என் மலர்
நீங்கள் தேடியது "fake doctor arrest"
- கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
- போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (வயது 13) அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று சூரிய பிரகாஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டது இதற்காக நாயனசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வரும் கோபி என்பவரிடம் சிகிச்சை அளித்தனர். அப்போது கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
வீட்டிற்கு சென்றதும் சிறுவன் சூரிய பிரகாசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே நாட்றம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதனால் சிறுவனின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஊசி போடப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது கோபிநாத் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் கோபிநாத்தை கைது செய்தனர்.
இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் போலி கிளினிக் நடத்துவது குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்தது.
- நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதனுக்கு நத்தம் பகுதியில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக நத்தம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நத்தம் ஆண்டியப்பபிள்ளை தெருவில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் முத்தையாவிடம் விசாரித்தனர்.
அப்போது பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் முத்தையாவை கைது செய்தனர்.
மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக்கையும் வருவாய் துறையினர் சீல் வைத்தனர். அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி, குளுக்கோஸ் உள்ளிட்டவைகளை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிறுகுடி, செந்துறை,கோட்டையூர்,பெரியூர்பட்டி, குட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் போலி டாக்டர்கள் வீடு வீடாக சென்று மருத்துவம் பார்த்து வருவதாகவும், கூடுதல் பணம் வாங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- க்ளினிக்கில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
- க்ளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் தாசா்பட்டி பிரிவில் மருத்துவம் படிக்காத ஒருவா் க்ளினிக் நடத்தி வருவதாகவும், நோயாளிகளுக்கு அவா் ஊசி போடுவதுடன், ஆங்கில மருந்துகள் வழங்குவதாகவும் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த க்ளினிக்கில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தாசா்பட்டி பிரிவைச் சோ்ந்த தங்கராஜ் (41) என்பவா், மருத்துவம் பயிலாமல் க்ளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி அளித்த புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போலி டாக்டா் தங்கராஜுவை கைது செய்தனா். மேலும் அந்த க்ளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர்.
- கவுரி நடத்தி வந்த கிளினிக் மற்றும் லேப், மருந்தகம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஓசூர்:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் கவுரி (வயது 34). இவர், ஓசூர் அரசனட்டி பகுதியில் தங்கி இருந்து கிளினிக், லேப் மற்றும் மருந்தகம் ஆகியவற்றை நடத்தி வந்தார். டி-பார்ம், பி.இ.எம்.எஸ். வரை மட்டுமே படித்த இவர், அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.
அதே போல் இவரது கிளினிக்கில் வேலை பார்த்து வந்த ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த சிலம்பரசி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு அவரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மூக்கண்டப்பள்ளி அரசனட்டி பகுதிக்கு சென்று கவுரி நடத்தி வந்த கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கவுரியும், சிலம்பரசியும் போலி டாக்டர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவத்துறையினர் அளித்த புகாரின் பேரில் 2 பேரையும் ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கவுரி நடத்தி வந்த கிளினிக் மற்றும் லேப், மருந்தகம் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- 10 வருடங்களுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிந்தது.
- மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
மதுரை:
மதுரை அரசரடி எல்லீஸ் நகர் பகுதியில் எரோசா என்ற பெயரில் மருத்துவமனை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர் என்று கூறிக்கொண்டு சீதாலட்சுமி நகரை சேர்ந்த ஆரோக்கிய ராணி (வயது 56) என்பவர் பலருக்கும் குறைந்த விலையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை நாராயணபுரதத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவருக்கு கை, கால் நடுக்கம், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.
சிகிச்சையில் சந்தேகம் அடைந்த வழக்கறிஞர் தனக்கு மருத்துவம் பார்த்த ராணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 31-ந்தேதி மதுரை, உசிலம்பட்டி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் என்பவரிடம் புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் நேற்று டாக்டர் செல்வராஜ், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை கண் மருத்துவ உதவியாளர் சந்திரன், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் சதீஷ், இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக உதவியாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசரடி பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு ஆரோக்கிய ராணி நோயாளி களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த இணை இயக்குநர் செல்வராஜ், ஆரோக்கிய ராணி மருத்துவம் படித்ததற்கான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
அத்துடன் அந்த மருத்துவமனையில் 5 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதில் சிலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த மருத்துவமனையில் 4 பேர் செவிலியர்களாகவும் வேலை பார்த்து வந்தனர்.
மேலும் உரிய மருத்துவ தகுதி எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு உயிர் இழப்பு ஏற்படும் வகையில் சிகிச்சை அளித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
ஆரோக்கிய ராணி 10-ம் வகுப்பு வரை படித்திருந்ததாகவும், நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அளித்த வந்ததும் தெரிந்தது.
இது குறித்து டாக்டர் செல்வராஜ் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆரோக்கிய ராணி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலியாக மருத்துவம் பார்த்த ஆரோக்கிய ராணியையும் கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த பெண் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில், சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்படுவதாக புகார் வந்தது. கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் அங்கு திடீர் நேரடி ஆய்வு நடத்தினர்.
அப்போது பேன்சி ஸ்டோருக்கு உள்ளே சிறிய அறையில் படுக்கை வசதியுடன் கூடிய கருக்கலைப்பு மையம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அன்பரசி மற்றும் குழுவினர் அந்த அறையில் சோதனை நடத்தினர். கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சட்ட விரோத கருக்கலைப்பு மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அதில், நாளொன்றுக்கு சராசரியாக 2 அல்லது 3 பெண்கள் வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஏராளமானோர் திருமணமாகாத இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் வந்து சென்றது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட சில நபர்கள் இவர்களை அழைத்து வருவதும் பதிவாகி உள்ளது. அவர்கள் இடைத்தரகர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அங்கு ஏராளமான கர்ப்பிணி பெண்களின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளும் சிக்கி இருக்கிறது. ஸ்கேன் மூலம் பெண் குழந்தை என உறுதி செய்த பிறகு, இங்கு கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டிருப்பதால், 4 ஆயிரம் பெண் சிசுக்கள் வரை கருவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெண் குழந்தைகள் வேணடாம் என நினைக்கும் பெண்கள், திருமணத்துக்கு முன்பு கருவுறும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் போன்றோர் இந்த கருக்கலைப்பு மையத்துக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
கருக்கலைப்பு மையத்துடன் தொடர்புடைய இடைத்தரகர்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றையும் கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இங்கு கைப்பற்றிய செல்போன் எண்களின் விபரங்கள் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்களின் விபரங்களை எந்த வகையிலும் வெளியிடக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து இடைத்தரகர்கள் இங்கு பெண்களை அழைத்து வந்திருப்பதும், ஒவ்வொரு பெண்ணிடமும் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பணம் வசூலித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் ஊழியர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் போலி டாக்டர் கருக்கலைப்பில் ஈடுபடுவதாக எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி தலைமையில் போலீசார் திருவண்ணாமலை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கடையின் உரிமையாளர் கவிதா (32) என்பவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடையில் இருந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் கருக்கலைப்பு செய்ய அங்கு வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து கவிதா அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் பிரபு ஆகிய 2 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கவிதா 10-ம் வகுப்பு படித்து விட்டு பேன்ஸி ஸ்டோர் வைத்துக் கொண்டு அங்கேயே கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் பேன்ஸி ஸ்டோரில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் என்றும், ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் கருக்கலைப்பு செய்ய வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென சிகிச்சைக்கு வரவில்லை. இதனால் அந்த பெண்ணின் வீட்டில் விசாரித்த போது அந்த பெண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பிற்கு தொடர்பு கொண்டதில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 10-ம் வகுப்பு படித்த கவிதா என்ற பெண்ணிடம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நடத்திய ஆய்வில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோர் போல் இருந்தது. உட்பகுதியில் கிளினீக், மருந்து பொருட்கள் மற்றும் கருக்கலைப்பிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்தது.
செல்போன் எண்ணை வைத்து தான் இந்த இடத்தை கண்டறியப்பட்டது. கிரிவலப்பதையில் 24 மணி நேரம் மக்கள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் சந்தேகப்படாத வகையில் முன்பகுதியில் பேன்ஸி ஸ்டோரும் வைத்திருந்தனர்.
இப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது நாள்தோறும் 2-க்கும் மேற்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்ய வந்து சென்றது தெரியவந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக கவிதா மற்றும் அவரது கணவர் பிரபு கருக்கலைப்பை தொழிலாக நடத்தி வந்துள்ளனர். அவர்கள் இதுவரை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்திருக்கலாம்.
முதற்கட்டமாக கிளினீக் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வீட்டில் ஆய்வு செய்யப்படும்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருக்கலைப்புக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்துள்ளனர். மேலும் இந்த செயலில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்திய ஆய்வில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிய ரூ.6 ஆயிரம், கருக்கலைப்பு ரூ.15 ஆயிரம் வசூலித்து பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் டாக்டர் ஆனந்தி மற்றும் அவரது கணவர் தமிழ்செல்வன் வீட்டில் ரகசிய அறையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டருக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற் போது மீண்டும் திருவண்ணாமலையில் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திள்ளது.
வேலூரைச் சேர்ந்தவர் ரேச்சல் ஜெனிபர். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அவை போலியானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார்.
ரேச்சல் ஜெனிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ரூ.35 ஆயிரம் சம்பளம் வாங்குவதும், போலி சான்றிதழ் பெற தினேஷ், விஜயலட்சுமி ஆகிய 2 பேர் உதவி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தேடி வருகிறார்கள்.
போலி சான்றிதழுடன் டாக்டர் வேலையில் சேர்ந்த ரேச்சல் ஜெனிபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். #FakeDoctor
கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் பொய்கைகரை பகுதியில் சுப்ரதா தாஸ் என்பவர் அலோபதி டாக்டர் என அடையாளப்படுத்திக் கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தார்.
சந்தேகம் அடைந்த நோயாளி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரபணி இணை இயக்குனர் ஜீவா பார்வைக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த கிளினிக் சென்று சோதணையிட்டு விசாரித்த போது சுப்ரதா தாஸ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பதும் அனுமதி இல்லாத மருந்துகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அவரை சதுரங்கப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இவர் கல்பாக்கம் பகுதி வடமாநில நபர்களுக்கு போதை ஊசி மருந்துகள் ஏதேனும் கொடுத்துள்ளாரா? கல்பாக்கத்திற்கு எப்படி வந்து தங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்க வணங்காமுடி. இவர் புதிய மருத்துவ கல்வி தகுதியின்றி தனியார் ஆஸ்பத்திரியில் அலோபதி மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் தினேஷ் குமாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொலை நிலை கல்வி மூலம் பி.ஏ.எம்.ஸ் படித்த தங்க வணங்காமுடி மருத்துவம் பார்ப்பதற்கான எவ்வித தகுதியும் இல்லாதவர்.
ஆனால் மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராம பகுதிகளில் வீட்டில் ஆஸ்பத்திரி வைத்து அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாரதிக்கு தகவல் எட்டியது.
அதன் அடிப்படையில் தேனி அருகே தேவாரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தம்மிநாயக்கன்பட்டியில் பாரதி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ஆபிரகாம் என்பவர் வீட்டில் ஆஸ்பத்திரி வைத்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார்.
அவரை கையும் களவுமாக சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்தனர். உடனடியாக தேவாரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதான ஆபிரகாம் பிளஸ்-2 மட்டுமே முடித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி ஆகும். இவரது குடும்பம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்மிநாயக்கன்பட்டிக்கு குடிபெயர்ந்துள்ளது.
மலை கிராம பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் ஆபிரகாம் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருந்து, மாத்திரை, ஊசி போட்டுள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்துள்ளது.