என் மலர்
நீங்கள் தேடியது "Dengue"
- ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
- கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் கொரோனா, டெங்கு குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்தும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் ஜான் ரவி, கவுன்சிலர்கள் சாலமோன்ராஜா, பழனி சங்கர், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளநிலை உதவியாளர் முகைதீன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைக்குழுவினர் ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு கொரோனா, டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் செல்வின்துரை, ஆனஷ்ட் ராஜ் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது
- டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது. டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முகாமிற்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகி ருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாசுதே வநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி யில் சிவராம லிங்க புரம் தெரு, தெற்கு ரத வீதி, அம்பேத்கார் தெரு, பால கணேசன் தெரு, மலைக் கோவில் ரோடு போன்ற பகுதிகளில் மருத்துவ முகாமும், மழையிலும் வெயிலிலும் கேட்பாரற்று கிடந்த கழிவு பொருட்களான டயர், டியூப், சிரட்டை, அம்மி, ஆட்டு உரல் போன்றவற்றை வீடுவீடாக சென்று அவற்றை அகற்றும் பணியும், ஒட்டுமொத்த துப்புரவு பணியும், நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜாராம், துப்புரவு ஆய்வாளர் லாசர் எட்வின், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முருகையா, இசக்கி, டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ராஜாராம் செய்திருந்தார்.
- பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
- கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் முரளி சங்கர் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள அரியப்பபுரம் வெள்ளை பணையேறிப்பட்டி கிராமத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று நல்ல தண்ணீரில் கொசுப்புழு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். கிராமம் முழுவதும் காய்ச்சல் நோயாளிகள் உள்ளார்களா என கணக்கெடுக்கப்பட்டது. கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், டாக்டர் பாரதி கண்ணம்மா மாவட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் தண்டாயுதபாணி, மாவட்ட மலேரியா அலுவலர் குருநாதன், இளநிலை பூச்சிகள் வல்லுநர் பாலாஜி, வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் ஸ்ரீமுக நாதன், சுகாதார ஆய்வாளர் ஜெயராமன், சுப்ரமணியன் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தொடர்மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
- டவுன் தெருக்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர்.
நெல்லை:
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். கொசு புழுக்களால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதை தடுக்கும் வகையில் மாநகர பகுதியில் உள்ள தெருக்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும், வீடு வீடாக சென்று குடிதண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கமிஷனரின் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுரைப்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி டவுன் ரத வீதிகள் மற்றும் அதனை சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர். இந்த பணியின் போது தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கொசு மருந்து அடித்ததோடு, வீடு வீடாக சென்று தண்ணீரின் தரத்தையும் ஆய்வு செய்தனர்.
- நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
- கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் முதிர் கொசுக்கள் அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு கிராமங்கள் தோறும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு டெங்கு உள்ளிட்ட கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டதுணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் ராஜேந்திரன் அறிவுரைப்படி உக்கிரன்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன் தலைமையில் மேல தாழையூத்து, அழகிய பாண்டியபுரம், பட்டவர்த்தி, வெண்கல பொட்டல் மற்றும் வன்னிகோனேந்தல் கிராமங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் முதிர் கொசுக்கள் அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் மஞ்சுளா, மானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பு செய்தனர்்.
- டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சீதோஷண நிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மட்டுமல்லாது பாவூர்சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியாக வெள்ளையனுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படும் ஏராளமான சிறுவர்கள்-சிறுமியர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நகரங்களை விட கிராமங்களில் அதிக அளவு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறியமுடியாமல் சுகாதாரத்துறையினர் தவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட உடையாம்புளி, ஓடைமறிச்சான், மருதம்புத்தூர், மாறாந்தை, நாலாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. இதையடுத்து காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அனைத்து யூனியன்களின் வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமித்துள்ளோம்.
ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. சமீபத்தில் 2 சிறுமிகள் உயிரிழந்தது மூளை காய்ச்சலால் தான். நேற்று கடையம் பகுதியில் இறந்த 8 மாத சிறுவன் சமீபத்தில் 4 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவந்துள்ளான். அதன்பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
பெரும்பாலும் டெங்குவில் இருந்து மீள ஒவ்வொருவரின் உடலிலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலும் இருந்தால் போதுமானது. பொதுமக்கள் தங்களது பகுதியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை நாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
- முகாமில் மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள15-வது வார்டில் செபத்தையாபுரம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நட்டாத்தி பஞ்சாயத்து துணை தலைவர் பண்டாரம், சுப்பிரமணியபுரம் சேகர குரு டேவிட் ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொதுமக்கள் அனைவருக்கும் பொதுமருத்துவம் நீரழிவு நோய்,கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் லேப் கண் சிகிச்சை ஹோமியோபதி, சித்தா மருத்துவம் டெங்கு பற்றி விழிப்புணர்வு, தொழுநோய் சிகிச்சை, மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், தூய மேரி நர்சரி பள்ளி தாளாளர் சுதாகர் மைக்கேல், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், சுப்பிரமணிய புரம் சேகர பொருளாளர் தேவ ஆசிர்வாதம், செயளாலர் ஜோசப் மாசில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பொற்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை ஏரல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் செய்து இருந்தார்.
- விருதுநகர் மாவட்டம் சங்கரநத்தம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானார்.
- இந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சங்கரநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமியின் ஒரே மகன் பாலமுருகன் (வயது15) 10-ம் வகுப்பு படித்தான். இந்த சிறுவனுக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், சரியான சுகாதாரமின்றி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். டெங்கு காய்ச்சலால் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக் கூட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை களான கொசுப்புழு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கிருமி நாசினிகள் தூவுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி, மாநகர நல அலுவலர் யோகானந்த், இணை இயக்குநர் நலப்பணி கள் பானுமதி, துணை இயக்கு நர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, மாவட்ட தொற்று நோய் தடுப்பு நிபுணர் விமா மும்தாஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் பருவமழை கால நோய்களான டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான தனி சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வட்டாரத்திலும் நாள்தோறும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் 3 முகாம்களும், நடமாடும் பள்ளிச்சிறார் மருத்துவக் குழுக்கள் மூலம் 6 முகாம்களும் என மாவட்டத்தில் மொத்தம் 180 சிறப்பு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள், விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதனைத்தவிர்த்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.
மேலும், சாதாரண சளி, காய்ச்சல் தானே என அலட்சியப்படுத்தாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள மருத்துவர்களிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஊராட்சிப் பகுதிகளில் 400 நபர்களும், பேரூராட்சி பகுதிகளில் 310 நபர்களும், நகராட்சி பகுதி களில் 169 நபர்களும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 250 நபர்களும் பொது சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை களான கொசுப்புழு ஒழிப்புப் பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கிருமி நாசினிகள் தூவுதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பொது மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.
- டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெரு, கன்னிய கோவில் மணப்பட்டு சாலையில் கடந்த சில தினங்களாக பொது மக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.
கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்தவர்களை சோதனை செய்தபோது அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பலருக்கு இருப்பது தெரிய வந்தது.
கடந்த சில தினங்களில் சுமார் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அங்கு பல இடங்களில் உள்ள சிறிய கிணறு சேதமடைந்த பொருட்களில் நல்ல தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்களுக்கான முட்டைகள் அதிகமாக உற்பத்தியாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்தவுடன் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, ஆஷா பணியாளர்கள் மற்றும் மலேரியா நோய் தடுப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் போதிய பாதுகாப்பும் நடவடிக்கையும் இருக்க அறிவுறுத்தினர். இருந்த போதும் டெங்கு காய்ச்சல் அப்பகுதியில் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
- கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
- முள்ளோடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவியது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் கொம்யூன் உள்ளது.
50-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்கள் என இந்த கொம்யூனில் உள்ளது. அதே சமயம் புதுவை மாநிலத்தில் வளர்ந்து வரும் கொம்யூனாக பாகூர் கொம்யூன் உள்ளது.
கொரானா தொற்றுக்குப் பிறகு, கடந்த 2022-ம் ஆண்டு முதல் பாகூர் கொம்யூனில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. பாகூர் கொம்யூனில் உள்ள கிருமாம்பாக்கத்தில் 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கரையாம்புத்தூர் பகுதிகளிலும், பின்னர் முள்ளோடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவியது. பின்னர் அரங்கனூர் பகுதியில் பரவியது.
அவ்வாறு டெங்கு காய்ச்சல் பரவும் போது மட்டும் கொசு ஒழிப்பு, ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை அகற்றுவது, டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே கொண்டு செல்வது போன்ற பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபடுவார்கள். பின்னர் அவர்களின் தினசரி பணிக்கு சென்று விடுவது வழக்கம்.
குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று கொசு மருந்து தெளிக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தினமும் ஒவ்வொரு கிராமமாக சென்று பொது இடங்கள், கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை
இந்நிலையில் தற்போது பாகூர் கொம்யூனுக்குட்பட்ட காட்டுக்குப்பம் கன்னியக்கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 100-ம் மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக 3 மாதத்திற்கு ஒருமுறை பாகூர் கொம்யூனில் ஒரு பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இது நாள் வரையில் உயிரிழக்கவில்லை என்பதால் புதுவை அரசும், சுகாதாரத் துறையும் அலட்சி யமாக இருந்து வருகிறது.
எனவே பாகூர் கொம்யூனில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டு ப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை சுகாதாரத் துறையினர் எடுக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- மேலப்பாளையம் மண்டலத்தில் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள ஆய்வு செய்யப்படுகிறது
- தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
நெல்லை:
நெல்லையில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல்மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின்பேரில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) காளிமுத்து அறிவுறுத்தலின்படி மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரச குமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
அப்போது சுற்றுப்புறங் களில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி அகற்றினர்.
மேலும், பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி னார்கள். புதிய கட்டிடங் களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகை யில் பராமரித்து கொள்ள வும் அறிவுரையும் வழங்கப்பட்டது.