என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demonstration"

    • உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 15.12. 2000 அன்று முதல்வராக இருந்த கருணா நிதியால் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 1.9.1998 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் சுமார் 86 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்ற னர். இந்த ஓய்வூதியத் திட்டத்தில் 2 வகை யான அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1.9.2010 முதல் அனைவருக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது .

    கடந்த 2015 நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு வழங்காமல் முடக்கப்பட்டது. நவம்பர் 2015 முதல் முடக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு கடந்த 2.9.2022 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அகவிைைலப்படி உயர்வை நவம்பர் 2022 வழங்கவும். அமல்படுத்திய அறிக்கையை 25.11.2022ல் கோர்ட்டில் தாக்கல் செய்ய வும் உத்தரவிட்டது.

    தமிழக அரசு இந்த பிரச்சினையில் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தும் போக்கை கடைபிடிப்பதை கண்டித்து மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில தலைவர் எஸ். கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தேவராஜ், சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில சம்மே ளன துணைத்தலைவர் பிச்சை உள்பட பலர் பேசினர்.

    இதில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் முருகேசன். சவுரி தாஸ், ஆறுமுகம், செல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டியன், ஜேம்ஸ் கர்சன்ராஜ், ராஜேந்திரன், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தங்கப்பழம், போஸ், முத்துச்சாமி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் மகாலிங்கம், காமராஜ், நாகராஜன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறை நிர்வாகம் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர்.

    • அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    கரூர்

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாநில துணைத்தலைவர் செல்வராணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும். ஒப்பந்தம், புற ஆதார முகமை முறைகளை ரத்து செய்து கால முறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்."

    • 4 சதவீத அகவிலைப்படி முடக்கப்பட்ட சரண்டர் 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்
    • புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும்

    தென்காசி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலு வலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் 4 சதவீத அகவிலைப் படி முடக்கப்பட்ட சரண்டர் 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்,சி.பி.எஸ். ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்,சத்துணவு, அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரபடுத்தி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

    மற்றும் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்கால மாக மாற்றுவது, தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும், அரசாணை 152-ஐ ரத்து செய்திடவும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படியை தமிழக அரசு காலதாமதமின்றி வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முதல்-அமைச்சர் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் கோரிக்கைகளை விளக்கி சங்க செயலாளர் மரியதாஸ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் காமராஜ், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன், சாலை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன் உள்பட சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். முடிவில் சாலைப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்."

    • விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது.
    • பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே, கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.

    இப்பயிற்சியில் எலிகளை கட்டுப்படுத்த எலி பொறிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது, ஆந்தை கூண்டு அமைத்தல் மற்றும் பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தாலம் என்பது பற்றி பயிற்ச்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் விஷ உணவு தயாரிப்பது குறித்து செயல்விளக்கத்தை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச.திருமுருகன் செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி சுந்தர் மற்றும் 40க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய், மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் முத்தமிழன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் ராஜகோபால் நன்றி கூறினார்.

    • சென்னையில் பாதிக்கப்பட்டோர் பொன்னமராவதியில் போராட்டம்
    • அதிகவட்டி தருவதாக மோசடி

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவரது மகன் அலெக்சாண்டர். இவர்கள் இருவரும் சென்னையில் தங்கிக்கொண்டு, துபாய், மலேசியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உளள எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு லட்சம் கொடுத்தால் அதற்கு வட்டியாக மாதம் தோறும் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இது குறித்து அறிவிப்பையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் இதில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு பல்வேறு வித நம்பிக்கை வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர்.

    இதனை நம்பி தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 1.25 லட்சம் பேர் ஆறாயிரம் கோடிவரை வரை முதலீடு செய்ததாக கூறப்படுகின்றது. இதில் அவர்களது சொந்த ஊரான கடியாப்பட்டியில் காமதேனு பாபா கோவில் கட்டியது, நிவாரண நிதி வழங்கியது என முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் மேற்கொண்டனராம்.

    இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக வட்டி தரவில்லை. ஒரு கட்டத்தில் மொத்த தொகையையும் திருப்பித் தந்துவிடுவதாக உறுதியளித்துள்ளனர். அதன்பிறகு சவுந்தராஜன் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இந்நிலையில் தாங்கள் முதலீடு செய்த பணத்தை எப்படியும் மீட்க வேண்டும் என்ற நம்பிக்கையில் பு காமதேனு பாபா திருக்கோயிலுக்கு வந்த 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களிடம் திருமயம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கை–களை வலியு–றுத்தி, ஜெயங்கொண்டம் நகராட்சி முன்பு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி–களில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட பணியா––ளர்களை பணி மாறுதல் செய்வதை முற்றி–லும் தவிர்க்க வே–ண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் ஷோபா தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் சரஸ்வதி வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுஊழியர் சங்க மாவட்ட செயலா–ளர் வேல்முருகன் சிறப்புரை–யாற்றினார்.

    வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குமணன், சத்துணவு ஊழியர் சங்க இணை செயலாளர் ஷர்மிளா, சாலை பணியா–ளர்கள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் தர்மலிங்கம் ஒப்பந்த பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சசிகுமார் அரசு அலுவலர்கள் ஒன்றிய மாவட்டத் துணைச் செயலாளர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் 152 விதிப்படி ஏற்படும் விளை–வுகளைப் பற்றி பேசினர்.

    நகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

    • கீழப்பெரம்பலூரில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூரில் கிராம பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பழமலை தலைமை தாங்கினார். இளமுருகன், காந்தி, ரத்தின பாலா, தங்கராசு, ஜோதி, சூரசிங்கு, வெங்கடாசலம், ஆதிமூலம், சாந்தப்பன், ஆனந்தன், சுடர்மனி, பிரவீன்குமார், இளையராஜா, வேள்விமங்கலத்தை சேர்ந்த கபிலன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கீழப்பெரம்பலூர் மற்றும் வேள்விமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் பழுது நீக்கம் செய்யாத ஒன்றிய கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    30 வருடத்திற்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். ஜெயக்குமார் மளிகை கடையில் இருந்து தெற்கு தோப்பு வரை தார்சாலை அமைத்திடவும், சின்னாற்றில் மேம்பாலம் அமைக்கவும் , பெண்கள் சுகாதார வளாக கட்டிடம் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லை இதனை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் , பருவ மழையின் காரணமாக வடக்கேரி வரத்துவாய்க்கால் தூர்வாரவும், அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனே நியமனம் செய்யவும், கீழப்பெரம்பலூர் முதல் வசிஷ்டபுரம் வரை தார் சாலையின் பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைத்திடவும் , கோழியூர் பாதையில் தார் சாலை அமைத்திடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சின்ன பையன், மண்டல துணை வட்டாட்சியர் பாக்கியராஜ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் மனோகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததையடுத்து சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பேரூராட்சி அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மகாமுனி தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். லட்சுமணம்பட்டி, குப்புரெட்டிபட்டி, ஓமாந்தூர், பூவம்பாடி போன்ற ஊர்களில் வசிக்கும் பட்டியல் இன மக்களுக்கு சுடுகாடு கொட்டகை அமைத்து தர வேண்டும், புதுபட்டியில் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும், லட்சுமணம்பட்டியில் உள்ள சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டில் கொண்டுவர வேண்டும், பழைய ஜெயங்கொண்டம் ஊரின் மைய பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் பேரூர் கழக பொறுப்பாளர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்."

    • மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாத ஊதியம் ரூ.4500 போதுமானதல்ல. எனவே பணி நிரந்தரம் செய்து, குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு, பயணப்படி வழங்க வேண்டும். பணிச் சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவை சந்தித்து மனு அளித்தனர்.

    • அரசூரில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ர.வேலு முன்னிலை வகித்தார்.

    விழுப்புரம்:

    பா.ஜனதா கட்சி சார்பில் மின்சாரம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசூர் கூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் வைத்திலிங்கம், கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ர.வேலு முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பால் மற்றும் மின்சார விலை உயர்வை கண்டித்து பிறமொழி மாவட்ட தலைவர் மாரி கண்டன உரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் சிவபாலன், ஒன்றிய பொதுச் செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஹரி பாவாடைராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் நகர தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் மாரியப்பன் குமார், மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் அபிராமி, அரியலூர் ஒன்றிய தலைவர்கள் பழனிச்சாமி (தெற்கு), தங்கவேல் (வடக்கு), உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

    இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழுர், உடையார்பாளையம், விக்கிரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×