என் மலர்
நீங்கள் தேடியது "Crowd"
- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி அமைக்கப்படவுள்ளது.
- மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவிக்கப்பட்டது.
பாபநாசம்:
தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க பொதுகுழு உறுப்பி னர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் இல.சு.மணி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் ஆடுதுறை நசீர் முகமது, ஒன்றிய பொருளாளர் பரமசிவம், ஒன்றிய துணை செயலாளர்கள் கருணாகரன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.நாசர் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு. கல்யாணசுந்தரம், மாநிலங்க ளவை உறுப்பினர் மு. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி. இரா. தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வன், மாநில அயலக அணி துணை செயலாளர் விஜயன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் துரைமுருகன், ஜெயலட்சுமி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் இராமபிரபு, சிவ.மணிமாறன், பாபநாசம் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி பெருந்தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரை.மணிமாறன், சரபோஜி ராஜபுரம் கிளை செயலாளர் பழ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா ர்கள்.
கூட்டத்தில் நடைபெற்று முடிந்த 15 வது தி.மு.க பொது தேர்தலில் மீண்டும் கழக தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினையும் அவர்களையும், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த பொது குழுவிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, தி.மு.க தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் சு.கல்யாணசுந்தரம் அவர்களையும், மாவட்ட கழக நிர்வாகிகளையும் தேர்ந்தெடுத்த தி.மு.க தலைவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்க ளை தெரிவித்து கொள்வதெனவும், புதிய உறுப்பினர்களை கிளைகள் தோறும் அதிக அளவில் சேர்ப்பது என்றும்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க தலைவரின் ஆலோசனைப்படி வாக்குச்சாவடி முகவர்க ளையும், வாக்குச்சாவடிக்கு 10 உறுப்பினர்கள் கொண்ட நிலை குழு உறுப்பினராக இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிப்பது எனவும், கிளை கழகம் தோறும் அனைத்து கிளைகளிலும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்துவது எனவும், மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவினை அரசு விழாவாக கொண்டாட அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் ச.கபிலன் நன்றி கூறினார்.
- தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.
- மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.
எனவே தஞ்சை மாநகர கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டி பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப ல்கலைக்கழகவளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ்நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சி க்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் சேர்ந்து பனிமூட்டமாகவும் காட்சி அளித்தது
- நேற்று இரவு மூலக்கரைப்பட்டி, களக்காடு, பாளை, நெல்லை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை 3 மணி முதல் விட்டு விட்டு சாரல் அடித்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் சேர்ந்து பனிமூட்டமாகவும் காட்சி அளித்தது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் அடிக்காமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மட்டும் அல்லாமல் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
இந்நிைலயில் நேற்று இரவு மூலக்கரைப்பட்டி, களக்காடு, பாளை, நெல்லை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை 3 மணி முதல் விட்டு விட்டு சாரல் அடித்தது.
சிரமம்
மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் காலையில் பணிக்கு புறப்பட்டு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 4.8 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் பகுதியில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே மெயினருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சாரல் மழை
அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற அணைகளில் மழை இல்லை.
மாறாக மாவட்டம் முழுவதும் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆலங்குளம், கடையம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார்.
- அனைத்து தரப்பு திட்டங்களை செயல்படுத்தி நல் ஆளுமையுடன்ஆட்சி நடைபெறுகிறது.
சீர்காழி:
சீர்காழியில் நடை பெற்ற நகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் முத்து.மகேந்திரன், அலெக்சாண்டர், முருகன், சாமிநாதன், முத்து குபேரன், செல்வமுத்துகுமார், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல.சேதுரவிக்குமார், நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினர் நிவேதா முருகன் பேசுகையில், திமுக அரசு பொறுப்பேற்றபோது கொரோனா பொதுமுடக்கம் போன்ற சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக அதனை சமாளித்தது.
தொடர்ந்து கடந்த ஆட்சியில் அரசு கஜானாவை வெற்றிடமாக்கி வைத்தபோதும், அரசின் வருமானத்தை பெருக்கி அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி நல் ஆளுமையுடன்ஆட்சி நடைபெறுகிறது என்றார்.
இதில், நகர துணை செயலாளர் முத்து, சிவப்பிரியாதுரை நகரப் பொருளாளர் கோடங்குடி சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒப்பந்ததாரர் தனராஜ், நிர்வாகிகள் திருச்செல்வம், லெனின், துரை, சரவணன், பாருக் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
- ஜனவரி 17-ந் தேதி எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்த வேண்டும்.
- 24 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம்.
பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த 3 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிலையில் வருகிற ஜனவரி-17 காணும் பொங்கல் தினத்தன்று நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் முன்னிலை வகித்தார். டி.சிம்சன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜனவரி-17 ந்தேதி எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி, ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்த விஜயகுமார் தலைமையில் 24 பேர் கொண்ட விழா குழு அமைக்கப்பட்டது.கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், குதிரை, மாடு உரிமையாளர்கள், ஜாக்கிகள் கலந்துக்கொண்டனர்.
- கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்.
- இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு உடனே தொடங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மஞ்சுளா பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி வாழ்த்துரை வழங்கினார்.
மாநில நிர்வாகிகள் ராஜலட்சுமி, வளர்மதி, கண்ணகி, நிசா சத்தியன், லலிதா, லதா, தனலட்சுமி, சபியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர்கள் முருகபிரியா , வானதி ஆகியோர் பெண்களின் நலன் குறித்து பேசினர்.
இந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
- தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
- மத்திய அரசை கண்டித்து வருகிற 24-ந் தேதி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழுவின் சார்பில் நடைபெறும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தில்லைவனம் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து வருகிற 24-ந் தேதி ஏ.ஐ.டி.யூ.சி தமிழ் மாநில குழுவின் சார்பில் நடைபெறும்.
மாநிலந்தழுவிய மறியல் போராட்டத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான சங்க தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்று வெற்றி பெறச்செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் நிர்வாகிகள் சுகுமாறன், சேவையா, இராமையன், செல்வராஜ், இசக்கி அம்மாள் , பண்ணை சங்க பொதுச்செயலாளர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75- வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம் சென்னையில் மாநாடு நடந்தது.
- தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
வல்லம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75- வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம் சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாஸ் மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் எம்.பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய்னுலாபுதீன் ,மாநகர செயலாளர் ஜெ.சரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை தலைவர் ரபீக் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பியும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், மாநில முதன்மை தலைவர் அப்துர்ரஹ்மான் பேசியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பள்ளிவாசல்களில் மேம்பாட்டிற்காக 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளார்.
அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சமூக நல்லிணக்கத்தை பேணி காத்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75 -வதுஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம்சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநில செயலாளர் ஷாஜகான், தொழிலதிபர் மஹாராஜா சில்க்ஸ் முகம்மது ரபீக், தஞ்சை டவுன் காஜி , பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், இமாம்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பஷிர் அகமது, நிர்வாகிகள் ஜானகி ராமன், ரமேஷ், வல்லம் நகர செயலாளர் முகம்மது இஸ்மாயில் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பகுதி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை மாநகர செயலாளரும், தஞ்சை மாநகராட்சி 47 -வது வார்டு கவுன்சிலருமான ஜெ.சரீப் நன்றி கூறினார்.
- தமிழக முழுவதும் நேற்று தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
- மாட்டு பொங்கலன்று இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
மதுக்கூர்:
தமிழக முழுவதும் நேற்று தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் பொதுமக்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு இறைச்சிகளை சமைத்து கொடுத்து உபசரிப்பர்.
இதனால் எப்போதும் மாட்டு பொங்கலன்று இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதன்படி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று காலை முதலே இறைச்சி, மீன் கடைகளில் கட்டுகடங்காத கூட்டம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலை, ஆற்றுப்பாலம், வடக்கு மார்க்கெட், மதுக்கூர் மார்க்கெட் என அனைத்து இடங்களிலும் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து தேவையான இறைச்சி கறி, மீன்களை வாங்கி சென்றனர்.
பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றதையும் காண முடிந்தது.
மேலும் தற்காலிகமாக இறைச்சி கடைகளும் போடப்பட்டிருந்தன. இதனால் மதுக்கூரில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் அமைந்திருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
- காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.
சேலம்:
பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.
- தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்–கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது.
- கடவுள் வழிபாடு சமஸ்கிருதம் மொழிக்காக தினமும் ரூ.55 லட்சம் மத்திய அரசு செலவு செய்து வருகிறது.
கும்பகோணம்:
தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்–கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்–பாளர் முகமது கலிபா, பிரகாஷ் ஆவியூர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கல்யாண சுந்தரம் எம்.பி, அன்பழகன்எம்எல்ஏ துணைமேகர் மேயர் சுப தமிழழகன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடவுள் வழிபாடு சமஸ்கிருதம் மொழிக்காக தினமும் ரூ.55 லட்சம் மத்திய அரசு செலவு செய்து வருகிறது.ஆனால் செம்மொழி தமிழக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்து வருகிறது.
அதிகாரம் மிக்க தினிப்பு மொழியாக இந்தியை மாற்றுவதால் இந்தியாவில் உள்ள மராத்தி மொழிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் அதன் தாய்மொழி அடையாளங்களை அழிந்து வருகின்றது.
தமிழகத்தில் அனைத்து கடவுளுக்கும் அனுமதி உள்ளது பக்தி வேறு, அரசியல் வேறு என்பது தமிழர்களுக்கு தெரியும்.
மதம் என்ற சிக்கலில் தமிழகர்கள் விழவில்லை. அதனால் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் பல மத கலவரங்கள் ஏற்பட்டது.
ஆனால் தமிழகத்தில் ஏற்படவில்லை, இதற்கு பண்பாடுதான் காரணம், இந்த பண்பாடு வருவதற்க்கு காரணம் மொழிதான். மொழிகளுக்கு மிகப் பெரிய வரவலாறு இருக்கும்.
மொழியை இழந்தால் பண்பாடுகளும் அழிந்து விடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், முத்துசெல்வம், சுதாகர், நாசர், கோ.க. அண்ணாதுரை, உதயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
- 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
இந்திய குடியரசின் 74-வது தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் உமாபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் இரு பெண் குழந்தைகள் பாது காப்பு திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
மேலும் ஒன்றியக்குழுத் தலைவர் உமாபிரியா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சத்தியே ந்திரன், நாகூரான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டங்களும் நடைபெற்றது.