என் மலர்
நீங்கள் தேடியது "electrical attack death"
- பரிசோதித்த டாக்டர்கள் இன்னாச்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் இன்னாச்சி (வயது38). எலக்ட்ரீஷியன். நேற்று அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடையடுத்து அவர் அருகே உள்ள டிரான்ஸ்பாரம் அருகே சென்றுள்ளார். அப்போது எதிர்பாரவிதமாக டிரான்ஸ்பாரம் அருகே மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து இன்னாச்சி தூக்கி வீசப்பட்டார்.
மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்னாச்சியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இன்னாச்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது.
- போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.
அம்பத்தூர்:
கொரட்டூர், பாடி யாதவா தெருவை சேர்ந்தவர் சம்பத் குமார் (வயது57).தி.மு.க.பிரமுகரான இவர் சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுந்தர தேவி, அம்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
சம்பத்குமார் தினமும் காலையில் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அவர் கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது திடீரென மழை பெய்தததால் அருகில் உள்ள இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கி நின்றார். அந்த நேரத்தில் அங்கு தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சம்பத் குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.
- மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சி கன்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன்கள் விஷ்வா (12) சூர்யா (9).
இருவரும் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றனர். அப்போது பம்பு செட்டின் அறையில் அருகில் கீழே கிடந்த இரும்பு பைப்பை இருவரும் மிதித்தனர். அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வராததால் தேடிய பெற்றோர்கள் குழந்தை வயல்வெளியில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து போலீசார் உடலை கைப்பற்றினார்.
இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பள்ளி செல்லும் சகோதர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியின் மகன் சப்தகிரி (வயது 11). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இதேபோல் வினோத்தின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள்-சூர்யா தம்பதியின் மகன் லோகேஷ் (8). அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் லோகேஷ், சப்தகிரி ஆகிய 2 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்று, அங்கிருந்த பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து சப்தகிரி, லோகேஷ் ஆகியோரின் மேல் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வம் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது.
- மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலூரை அடுத்து உள்ளது நடுப்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 67) இவர் தனது மகன் தேவராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தேவராஜ் மற்றும் அவரது மனைவி அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் திருமுருகன் என்ற மகன் உள்ளார். உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்த சிறுவன் திருமுருகன் (15) வீட்டில் உள்ள சுவிட்ச்சை ஆன் செய்தார். அது பழங்கால சுவிட்சாக இருந்ததால் அதில் மின்சாரம் கசிவு இருந்ததை திருமுருகன் அறியவில்லை. இதனால் திருமுருகனை மின்சாரம் தாக்கியது. இதனால் அலறிய சிறுவனை பார்த்து அவரது தாத்தா சீனிவாசன் காப்பாற்ற முயன்றார்.
இதில் 2 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தனர். உடனடியாக அந்த பகுதி மக்கள் 2 பேரையும் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் 2 பேரும் இறந்து விட்டதாக கூறினர்.
இதுபற்றி லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான சீனிவாசன், திருமுருகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் சேலம் கல்லாங்குத்து பகுதியில் நேற்று இரவு ஒரு சூப் கடைக்கு தகர சீட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தகர சீட்டை எடுத்தபோது மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் தகர சீட்பட்டு மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்கு இருந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான வாலிபர் தினேசுக்கு திருமணம் ஆகி சந்தியா (25) என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
மனைவி சந்தியா கையெழுத்து போட்டால் தான் தினேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். இதற்காக தினேஷ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது கணவர் உடலை வாங்க மறுத்து சந்தியா மற்றும் அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அரசு நர்சிங் கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பஸ் ஆகியவை வெளியே செல்வதற்காக புறப்பட்டு வந்தது. அப்போது நுழைவு வாயில் வரை வந்த பஸ்கள் நுழைவு வாயில் முன்பு மக்கள் அமர்ந்து போராட்டம் செய்ததால் பஸ்கள் செல்ல முடியவில்லை. இதனால் நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அங்கு வந்து சந்தியா மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிடுமாறும், உங்களது கோரிக்கைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அப்போது சந்தியா கண்ணீர் மல்க கூறுகையில், எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் இறந்து விட்டதால் வருமானத்திற்கு வேறு வழியில்லை. எனவே இழப்பீடாக ரூ.30 லட்சம் சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் வழங்க வேண்டும். அப்போது தான் எனது கணவர் உடலை வாங்குவேன் என்றார்.
இதனால் அவரிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வென்றவெள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (17). இவர் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய தந்தை லட்சுமணன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், அவரது தாயாரின் வளர்ப்பில் இருந்து வந்தார் இவர் குடும்ப பாரத்தை குறைக்கவும், பள்ளிப்படிப்பிற்கும் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே கிராமத்தை சேர்ந்த மைனா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கூலி வேலைக்காக தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பி தாக்கியதில் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிழந்தார்.
நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது தாயார் தேடி சென்று அங்கு பார்த்த போது விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆனந்தன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைபற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனந்தனுக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி இருந்த போதும், குடும்ப சுமையை குறைக்க கூலி வேலைக்கு சென்று அவரது தாயாருக்கு பெரும் உதவியாக இருந்த சிறுவனின் இறப்பு அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ரெயில் நிலையத்திற்கு சென்று ‘கேக்’வாங்க சென்றிருந்த நண்பர்களுக்காக காத்து நின்றனர்.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி வாய்மேலி பகுதியை சேர்ந்த தம்பதி ஜோஸ் ஆண்டனி-சவுமியா. ஜோஸ் ஆண்டனி கண்ணாடி தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்தவர். அவரது மனைவி சவுமியா மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிகிறார். இவர்களது ஒரே மகன் ஆண்டனி ஜோஸ்(வயது17).
இவர் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்றார். அப்போது நண்பர்களில் சிலர் பிறந்தநாள் கொண்டாட 'கேக்' வாங்க கடைக்கு சென்று விட்டார்கள்.
மற்றவர்கள் எடப்பள்ளி ரெயில் நிலையத்திற்கு சென்று 'கேக்'வாங்க சென்றிருந்த நண்பர்களுக்காக காத்து நின்றனர். அவர்களுடன் மாணவர் ஆண்டனி ஜோசும் ரெயில் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் தங்களுக்குள் சில சவால்களை கூறி விளையாடியபடி இருந்தனர்.
அங்கு பெட்ரோலிய பொருட்களுடன் நின்ற சரக்கு ரெயிலின் அடிப்பகுதி வழியாக நண்பர்கள் சிலர் தண்டவாளத்தை கடந்து சென்றனர். அப்போது அவரது நண்பர்கள், சரக்கு ரெயிலின் டேங்கர் பெட்டியின் மேலே ஏறி வர முடியுமா? என்று ஆண்டனி ஜோசுக்கு சவால் விட்டனர். இதனையடுத்து நண்பர்கள் விட்ட சவாலுக்காக சரக்கு ரெயிலின் டேங்கர் மீது ஏறினார்.
ரெயில் பெட்டிக்கு மேல் மின்சார ரெயிலுக்கான உயர் அழுத்த மின்கம்பி செல்வதை ஆண்டனி ஜோஸ் கவனிக்காமல் ரெயிலின் மீது ஏறினார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உயர் அழுத்த மின்சாரம் என்பதால் ஆண்டனி ஜோஸ் உடல் கருகியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அலறினார்கள். மேலும் உடல் கருகிக்கிடந்த ஆண்டனி ஜோசை பார்த்து கதறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் உடல்கருகிய ஆண்டனி ஜோசை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
85 சதவீதத்துக்கும் மேல் தீக்காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண்டனி ஜோஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்களின் விளையாட்டு வினையானது கொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஜெக்காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 55). இவருடைய மனைவி மாதவி (50) தம்பதியின் மகன் ஹரிகிருஷ்ணா ( 30) நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர்கள் வீட்டில் இருந்தனர். அப்போது வெங்கடேஷ் குளிக்கச் சென்றார்.
குளியல் அறையில் சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கியது. அவரது சத்தம் கேட்ட அவருடைய மனைவி மற்றும் மகன் இருவரும் ஓடி சென்று அவரை காப்பாற்ற கையை பிடித்து இழுத்தனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 3 பேரும் குளியல் அறையிலேயே துடித்து இறந்தனர்.
அவருடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரன் பெண் சிறிது நேரம் கழித்து வந்தார். வீட்டுக் கதவு நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் குளியல் அறையில் இறந்து கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணியில் இருக்கும் போது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட இறப்புக்கு மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
- மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் கல்லாத்தூரைச் சேர்ந்த மின்வாரியப் பணியாளர் செந்தில்குமார் என்பவர் பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணியில் இருக்கும் போது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட இறப்புக்கு மின்சார வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், மறைந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது நியாயமல்ல. மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. செந்தில்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறி உள்ளார்.
- 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (வயது 40), கூலி தொழிலாளி. இவரது மகன் லோகேஸ் (15), அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் உறவினரான பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கரிபிரான் (65) என்பவருடன், நாட்டு துப்பாக்கியுடன் நேற்று இரவு வேட்டையாட சென்றனர்.
அவர்கள் திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பாட்டு, காளியம்மன் கோவில் வட்டம் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றனர். அந்த பகுதியில் சில விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட்ட பயிர்களை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைத்திருந்தனர். இதனை அறியாத இவர்கள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக அந்த மின்வேலியில் சிக்கிக்கொண்டனர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று, 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
இன்று வயலுக்கு வந்த விவசாயிகள், அங்கு 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இரவு நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக நீதி என்பவர் தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஓயர்கள் அமைத்து உள்ளார். நேரடியாக மின்சார கம்பம் மற்றும் விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்பில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே 3 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்த அரசு மருத்துவமனைக்கு. அவர்களது உறவினர்கள் திரண்டு வந்தனர். குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகம் அபிவிருத்தீஸ்வரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த தம்பதிக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ஏற்கனவே இறந்து விட்டார்.
இவரது மகள் மஞ்சு பிரியா குடவாசலில் ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். மகன் பிரசன்னா எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் 3 பேரும் திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் மஞ்சுபிரியா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் தாய் ராஜலட்சுமி, தம்பி பிரசன்னா ஆகிய இருவரும் சுவற்றில் சாய்ந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதைப் பார்த்த மஞ்சு பிரியா ஓடிச்சென்று தனது தாயை தொட்டுள்ளார். அப்போது மஞ்சு பிரியாவை மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.
பின்னர் மின்சாரம் தாக்கி ராஜலட்சுமி, பிரசன்னா ஆகியோர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கொரடாச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தாய், மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மஞ்சு பிரியா கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.