என் மலர்
நீங்கள் தேடியது "DANCE"
- நடனம் உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் சமநிலையையும் பராமரிக்கிறது.
- மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும்.
நடனம்...வேகமாக மாறும் முகபாவனைகள் இசைக்கு ஏற்ப கால்கள் மற்றும் கைகளின் தாள அசைவுகளால் கவரப்படுகிறது.
எந்த வகையான நடனமும் ஒரு அற்புதமான கலை. இது உடலை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் சமநிலையையும் பராமரிக்கிறது.
இருப்பினும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைப் போக்க நடனம் ஒரு மருந்தாக செயல்பட முடியும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இது மன வலிமையை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மன அழுத்தத்தில் நடனத்தின் விளைவைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். நடனம் மற்றும் மன அழுத்த மேலாண்மைக்கு இடையிலான உறவு ஆராயப்பட்டது.
நடனத்தால் உளவியல் ரீதியான நன்மைகள் உள்ளன. மன வலிமையும் உற்சாகமும் அதிகரிக்கும். நடனக் கலைஞர்களில் உணர்ச்சி வெளிப்பாடு மேம்படுகிறது.
நடனம் ஆக்ஸிடாஸின் மற்றும் எண்டோர்பின்கள் போன்ற ஹார்மோன்களை வெளியிட உதவுகின்றன.
இசையுடன் இசைந்து நிகழ்த்தப்படும் நடன அசைவுகள் மன அழுத்தம், பயம் சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கின்றன. கார்டிசோல் என்ற ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
உடலின் இயற்கையான மன அழுத்த நிவாரண வழிமுறைகளை திறம்பட பயன்படுத்துவதற்கு நடனம் ஒரு அற்புதமான கருவியாகும்.
தினசரி மன அழுத்தங்களை திறம்பட சமாளிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. வழக்கமான பயிற்சிகளைப் போல் இல்லாமல் நடனம் இசை மற்றும் தாளத்தை உள்ளடக்கியது.
நடனத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்படும் படிகள் அடிக்கடி மாறுகின்றன. இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு தகுந்த முறையில் மாற்ற வேண்டும்.

இந்த பயிற்சி மூளைக்கு ஒரு வகையான உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தச் சூழலில்தான் சமூக சுகாதாரத் திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.
திட்டங்களில் நடனத்தை ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.நடனமாடும்போது செரோடோனின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
நடனம் உடலில் உள்ள அனைத்து தசைகளையும் ஈடுபடுத்துகிறது. நம் உடல்களை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளி முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.
- நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கிடையேயான இசை, நாட்டிய, நாடக கலைகளின் சங்கம திருவிழா "ஆரோஹண்" என்ற தலைப்பில் நடைபெற்றது.
விழாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 38 பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. விழாவில் திரைப்பட புகழ் ஜாஃபர் சாதிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:- 'ஒவ்வொருவரும் முதலில் தன்னை நம்ப வேண்டும்.
அப்போதுதான் மற்றவர்கள் நம்மை நம்புவார்கள். மேடை ஒன்றுதான் அதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை என்றார்.போட்டிகளில் அதிக பரிசுகளை பெற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பிரிவில் வல்லம் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியும், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் பிரிவில் திருச்சி மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளியும் முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு தாமரை பன்னாட்டுப்பள்ளியின் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலாவெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு ப்பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாமரை பன்னாட்டுப்பள்ளி மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.
- போட்டியில் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம் என பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
- மாணவ- மாணவிகள் 1492 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.
தஞ்சாவூர்:
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கலை திறன்களை வெளி கொண்டு வரும் விதமாக பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பள்ளி அளவில் கலைத் திருவிழா கடந்த நவம்பர் 23 முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. வட்டார அளவில் நவம்பர் 29 முதல் கடந்த 5-ந் தேதி வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தஞ்சையில் இன்று தொடங்கியது.
வருகிற 12-ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும்.
இன்று நடந்த கலைத் திருவிழா போட்டியை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
தஞ்சை மாவட்ட அளவில் நடந்த இந்த போட்டியில் கிராமிய நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம், நவீன ஓவியம், புகைப்படம் எடுத்தல், தனிநபர் நடிப்பு உன்கிட்ட பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
இதேபோல் தஞ்சை தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, யாகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஏற்கனவே வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 1492 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.
தொடர்ந்து வருகிற 12-ம் தேதி வரை இந்த கலை திருவிழா போட்டிகள் நடைபெறும். இதில் வெற்றி பெறும்
மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வர்.
மேலும் மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் , கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் தமிழக அரசால் வழங்கப்படும். மாநில அளவில் தர வரிசையில் முதன்மைப் பெறும் 20 மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.
தஞ்சையில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர்( தொடக்க நிலை) திராவிட செல்வன், தஞ்சாவூர் கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கநிலை ) திருநாவுக்கரசு, கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.
- அழியும் நிலையிலுள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை.
- பல ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை, பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், இந்திய மொழிகளின் நடுவண் மையம் ஆகியவை சாா்பில் 21-வது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது.
தொடக்க விழாவுக்கு துணைவேந்தர் திருவள்ளு வர் தலைமை தாங்கினார். பதிவாளர் தியாகராஜன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது, நம்மிடமுள்ள பழங்கால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், இலக்கியம், வரலாறு, பண்பாடு, நாகரீகம் சாா்ந்த பல ஆவணங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடா்பாக தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலை க்கழகத் துணைவேந்தா்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனா். மேலும், அயலகத் தமிழா்கள் அதிக அளவில் பங்களிப்பு செய்கின்றனா்.
உலகில் பல்வேறு இடங்களில் இதுவரை 128 தமிழ்த் தொடா்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது கலைகள் அழிந்து விடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்ற அடிப்படையில் சிலம்பாட்டம், நாட்டியம், நடனம், இசை, தெருக்கூத்து உள்ளிட்ட அழியும் நிலையில் இருக்கக்கூடிய கலைகளை ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்.
கற்றல், கற்பித்தல் திட்டத்தில் நிகழாண்டு முதுநிலைப் பட்டம் வழங்கவுள்ளோம். அதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.
இப்பணி வருகிற மே மாதத்துக்குள் முடிவடைந்துவிடும். தமிழில் பிழையின்றி எழுதுதல் குறித்த குறுகிய காலப் பயிற்சி திட்டத்தின் கீழ் பாடங்களை எழுதி, மீளாய்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.
புதிய தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்புக்கான பாடங்களை எழுதும் பணி நடைபெறுகிறது. முதுகலைத் தமிழ்ப் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் உருவாக்க ப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னா், மாநாட்டு மலரை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன் வெளியிட, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், பெரம்பலூா் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் பெற்றுக் கொண்டாா்.
பெரியாா் மணி யம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வேலுசாமி, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவா் (இலங்கை) தவரூபன், நிா்வாக இயக்குநா் (இந்தியா) பொன்னுசாமி, மாநாட்டுத் தலைவா் அப்பாசாமி முருகையன், துணைத் தலைவா் வாசு ரெங்கநாதன், தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவா் மங்கையற்கரசி உள்ளிட்டோா் பேசினா். முடிவில் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் ஸ்ரீவித்யா நன்றி கூறினாா்.
- மாணவி சுபானு சிவதாண்டவ நடனமாடி பெருமை சேர்த்தார்.
- உற்சாக வரவேற்பளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.
சீர்காழி:
மத்திய அரசு சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற்றது.தமிழ் சங்கமத்தில் தமிழ் இலக்கியம், கல்வி கலாச்சாரம், காசி மற்றும் தமிழ் கலாச்சாரமும், தென்னிந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம், உணவு, கைத்தறி விவசாயம், நாட்டுப்புற கலை ஆகியவற்றை காட்டும் 75 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது,
காசி மற்றும் தமிழ் நாட்டிற்கு இடையேயான பழமையான தொடர்பை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 2500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த யோகா மாணவி சுபானு பங்கேற்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடன ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி–சீர்காழிக்கு பெருமை சேர்த்தார்.
மாணவி சுபானு யோகாவில் உலக அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து 270க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
காசி தமிழ் சங்கமம் முடிந்து சொந்த ஊரான சீர்காழி வந்தடைந்த சுபானுவை சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாகவும் அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜக சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.
- ‘மிடில் கிளாஸ்’ முதல் ‘ஹை கிளாஸ்’ நடன அழகிகள் வரை சென்னையில் வாடகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
- ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அமர்த்தி உள்ளனர்.
சென்னை:
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள் முழு வீச்சில் களைகட்டியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குழு நடனங்கள், ஜோடி நடனங்கள் என பல்வேறு விதமான நடன நிகழ்ச்சிகளும் நட்சத்திர ஓட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ஜோடியாக சேர்ந்து நடனமாடும் கொண்டாட்டங்களில் வேறு யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த இடத்துக்கு ஜோடி இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இதுபோன்ற ஜோடி நடன கொண்டாட்டத்தில் பங்கேற்று நடனமாடுவதற்கு வாலிபர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
இப்படி சென்று நடனமாட வாலிபர்கள் பலர் 'வாடகை ஜோடி'களை 'புக்' செய்து கொண்டாட்டத்துக்கு தயாராகியுள்ளனர்.
இதற்காக 'மிடில் கிளாஸ்' முதல் 'ஹை கிளாஸ்' நடன அழகிகள் வரை சென்னையில் வாடகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று இரவில் வந்து நடனமாடுவதற்கு மட்டும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அமர்த்தி உள்ளனர்.
நடன நிகழ்ச்சிகள் முடிந்ததும் அழகிகளை பத்திரமாக வீட்டு அருகே கொண்டு விட்டு விட வேண்டும் என்கிற ஒப்பந்தத்துடனேயே இதுபோன்ற அழகிகளை வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அழைத்து செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
இத்தகைய இளைஞர்களின் புத்தாண்டு சபதம் என்னவாக இருக்கும்? என்பதே மிகப்பெரிய கேள்வி.
- திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.
- தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.
நாகப்பட்டினம்:
நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் தைப்பூச பவுர்ணமி யாகமானது நடைபெற்றது.
தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்கு கிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.
இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கி றோம்.
ஆகவே இந்ததைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.மாத ம்தோறும் வரும் பௌர்ணமிதனையாகத்தை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், பழனிவேல் ஆகியோரும் ஸ்ரீ காங்கேய சித்தர் வழிபாட்டு குழுவை சேர்ந்த தமிழ் ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் இந்த மாத யாகத்தினையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
காரைக்கால் மற்றும் நாகூரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றார்கள்.
- அகிராணி நாட்டுபுறப்பாடல் ஒன்றுக்கு அந்த சிறுவன் உற்சாகமாக நடனம் ஆடுகிறான்.
- சிறுவனை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சிறுவர்களின் சிரிப்பான பேச்சு, அழுகை, நடனம் போன்றவையும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி விடும். அந்த வகையில் சீருடை அணிந்து கொண்டு ஒரு சிறுவன் அட்டகாசமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
அதில் அகிராணி நாட்டுபுறப்பாடல் ஒன்றுக்கு அந்த சிறுவன் உற்சாகமாக நடனம் ஆடுகிறான். மேலும் பாடலுக்கு ஏற்ப சிறுவனின் செய்கைகளும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. இதனால் நெட்டிசன்கள் வீடியோவை வைரலாக்கி வருவதோடு, சிறுவனை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப். இவர் தொடர்ச்சியாக பல மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி இந்த முயற்சியை தொடங்கிய அவர் கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில், அதனை ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.
இந்திய கலாசாரத்தை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் கதக் நடன முறையை பின்பற்றி அவர் நடனமாடி சாதனை படைத்துள்ளார். இதற்காக தினமும் 4 மணி நேரம் தியான பயிற்சி, 3 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் 6 மணி நேரம் நடன பயிற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
- அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
- சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.
- சென்னை, சேலம் நகரங்களில் இருந்து வரும் மானாட மயிலாட போன்ற நடன குழுவினர் ஆடலைத்தான் ரசிக்கிறார்கள்.
- முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள்.
மாலை போடும் மரபு
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடித்து செல்வது போல குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மாலை அணிகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆதி காலத்தில் இருந்தே கடை பிடிக்கும் பழக்கம் அல்ல., சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழக்கம்தான்.
ஒரு தடவை குலசை கோவில் தசரா திருவிழாவுக்கு வந்த குறவர் இனத்தவர்கள் தங்கள் தயாரிப்பான பாசி மணி மாலைகளை விற்பதற்காக, "இந்த மாலையை வாங்கிச் சென்று கடல் தண்ணீரில் சுத்தம் செய்து ஆலயத்தில் வழிபாடு செய்து அணிந்தால் நினைத்தது நடக்கும்" என்றனர். அதை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி அணிந்தனர். அதன் பிறகே குலசை பக்தர்கள் மாலை அணியும் புதிய மரபு ஏற்பட்டது.
டிஸ்கோ டான்ஸ் ஆதிக்கம்
தசரா குழு நடத்துபவர்கள் முன்பெல்லாம் வேறு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஒரு தசரா குழு ஊருக்குள் வருகிறது என்றால் முதலில் காளி வேடம் போட்டு இருப்பவர் வீடு, வீடாக வந்து திருநீறு கொடுத்து செல்வார். சிலருக்கு அருள் வாக்கும் கிடைக்கும்.
காளியைத் தொடர்ந்து மற்ற வேடங்கள் அணிந்து இருப்பவர்கள் ஆடியபடி வருவார்கள். அவர்களை ஊர்க்காரர்கள் பக்தியுடனும் ஆச்சரிய பரவசத்துடனும் பார்ப்பார்கள். ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் அல்லது ஊர் கோவில் முன்பு அந்த வேடக்காரர்கள் அனைவரும் வட்டமாக சுற்றி வந்து ஆட்டம் போடுவார்கள். ரவுண்டு கட்டி அவர்கள் போடும் ஆட்டம் காலத்துக்கும் மறக்காது. பார்த்தவர்களின் கண்ணுக்குள்ளேயே நிழலாடியபடி இருக்கும். வெளியூர்களுக்கு போய் செட்டிலாகி விடுபவர்கள் கூட இன்றும் தசரா குழுவினர் ஆட்டத்தை மெய் சிலிர்க்க சொல்வார்கள்.
தசரா குழுவைத் தொடர்ந்து கரகம் ஆடுபவர்கள் ஆடியபடி செல்வார்கள். இவர்கள் தசரா குழுவுக்கு மெருகேற்றுவது போல இருப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தசரா குழுக்களுடன் டிஸ்கோ டான்ஸ் ஆடுபவர்கள் வந்து ஆடுகிறார்கள். இது தசரா குழுக்களில் புதுவிதமான கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முத்தாரம்மனுக்காக வேடம் அணிபவர்கள் மீதான மக்களின் கவனம் குறைந்து விட்டது. அதற்கு பதில் மக்களின் பார்வை டிஸ்கோ டான்ஸ் ஆடுபவர்கள் பக்கம் திரும்பி விட்டது என்கிறார்கள்.
குறிப்பாக சென்னை, சேலம் நகரங்களில் இருந்து வரும் மானாட மயிலாட போன்ற நடன குழுவினர் ஆடலைத்தான் இளைஞர்கள் ரசிக்கிறார்கள். இத்தகைய டிஸ்கோ டான்சை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்று தசரா குழுக்களின் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ற புதிய வரவாக டிஸ்கோ டான்சை பெரும்பாலான தசரா குழுக்கள் ஏற்றுக் கொண்டு விட்டன. எத்தனை டிஸ்கோ டான்சர்கள் வந்தாலும் அம்மனுக்காக வேடம் அணிபவர்கள் புனிதம் ஒரு போதும் குறையாது என்பது அவர்களது வாதமாக உள்ளது.
தசரா குழு அன்றும் & இன்றும்
தசரா குழுக்களிடம் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தசரா குழு இருக்கிறது என்றால் 10 முதல் 50 பேர் வரைதான் இருப்பார்கள். ஆனால் இன்று 50 முதல் 150 பேர் வரை இருக்கிறார்கள். இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இதுபற்றி மாதவன்குறிச்சி ஊர்த் தலைவரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஏ.டி.கருப்பசாமி கூறியதாவது,
எங்கள் ஊர் தசரா குழுவுக்கு ஈஸ்வரி தசரா குழு என்று பெயர். இந்த குழு தொடங்கப்பட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த குழுவின் தலைவராக எஸ்.கார்த்திகேயன் இருக்கிறார். நான் 11 வயது முதல் சுமார் 40 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்துள்ளேன். பெண் வேடம், ராஜா ராணி வேடம், இன்ஸ்பெக்டர் வேடம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய சிறு வயதில் தசரா குழுவினர் நடந்தே ஊர், ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது வாகன வசதி வந்து விட்டது.
முன்பு 5 ரூபாய் முன்பணம் கொடுக்க கஷ்டப்படுவோம். ஆனால் இப்போது வேடமிடுபவர்களிடம் பணம் ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு குழுவுக்கு அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்தான் செலவாகும். இப்போது பல லட்சம் செலவிடுகிறார்கள். முன்பு ஆடை அலங்காரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. இப்போது அலங்காரங்கள் கன கச்சிதமாக போடப்படுகின்றன.
முன்பு விரத முறைகளில் கடுமை இருக்கும். குலசையில் கொடி இறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வர முடியும். தற்போது அது மாறி விட்டது. முன்பெல்லாம் ஒரு குழுவில் 4 அல்லது 5 பேர்தான் காப்பு கட்டுவார்கள். இப்போது வேடமிடும் எல்லாரும் காப்பு கட்டுகிறார்கள். அப்போது உடல் உழைப்பு முக்கியமாக இருந்தது. இப்போது பொழுது போக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார்.
- பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர்.
- உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர்.
முத்தாரம்மன் பெயர்க் காரணம்
அன்னை மகாசக்தி ஒவ்வொரு தலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலிக்கிறாள். அந்த வகையில் குலசேகரன் பட்டினம் அம்பாளுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. அவையனைத்தும் பொருத்தமானதாகவே தெரிகிறது.
"பாண்டி நாடு முத்துடைத்து" என்பார்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களைக் குவித்து தேவியாக நினைத்து வழிபட்டனர். அம்முத்துகள் அம்பாளாகத் திருமேனி கொண்டன. முத்துகளிலிருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப்பட்டாள் என்பது ஒரு கருத்து.
பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, முத்தாரம்மன் எனவும் வழங்கலானாள். கிராமங்களில் அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு.
முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்துநோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என அழைக்கப்படுகிறாள்.
சிப்பியிலிருந்து விடுபட்டது முத்து. முத்தைச் சிப்பி மூடியிருக் கிறது. உயிர்களை ஆணவ மலம் மூடி மறைத்துள்ளது. உயிர்களை மலக் கட்டுகளிலிருந்து விடுவித்தால், உயிர்கள் சீவன் முத்தர்கள் ஆவர். அம்பாள் சிப்பியிலிருந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பது போல உலக உயிர்களை மலக்கட்டுகளிலிருந்து பிரித்து ஜுவ முக்தர்களாக மாற்றுகிறாள்.
இதனால் அன்னைக்கு, முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. இப்படி முத்தாரம்மன் பெயர் தோன்றியதற்கு பல கதைகள் உள்ளன.