என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fund"

    • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது.
    • அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    சேலம்:

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் மேற்கு இணைப்பு சாலை, கூட்டுறவு காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகம் ராஜ்மெஜஸ்டிஸ்ட், காவேரி சாலை, ஈரோடு சேலம் பிரதான சாலை கருங்கல்பாளையம், ஈரோடு, என்ற முகவரியில் அமலாக்க அதிகாரி வீரேஷ் தலைமையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டங்களில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன், தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு. ஏ. என். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஈரோடு மாவட்ட அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • ஏப்ரல் மாதத்திற்குள் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.தெரிவித்தார்.

    களக்காடு:

    களக்காடு அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், மாநில காங்கிரஸ் பொருளா ளருமான ரூபி மனோகரன் குளிரூட் டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இதனைதொடர்ந்து பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார். அவருடன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், நகர தலைவர் ஜார்ஜ்வில்சன் மற்றும் நிர்வாகிகள் தங்கராஜ், காமராஜ், துரைராஜ், வில்சன், துரை, யோசுவா, பீர்முகம்மது, பெருமாள்ராஜ், இளைஞர் காங்கிரஸ் விபின் உள்பட பலர் சென்றனர்.

    • மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மணிமேகலை விருது பெற தகுதியுள்ள சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை முறையான கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்ததை முறையாக சேமித்தல், வங்கி கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும், மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கமுதாய அமைப்பாளர்களிடம் தொடர்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 25.4 2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் வழங்கினார்
    • மொத்தம் ரூ.11 கோடி வழங்கப்பட உள்ளது

    அரும்பாவூர்,

    பூலாம்பாடி பேருராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு பன்னாட்டு தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன்படி பொதுமக்களின் சிரமங்களை கேட்டறிந்த அவர், பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன் நமக்குநாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார். அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் செய்த டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் அரசு அதிகாரிகளிடம் கூறி பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறியசொல்லி அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தார்.

    இதனை செய்து முடித்தால் பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் என்பதால், அடிப்படை வசதிகளை நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டது. டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சார்பில் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.11 கோடி பங்களிப்பு தொகையாக தரப்படஉள்ளது. அதன் மூலம்

    பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் பங்களிப்பு தொகையாக அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி முதற்கட்ட நிதியாக ரூ.90 லட்சத்திற்கான வரைவோலையையும், அக்டோபர் 28-ந்தேதி இரண்டாம் கட்டநிதியாக ரூ.74லட்சத்து 8 ஆயிரத்துக்கான வரைவோலையையும் வழங்கியிருந்தார்.இந்தநிலையில் நேற்று (10.04.2023) மூன்றாம் கட்டநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார், ரூ.26லட்சத்து 98 ஆயிரத்துக்கான வரைவோலையைபூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார். பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர்கள் பூங்கொடி மணி, மாணிக்கம், ராமதாஸ், ராஜலட்சுமி செல்வக்குமார், கஸ்தூரி வீராசாமி, பரகத்நிஷா அப்துல்ரஹீம், சுதாகர், ஜெயந்தி பெருமாள், செல்வராணி ராமர் தொழிலதிபர்கள் மணிகவுண்டர்,இசைபாலு, மண்மணி, பூலாம்பாடி சதிஷ், மணி, செங்குட்டுவன் மற்றும் பூலாம்பாடி டத்தோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டுகோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர்.
    • தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் மாவட்ட கலெக்டர்கள், கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டு கோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர். மதசார்பற்ற அரசு, மக்களின் வரி பணத்தை மத வழிபாட்டு தலங்கள் சீரமைப்பு நிதியாக அளிப்பது கூடாது.

    இந்துகோவில்களை அரசு, தனது அதிகாரம் எனும் இரும்பு பிடிக்குள் வைத்து ஆட்டிப்ப டைத்து வருகிறது. பல்லாயிரம் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும் ஒரு கால பூஜை கூட இல்லாத நிலை இருக்கிறது.ஆனால் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கோவில்களை சீரமைக்க அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. சர்ச்சுகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க காரணம் கிறிஸ்துவ ஓட்டு வங்கி தான். தமிழகத்தில் தி.மு.க., வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது. சர்ச் புனரமைப்பு நிதி தருவது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்,

    • நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா்.
    • பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    ஊட்டி,

    நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா். நாடுகாணி பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற ஆ.ராசா, நெல்லியாளம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.

    இதையடுத்து புளியம்பாறை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

    பின்னா் புளியம்பாறை கிராமத்தில் யானை தாக்கி உயிரிழந்த கல்யாணி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினாா்.

    தொடா்ந்து தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மஞ்சமூலா கிராமத்தில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    பின்னா் பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து கம்பாடி கிராமம், ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றாா்.

    நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் லியாகத் அலி, பொறியாளா் அணியின் மாநில துணைச் செயலாளா் பரமேஸ் குமாா் உள்பட நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

    • அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி அளித்தனர்.
    • உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர்.

     பல்லடம் :

    பல்லடத்தில் நமக்கு நாமே திட்ட ஆலோசனைக் கூட்டம் வனம் இந்தியா அறக்கட்டளை கூட்டரங்கில் திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் நகரத்தின் முக்கிய தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி, டாக்டர் சுபா, தமிழ்ச்சங்க தலைவர் ராம்.கண்ணையன், வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளர் ஸ்கை. சுந்தரராஜன், செயல்தலைவர் பாலசுப்பிரமணியம், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கவுரவ தலைவர் முருகேஷ், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க காரணம்பேட்டை மற்றும் 63. வேலம்பாளையம் பகுதி கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர். இதே போல அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கமும் உறுதி அளித்தனர். மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் அரசு சுமார் 5 ஏக்கர் நிலம் வழங்கினால் அந்த இடத்தில் மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டித்தர பல்லடம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உறுதியளித்தனர்.

    • விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக புகளூர் காகித நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டது
    • அமைச்சர் உதயநிதியிடம் கொடுக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம், 

    விளையாட்டு போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஊரக பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திற னாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் பங்கேற்பாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் கீழ் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ 75 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதலமை ச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் சாய்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் குழு உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் மாவட்டத்தில் ரெடிமேட் ஆடை உற்பத்திக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்து உள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவியை பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இருபாலரும் குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்தும் திட்டம் 2022-2023ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள், குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்பப்படிவம், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்தெடுக்கப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    • மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும்.

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "நிதி உதவி வழங்கியதற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இமாச்சல் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

    மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான உதவிகளை வழங்குவதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்க வேண்டும் என்றும் சுகு கேட்டுக் கொண்டார்.

    இமாச்சல் பேரிழப்பில், மாநிலத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சியில் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்கினார்
    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முன் சந்திப்பு

    கும்பகோணம், நாகை, திருவாரூரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார்.  அப்போது அவர்,  கடந்த மாதம் 30-ந் தேதி அரிஸ்டோ மேம்பாலத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.  கலெக்டர் பிரதீப்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்த வாலிபர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது
    • தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமம், பெரியார் நகரைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் விஷ்ணுகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உள்ளனர். வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தாழ்த்த ப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் விசாரணை மேற்கொண்டு, வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு இறந்துவிட்ட விஷ்ணுகுமாரின், தந்தை வீரமுத்துவிடம், உதவித் தொகை ரூ. 6 லட்சம் ரூபாய் (50 சதவீதம்) காசோலை யினை, தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் வழங்கினார்.

    முன்னதாக இந்நிகழ்வு குறித்து, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கை கள் குறித்து, புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யாவுடன், தேசிய தாழ்த்த ப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

    இந்நிகழ்வில், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் க.ஸ்ரீதர், இலுப்பூர் வருவாய்

    கோட்டாட்சியார் தெய்வநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்எம்.மஞ்சுளா, குளத்தூர் வட்டாட்சியர் காமராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    ×