • மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட சட்டபணிகள் அணைக்குழு சார்பில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் மூத்த சிவில் நீதிபதி அழகேசன், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அறிவு, ஜெயங்கொண்டத்தில் சார பு நீதிபதி லதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ்நீதித்துறை நடுவர் நீதிபதி ராஜசேகர் ஓய்வுபெற்ற நீதிபதி முத்துகிருஷ் ணன், நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 சிவில் வழக்கு, 6 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 111 வங்கி வழக்கு, 71 நிலம் கையகப்படுத்திய வழக்கு ஆக மொத்தம் 190 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

    • கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
    • வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மணப்பாறை, சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(48).இவர் திருப்பூர் கோல்டன்நகரில் மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியால் சாந்தியை குத்திக் காயப்படுத்தினார்.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜாமினில் வெளி வந்த கிருஷ்ணமூர்த்தி, 2012ம் ஆண்டுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

    இதையறிந்த கிருஷ்ணமூ ர்த்தி, திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
    • பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார்.

    இவருக்கு கவிதா (வயது33) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு கவிதா பஸ்சில் சென்ற போது, அதே பஸ்சில் பயணித்த பயணி ஒருவரிடம் நகையை திருடியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் ஜெயிலிலில் இருந்து வெளியில் வந்த கவிதாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து கவிதா தனது கணவரை பிரிந்து, கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவில் வசித்து வந்துள்ளார்.

    கணவர் பலமுறை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கவிதாவிடம் கூறியும் அவர் மறுத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில், கவிதா 2016-ல் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக இன்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து அவரது கணவர் சிவக்குமார் வந்துள்ளார்.

    அவர் தனது மனைவியிடம், நீ பிரிந்து சென்றுவிட்டாய். நானும், குழந்தைகளும் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

    எனவே நீ எங்களுடன் வந்துவிடு என கூறினார். ஆனால் அவர் பதில் எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருந்தார்.

    சிவக்குமார் தொடர்ந்து பேசியும், அவர் எனக்கு கோர்ட்டிற்கு நேரமாகிறது என கூறி விட்டு கோர்ட்டிற்குள் சென்றார். சிவக்குமாரும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டிற்குள் சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இங்கு பேசினால் பிரச்சினை பெரிதாகிவிடும் என நினைத்த கவிதா கணவரை விட்டு நகர்ந்து, ஜே.எம்.1 கோர்ட்டு அருகே சென்று நின்று கொண்டார்.

    தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சிவக்குமார் தான் ஏற்கனவே பாட்டிலில் மறைத்து எடுத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கொண்டு மனைவி நின்ற இடம் நோக்கி நடந்து சென்றார்.


    அவரின் அருகில் சென்றதும் தான் வைத்திருந்த ஆசிட்டை மனைவியின் மீது ஊற்றினார். இதில் அவர் உடல் முழுவதும் ஆசிட் பற்றி அவரது சேலை முழுவதுமாக எரிந்தது.

    இதனை அருகே நின்ற பெண் வக்கீல் ஒருவர் பார்த்து வேகமாக ஓடி சென்று தான் அணிந்திருந்த கருப்பு கோட்டை கழற்றி பெண்ணிண் மீது போட்டார். ஆனால் அதுவும் எரிந்ததுடன், வக்கீலின் கையிலும் காயம் ஏற்பட்டது.

    ஆசிட் வீச்சில் காயம் அடைந்த கவிதா வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகே நின்றிருந்த வக்கீல்கள் அனைவரும் ஓடி வந்தனர்.

    அவர்கள் காயத்துடன் உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சிவக்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை அங்கு இருந்த பெண் போலீஸ்காரர் பார்த்து அவரை பிடியுங்கள் என கூறவே வக்கீல்கள் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரிடம் எதற்காக ஆசிட் வீசினாய் என விசாரணை நடத்தினர். அதற்கு அவர் தனது மனைவி என்னையும், எனது குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றதால் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்தும் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அங்கு இருந்தவர்களிடம் விசாணை நடத்தினர்.

    பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோர்ட்டு அருகே ரவுடி ஒருவரை 5 பேர் கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், தற்போது கோர்ட்டுக்குள்ளாகவே பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவமும் கோவை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

    • 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    ×