என் மலர்
நீங்கள் தேடியது "Diwali Festival"
- தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
- மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த என்.கந்தம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சியினை செய்து காண்பித்தனர்.
பின்னர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
- போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை
- மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு
வேலூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வேலூர் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்க பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் வேலூர் அண்ணா சாலை, பி.எஸ்.எஸ். கோவில் தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஜவுளி கடைகளில் பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை, வேஷ்டி, துண்டு, டவல், பனியன் உள்ளிட்ட வைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மார்க்கெட்டில் மளிகை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.
வேலூர் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது.
- தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது.
- பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருப்பூர்:
தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் இருந்து எவ்வளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்து நாளை 6-ந்தேதி முடிவு செய்யப்பட உள்ளது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை எந்த நேரமும் தொடர்புகொள்ளலாம். அதேபோல், ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 கட்டணமில்லா எண்கள் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அரசு போக்குவரத்து கழக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைையயொட்டி கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன், கோவை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்-சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் போன்ற ெரயில்களில் முன்பதிவு, 100 சதவீதம் நிறைவு பெற்றது. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற ஊர்களுக்கு தீபாவளி சிறப்பு ெரயில் அறிவிப்பு வெளியிட வேண்டும். பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரித்தால், பண்டிகைக்கு குறிப்பிட்ட நாட்கள் முன்னதாக, கோவையில் இருந்து நாகர்கோவில், சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.சிறப்பு ெரயில் அறிவிப்பு குறித்து கோரிக்கை வைக்கும் போது அதனை பரிசீலிக்கும் சேலம் கோட்ட அதிகாரிகள் எர்ணாகுளம், கொச்சுவேலி, ஆலப்புழா, திருவனந்தபுரம் என கேரளாவில் இருந்து சென்னைக்கு ெரயில் அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கோவை, திருப்பூர் மாவட்ட பயணிகளுக்கு இருக்கை கிடைக்காமல் போகிறது. எனவே இம்முறையும் அப்படியொரு அறிவிப்பு வெளியிடாமல் கோவையில் இருந்து ெரயில் புறப்படும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மதுரை நகரில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- போலீஸ் கமிஷனர் லோகநாதன் தொடங்கி வைத்தார்.
மதுரை
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் மட்டு மின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் புத்தாடை மற்றும் தீபாவளிக்கு தேவை யான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு மதுரைக்கு வருகின்றனர்.
முக்கிய விற்பனை இடங்களாக இருக்கக்கூடிய விளக்குத் தூண், தெற்கு மாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதி பகுதி களில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் வந்து செல்வதினால் இந்த பகுதியில் திருட்டை கண் காணிக்கவும், பொது மக்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வருவதற்கு ஏதுவாகவும் 50 இடங்களில் 85 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பை தீவிர படுத்தப்பட்டுள்ளது இந்த கண்காணிப்பு கேமராவை மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறுகை யில், பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி தீபாவளி பொருட்களை வாங்கி செல்வதற்கு சட்ட ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார், குற்றப்பிரிவு போலீசார் என ஆயி ரத்துக் கும் மேற்பட்டோர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள் ளனர்.
உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி யாரும் பொதுமக்களின் பொருட்களை திருடன் முயற்சித்தால் அவர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தயார் நிலையில் இருக்கின்றனர்.
மேலும் பழைய குற்ற வாளிகளை கண்காணிப்பு காமிரா மூலம் கூட்டத்தை பயன்படுத்தி திருடன் முயற்சிக்கின்றனாரா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்பாக மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நவீன மய மாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகரின் 32 முக்கிய சந்திப்புகளில் ஏற்கனவே உள்ள தானியங்கி சிக்னல்களை போல் இதிலும் டிஜிட்டல் நேரம் காட்டப்பட்டு கருவி புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதையும் போலீஸ் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார்.
- கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
- அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:
ஒரு காலத்தில் திருப்பூர் பனியன் தொழில் நகரத்தில், தீபாவளி என்றாலே 10 நாட்களுக்கு முன்பாகவே, பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே போனஸ் வழங்குவார்கள். அதிலிருந்தே, நகரப்பகுதியில் உள்ள கடைகள் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் திருப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் மந்தமாகிவிட்டது. கடந்த ஆண்டில் இருந்து உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி போனஸ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கி விட்டது. இருப்பினும் பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் இன்று அல்லது நாளைதான் போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளன. திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் கடைகளுக்கு வந்து செல்வதால் நகரப்பகுதி கலகலப்பாக காணப்படும். தற்போது பனியன் தொழிற்சாலைகளில் பணி குறைவு என்பதால் தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளனர். அவசரமான ஆர்டர் இருந்தாலும் கைவசம் உள்ள வடமாநில தொழிலாளர்களை கொண்டு பணிகளை முடிக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி நாளையுடன் (9-ந்தேதி) உற்பத்தி பணிகளை நிறைவு செய்து விட்டு 10-ந்தேதி முதல் பண்டிகை விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன. சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள் 19-ந்தேதிக்கு முன்னதாக திரும்ப போவதில்லை. இதனால் 20-ந்தேதிக்கு பின்னரே பனியன் தொழிற்சாலைகளின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும். இதுவரை போனஸ் கிடைக்காத தொழிற்சாலைகளில் எப்படியும் இன்று மாலைக்குள் கிடைத்துவிடும். அதற்குள் கொள்முதல் வேலைகளை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம் எனவும் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். கடைசி நேர கூட்டத்தில் சிக்காமல் முன்கூட்டியே குடும்பத்தினரை பஸ்சில் அனுப்பி வைக்கவும் தொழிலாளர்கள் தயாராகி விட்டனர்.
சிறப்பு பஸ்கள்
திருப்பூரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கோவில் வழி ஆகிய 3 பஸ் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் (300-க்கும் மேற்பட்ட) பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தான் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளதால், அதற்கேற்ப கோவில்வழி பஸ் நிலையத்தை தயார் படுத்தும் பணியில் மாநகராட்சி, போக்குவரத்து கழக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் விரிவுப்படுத்தும் கட்டுமான பணி நடந்து வருவதால், கூடுதலான சிறப்பு பஸ்களை பஸ் நிலையத்திற்குள் நிற்க வழியில்லாத நிலைமை உள்ளது. இதனால் பஸ் நிலைய மேற்குபுறத்தில் உள்ள மாநகராட்சி காலியிடத்தை, தூய்மைப்படுத்தி, சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. இந்த இடத்தை ஜே.சி.பி., எந்திரத்தின் உதவியுடன் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டு, வழித்தட பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் சேறும், சகதியுமாக உள்ள இடங்களில் மண் கொட்டப்படுகிறது. கூடுதலாக பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு பின் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பஸ்கள் நிற்பதற்கு பஸ் நிலையத்தில் இடம் போதியதாக உள்ளது. மேலும் அடுத்தடுத்து பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் வரும் போது, நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்கூட்டியே காலியிடம் தயார்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் இடையூறு இல்லாமல் சென்று வர தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் மின் விளக்குகளும் பொருத்தப்படும். அத்துடன் அப்பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றனர்.
தற்போது ஸ்மார்ட் சிட்டி பணி தொடங்கியதால், பஸ் நிலையத்தில் இருந்த ரேக், மேற்கூரை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு விட்டது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கமும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. குழந்தைகள், குடும்பத்துடன் வரும் பயணிகள் மழை, வெயிலில் படும் சிரமங்களை தவிர்க்க, தற்காலிக நிழற்குடை உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அறிவழகன் அகல்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்
- தீபாவளி முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் 25-வது வார்டு கவுன்சில் கோடியக்காடு, கோடியக்கரை பகுதியை உள்ளடக்கியது.
இந்த வார்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த அறிவழகன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் துணை பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.
இவர் தான் ஏற்படுத்தி உள்ள அகல்யா அறக்கட்ட ளையின் சார்பில் அப்பகுதி மக்களுக்கு தீபாவளி முன்னிட்டு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு கோடியக்காடு கிராமத்தில் உள்ள 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.
கோடியக்கரை கிராமத்திற்கு விரைவில் அங்கு உள்ள குடும்ப பெண்களுக்கு இலவச சேவைகள் வழங்கப்படும்.
முன்னதாக வேதாரண்யம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவரும், 25 வது வார்டு வேதாரண்யம் ஒன்றிய கவுன்சிலருமான அறிவழகன் சட்டமன்ற உறுப்பினரை சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன், நாகை அ.தி.மு.க. பிரமுகர் சிவபெருமான், கோடியக்காடு அதிமுகவை சேர்ந்த தமிழ்வாணன், பக்கிரிசாமி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் சில தினங்களே உள்ளது.
- கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06001) தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்றடையும்.மறுமார்க்கமாக 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு (வண்டி எண்.06002) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு செல்லும்.
மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது
- குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தாராபுரம்:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள், தங்க நகைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி, பொள்ளாச்சி ரோடு, சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தவிர்க்கவும், சீரான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நகரின் மையப்பகுதியான பூக்கடைக்கார்னரில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (சட்டம்-ஒழுங்கு), சஜினி (போக்குவரத்து), குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வண்ணம் 24 மணி நேரமும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் நடமாட்டத்தையும தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் "பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது பணம் மற்றும் நகைகள்,செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினர்.
- சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர்.
- பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது.
திருப்பூர்:
தீபாவளி நெருங்கி வருவதால், ஊரெங்கும் களைக்கட்ட துவங்கியிருக்கிறது பண்டிகையின் கோலாகலம். நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் போலீசார் சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கியில், சில 'உஷார்' அறிவிப்புகள் தொடர்ந்து ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர். பெரும்பாலும், மாலை, இரவு நேரங்கள், வார விடுமுறை நாட்களில், தீபாவளி பர்சேஸ் களைகட்டியுள்ள நிலையில், கடைத்தெரு வீதிகளில், மக்கள் அடர்த்தியாக குவிகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஆண்களிடம் பிக்பாக்கெட் அடிப்பது, பெண்களின் 'ேஹண்ட்பேக்' பறித்து செல்வது, பல நேரங்களில் பெண்கள் அணிந்துள்ள நகைகளை அபேஸ் செய்து என பல குற்ற சம்பவங்கள் குறைவில்லாமல் நடக்கின்றன. சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர். இந்த திருட்டில் ஈடுபடுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார். திருப்பூர் நகரின் பிரதான சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், 'பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேச வேண்டாம். பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது என, தொடர்ந்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அறிவிப்பை ஒலிபரப்பி வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
- இந்த தகவலை மதுரை அரசு போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக மதுரை மண்டல மேலாண் இயக்கு நர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை), மதுரை போக்கு வரத்துக்கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு இன்று முதல் 11-ந்தேதி வரை 565 பேருந்து களும், பண்டிகைக்கு பின்பு 13-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை 485 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி, பழனி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பேருந்து நிலையங்க ளிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச் செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணி களின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது.
இப்போக்குவரத்துக் கழகம் மூலம் கொடைக் கானல், கொல்லம், மூணாறு, திருப்பூர், கோவை, மேட்டுப் பாளையம், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருசெந்தூர், நெய்வேலி, திருவண்ணா மலை, விழுப்புரம், சென்னை, மன்னார்குடி, கடலூர், நாகூர் மற்றும் நெடுந்தூர பயணிகள் சிரம மின்றி பயணிக்கவும், முன் பதிவில்லா பேருந்துக ளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரி சலையும், கால நேர விர யத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு போக்கு வரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையலாம். மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏது வாக பயணிகளுக்கு வழி காட்டவும் சிறப்பு பேருந்து களை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலை யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
- வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது
உடுமலை:
நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, மக்கள் பலரும், புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்கள், செட்டில்மெண்ட் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும், பல்வேறு விதிமுறை வகுத்து பசுமை தீபாவளி கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-
வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக அரியவகை பறவைகள், தனது வாழ்விடங்களை விட்டு மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேடி சென்று விடும் அபாயம் உள்ளது. எனவே, வனம் ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. முடிந்த வரை பட்டாசு இன்றி பசுமை தீபாவளியை கொண்டாட கிராம மக்கள் முன்வர வேண்டும். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பட்டாசு வெடிப்பதில்லை. இருப்பினும், அந்தந்த செட்டில்மெண்ட் பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு வருவோரை வனத்துக்குள் அத்துமீறி அழைத்து செல்வதையும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.
- நிகழ்ச்சியில் ஆங்காடு பகுதி நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆங்காடு ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்வாக்கம் கிராமத்தில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 3 கிலோ அரிசி, புடவை, மதிய உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கிரிஜா நித்யானந்தம், துணைத் தலைவர் மதன்ராஜ், செயலாளர் தனசேகர், பன்னீர்வாக்கம் பகுதி முன்னாள் வார்டு உறுப்பினர் மோகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், நிர்வாகிகள் டி.உதயகுமார், கே.காமராஜ், நல்லதம்பி, எடப்பாளையம் செந்தில்குமார், மகாராஜன், இலங்காமணி, காந்திநகர் அந்தோணி, தட்சிணாமூர்த்தி, ஆனந்தகண்ணன், எம்.வைகுண்டராஜா, பாபாஜி, முருகேச பாண்டி, முருகக்கனி, முகமது அப்துல்காதர், சங்கரலிங்கம், சண்முகம், ஆர்.பாலமுருகன், சுப்பிரமணி, ராஜ்நாடார், சீனிப் பாண்டியன், ஆண்டனி பீட்டர், உத்திர குமார், ரமேஷ், சுரேஷ், வண்ணை மோகன், எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், ரமேஷ், மடிப்பாக்கம் ரவி, சி.பி.செல்வன், செல்வபாண்டி, ஆத்திசாமி, டாக்டர் பிரேம்சந்த், காசிராஜன், வசந்தகுமார் கலந்து கொண்டனர்.