என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flower"

    • பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.
    • பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா ஆனங்கூர், பாகம்பாளையம், பெரியமருதூர், சின்ன மருதூர், தண்ணீர் பந்தல், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், மல்லிகை, சம்பங்கி, செவந்தி, அரளி, முல்லை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூ வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வரு கின்றனர். அதேபோல் சில வியாபாரிகள் பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று உதிரிப்பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், பச்சை முல்லை 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

    நேற்று மல்லிகை கிலோ ரூ.1000-க்கும், சம்பங்கி கிலோ ரூ150-க்கும், அரளி கிலோ ரூ.180-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், பச்சை முல்லை ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். பூக்களின் வரத்து குறைவாலும், ஐப்பசி மாத வளர்பிறையை முன்னிட்டு கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இருப்பதால் பூக்களின் விலை‌ உயர்வடைந்துள்ளது.

    • கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது
    • இறந்த தாய், தந்தை, உறவினர், நண்பர்களின் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மாதா கோவில் தெரு கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறித்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை செலாஸ்டின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் அருகிலிருந்த கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது. 

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 
    • பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் செட்டிச்சாவடி, கன்னங்குறிச்சி, வீராணம்,

    வலசையூர், ஓமலூர், தீவட்டிப்பட்டி, காடை யாம்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடைக்கு செய்யப்படும் பூக்கள் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிக

    ரித்துள்ளது. இதன் காரண மாக சேலம் மார்க்கெட்டுக்கு சாமந்தி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. 

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் சாமந்தி பூக்களை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளதால், போதிய அளவு விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ பூக்கள் அதிக பட்சமாக ரூ.100- க்கு விலையில் செல்கிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

    • கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
    • இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
    • மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னத் துரை செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி உள்ளிட்ட 4 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் (மா, கொய்யா, எலுமிச்சை), காய்கறி நாற்றுகள் (தக்காளி, மிளகாய், கத்தரி), விதைகள் (வெண்டை, வெங்காயம்), மலர் செடிகள்(மல்லிகை) ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    மேலும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு இயற்கை உரமும், வாழை மற்றும் பல்லாண்டு பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காய்கறிகள் ஊடுபயிராக சாகுபடி செய்திட விதைகள் மற்றும் உயிர் உரங்களும் மானி யத்தில் வழங்கப்பட உள்ளது.

    வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்திட ஒரு மெட்ரிக் டன் கொள்ளளவுக்கு ரூ.3 ஆயிரத்து 500 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் உள்ள விவசாயி அல்லாதவர்கள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பினை ரூ.450 செலுத்தியும், பழச்செடிகள் தொகுப்பினை ரூ.50 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினரை அணுகி பயன் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    • கரூர் மாவட்ட விவசாயிகள் பூ சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கொண்டை, செண்டு மல்லி, விரிச்சிப் பூ, ரோஜா ஆகிய பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பூக்களை பறித்து கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதாலும், தொடர்ந்து திருமண முகூர்த்தம் இருப்பதாலும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.
    • தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை பகுதிக்கு தேவையான பூக்கள் நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.முகூர்த்த சீசனின் போது தேவை அதிகரித்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்கள் பாதிக்கின்றனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சில சீசன்களை இலக்கு வைத்து புங்கமுத்தூர், பாப்பனூத்து உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

    சில இடங்களில் மல்லி, அரளி போன்ற சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இருப்பினும், இச்சாகுபடியில் போதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. தேவையான விதை, நாற்றுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. எனவே பெரும்பாலானவர்கள் பூ சாகுபடியில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    பூ சாகுபடியில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை, ராமநாதபுரம், நிலக்கோட்டை பகுதியில் இருந்து வாங்கி வருகிறோம். கோழிக்கொண்டை சாகுபடியில் நோய்த்தாக்குதலால் மகசூல் பாதிக்கிறது.எனவே உள்ளூர் தேவைக்கு தேவையான பூக்களை உற்பத்தி செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில் பூக்கள் கிடைக்கும் என்றனர். 

    • சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும்.
    • பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள கோவிலூர் நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதன்படி நேற்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு காத்தாயி அம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • பிச்சி-முல்லை மலர்களும் விலை உயர்ந்துள்ளது.

    மதுரை

    ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன பிச்சி, முல்லை மலர்களும் விலை அதிகரித்துள்ளது.

    ஆடி மாதத்தின் முக்கிய தினமாக ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை மேலும் அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட அனைத்து மலர்க ளும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. இன்று பூக்களை வாங்க பொது மக்கள் அதிகளவில் திரண்டனர்.

    மல்லிகை பூக்கள் நேற்றை விட ரூ.200 விலை உயர்ந்து இன்று கிலோ 700 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. நேற்று 400 ரூபாய் வரை விற்கப்பட்ட பிச்சி, முல்லை மலர்களும் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இது தவிர சம்மங்கி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், செண்டு மல்லி 120 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    தற்போது ஆடி மாதம் என்பதால் ஓரளவுக்கு விலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வருகிற ஆவணி மாதத்தில் விசேஷ நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் பூக்களின் தேவை யும் அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.
    • சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    கடன்களை தீர்க்கும் செவ்வரளி

    "அரளி" பூக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால் அரளி என்று சொன்னதும் சாதாரணமாக நம்மால் அழைக்கப்படும் மலர் செவ்வரளிதான்.

    சிவந்த அரளிப் பூ எங்கும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய ஓரடுக்கு மலராகும்.

    இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.

    ஆனால்பெரும்பாலான பக்தர்களால் விரும்பி வாங்கப்படுவது செவ்வரளிப்பூதான்.

    மகாவாராஹிக் குரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    அனைவருக்கும் கிடைக்கக்கூடிய எளிய மலர் செவ்வரளி, இம்மலர் சோலை, நந்தவனம், தோட்டம், பாதையோர பாலைவனம் என்ற பாகுபாடுகளின்றி, எங்கும் மிக எளிமையாக பூத்துக்குலுங்கும் அற்புத குணம் உடையது.

    சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக, காற்றிலுள்ள கார்பனின் அளவைக்குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.

    அதனால்தான் நமது தேசிய நெடுஞ்சாலைகளில் நாற்கரசாலைகளில் அக்கறையுடன் இந்த மலர் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

    அம்மனை வழிபடும்போது நமது மனதை அம்மன் மீது ஒரு நிலைப்படுத்தி சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால், குடும்பச் சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

    மனம் திறந்து கடன் பிரச்சினைகளை கடவுளிடம் சமர்ப்பித்தவிட்டு மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும்.

    வேதனை மிகுதியால் சஞ்சலப்படுபவர்கள், வெள்ளை அரளி கொண்டு வேதபிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும்.

    இத்தகைய பெருமை மிகு அரளிப்பூ, அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லக் குழந்தையாகவே வளர்க்கப்பட்டு வருகிறது.

    திருக்கரவீரம் மற்றும் திருக்கள்ளில் ஆகிய புண்ணிய தலங்களில் தல விருட்சமாகத் திகழகூடிய பெருமையையும் அரளி பெற்றுதுள்ளது.

    உத்திர நட்சத்திரக்காரர்கள் அரளிச்செடிகளை நடுவதும் வளர்ப்பதும் மிகவும் அல்லது என சொல்லப்படுகிறது.

    • இதனை “கைலாய மலையின் பனித்தூறல்” என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
    • சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    மனதை அமைதிப்படுத்தும் நில சம்பங்கி

    வெள்ளைநிறம் உடைய மலர்கள் சாத்வீக குணத்தை கொண்டவை. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்து தரிசிக்கும்போது, அந்த வெள்ளை மலர்களில் உள்ள சாத்வீக குணம் நமக்குள்ளும் வந்துவிடும்.

    அத்தகைய சாத்வீக குணத்தை தரும் மலர்களில் ஒன்றாக நில சம்பங்கி மலர் உள்ளது. இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் உண்டு.

    அதாவது நில சம்பங்கி மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை கொண்டது.

    நில சம்பங்கி மாலையை மற்ற மலர்களைபோல கட்டுவது போல் இல்லாமல் ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகக் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம்.

    இதைவிட ஆலயங்களில் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இதுதான்.

    இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை "கைலாய மலையின் பனித்தூறல்" என்று வர்ணிப்பவர்களும் உண்டு.

    இந்த மலர்மாலை அனைத்து ஆலயங்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது.

    சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும்போது வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் சம்பங்கிதான்.

    மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர்.

    "இரவு ராணி" என்று நம் விவசாயிகள் இந்தப்பூவை சொல்வ துண்டு. சந்தை விற்பனையில் அதிகலாபம் பெற்றுக் கொடுப்பதால் இந்த மலர் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும்.

    உங்களைச்சுற்றி எது நடந்தாலும் பதற்றம் அடைய மாட்டடீர்கள். நிதானமான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    நிலசம்பங்கிப்பூக்களை "புதிய சிருஷ்டி" என்று புதுச்சேரி அன்னை வர்ணித்துள்ளார். எனவே சம்பங்கி மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன.

    • சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.
    • மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்

    சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.

    அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.

    மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.

    ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.

    சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட அவற்றை வெட்டுவதில்லை.

    கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.

    இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.

    இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன!

    இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.

    இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

    சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

    ×