என் மலர்
நீங்கள் தேடியது "feat"
- தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி.
- மாணவி வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா.
இவர் தமிழ் திறனாய்வு தேர்வில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் பெற்றார்.
சாதனை படைத்த அபிநயாவை ஆசிரியர்கள், மாணவிகள், பாராட்டினர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரச் செய்து சால்வை அணிவித்து வாழ்த்தினார் .
இந்நிலையில் நாகை மாவட்ட மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , அபிநயா வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் புகழேந்தி , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், ஒன்றியகுழு உறுப்பினர் உஷாராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது.
மதுரை
தென்னிந்திய அளவி லான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அந்த பள்ளியை சேர்ந்த 5 மாணவ-மாணவிகள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
பதக்கம் வென்ற 5 பேரும் அடுத்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற மாண வர்களை டேக்வாண்டோ பயிற்சியாளர் மனோஜ்குமார், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
- தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை.
- 6 முதல் 60 வயது வரை உள்ள சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.
சீர்காழி:
சீர்காழியில் பழமை வாய்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகம் இயங்கி வருகிறது.
இதன் நிறுவனர் மற்றும் பயிற்றுநராக சிலம்பாட்ட ஆசான் சுப்ரமணியன் இருந்து வருகிறார்.
இம்மாணவர்கள் தமிழகம், வெளிமாநிலம் உட்பட வெளிநாட்டுகளிலும் சிம்பாட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட சார்பாக மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக மாணவ, மாணவிகள் யோகேஸ்வரன் 3 விதமான ஆயுதம் 6 மணிநேரம் சுற்றியும், கலைமொழி, இனியவளவன், நித்திஸ், அண்டரசன், ஸ்ரீநிவாஸ், கிஷோர், விமல் உள்ளிட்ட 25 பேர் தனிநபர் உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
6 மணி நேரம் முதல் 24 மணிநேரம் வரை ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், வேல் கம்பு, கரலாக்கட்டை உள்ளிட்ட ஆறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி உலக சாதனை செய்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் இருந்து 340 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.
குறிப்பாக 6 வயது சிறுவன் முதல் 60 வயது வரை சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.
இவர்களின் சாத னையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பை சேர்ந்த ஜேக்கப்ஞா னசெல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.
அப்போது வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக கௌர வத்தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ராமநாதபுரத்தில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்தார்.
- ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்தாரி ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி" அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க திரைப்படம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் திரையிடப்பட்டது.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், , உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்தாரி ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்.
- வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகி கள், மாநில தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து அணிகளின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்
இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தெரிவித்துள்ளார்.
- கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது.
- கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் மண்டலக்குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், சசிகலா, விஜயலட்சுமி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், சாமுவேல், ரகுராமன், வட்ட செயலாளர் குப்பு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
- கடலாடியில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாநில வர்த்தகர் அணி துணைச்செயலாளர் ராமர், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர்-தி.மு.க. தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுந்தர்ராஜ் பேசினார். இதில் ஊராட்சித் தலைவர் கண்டிலான் மணிமேகலை முத்துராமலிங்கம், பெரியகுளம் நீர் பாசன சங்கத் தலைவர் ரவீந்திரநாத், இளைஞரணி அமைப்பாளர் சத்தியேந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி முரளிதரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், கருப்பசாமி, புண்ணியவேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சர்புதீன், ராமகிருஷ்ணன், முத்துலட்சுமி பாண்டி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, முன்னாள் கடலாடி துணை சேர்மன் பத்மநாதன், ஒன்றிய அவை தலைவர் ராஜசேகரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலாடி செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.
- தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- ஆதிதிராவிடர் நல மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராமச்சந்திரன் வரவேற்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கல்லுவெட்டுமேடு பகுதியில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான சண்முக வடிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சகா தேவன், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் கண்ணன், துணை செயலாளர்கள் முத்துராமன், சரசு சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் தங்கமணி, மணி, தவமணி, காட்டாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர் ரவி, ஆதிதிராவிடர் நல மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராமச்சந்திரன் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் இலக்கு வன் கலந்து கொண்டு பேசினார்.
மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுலைமான் பாதுஷா, மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோரும் சிறப்புரையாற்றினர். இதில் திருப்பத்தூர் நகர செய லாளர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சாக்ளா, நகர அவைத் தலைவர் ராமரவி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிக்கந்தர் பாதுஷா, தொ.மு.ச. சண்முகநாதன், பேச்சாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய துணைச் செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
- 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவர் சாதனை படைத்தார்.
- இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் நோபல் உலக சாதனை மற்றும் கனி சிலம்ப விளையாட்டு, சிலம்பக்கலை அகாடமி இணைந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி செய்யாலூர் ஆர்.கே.சாமி கல்லூரியில் நடந்தது.
சிலம்ப விளையாட்டுப் பள்ளியின் நிறுவனர் அகமது மரைக்கா, கனி சிலம்பப்பள்ளி நிறுவனர் வரிசை கனி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 3 மணிநேரம் உலக சாதனைக்காக 6 பள்ளி களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.
ராமநாதபுரம் முஹம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர் முகமது அப்துல் ஹாலித், ஆர்.கே. சாமி கல்லூரியில் இருந்து நல்லாங்குடி கிராமம் வரையிலும், பின்னர் நல்லாங்குடியில் இருந்து ஆர்.கே.சாமி கல்லூரி வரையிலும் மொத்தம் 10 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் சுற்றியபடி சாதனை படைத்தார்.
இந்த மாணவருக்கு ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இதில் திருப்பூரை சேர்ந்த சோழன் சிலம்பம் மற்றும் விளை யாட்டு அகாடமி மாண வர்கள் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர்.
- ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
- ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தொடங்கி வைத்தார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணியை பா.ஜ.க.வினர் தொடங்கி தீவிரமாக மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து தற்போதே தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், நிர்வாகிகள் முருகன், சங்கீதா, குமரன், பாலமுருகன், நகர் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- கீழக்கரையில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் இன்று மாலை நடக்கிறது.
- பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கமுதி பால்கடை அருகில் மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை பிரசார கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நகர் செயலாளர் எஸ்.ஏ.ஹெச்.பஷீர் அகமது தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இன்பா ரகு,மதுரை ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.நகர் இளைஞரணி அமைப்பாளர், கீழக்கரை நகர் மன்ற துணைத்தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளருமான வக்கீல் ஹமீது சுல்தான், நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எபன், சுபியான், அல்லாபக்ஸ், பயாஸ்தீன், நயீம் உள்ளிட்டோர் வரவேற்று பேசுகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் 2 ஆண்டு சாதனை குறித்து பேசுகின்றனர்.இதில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முகம்மது ஹனிபா, தொழி லாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் காதர், அவைத் தலைவர் ஜமால் பாரூக்,நகர் துணைச் செயலாளர்கள் ஜெய்னுதீன், முனீஸ்வரன், பாண்டியம்மாள்,நகர் பொருளாளர் சித்திக், மாவட்ட பிரதிநிதிகள் தவ்பீக் ராஜா, லதா கென்னடி, நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், முன்னாள் இளை ஞரணி துணை அமைப்பாளர் கெஜி (எ) கஜேந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி மரைக்கா யர் உள்ளிட்ட நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள்,வார்டு இளைஞரணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
முடிவில் நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் 17-வது வார்டு கவுன்சிலர் செய்யது முகம்மது பயாஸ்தீன் நன்றி கூறுகிறார். இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு நகர் இளைஞரணி அமைப்பா ளர் வக்கீல் ஹமீது சுல்தான் அழைப்பு விடுத்துள்ளார்.
- மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.
மதுரை
மதுரை ஜீவா நகரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பகுதி செயலாளர் காவேரி, 79-வது வார்டு வட்ட செயலாளர் பாலாஜி மற்றும் ஜெய்ஹிந்துபுரம் சிராஜ், சதீஸ் குமார், மரக்கடை வெங்கடேஷ், உமா மகேஸ்வரன், சிவபாலன், ஆர்.சதிஸ்குமார், அக்னி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் மூவேந்திரன், பகுதி இளைஞரணியை சேர்ந்த கோகுல்நாத் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.