என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female"

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் (37). இவர் தாரமங்கலம் அருகே பவளத்தானூரில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கண்ணம்மாளின் கடைக்கு அருகே சின்னப்பம் பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் பழக்கடை வைத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது.

    இந்த நிலையில் கண்ணம்மாளிடம் இருந்து முத்துவின் கம்ப்ரசர் வாகனத்தின் ஆர்.சி. புக்கை வாங்கிய சுந்தரம் அதை அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஆர்.சி. புக்கை திரும்ப தராததால் கண்ணம்மாள் புக்கை திரும்ப வாங்கி தரும்படி சுந்தரத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

    பலமுறை கேட்டும் புக்கை திருப்பு தராததால் கோபமடைந்த கண்ணம்மாள் நேற்று நங்வள்ளி பகுதிக்கு வந்த சுந்தரத்திடம் ஆர்.சி. புக்கை திரும்ப தரவில்லை என்றால் இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளிக்க போவதாக மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணம்மாள் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் சுந்தரம் அங்கி ருந்து தப்பியோடிவிட்டார்.

    பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்ணம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார்.
    • இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று அந்த பெண் கேள்வியெழுப்பியுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவனுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்த நபர் ஒருவர், உனது ரேட் என்ன என்று கேட்டு , எங்க அப்பா, மாமா எல்லாமே டி.எஸ்.பி என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் கணவருக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட அழுதுகொண்டே தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். அதில், இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

    • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது
    • பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    கொல்கத்தா பயங்கரம் 

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தினந்தோறும் வெளியாகும் தகவல்கள் இந்த சம்பவத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்ற கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.

    கேள்விக்குறி? 

    இந்த குற்றத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர் சந்தீப் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தின் முதற்கட்ட போலீஸ் விசாரணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

     

     விடை கிடைக்காத மர்மங்கள் 

    இதோடு, இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் பலர் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அம்மாநிலத்தில் ஆளும் அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பினார். பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

    அதிர்ச்சியூட்டும் பின்புலம்  

    இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. இந்த சம்பவத்துக்கு பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உரிமை கோரப்படாத உடல்களை உறுப்புகளுக்காக விற்று கமிஷன் பெற்றது, மருத்துவ கழிவுகளையும் சட்டவிரோதமான முறையில் விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக ஊழியர் ஒருவர் முன்வைத்துள்ளார். இதற்கிடையில் சந்தீப் கோஸ் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

     

    விசரணையும் போராட்டங்களும் 

    இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் குழு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்தும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடு முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கையை உறுதிப்படுத்த உடனடியாக மத்திய அரசு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் நாடு முழுக்க மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு நிகரான பாதுகாப்பை மருத்துவமனைகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்வைத்தது.

     

    உச்சநீதிமன்றத்தின் தலையீடு 

    போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே இன்னும் காலவரையின்றி நடந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த  வழக்கின்  மீது நேற்று நடந்த விசாரணையில் மேற்கு வங்காள மாநில அரசு மற்றும் போலீசின் மெத்தனப் போக்கை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

     

    வழக்கில் நடந்த குளறுபடிகள் குறித்து சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் நாடு இன்னொரு வன்கொடுமை நடக்கும் வரை காத்திருக்காது என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பயிற்சி மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

     

    அடுத்தது என்ன?

    மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரிக்கை வைத்தனர். ஒட்டுமொத்தமாகப் பதில் கிடைக்காத கேள்விகளும், மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்  இந்த வழக்கின் போக்கை அடுத்து எந்த திசையில் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது திண்ணம்.

    • பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார்.
    • கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் யாஷ்டிகா தங்கம் வென்றிருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பவர்லிஃப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா (17), 270 கிலோ எடையைத் தூக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றதன் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.

    இந்நிலையில், யாஷ்டிகா பயிற்சியின் போது 270 கிலோ எடையை பயிற்சியாளர் உதவியுடன் தூக்க முயன்றார். அப்போது பயிற்சியாளர் எடையை அவர் மீது விட்டபோது, அந்த எடையைத் தாங்க முடியாமல் அவர் நிலை தடுமாறியதில் மொத்த எடையும் அவர் மீது விழுந்தது. இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    • பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று விட்டார்.
    • போலீ்சார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் உத்திகை தெருவில் வசிப்பவர் காசிநாதன் மகன் கவியரசன்(வயது 22). டிரைவர்.

    இவர் அதே ஊரில் வசிக்கும் 17 வயது பெண்ணை காதலித்துள்ளார்.

    இதனால் இந்த பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசை வார்த்தைகள் கூறி ஊரை விட்டு அழைத்து சென்று விட்டார்.

    இது குறித்து பெண்ணை காணவில்லை என பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீ்சார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த கவியரசனை போலீசார்கைது செய்து அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இளையராஜாவிடம் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் குடிபோதையில் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சரிதாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே கே.என். பேட்டையை சேர்ந்தவர் சம்பத். அவரது மனைவி சரிதா (வயது 23). கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் சரிதாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று சரிதா தனது கணவர் சம்பத்திடம், தான் தூங்க செல்வதாக கூறி வீட்டில் உள்ள அறைக்கு சென்றவர் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 வருடத்திற்குள் சரிதா இறந்த காரணத்தினால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.

    • மேலூர் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள திருவாதவூரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது44). இவரது மனைவி ஜெயலட்சுமி(40). இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு முகேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய மகன்கள் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்தது. நேற்று மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் ரமேஷ் வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக்குள் ஜெயலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இது குறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முன்னுரிமை பெற்ற 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம். அதற்காக பெண் பெயர்களில் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் மூலமாக 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் ரேஷன் பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 கார்டுகள் உள்ளன. முன்னுரிமை இல்லாத கார்டுகள் 5 லட்சத்து 23 ஆயிரத்து 814 இருக்கிறது.

    மத்திய அரசின் உத்தரவுப்படி, முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் பி.எச்.எச். என்ற முன்னுரிமை பெற்ற கார்டுகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஓய்.) கார்டுகளில் பெண் குடும்ப தலைவர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி குடும்ப தலைவர் மாற்ற வேண்டிய கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகளிலும் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண் குடும்ப தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் வகையில் திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. பி.எச்.எச். என்று கார்டு வைத்துள்ள குடும்பங்களில் தலைவராக பெண் இடம் பெற வேண்டும். ஆண்கள் தலைவராக இருந்தாலும் ரேஷன் கடைகளில், அந்த குடும்பத்தின் தலைவியாக உள்ள பெண் புகைப்படத்தை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும். பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஓய். கார்டுகள் என 2 லட்சத்து 86 ஆயிரம் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் அறிவிக்கும்போது பெண்கள் அதிகம் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கல்லூரி மாணவரை தாக்கிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பேருந்தை வழிமறிது பெண் ஒருவர் உள்ளே சென்று வாலிபரிடம் கேள்வி கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 21). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார்.

    கடந்த 4 ந்தேதி மாலை கல்லூரி பேருந்தில் வந்துகொண்டிருந்த போது சின்னப்பம்பட்டி அருகே பேருந்தை வழிமறித்த பெண் ஒருவர் உள்ளே சென்று முருகனிடம் உன்னுடைய நண்பன் கவின்ராஜ் எங்கடா என்று கேட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த முருகன் ஓமலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரி மாணவரை தாக்கிய பெண் சின்னப்பம்பட்டி அருகிலுள்ள அக்கறை–பட்டியை சேர்ந்த பரிமளா–தேவி என்பதும் இவருடைய மகன் பாலாஜிக்கும், கவின்ராஜ் என்ற மாணவ–ருக்கும் ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று பஸ்சில் இல்லாததால் அவருடைய நண்பர் முருகனை தாக்கியதும் தெரியவந்தது. இதுபற்றி முருகன் கொடுத்த புகாரின் பேரில் பரிமளாதேவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல் பணிமனை 1,2 ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் மூலம் 171 நகர மற்றும் புறநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    600-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். அண்மையில் வாரிசு அடிப்படையில் 10 பேருக்கு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் இதர பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் பணிக்காலத்தின் போது உயிரிழந்த பயணச்சீட்டு பரிசோதகரான முனியப்பன் அவரது மகள் இளையராணி (வயது 34) என்பவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக அரசு டவுன் பஸ்சில் (ராசிபுரம், சேலம், பஸ் எண் 52) நடத்துனர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.

    இதுகுறித்து இளையராணி கூறியது:

    எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

    தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்தது. 10 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது நான் மட்டும் பெண். இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன் என்றார் இளையராணி.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நாமக்கல் மண்டல மேலாளர் பாண்டியன் கூறியதாவது:

    இதற்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பஸ்சில் பெண் கண்டக்டர்கள் பணியாற்றினார்களா? என்பது சரிவர தெரியவில்லை சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.

    தற்போது ராசிபுரம் பணிமனையில் வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு பெண் கண்டக்டர் பணி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • மதுரை அருகே கீழே தவறி விழுந்து பெண் பலியானார்.
    • மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்குத் தெரு சேர்ந்தவர் பதினெட்டாம்படி கருப்பு. இவருடைய மனைவி வைரமணி (வயது56).

    இவர் கடந்த 15-ந் தேதி வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திண்ணையிலிருந்து வைரமணி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வைரமணி இறந்தார்.

    திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×