என் மலர்
நீங்கள் தேடியது "fire"
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீவிபத்து டெஸ்லா கார்கள் உள்பட 30 கார்கள் எரிந்து சேதமாயின என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், தீ முழுவதும் அணைக்கப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து குறித்து டீலர்ஷிப் உரிமையாளர் மற்றும் விற்பனையகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என உலக பெரும்பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபகாலமாக இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் டெஸ்லா கார்கள் உள்பட 30 கார்கள் எரிந்து சேதமாயின என்பது குறிப்பிடத்தக்கது.
- சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
- தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இங்கு பழமையான மரங்கள் அதிகம் உள்ளன. இதில் நேற்று இரவு சுமார் 500 வருடம் பழமையான புளிய மரம் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த புளிய மரத்தின் மேல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்திருப்பார்களா? என சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீட்டு வாசலில் சார்ஜ் போடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
- கணவன், மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரில் வீட்டு வாசலில் சார்ஜ் போடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ விபத்தில் இருந்து தம்பதி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கணவன் கௌதம், மனைவி மஞ்சு இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
- சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்தனர்.
தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. மேலும் 100 பேர் வரை காயமடைந்தனர்.
அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, தலைநகர் ஸ்கோப்ஜிக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோகானி நகரில் உள்ள 'பல்ஸ்' என்ற நைட் கிளப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது சில இளைஞர்கள் வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் மேற்கூரை தீப்பிடித்து விபத்தானது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சிக்காக அங்கு கூடியிருந்த ஏராளமனோர் விபத்தில் சிக்கினர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் கிளப் கட்டிடம் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதையும், இரவு வானத்தில் புகை எழுவதும் காணப்படுகிறது. சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜ்கோட் 150 ரிங் ரோட்டில் அமைந்துள்ள அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் இன்று காலை தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து அங்கு வசித்த 50 பேரை பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரை இன்னும் காணவில்லை என்று காவல் கண்காணிப்பாளர் சௌத்ரி தெரிவித்தார். மேலும் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சார்ட் சர்கியூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது 2 கே லவ் ஸ்டோரி திரைப்படம்.
- நவீன் சந்திரா நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ராமம் ராகவம்.
திரையரங்கில் வாரந்தோறும் பல திரைப்படங்கள் வெளிவந்தாலும். திரைப்படங்களை ஓடிடியில் பார்ப்பதற்கு மக்கள் ஆர்வத்துடன் வாரந்தோறும் காத்துக் கொண்டு இருக்கின்றனர். திரையரங்கிள் வெளியாவதை விட ஓடிடியில் வாரந்தோறும் அதிக திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளிவருகிறது.
அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
2 கே லவ் ஸ்டோரி
சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானது 2 கே லவ் ஸ்டோரி திரைப்படம். இப்படம் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். காதல் மற்றும் நட்பை முன்னிலையில் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படம் நாளை ஆஹா ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
ஃபயர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் ஃபயர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இப்படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார். ஃபயர் திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
காதல் என்பது பொதுவுடைமை
ஓரினசேர்க்கையாளர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, வீட்டில் அவர்களை எம்மாதிரி நடத்துகின்றனர். அவர்கள் படும் கஷ்டத்தை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், வினித், ரோகிணி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
ராமம் ராகவம்
நவீன் சந்திரா நடித்து இயக்கி வெளியான திரைப்படம் ராமம் ராகவம். இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி நடித்தார். அப்பா மற்றும் மகனின் உறவுமுறையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பொன்மேன்
பேசில் ஜோசஃப், சஜின் கோபு, லிஜோமோல் ஜோஸ், ஆனந்த் மன்மதன் மற்றும் தீபக் பரம்பொல் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது Ponman திரைப்படம். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நாளை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சீசா
சீசா, ஜனவரி 3 2025 அன்று வெளியான திரில்லர் திரைப்படம். இதன் தீவிரமான கதை மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் நாளை ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன
- எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரம் எளம்பலூர் சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கஸ்தூரி (வயது 46), இவரது கணவர் கொளஞ்சிநாதன் இறந்து விட்டார் இந்நிலையில், மகன் கமலேஸ் உடன் தனக்கு சொந்த மான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஸ் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது சற்று நேரத்தில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து அதிகமான புகை வெளியே வந்துள்ளது.
இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஓட்டு வீட்டில் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த, தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள பீரோ, கட்டில், டேபிள் சேர், பாத்திரங்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பாலாது.
தகவல் அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இரவு நேரம் என்றும் பாராமல் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயில் சேதமான வீட்டினை பார்வையிட்டு அதன் உரிமையாளர் கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும் எனவும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
- பெரியசாமி சிவன் கோவில் அருகே பூ மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார்.
- நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கொழுந்து விட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 70). இவர் சிவன் கோவில் அருகே பூ மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வியா பாரத்தினை முடித்துவிட்டு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்கச்சென்றார்.
திடீர் தீ
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவரது கடை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகபெருமாள், அரிராம், பூவர்ண தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கொழுந்து விட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டது. எனினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது.
விசாரணை
மேலும் தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு குறித்து தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறும்போது, இப்பகுதியில் சிலர் மது மற்றும் போதைப்பொருட்களை உட்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் யாரேனும் தீவைத்து சென்று இருக்கலாம் என்று சந்தேம் தெரிவித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
- சரக்கு ஆட்டோவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- கரூர் பஸ்நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது
கரூர்
கரூர் அருகே உள்ள செட்டிபாளையத்தில் இருந்து நேற்று மதியம் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் ஏற்றிக்கொண்டு கரூருக்கு ஒரு சரக்கு ஆட்டோ வந்துள்ளது. கரூர் பஸ்நிலையம் அருகே கோவை சாலையில் வந்து கொண்டிருந்த போது சரக்கு ஆட்டோவின் பின்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கவனித்த சரக்கு ஆட்டோ டிரைவர் வண்டியை நிறுத்தி, பார்த்தபோது செல்ப் மோட்டார் மற்றும் என்ஜின் வயர்கள் தீ பிடித்து எரிந்தன. இதனையடுத்து சரக்கு ஆட்டோ டிரைவர் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் விரைந்து வந்து சரக்கு ஆட்டோவில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது"
- இரு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது
- ரூ. 2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
கரூர்:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி ஒத்தக்கடை பகுதியில் தங்கராசு மற்றும் சக்திவேல் ஆகியோர் அருகருகே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில்இவர்களது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் தீ பரவாமல் இருக்க அருகில் உள்ள வீடுகளில் தண்ணீரை பீச்சியடித்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ. 15 ஆயிரம்ே ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறுகின்றனர்,
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ எப்படி பிடித்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தில் பாதிக்க ப்பட்ட குடும்பத்தினரை நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் கவுண்டம்பட்டி அன்பழகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெட்டிக்கடைக்கு முதியவர் தீ வைத்துள்ளார்
- போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 35). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(65) என்பவர், கலியபெருமாளின் பெட்டிக்கடைக்கு வந்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கு வந்த அவர், ரேஷன் அட்டையை அங்கு வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். அதற்கு கலியபெருமாள், அவர் அங்கு ரேஷன் அட்டையை வைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து ெசல்லாததால், கலியபெருமாள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த பெட்டிக்கடை தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பெட்டிக்கடைக்கு சுப்ரமணியன் தீ வைத்தது போன்ற காட்சி, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை பார்வையிட்ட போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியனை தேடி வருகின்றனர்."
- அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
- அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.