என் மலர்
நீங்கள் தேடியது "Exhibition"
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்
வேலூர்:
விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாராம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று காலை நடைபெற்றது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ஸ்டீபன் ஜெயக்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.
இதில் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும் பேராசிரியருமான திருமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
- மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நாட்டுப்புற கைவினை கலைப் பொருட்களின் கண்காட்சி நடந்தது. 8-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் நாட்டுப்புற கைவினைக் கலைகள் என்ற பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினை கலைப் பொருட்களைச் செய்துவர தமிழாசிரியர் கிருஷ்ணவேணி மாணவர்களுக்கு செயல்திட்டம் கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள், ஓலை கொட்டான்கள், உடுக்கை, பறவைக் கூடுகள், படகு போன்ற பொருட்களைச் செய்தனர்.
இந்த பொருட்களின் கண்காட்சியை தலைமையாசிரியர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதில் தாதனேந்தலைச் சேர்ந்த அசிகா என்ற மாணவி செய்த பனை ஓலையில் புட்டு அவிக்கும் பெட்டி, பொக்கனாரேந்தல் ரித்திகாஸ்ரீ, திருப்புல்லாணி ஆயிசத் சபா, தவுபிக் நிஷா ஆகியோர் பனை ஓலையில் செய்திருந்த ரோஜா, தாமரை பூக்கள், குருவிகள் உருவங்கள் அனைவரையும் கவர்ந்தது.
- தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி நடைபெற்றது
- அரியலூர் மாவட்ட பூவாணிப்பட்டு அரசுப் பள்ளியில்
அரியலூர்
அரியலூர் அடுத்த பூவாணிப்பட்டு கிராமத்திலுள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாணவ, மாணவி களுக்காக தொழில் நெறி வழிக்காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடை பெறற்றது.
இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கா.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்து பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த காலக் கட்டத்தில், படிக்கின்ற போதே மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேல்படிப்புக்கு செல்லும் போது, வேலைவாய்ப்பு தகுந்த படிப்பினை தேர்வு செய்து அதனை திட்டமிட்டு படிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர், புத்தகக் கண்காட்சியையும் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன் தலைமை வகித்து, உயர்படிப்பில் என்னென்ன படிப்புகளைப் படிக்கலாம் என்று மாணவர்களிடையே எடுத்து ரைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் எம்.வினோத்குமார், சா.மணிமாறன் ஆகியோர் மத்திய, மாநில அரசு பணிகள், தனியார் துறை பணியமர்த்தம் மற்றும் சுயத்தொழில்கள் குறித்தும், மாற்றுத்திற னாளிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினர்.
முன்னதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.பவானி வரவேற்றார்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜராம் நன்றி தெரிவித்தார்.
- 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக்குமார், பாண்டியன்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இதில் திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரி முஸ்ரத் பேகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் காற்றாலை மூலம் மின் உற்பத்தி, மருத்துவ தாவரங்கள், விவசாயம், மக்கும் குப்பை, மக்காத குப்பை, மூலிகை, தானிய வகைகள் மற்றும் இயற்கை உணவு வகைகள் உள்பட அறிவியல் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்திய மாணவர்கள், அவற்றின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டனர். கொரோனாவுக்கு பிறகு மாணவர்களின் அறிவு மற்றும் கல்வித்திறனை வளர்க்கும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக தலைமையாசிரியை நிர்மலா தெரிவித்தார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கண்டு களித்தனர்.
- புதுவை செல்லப் பொருமாள்பேட்டை-லாஸ்பேட்டையில், உள்ள விவேகானந்தா பள்ளியில் 2022-2023-ம் ஆண்டிற்கான கலை மற்றும் அறிவியல்- கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.
- அறிவியல் மட்டுமின்றி மற்ற பாடங்களான தமிழ், கணிதம், சமூக அறிவியல், ஆங்கில படைப்புகளையும் மாணவ-மாணவியர்கள் செய்து இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை செல்லப் பொருமாள்பேட்டை-லாஸ்பேட்டையில், உள்ள விவேகானந்தா பள்ளியில் 2022-2023-ம் ஆண்டிற்கான கலை மற்றும் அறிவியல்- கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.
இக்கண்காட்சியினைப் பள்ளியின் தாளாளரும், எம்.பி.யுமான செல்வகணபதி பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா பள்ளியின் முதல்வர் கீதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியிைன தொடங்கி வைத்தனர்.
அறிவியல் கண்காட்சியில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவியரின் 150 அறிவியல் படைப்புகளும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவியரின் 350 அறிவியல் படைப்புகளும் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
அறிவியல் மட்டுமின்றி மற்ற பாடங்களான தமிழ், கணிதம், சமூக அறிவியல், ஆங்கில படைப்புகளையும் மாணவ-மாணவியர்கள் செய்து இருந்தனர். பார்வையாளர்களுக்கு மாணவர்கள் தங்கள் மாதிரிப் படைப்புகளின் இயக்குமுறை பற்றியும் அவற்றை நடைமுறையில் பயன்படுத்திக் ெகாள்ளக்கூடிய விதம் பற்றியும் விளக்கிக் கூறினர்.
கண்காட்சியின் ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- நாகையில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
- அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை வைத்தார்.
நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழமையும் சிறப்பும் மிக்கது.
எனவே அது தனித்துவத்துடன் இயங்குவதற்கு ஏற்ப, பாரம்பரிய அரசு கட்டடத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அக்கட்டடத்தை முழுவதுமாக அருங்காட்சியகத்திற்கு ஒதுக்க வேண்டும்.
நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
அவற்றை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நாகப்பட்டினம் பெளத்த சிலைகளை நிரந்தரமாக காட்சிப்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
இது குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.
- மதுரை மக்களை கவர்ந்த சில்ப் பஜார் கண்காட்சி
- இந்த கண்காட்சி 28-ந்தேதியுடன் முடிகிறது.
மதுரை
மதுரை பெட்கிராட் தொண்டு நிறுவனமும் மத்திய ஜவுளி துறையும் இணைந்து மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் காந்தி சில்க் பஜார் என்ற பெயரில் அகில இந்திய கைவினை பொருட்களின் கண்காட்சி நடந்து வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி வருகிற 28-ந் தேதியுடன் முடி வடைகிறது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர் தொடங்கி வைத்தார்.
பெட்கிராட் தாளாளர் சுப்புராம் மற்றும் மத்திய ஜவுளி துறை அதிகாரிகள் பிரபாகரன், ரூப் சந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
100 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ள கலைநயம் மிக்க பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மக்களின் மனதை கவரும் வாழை நாரில் உருவான பூஜை கூடை, பழக்கூடை, மற்றும் மதுரை சுங்குடி சேலைகள் விதவிதமான வண்ணங்களில் கொட்டிக் கிடக்கின்றன,
பெண்களை கவரும் ஐம்பொன்னால் ஆன அணிகலன்கள் அழகுக்கு அழகு சேர்க்கிறது. நமது கலாச்சாரத்தை நினைவு படுத்தும் கேரள களி மண்ணால் செய்யப்பட்ட பானை, குவளை உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உலகப் புகழ்பெற்ற ஆயக்குடி பித்தளை விளக்கு, பூஜை பொருள்கள் நம் வாழ்வில் வளம் சேர்க்கும் சுவாமி உருவங்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட குஜராத் சுரிதார்கள், கைப்பைகள் மதுரை மக்களை உள்ளங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கண்காட்சியில் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கும் வகையில் மிக குறைந்த விலையில் கைத்தறி ஆடைகள், குர்தா மற்றும் சட்டைகள் வரிசை வரிசையாய் அணிவகுத்து காணப்படுகின்றன. கொல்கத்தா கறுப்பு மணலால் செய்யப்பட்ட டெரக்கோட்டா நகைகள், ஜெய்பூர் நகைகள், பெண்களை வெகுவாக கவர்ந்து வாங்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இது தவிர மத்திய பிரதேசத்தின் பளபளப்பான குந்தன் கற்கள், வேலைப்பாடு நிறைந்த மேஜை விரிப்பு கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான வெட்டிவேர் விசிறி, நறுமணம் வீசும் மெழுகு வர்த்தி இவையும் வாடிக்கை யாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறப்பு மிக்க தயாரிப்புகள் இந்த கண்காட்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. அனைத்து மாநில கைவினைப் பொருட்களும் மதுரையில் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்பதால் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் காந்தி சில்ப் பஜார் கண்காட்சியில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங்குகிறார்கள். இந்த கண்காட்சி இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறுகிறது. எனவே தின மும் காலை 10.30 மணி முதல் இரவு 7:30 மணி வரை இந்த கண்காட்சியில் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த பொருள்களை குறைந்த விலையில் வாங்கி பயனடைய வேண்டுமாறு கண்காட்சி பொறுப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
- பெரம்பலூரில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
- சுதந்திர போராட்ட வீரர்கள், நலத்திட்ங்கள் குறித்து
பெரம்பலூர்:
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி பெரம்பலூரில் தொடங்கியது.
சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலக மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை தலைமை வகித்து அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் சிறப்பு க்கள் மற்றும் மத்திய அரசு திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் குத்துவிளக்கேற்றி வைத்து கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட சித்த அலுவலர் எஸ்.காமராஜ் ,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர். சுகந்தி பேசினர்.
கண்காட்சியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இந்திய அஞ்சல் துறை, சித்தா, மாவட்ட சமூக நலத்துறை ,தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு திட்டங்கள், நல திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள் விளம்பர அலுவலர் கே.தேவிபத்மநாபன் வரவேற்றார். உதவியாளர் கே. ரவீந்திரன் நன்றி கூறினார்.
- காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- சிறப்பு மருத்துவ சேவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமை நடைபெற்றது.
முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் வரவேற்று பேசினார்.
ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் முன்னிலை வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.
முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், அயன் முறை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, சித்த மருத்துவம், உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
முகாமில் மருத்துவ அலுவலர்கள் ஜெகன், அனிதா, அழகு சிலம்பரசி, பாரதி, பிரியங்கா, சித்த மருத்துவர் கனிமொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், சுகாதார அலுவலர்கள் நாடிமுத்து, செல்லப்பா, சாமிநாதன், உள்பட கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் சிறப்பு மருத்துவ சேவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
10 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
- வீரராகவ மேல்நிலை பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- பள்ளியில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிர்வாக குழு செயலாளர் பூண்டி தனசேகரன் வாண்டையார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி ஆர் மற்றும் டி. தலைவர் டாக்டர் நடராஜன் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சியில் இப்பள்ளியில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை 21 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவக்குமார், பிரபாகரன், சூரியபிரகாஷ் வாண்டையார் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
- பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி நடந்தது.
- பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் உலக மண் தினத்தினை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று வழி கண்காட்சி நடைபெற்றது.
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி. குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பிளாஸ்டிக் பொருட்களுக்கான பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அதற்கான மாற்றுப்பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில், ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்க ளுக்கான மாற்றுவழி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறும்.இதில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மனித வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்க ளுக்கு பதிலான மாற்று பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சி முதன்முத லாக ராஜபாளையம் நகராட்சியில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் நடத்தப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை என்பது ஒரு சவாலான விஷயமாகும். அதனால் பொதுமக்கள் அதனை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்கி நகராட்சிக்கு உதவிட வேண்டும்.
மேலும் பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி, சுற்றுப்புறச்சூழலை காத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ பாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, திருப்பூர் பாதுகாப்பு சங்கம் நிறுவன செயலாளர் வீரபத்மன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் காளி, பணியாளர்கள், பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது.
- சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன.
சென்னை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் தொழில் பொருட்காட்சி நடைபெறும். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக பொருட்காட்சி நடைபெறவில்லை.
2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் நடத்தப்பட்டது. 2 மாத காலம் நடைபெறும் இந்த பொருட்காட்சியை காண சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதனால் பல்வேறு சிறப்புகளுடன் பொருட்காட்சியை சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
புயல், மழையால் தீவுத்திடலில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி சற்று தாமதம் ஆன நிலையில் தற்போது வேகமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள் 40, 100-க்கும் மேலான ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.
சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குதூகலப்படுத்தும் வகையில் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைகின்றன.
பள்ளி குழந்தைகள் பயன்பெறக்கூடிய வகையில் அறிவியல் அரங்கம் நிறுவப்படுகிறது. இதுதவிர சுற்றுலா ரெயில், மாநில உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தீவுத்திடலில் இருந்து 'டிரைவ் இன்' ஓட்டல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. காரில் இருந்தபடியே குடும்பமாக உணவு மற்றும் பொழுதுபோக்கும் வகையில் பிரமாண்டமான திரை அமைக்கப்படுகிறது. அதிக அளவில் கார்களை நிறுத்தி இந்த ஓட்டலில் உணவு சாப்பிடக்கூடிய மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்படுகிறது.
இந்த டிரைவ் இன் ஓட்டல் நிரந்தரமாக அங்கு எப்போதும் செயல்படும் வகையில் சுற்றுலாத்துறை சீரமைத்து வருகின்றன. அரசு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை இருந்த நுழைவு கட்டணத்தை விட 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படும்.
பொருட்காட்சி நுழைவு வாயில் பாரம்பரிய சிறப்புடன் அமைகிறது. வருகிற 23 மற்றும் 28-ந்தேதிக்கு இடையே பொருட்காட்சியை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.