என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food"

    உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் கூறும் போது,

    புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவின் தரத்தினை ஆய்வு செய்யும் வகையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் வரும் 25-ந் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பகுதிகளில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பால் பொருட்களில் உள்ள கலப்படங்கள் குறித்தும், மசாலாப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் அஜினோ மோட்டோ மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், உப்பில் அயோடின் பரிசோதனை மேற்கொள்ளவும், எண்ணெய் வகைகளில் வேறு எண்ணெய் கலப்படம் குறித்தும், பருப்பு வகைகளில் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும், டீ மற்றும் காப்பியில் இரும்புத் துகள்கள் மற்றும் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள்அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பது குறித்து இவ்வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் சம்பத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கசாமி, கார்த்திக், ஜேம்ஸ், மகேஷ் மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வக நடமாடும் வாகனப் பணியாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.
    • அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடும் செயல்பட வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    வடகிழக்கு பருவமழை பாதிப்பாக மாறும் நிலையில் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவை செய்யவிரைவாக அனைத்துத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    பருவமழை பாதிப்பின்போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து காலதாமதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும்.

    மின்சாரம், கைபேசி, குடிநீர், மருத்துவமனை ஆகியவைகளை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அதிகாரிகள் கடமை உணர்வோடும் மனசாட்சியோடு ம்செயல்பட வேண்டும்.

    அப்படி செயல்பட்டால் நான் மனிதநேயத்தோடு செயல்பட்டதற்கான உரிய மதிப்பு மக்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜி பாஸ்கர், அண்ணாதுரை, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடை ஆய்வு.
    • பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.

    முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து அங்கிருக்கும் வருகை பதிவேடு மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடம் சரியாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

    அங்கு லேப்டாப், எக்ஸ்ரே கருவிகளை பார்வையிட்டார் மேலும் மருத்துவர் ராஜ்குமாரிடம் விபரங்களை கேட்டறிந்தார் பிறகு மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.

    அங்கு அரிசி எடை உள்ளிட்ட பொருட்களின் தரம் சரியாக இருக்கிறதா என்றும் அங்கு வாங்கும் நபர்களிடம் பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

    இதனை அடுத்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.

    பிறகு மதுக்கூர் வடக்கு பகுதியில் வயலில் நானோ யூரியா செயல் விளக்க ஆய்வு மேற்கொண்டார்.

    50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கினார்.

    இந்த ஆய்வு போது மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜி, பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் மதுக்கூர் உதவி வேளாண்மை இயக்குனர் திலகவதி மற்றும் அதிகாரிகள் பல கலந்து கொண்டனர்.

    • அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.
    • ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் பெருமாள் கீழ வீதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமயலறை கட்டடம் இல்லாததால், அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.

    எனவே, உயர்நிலைப் பள்ளிக்கு சமயலறை கட்டடம் கட்ட வேண்டுமென நாகை எம்.எல்.ஏவிடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.

    இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கூரைவீடு பகுதி 917 வீடுகளும், முதுமையான பாதிப்பு 2,364 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • மூன்று வேளைகள் உணவு நாள் ஒன்றுக்கு 14,620 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுக்காக்களில் கனமழையால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தபின் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கனமழை பெய்த காரணத்தினால் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 50செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    இது வரலாறு காணாத மழை அளவு ஆகும். கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டது முதலமைச்சர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள 2,06,521 துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கு 36 மணி நேரத்திற்குள் மீண்டும் சீரான மின் விநியோகம் தரப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக வடிகால் வாரி என்று சொல்லக்கூடிய வெள்ள உப்பனாரு, கல்மனையாறு 2,700 கன அளவு கொள்ளளவு கொண்டது. ஆனால் கனமழையின் பொழுது 25,000 கனஅடி தண்ணீர் சென்றது. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த இடங்களில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கனமழையால் மாவட்டத்தில் 33,340 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    வருவாய்துறை அமைச்சர் அறிவித்தப்படி கூரை வீடு பகுதி பாதிப்பு, முழுமையான பாதிப்பு அடைந்த வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதி வழங்குவார்கள் கூரைவீடு பகுதி பாதிப்பு 917 வீடுகளும், முதுமையான பாதிப்பு 2,364 வீடுகளும், ஓட்டு வீடு பாதிப்பு 586 வீடுகளும் இது வரை சேதமடைந்து உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடுமையான மழையின் காரணமாக 246 மாடுகளும், 162 கன்றுகளும், 856 ஆடுகளும் இறந்துள்ளன.

    மாவட்ட முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்ட 5,824 குடும்பங்களுக்கு மூன்று வேளைகள் உணவு நாள் ஒன்றுக்கு 14,620 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது, இது தொடர்ந்து உணவு வழங்கப்படும். கனமழையால் பாதிக்கப்பட்ட, சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் நிவராணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூரைவீடு பாதி பாதிப்புக்கு ரூ.4,100, முழுமையான பாதிப்பிற்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சில இடங்களில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. புத்தகங்கள் மிக குறுகிய காலத்தில் அதுவும் குறிப்பாக இரண்டொரு தினங்களில் புத்தகம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் லலிதா, .ராமலிங்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர் செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,

    சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, ஊரகவளர்ச்சி துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தானியங்களின் முக்கியத்துவம் குறித்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு உணவு திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, எதிர்வரும் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து உள்ளது. இதையடுத்து தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும் பயன்பாட்டினை அதிக ரிக்கவும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    தலைமை ஆசிரியர் சந்திரசேகர் விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களை பார்த்து அதன் பயன்கள் பற்றி கேட்டறிந்தனர். மேலும் தங்களது அன்றாட வாழ்வில் சிறுதானியங்களை பயன்படுத்துவது என மாணவ, மாணவிகள் உறுதி எடுத்துக் கொண்டனர். விழாவில் அறிவியல் ஆசிரியர்கள் கார்த்திகேயன், பூங்கொடி, சத்துணவு அமைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாண விகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது.
    • பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகரில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .

    இந்த பூனையும் நாயும் ஒரே தட்டில் தான் உணவு அருந்துகிறது. வேறு ஒரு நாய் தட்டில் சாப்பிட வரும்போது இந்த நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது. பொதுவாக பூனையை கண்டால் நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த வீட்டில் இந்த அதிசயம் நிகழ்வதை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கோனியா கூறும் போது, நாங்கள் சிறு வயது முதல் நாயையும் பூனையையும் ஒன்றாக தான் வளர்த்து வருகிறோம். நாய்க்குட்டியாக இருக்கும் போது பூனை அதன் மேல் படுத்து தூங்கும் .  அப்போதே அவர்கள் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுப்பதில்லை. அது இன்றுவரை தொடர்கிறது. பொதுவாக எந்த நாயும் தான் உணவருந்தும் போது வேறொரு நாயோ மற்ற விலங்கோ நெருங்கும்போது அதை சும்மா விடுவதில்லை, துரத்தும். ஆனால் இந்த நாயின் குணம் பிரமிக்க வைக்கிறது.

    • செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் செறிவூட்டப்பட்ட அரிசிகள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த பொருட்களில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கும் வழங்குகிறது.

    மாணவர்கள் பெற்றோர்களிடம் இதன் பயன் குறித்து எடுத்து சொல்லி அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் ஜோதிபாசு, துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் முத்துக்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கம் இணை பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
    • 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    சமூகசேவகர் பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் சுமார் 11 வருடங்களாக சாலையோரம் ஆதரவின்றி வாழும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினந்தோறும் 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கி மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களை முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.

    அதன்படி நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.

    அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வழங்கினார்.

    இதில் பாரதிமோகன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு நிதி உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020-2021 ம் ஆண்டு முதல் 2024-2025ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவ னங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

    மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயனடைய வழிவகை உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், https://pmfme.mofpi.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

    மேலும் விபரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியை அணுகவும். தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்திரத்தை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கினர்.
    • 82 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவர் ஆலோசனை மையம், தஞ்சாவூர் எம்.ஆர்.சி அன்பு இல்லத்தின் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாடியது.

    நிகழ்ச்சி ஜெபப் பாடலுடன் தொடங்கியது. எம்.ஆர்.சி. அன்பு இல்ல நிறுவனர் ரூபன் வரவேற்புரை வழங்கினார். இல்லத்தின் தலைமை வார்டன் ரவி வாழ்த்துரை வழங்கினார்.

    குழந்தை சுவிசேஷ பெல்லோஷிப்பின் முன்னாள் இயக்குனர் கிறிஸ்டோபர் ஒரு பொம்மை நிகழ்ச்சியை நடத்தினார்.

    திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் எம்.ஆர்.சி இல்ல மாணவர்களை கலை நிகழ்ச்சிகளுடன் மகிழ்வித்தனர். குட்சமாரியன் கிளப் மூலம் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    முனைவர் சி.ரவிதாஸ் தலைமையிலான இயற்பியல் துறை இந்த இல்லத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்திரத்தை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கினர்.

    விரிவாக்கப் பணிகளின் தலைவர் முனைவர் வி.ஆனந்த் கிதியோன் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார்.இந்த இல்லத்தில் உள்ள 82 குழந்தைகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    அவர்களும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சியை மாணவர் ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாம் தேவா ஆசிர் வழிகாட்டுதலின் கீழ் பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவர் ஆலோசகர்கள் சர்மிளா பானு, டேனியல் அஷ்ரத் செல்லையா மற்றும் முனைவர் எஸ்.லிடியா சூசன்  ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

    • அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு.
    • மதிய உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    அம்மாபேட்டை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் தலைமையில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் பூண்டி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகள் குறித்தும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சி குறித்தும், பூண்டி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் குறித்தும், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கூத்தரசன், முகமது அமானுல்லா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×