என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest Department"

    • காலை ஆடு, மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
    • சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள தாயம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி என்ற விவசாயின் தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் கடந்த 3ந்தேதி இரவு ஒரு செம்மறியாடு காணாமல் போனது.

    சற்று தூரத்தில் கழுத்துப்பகுதி கடிக்கப்பட்ட நிலையில் ஆடு இறந்து கிடந்தது. சிறுத்தை, நாய் போன்ற விலங்கினங்கள் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அப்பகுதியில் காங்கயம் வனத்துறையினர் கேமரா வைத்து கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கோடம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரின் தோட்டத்தில் இருந்த கன்றுக்குட்டியை ஒரு விலங்கு கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிறுத்தை அடித்துக்கொன்றதாக தெரிவித்தனர். எனவே சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ஊதியூர் அடுத்த காசிலிங்கம்பாளையத்தில் சாமிநாதன் என்பவரது தோட்டத்தில் இருந்த 2மாத கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்று 300 அடி தூரம் இழுத்து சென்றுள்ளது. அங்கு வேலி இருந்ததால் கன்றுக்குட்டியை அங்கேயே போட்டு விட்டு சென்றது. மேலும் ஆடு, மாடுகளை கடித்து கொன்றுள்ளது. இன்று காலை ஆடு, மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

    இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காங்கயம் ரேஞ்சர் தனபாலன், வனத்துறை அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஸ்வரி உள்ளிட்ட குழுவினர் வட்டமலை பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். உடுமலை வனச்சரகத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினர் வர வழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 5 கி.மீ., சுற்றளவுக்கு கண்காணித்து வருகிறோம். கண்டறியப்பட்ட கால்தடத்தின் அடிப்படையில் சிறுத்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    இதனிடையே வட்டமலைப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மாலை 4மணிக்கு மேல் மலைக்கும், மலை மேல் உள்ள கோவில்களுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.

    வட்டமலைப்பாளையம் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை கரூர் வனப்பகுதியில் இருந்து இங்குவந்துள்ளது. ஊருக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் தவித்து வருகின்றனர். 

    • கன்றுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று கொன்று போட்டு விட்டு ஓடிவிட்டது.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகைகளையும் வைத்தனர்.

    காங்கயம் :

    காங்கயம்- தாராபுரம் சாலையில் ஊதியூர் மலை உள்ளது. 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஒன்று, அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து இழுத்துச் சென்று விடுகிறது. கடந்த வாரம் தாயம்பாளையம் ரத்தினசாமி என்பவரது ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை கடித்து கொன்றது. அதன்பின்னர் ஊதியூர் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் அருகிலுள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டையும், காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீட்டின் முன்பு கட்டிப் போட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று கொன்று போட்டு விட்டு ஓடிவிட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கயம் வனத்துறை அலுவலர் தனபால் தலைமையில் வனத்துறையினர் ஊதியூர் வந்து மலையடிவாரத்தில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகை களையும் வைத்தனர். தொடர்ந்து 3 கூண்டுகள் வரவழைக்கப்பட்டு ஊதியூர் பகுதியில் வைக்கப்பட்டு, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி வனத்துறை அலுவலர் தனபால் கூறும்போது, கூண்டுகளில் உயிருடன் ஆட்டுக்குட்டியை விட்டு அதன் மூலம் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக டிரோன் ஆப்ப ரேட்டர் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தை நடமா ட்டத்தை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. 25 பணியாளர்களை கொண்டு 4 குழுக்களாக பிரிந்து இரவு பகல் என தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    • பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.
    • சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் மலை 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை ஒன்று, மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.

    இதனால் ஊதியூர் மலை பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதனால் சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டி வைத்துள்ளனர். மேலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தை உருவம் பதிவு ஆகவில்லை. இதனால் கூண்டுகள் வைக்கப்பட்ட இடத்திற்கு சிறுத்தை வரவில்லை என தெரிகிறது.

    வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்க டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாதுகாப்புடன் வனப்பகுதி மற்றும் மலையடிவாரம் என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது " மலைப்பகுதியில் சிறுத்தை எங்கு பதுங்கி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கேமராவிலும் பதிவாகவில்லை. டிரோன் கேமராவிலும் சிக்கவில்லை. கூண்டுக்குள்ளும் மாட்டவில்லை. ஒருவேளை சிறுத்தை இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்ற சந்தேகமும் உள்ளது. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறோம். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்றார்.

    • சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
    • விவசாயி ஒருவர் சிறுத்தை வாயில் நாயை கொன்று கவ்வியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூர் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பதுங்கி இருக்கும் சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

    இதையடுத்து மலையை சுற்றி தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை. ஆனால் பொதுமக்கள் சிலர் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்து வந்தனர்.

    எனவே டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தை எங்கு உள்ளது என்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதி மற்றும் மலையடிவார பகுதி என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் காசிலிங்கம்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்க்கு உணவு வைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு கட்டியிருந்த நாயை காணவில்லை. அருகில் தேடி பார்த்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பாறை மீது சிறுத்தை நின்றதையும், அந்த சிறுத்தை வாயில் நாயை கொன்று கவ்வியபடி இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக அப்பகுதியை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் வருவதற்குள் சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.

    10 நாட்களாகியும் சிறுத்தை சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. சிறுத்தை சிக்காததால் பொது மக்கள் வெளியே செல்ல பயந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் ஊதியூர் பகுதியில் இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை தொடர்ந்து அட்டகாசம் செய்வதால் உடனே அதனை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சின்னாறு சோதனைச்சாவடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு, தமிழக வனப்பகுதி யின் நடுவே நீள்கிறது.
    • யானை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படுகிறது.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்ச ரகத்தில் உடுமலை மற்றும் மூணாறு இடையிலான சாலை அமைந்துள்ளது.அதில் ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து எல்லைப்பகுதியான சின்னாறு சோதனை ச்சா வடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு, தமிழக வனப்பகுதி யின் நடுவே நீள்கிறது.வனவிலங்குகள் பாது காப்புக்கருதி வாகன ஓட்டு னர்களை அறி வுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.அதில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது, சமைத்தல் கூடாது, மது அருந்துதல் கூடாது, பிளாஸ்டிக் மற்றும் உணவுக்கழிவுகள் வீசக்கூ டாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்று ள்ளன.தற்போது வனப்ப குதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீ ருக்காக யானைகள் அவ்வ ப்போது ரோட்டை கடந்து அணை நோக்கி செல்கி ன்றன. அச்சமயத்தில் அவ்வழி த்தடத்தில் வாகனங்களில் செல்வோர் யானைகளை போட்டோ எடுக்க முற்படுகி ன்றனர். இதனால் வனத்துறை யினர், வாகன ஓட்டுன ர்களை எச்சரிக்கை செய்தும் வருகின்றனர்.வன விலங்குகளை காண நேரிட்டால் போட்டோ எடுக்க முயற்சிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கின்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறியதாவது:- வனவிலங்குகளை மையப்படுத்தி செல்பி புகைப்படம் எடுக்கவும் முற்படுகின்றனர். இதனால் யானை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படுகிறது.வன விலங்குகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்ல க்கூடாது. மொபைல் போனில் செல்பி எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.ரோந்துப்ப ணியில் இத்தகைய செயலில் எவரேனும் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகியவற்றை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வந்தனர்.
    • மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகியவற்றை கொன்று வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சாப்பிட்டு வருகிறது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் ஆகியவற்றை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித காட்சிகளும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை.

    இருப்பினும் வனத்துறையினர் இடைவிடாது இரவு - பகலாக சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வனத்துறை வீரர்கள் வனப்பகுதியில் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சிறுத்தை அடிக்கடி வந்து செல்லும் இடத்தை கண்டுபிடித்து அப்பகுதியில் கூண்டுகள் வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு மாற்றி பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் இடத்தை விடுத்து மற்ற இடங்களில் சுற்றி வருகிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் உள்ளனர்.

    மேலும் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி சுமார் 1 மாத காலம் ஆன நிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறுகையில் "சிறுத்தை வந்து போகும் இடங்களை ஆராய்ந்து கண்டறிந்து அப்பகுதியில் சுற்றிலும் கண்காணிப்பு வளையம் போடப்பட்டு, கூண்டு வைத்து அதில் உயிருடன் ஆடு மற்றும் நாயை பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகிறோம்.

    மேலும் கூண்டை சுற்றி வீசப்பட்ட இறைச்சி துண்டுகளை மட்டும் இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சாப்பிட்டு சென்றுள்ள கால்தடம் பதிந்துள்ளது. ஆனால் கூண்டுக்குள் இருக்கும் இறைச்சி துண்டுகளை சாப்பிடாமல் சென்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது விரைவில் கூண்டுக்குள் இருக்கும் இறைச்சியை சிறுத்தை சாப்பிட வரும் போது கூண்டுக்குள் சிக்க வாய்ப்புள்ளது. இதை வைத்து பார்க்கும்போது சிறுத்தை இன்னும் சில நாட்களில் சிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • அரியநாயகிபுரத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது.
    • பிடிபட்ட நல்ல பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்தது.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது. பாம்பு கிடப்பதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் பாம்பை பிடிப்பதற்காக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வனத்துறையை சேர்ந்த உச்சிமாகாளி விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்தார். அது சுமார் 10 அடி நீளம் உள்ளதாக இருந்தது. பாம்பு வீட்டுக்குள் வந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது.
    • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    கருப்பன் இந்த பெயரை கேட்டாலே தாளவாடி மற்றும் சுற்று வட்டார மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். காரணம் கடந்த ஒரு வருடமாக தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மட்டும் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அருகே உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் தோட்டத்தில் காவல் காத்த 2 விவசாயிகளையும் கொன்றுள்ளது.

    இதனைத்தொடர்ந்து கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அதன்படி பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து முதல் முறை ராமு, சின்னத்தம்பி என்ற கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டன. அதன் பின்னர் சலீம், அரிசி ராஜா, கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.

    இந்த கும்கிகளின் உதவியுடன் வனத்துறையினர் மருத்துவ குழுவினர் தோட்ட பகுதிகளுக்கு சென்று கருப்பன் யானைக்கு இதுவரை 7 முறை மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் மயக்க ஊசிக்கு மயங்காமல் கருப்பன் யானை ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் தப்பி சென்றுவிட்டது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க வந்த கும்கி யானைகளும் டாப்சிலிப்புக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் கொஞ்ச நாள் கருப்பன் தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தோட்டத்துக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என்ற 2 கும்கி யானைகளை வரவழைத்து மீண்டும் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முறையும் கருப்பன் யானை வனத்து றையினருக்கு போக்கு காட்டி விட்டு தப்பியது.

    இதனால் கருப்பனை பிடிக்க வந்த 2 கும்கி யானைகளும் முதுமலை தெப்பகாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. எப்படியாவது கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து கருப்பன் யானை மீண்டும் வெளியேறியது. பின்னர் மாதள்ளி கிராமத்து க்குள் புகுந்த அங்குள்ள விவசாயி சுட்பண்ணா என்பவ ரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தது அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் சேதப்படுத்தியது.

    அதன் பின்னர் விவசாயிகள் ஒன்றிணைந்து சுமார் 2 மணி நேரம் போராட்ட த்திற்கு பிறகு மீண்டும் கருப்பன் யானையை வனப்பகு திக்குள் விரட்டினர். தொட ர்ந்து கருப்பன் யானை அங்கு பயிரிடப்ப ட்டிருந்த முட்டைக்கோஸ் தோட்டத்து க்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளது. இதன் சேதம் மதிப்பே லட்சக்கணக்கில் இருக்கும். பின்னர் மீண்டும் கருப்பன் யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் அச்சத்தில் உடைந்துள்ளனர்.

    வனத்துறையினர் எப்படியாவது கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஒரு வருடமாக கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர். அதே சமயம் எப்படியாவது கருப்பன் யானையை பிடித்து விடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சி வழங்கப்பட்டது.
    • பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது.

    களக்காடு:

    களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சியும், 14 பெண்களுக்கு அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார். களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி அன்பு சான்றிதழ்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சூழல்மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட தையல் ,அழகு கலை பயிற்சியும், அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வனத்தையும், வன விலங்கு களையும் பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாகும். தேசிய புலிகள் ஆணையமும், வன வளத்தை பாதுகாக்க என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. காடுகளை வனத்துறை அதிகாரியால் மட்டும் பாதுகாக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    விழாவில் களக்காடு சூழல் திட்ட வன சரகர் முகுந்தன், வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சூழல் மேம்பாட்டு திட்ட பணியாளர்கள், கிராம வனக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வனத்துறையினர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் நுழைந்து வருகின்றன.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீகூர் வனசரகத்திற்குட்பட்ட ஆனைகட்டி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆனைகட்டி பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் வனத்துறையினர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.

    பின்னர் கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. யானை உடல் நிலை சரியில்லாமல் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் அரியவகை மரங்கள், செடிகள் கருகின.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அண்மையில் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, சிறுத்தை, புலிகள், சருகுமான்கள், புள்ளி மான்கள், மிளாமான்கள் போன்றவை அதிகளவில் உள்ளன.

    இங்குள்ள பேய் மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மலையில் உள்ள பெரும்பாலான இடங்கள் வறண்டு காணப்படுகிறது. வனவிலங்குகளும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் நிலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பேய் மலையில் உள்ள மொட்டை என்ற இடத்தில் இடி, மின்னல் தாக்கியது. இதனால் அங்கிருந்த காய்ந்த மரங்கள் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த மரம், செடி, கொடிகளிலும் தீ பரவ தொடங்கியது.

    இதைப்பார்த்த மலைவாழ் மக்கள் உடனே விருதுநகர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரவு விரைந்து வந்த வனத்துறையினர் தீவிபத்து நடந்த பகுதிக்கு சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்து மலையில் இருந்த அரியவகை மரம், செடி, கொடிகள் கருகின.  

    • சிவபுரம் கிராமத்தை சுற்றிலும் நீர் ஓடைகள் ஓடுகின்றன.
    • இங்கு குளிக்க நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் நீர் ஓடைகள் ஓடுகின்றன.

    சுற்றுலா பயணிகள்

    இதில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சிவபுரம் பகுதி களக்காடு நகராட்சிக்கு உட்பட்டதாகும்.

    வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வராததால் இங்கு குளிக்க நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்பதால் சிவபுரத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக களக்காடு வன த்துறையினர் சிவப்புரத்திற்கு செல்லும் சாலையை தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். மேலும் சிவபுரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியும் மறுத்து வருகின்றனர். தற்போது கோடைகால விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    வனத்துறை அனுமதி மறுப்பு

    சிவபுரத்திற்கு வனத்துறை யினர் அனுமதி மறுப்பதால் அவர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். அத்துடன் அங்கு பணியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச்செயலாளர் களந்தை மீராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவபுரம் பகுதி நகராட்சிக்கு உட்பட்டது. இங்கு செல்ல வனத்துறை தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. சிவபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிவதால் தலையணையில் நுழைவு கட்டண வசூல் பாதிக்கப்படுகிறது. இதனால் கட்டண வசூலை அதிகரிக்க வனத்துறையினர் இது போன்று செய்வது ஏற்கக் கூடியது இல்லை.

    களக்காட்டை பொருத்த வரை குளிப்பதற்கும் தண்ணீர் இல்லை. குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை. எனவே தான் பொதுமக்கள் சிவபுரத்தை நாடுகின்றனர். அதற்கும் தடை விதிப்பதை கண்டித்து விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    எனவே வழக்கம் போல சுற்றுலா பயணிகள் சிவபுரத்திற்கு செல்ல மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×