என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman"

    • கடந்த 2 நாட்களுக்கு முன் 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
    • தங்கசாமியை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    காரைக்கால் துறை முகத்திலிருந்து கடந்த 14 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்ப டையில் மோகன், இளையராஜா,ரகு, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை நம்பியார்நகரை சேர்ந்த தங்கசாமி என்பவர் படையிலிருந்து நிலை தடுமாறி மாமல்லபுரம் அருகே 12 நாட்டிக்கல் மயில் தொலைவில் கடலில் விழுந்ததார்.

    இதனையடுத்து சக மீனவர்களும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மாயமானதால் உடனடியாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காரைக்காலில் துறைமுக த்திலிருந்து 12 விசை ப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலமும் தேடும் பணியை தொடங்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது.
    • மீனவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி 4 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் அஸ்வின் (வயது 32), பிரசாத் (42) ஆகிய மீனவர்கள் மாயமாகினர். இதனையடுத்து மாயமான மீனவர்களின் மனைவிக்கு அரசு வேலை தருவதாக மாவட்ட கலெக்டர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மீனவர்கள் மாயமாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் வாழ்வாதமின்றி தவித்து வருவ தாகவும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க கோரியும், அமலிநகரில் மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
    • முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப் பாளையத்தை அடுத்த திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்த வர் அசோக் (வயது28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு அசோக் திப்புராயப் பேட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் விக்னேஷ் ஆகியோ ருடன் அங்குள்ள கடையில் நின்று பேசிக்கொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு வந்த முத்து திடீரென அசோக் மற்றும் அவரது நண்பர்க ளிடம் தகராறு செய்தார். பின்னர் முத்து போன் செய்து தனது கூட்டா ளிகளை அங்கு வரவழைத்தார். முத்துவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அசோக் மற்றும் அவரது நண்பர்களை கல்லால் தாக்கினர்.மேலும் அவர்களது மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்ப டுத்தினர். அதோடு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அசோக்கின் தலையில் வெட்டினர்.

    இதனால் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் அலறல் சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே முத்து மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அசோக் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீகாந்த், விக்னேஷ் ஆகிய 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்த அசோக் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து அவரது கூட்டாளிகளானை ரஞ்சித், சற்குரு, ஹரி ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பார்த்திபனின் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.
    • இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாத்திமாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது40). மீனவர். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு தெருவில் நிறுத்தி இருந்தார். நேற்று இரவு பணிகளை முடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு 12 மணிக்கு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்திபனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். எனி னும் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இது தொடர்பான புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பா கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
    • இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் நம்பியார் நகர் பழைய காலணித் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர் சிவக்குமார்(34), அவரது மனைவிலதா, அவரது மகன் லோகேந்தி ரன், சகோதரர் முத்து மாணிக்கம், முத்து மாணிக் கத்தின் மகள் சோபியா மற்றும் உறவினர்கள் அபிஷா, கோபிகா ஆகிய 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.

    பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு, நாகப்பட்டினம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திரு.பட்டினம் பைபாஸ் சாலை, நாகப்பட்டி னம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றபோது, 2 மோட்டார் சைக்களில் வந்த 4 பேர், நீங்கள் எல்லாம் யார், காரை ஏன் தள்ளிகொண்டு போகிறீர்கள் என அதிகார தோரணையில் விசாரித்த னர்.

    அப்போது, இரு தரப்பி னருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும், வினோத்தை தாக்கினர். அப்போது தடுக்க வந்த சிவக்குமார் அவரது மனைவி லதா, முத்து மாணிக்கத்தையும் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 4 பேரும் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரித்தபோது, திரு.பட்டினம் போலகம் புதுகாலணியைச்சேர்ந்த ரித்திக், அவரது தந்தை சுரேஷ், ரித்திக்கின் நண்பர் கள் பிரவீன், வரதராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காயம் அடைந்த 4 பேரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்பு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.

    • வலையை இழுத்த மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
    • தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு மீனவ கிரா மத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 47). இவர் நேற்று சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் வலையை விரித்தி ருந்த நிலையில் மீன்கள் சிக்கியதும் அதனை பட குக்கு இழுத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஜான் பிரிட்டோ நிலை தடுமாறு கடலுக்குள் விழுந்தார். இதைப்பார்த்த படகில் இருந்த மற்ற மீன வர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கினார்.

    நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரை மீட்டவர்கள் கரை திரும்பி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அற் குற்குள் ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் மூலம் செல்லக்கூடிய மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
    • இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்ப பெற்றது.

    தூத்துக்குடி:

    தமிழக கடலோரப்பகுதி கள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் காற்று மாறுபாடு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 265 விசைப்படகுகள் மூலம் செல்லக்கூடிய மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள மீனவர்கள் கடந்த 4 நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். மேலும் வானிலை மையம் எச்சரிக்கையை மீனவர்களுக்கு தெரியப் படுத்தும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்ப பெற்றது. இதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்குப் பின் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 189 விசைப்படகுகளில் மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்குள் புறப்பட்டு சென்றனர்.

    • விசைப்படகு தொழிலாளர்களோ வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்கச் சென்றால் தான் எங்களது குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்காது என்று கூறுகின்றனர்.
    • இதனை வலியுறுத்தி நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையா ளர்கள் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மீதமுள்ள 6 நாட்களில் 3 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

    வாரத்தில் 6 நாட்கள்மீன் பிடிக்க சென்றால் கடலில் மீன் கிடைப்பதில்லை. அவ்வாறு சென்றால் செலவுகள் அதிகமாக வரு கின்றன. 3 நாட்கள் பிடித்தால் மீன்கள் அதிக மாக கிடைக்கும். எனவே வாரத்தில் 3 நாட்கள் செல்ல வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

    மீனவர்கள் போராட்டம்

    ஆனால் விசைப்படகு தொழிலாளர்களோ வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்கச் சென்றால் தான் எங்களது குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்காது. எனவே 6 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என கூறி வருகின்றனர். இதனை வலி யுறுத்தி நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரம் பேர், 2-வது நாளாக மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் தூத் துக்குடி மீன்படி துறைமுகத்தில் இன்று 262 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    பேச்சுவார்த்தை

    நேற்று இது தொடர்பாக மீன்பிடி தொழிலாளர், உரிமையாளர் ஆகியோரிடம் மீன்வள உதவி இயக்குநர் மோகன்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உரிமையாளர்கள் வாரத்தில் 3 நாட்களில் இருந்து 4 நாட்கள் மீன்பிடிக்க செல்லலாம் என கூறினார். ஆனால் மீன்பிடி தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தன.

    இதைத்தொடர்ந்து உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் தனித்தனியாக இன்று 2-ம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    • தருவைகுளம் கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்றனர்.
    • மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் சென்றபோது கைது.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

    தருவைகுளம் கிராமத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.

    • டிபோர்சன் நேற்று 2 சிறுவர்களுடன் வழக்கம் போல கோரம்பள்ளம் ஓடையில் நண்டு மற்றும் மீன்பிடிக்க சென்றார்.
    • 15 அடி உயர சவுக்கு கம்பை கொண்டு தண்ணீரில் மேலும் கீழும் அழுத்தி தனது கட்டு மரத்தை நகர்த்தி செல்லும் போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பியில் கம்பு பட்டு மின்சாரம் பாய்ந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகம்லேபர் காலனியை சேர்ந்தவர் டிபோர்சன் (31). இவர் லேபர் காலனிக்கு வடபுறம் உள்ள கோரம்பள்ளம் உப்பாற்று ஓடையில் நண்டு மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று 2 சிறுவர்களுடன் வழக்கம் போல கோரம்பள்ளம் ஓடையில் நண்டு மற்றும் மீன்பிடிக்க சென்றார். புதிய துறைமுகம் அதிவேக சாலையில் உள்ள பாலம் அருகே செல்லும்போது, டிபோர்சன் 15 அடி உயர சவுக்கு கம்பை கொண்டு தண்ணீரில் மேலும் கீழும் அழுத்தி தனது கட்டு மரத்தை நகர்த்தி செல்லும் போது அந்த வழியாக சென்ற மின்சார கம்பியில் கம்பு பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் பைபர் படகில் அவர் மயங்கி விழுந்தார்.

    அப்போது படகில் இருந்த சிறுவர்கள் கூச்சல் போடவும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து டிபோர்சனை மீட்டு புதிய துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41).

    இவரது தம்பி செல்வமணி.(40), மகன் தஷ்விந்த் (20). இவர்கள் 3 பேரும் தமிழ்மணிக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்பொழுது திடீரென இடி மின்னல் படகை தாக்கியது. இதில் படகை இயக்கிய தஷ்விந்த் நிலை தடுமாறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

    இதுகுறித்து மற்ற இருவரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • நாட்டுப் படகு மீனவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுபடகு மீனவர்கள் மீன்வளத்துறையின் பல்வேறு அறிவிப்புகளை கண்டித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 3-ந் தேதி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதில் மின் வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் கூறும் பொழுது நாட்டு படகுகளுக்கு பச்சை நிற வண்ணம் அடிக்க வேண்டும், நாட்டு படகுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும், படகுகளுக்கு மீன் பிடி உரிமம் அனுமதி பெறவேண்டும் என அரசின் அறிவிப்புகளை தெரிவித்தார்.

    இதனை செய்பவர்க ளுக்கு மட்டும் மானிய விலையில் டீசல் வழங்கப்படும் என தெரித்தார். அவரின் இந்த அறிவிப்பினை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாட்டு படகு மீனவர்களும் ஒருநாள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் சங்க தலைவர் கயாஸ் தலைமையில், மாவட்ட கலெக்டர், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்துள்னர்.

    நாட்டுப் படகு மீனவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.என்று கூறுகின்றனர். 

    ×