என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Firefighters"

    • மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
    • விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    கேரளாவில் சிக்கலான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடிய சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த மார்ச் 25 ஆம் தேதி கேரளாவின் காஞ்சங்காடு உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள், 46 வயதுடைய ஒருவரின் பிறப்புறுப்புகளில் சிக்கிய இரும்பு வாஷரை (iron washer) அகற்ற போராடியுள்ளனர். ஆனால் அவரின் நிலை மோசமடைந்தால் மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.

    தீயணைப்பு வீரர்கள் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, ரிங் கட்டரைப் பயன்படுத்தி வாஷரை பாதிப்பு இல்லாமல் வெற்றிகரமாக அகற்றினர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சங்காடு தீயணைப்புத்துறை அதிகாரி பி.வி. பவித்ரன்,

    "இது ஒரு சவாலான, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையாக இருந்தது. விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    இது மிகவும் பயமுறுத்தும் காட்சியாக இருந்தது. இரும்புத் வாஷர் அந்தரங்கப் பகுதியைச் சுற்றி இறுக்கமாகப் பொருந்தியிருந்தது, இதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை" என்றார்.

    கடந்த மூன்று வாரமாக பிறப்புறுப்பில் சிக்கிய இரும்பு வாசருடன் அந்த நபர் சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி இருந்துள்ளது.

    வாசர் எப்படி பிறப்புறுப்பில் சிக்கியது என்பது குறித்து கேட்டபோது, தான் குடிபோதையில் இருந்தபோது யாரோ ஒருவர் அதை தன் மீது மாட்டியாக தெரிவித்துள்ளார். தற்போது வாசர் நீக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    • ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-விமான நிலைய சாலையில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கிணறு கம்பெனி வளாகத்தில் அருகே உள்ளது.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் இயற்கை உபாதைக்காக சென்ற முதியவர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் உடைந்திருந்ததை அறியாமல் கிணற்றில் தவறி விழுந்தார்.

    இதைகண்ட அருகில் இருந்த டீக்கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இறங்கிய வீரர்கள் முதிவரை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். அதன்பின் அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கிணற்றில் விழுந்த முதியவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பசீர் (55) என தெரியவந்தது. ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

    கடந்த 1 வாரத்திற்கு முன்பு பசீர் அங்கிருந்து தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • ஏரி அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • எதிர்பாராத வகையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 36) ஆவார். இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் விவசாயக் கூலி வேலைக்கு சென்று இருந்தார். புளியந்தாங்கல் ஏரி அருகே உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த போது அவர் திடீரென மயங்கி அருகில் இருந்த கிண ற்றில் விழுந்து விட்டார். 

    இது குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்து இறந்து போன ஏழுமலையின் பிரேதத்தை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து முண்டி யம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வமனை மருத்துவக் கல்லூரிக்கு ஏழுமலையின் பிரேதம் அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக இறந்து போன ஏழுமலையின் மனைவி சுசிலா கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா வயது (40). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கு சென்று இருக்கிறார் அப்போது எதிர்பாராத வகையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து இளையராஜாவின் அண்ணன் செந்தில்குமார் வயது 43 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமச்சந்திரன் வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது.
    • நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் குளத்துப்பாதை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி வெங்கலட்சுமி. இவரது வீட்டுக்குள் 3 நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் வீட்டைவிட்டு, வெளியே வந்தனர். மேலும் இதுபற்றி சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின் நல்ல பாம்பை பிடித்து தொலைவில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேலுக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை முற்றிலும் அழித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம்பலாப்பட்டு மற்றும் சாத்திப்பட்டுகிராமங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருப்பதாக பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை முற்றிலும் அழித்தனர்.

    • டிராக்டரில் பழுது நீக்கும் பணியில் விவேக் ஈடுபட்டிருந்தாா்.
    • தீயணைப்பு வீரா்கள் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து அப்புறப்படுத்தி, விபத்தில் சிக்கிய விவேக்கை மீட்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் பங்களாபுதூா் சாலை பகுதியை சோ்ந்தவா் விவேக் (வயது 31). இவா் காங்கயம் நகரம் கோவை சாலையில் பேட்டரி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், தனது வீட்டின் அருகே ஒரு டிராக்டரில் பழுது நீக்கும் பணியில் விவேக் ஈடுபட்டிருந்தாா். இதற்காக டிராக்டரின் அடியில் படுத்துக் கொண்டு பணி மேற்கொண்டிருந்தாா்.

    அப்போது ஏற்பட்ட கோளாறால் டிராக்டா் திடீரென நகா்ந்து முன்னால் இருந்த சுவரின் மீது மோதி நின்றது. இதில் டிராக்டரின் அடியில் படுத்துக் கொண்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவேக்கின் ஒரு கால் சக்கரத்தின் கீழ் சிக்கிக் கொண்டது.

    இதையடுத்து அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்து விவேக்கை மீட்க முயற்சித்தனா். ஆனால் டிராக்டரை நகா்த்த முடியாததால், காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

    பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையிலான 6 தீயணைப்பு வீரா்கள் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து அப்புறப்படுத்தி, விபத்தில் சிக்கிய விவேக்கை மீட்டனா். பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா். 

    • விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று தவறி கிணற்றில் விழுந்து விட்டது.
    • தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடத்தில் சுமார் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. நேற்று மாலை இதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று தவறி கிணற்றில் விழுந்து விட்டது. இதுகுறித்து பல்லடம் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி அந்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டு உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர். நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
    • கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடுபுரத்தில் இந்திரா காலனியில் உள்ள ஒரு தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஒரு தாய் நாய் சாக்கடை கால்வாய்க்குள் உள்ளே சென்று குட்டிகளுக்கு பால் கொடுத்துவிட்டு பின்னா் மேலே வருவதுமாக இருந்துள்ளது. மேலும் கால்வாய் அருகில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.

    இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவா் சாக்கடை கால்வாய் அருகில் சென்று சிமெண்ட் சிலேப் போட்டு மூடப்பட்டிருந்த பகுதியில் இருந்த சிறிய இடைவெளி வழியாக உள்ளே பாா்த்துள்ளாா். அப்போது கால்வாய்க்குள் இருந்து குட்டி நாய்களின் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளாா்.

    அதன் பேரில் நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையில் சென்ற தீயணைப்பு வீரா்கள் சாக்கடை கால்வாய் சந்தில் கையை விட்டு 6 நாய் குட்டிகளையும் மேலே எடுத்து வெளியே விட்டனா். அப்போது தாய் நாய் அருகிலேயே நின்று பாா்த்துக் கொண்டிருந்தது. குட்டிகள் அனைத்தும் மேலே வந்ததும் அனைத்து குட்டிகளையும் அழைத்து கொண்டு சென்றது. நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.

    • இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள்  தீயில் எரிந்து சாம்பலானது.
    • காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவரது கூரை வீடு மின்சார கசிவால் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மேலும் பரவி அருகில் இருந்த மனவளப் பெருமாள்வீடும் எரிந்து சாம்பலானது. இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள்  தீயில் எரிந்து சாம்பலானது.

    இது பற்றி தகவல் பண்ருட்டி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தீயை தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
    • மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை இன்னும் துவங்கவில்லை. மழை பொழிவு துவங்கினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுவது, வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கும். எனவே மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், தீயணைப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றனர்.

    மழை பெய்யும் போது மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்வரத்தை அறியாமல் ஆறு, ஓடைகளில் நிற்பதையும், நீர்வழித்தடங்களில் வாகனங்களில் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான சுவற்றில் உள்ள மின் சுவிட்ச்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தில், மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் பணியாளர்கள், கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். 

    • தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆளப்பெரியானூர் கிராமத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்தது.

    அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உடனடி யாக நாட்ட றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ½ மணி நேரம் போராடி சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.

    இதேபோல நாட்டறம்ப ள்ளி அருகே சோமநா யக்கன்பட்டி பகுதியில் உள்ள ஜெர்ரா வட்டத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவரின் வீட்டில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பை பிடித்தனர். நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் 2 பாம்புக ளையும் வனத்துறை மூலம் காப்பு காட்டில் விட்டனர்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் அடிக்கடி வீடுகளில் பாம்புகள் நுழை வதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • தற்கொலைக்கு முயன்ற மனைவியை கிணற்றில் குதித்த ராணுவவீரர் காப்பாற்றினார்.
    • சாத்தூர் தீய–ணைப் புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்த–னர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சின்னத்தம்பியாபுரம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (வயது 32). இவருக் கும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது.

    சுந்தரமூர்த்தி இந்திய ராணுவத்தில் ஜம்பு பகுதி யில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு கண வன், மனைவி இருவரும் ஜம்முவில் குடியேறி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சுந்தர மூர்த்தி தன்னுடைய மனை வியுடன் கடந்த சில தினங்க ளுக்கு முன்பு விடுமுறை யில் சொந்த ஊருக்கு வந்தி ருந்தார். இந்த நிலையில் ராணுவ வீரர் சுந்தரமூர்த் திக்கும் அவருடைய மனைவி பொன்னு மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னுமணி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றார்.

    பின்னர் அவர் ஊருக்கு வெளியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சுந்தரமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சுந்தரமூர்த்தி மனைவியை காப்பாற்ற தானும் கிணற் றில் குதித்தார்.

    தண்ணீரில் மூழ்கிய மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து காப்பாற் றிய பின்னரே, கிணற்றில் படிகள் இல்லாததை சுந்தர–மூர்த்தி அறிந்தார். பின்னர் தொடர்ந்து சப்தம் எழுப்பி அக்கம்பக்கத்தினரை உத–விக்கு அழைத்தார். அவர் கள் கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் தீய–ணைப் புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்த–னர்.

    ×