என் மலர்
நீங்கள் தேடியது "Goods Train"
- தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகே உள்ள புஷ்பாநகரை சேர்ந்தவர் அருண்குமார், கட்டிடத்தொழிலாளி.
- மீளவிட்டான்- மடத்தூர் இடையே உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் பிணமாக கிடந்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி கதிர்வேல் நகர் அருகே உள்ள புஷ்பாநகரை சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 28). கட்டிடத்தொழிலாளி.
இவர் இன்று அதிகாலை மீளவிட்டான்- மடத்தூர் இடையே உள்ள ரெயில்வே தண்டாவாளத்தில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அருண்குமார் இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற சரக்கு ரெயிலில் அடிப்பட்டு இறந்தது தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்திரு க்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
- ஒரு ரெயில் மீது பின்னால் வந்த மற்றொரு ரெயில் மோதி விபத்து
- அந்த வழித்தடத்தில் 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்காள மாநிலம் பங்குராவில் உள்ள ஒண்டா ரெயில் நிலையத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ஒரு ரெயில் மீது பின்னால் வந்த ரெயில் பயங்கரமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரெயில்கள் என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை. டிரைவர் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கராக்புர்- பங்குரா- அத்ரா ரெயில் பாதையில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 ரெயில்கள் மாற்றிவிடப்பட்டுள்ளன என முதற்கட்ட தகவல் வெளியாகின.
இதுகுறித்து தென்கிழக்கு ரெயில்வே ''ரெயில்வே பராமரிப்பு ரெயில் ஒண்டகிராம் ரெயில் நிலையத்தில் இருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, சிகப்பு விளக்கு போடப்பட்டிருந்த நிலையில், சரக்கு ரெயில் அதை கவனிக்காமல் வந்தது. பிரேக் பிடிக்க முயன்றும் முடியாமல் மோதிவிட்டது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன'' எனத் தெரிவித்துள்ளது.
- தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
- சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
- ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சரக்கு ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மீட்பு பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரயில்வே போலீசார் மீட்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Eight wagons of a goods train derail on Patel Nagar-Dayabasti section in Delhi area. The incident occurred near the Zakhira flyover.
— ANI (@ANI) February 17, 2024
(Video source: Delhi Police) pic.twitter.com/cQieCNsQAV
ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் திசை திருப்பி அனுப்பப்படுகிறது.
மேலும் இன்று, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் திருமண விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தல் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
- கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது சரக்கு ரெயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று, மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ரெயில் ஜார்கண்ட் மாநிலத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
- ரெயில் தனக்கு மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து பதற்றம் அடைந்தாலும், அந்த பெண் அசையாமல் படுத்துக் கொண்டார்.
- அவள் பாதுகாப்பாக தண்டவாளத்திலிருந்து எழுந்தாள்.
தெலுங்கானா மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வருவதை கண்ட பெண் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் விகர்பாத்தின் நவாந்த்கியில் ஒரு பெண் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திடீரென ரெயில் ஒன்று வருவதை கவனித்தார். உடனே அந்த பெண் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்.
ரெயில் தனக்கு மேலே சென்று கொண்டிருப்பதை உணர்ந்து பதற்றம் அடைந்தாலும், அந்த பெண் அசையாமல் படுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவள் தலையை தூக்க முயன்றாலும், அந்த சம்பவத்தை படமெடுக்கும் ஒருவர் அவளை தலையை கீழே வைக்கும்படி அறிவுறுத்துகிறார்.
பதட்டமான சில நொடிகளுக்குப் பிறகு, ரெயில் கடந்து செல்கிறது. அவள் பாதுகாப்பாக தண்டவாளத்திலிருந்து எழுந்தாள். அவளது தோழியான மற்றொரு பெண், தண்டவாளத்தின் அருகே காத்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது.
இந்த சம்பவம் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளது. அந்த பெண்ணின் சிந்தனை திறன் மற்றும் அதிர்ஷ்டம் அவரது உயிரை காப்பாற்றி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
- மதுராவில் சரக்கு ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின.
- இதனால் டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் ரோடு என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் 15 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார்.
- அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், ரெயில் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க ஒருவர் முயன்றுள்ளார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்துள்ளது. ரெயிலை பார்த்ததும் தண்டவாளத்தில் இருந்து காரை கீழே இறக்க அவர் முயன்றுள்ளார். ஆனால் கார் தண்டவாளத்தில் சிக்கியது.
தண்டவாளத்தில் கார் இருப்பதை பார்த்த ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
அப்போது சிலர் காரை தண்டவாளத்தை விட்டு வெளியே எடுக்க உதவி செய்தார்கள். கார் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்ததும் அந்த நபர் காரை வேகமாக ஓட்டி போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.
இதையடுத்து போலீசார் அந்த காரை துரத்திச் சென்று பிடித்து அவரை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
ரயில் தண்டவாளத்தில் மக்கள் ரீல்ஸ் எடுப்பது ஒன்றும் இது முதல் முறை அல்ல. இம்மாதிரி ரீல்ஸ் எடுக்கும்போது பலரும் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சரக்கு ரெயிலின் பெட்டிகளிடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்தது.
- இதனால் ரெயில் இரண்டாகப் பிரிந்து 10 பெட்டிகள் முன்னோக்கிச் சென்றது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் பாகல்பூர்-ஜமால்பூர் வழித்தடத்தில் நேற்று 30 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், அந்த சரக்கு ரெயிலின் பெட்டிகள் இடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்தது. இதனால் ரெயில் இரண்டாகப் பிரிந்து 10 பெட்டிகள் முன்னோக்கிச் சென்றது. 20 பெட்டிகள் தண்டவாளத்தில் நின்றன.
தகவலறிந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாளத்தில் நின்ற பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்ஜினுடன் இணைந்திருந்த 10 பெட்டிகள் கல்யாண்பூர் ரெயில் நிலையத்திற்கும், மீதமுள்ள 20 பெட்டிகள் சுல்தான்கஞ்ச் ரெயில் நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் நீண்ட நேரமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
மேலும், அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள ரெயில்வே கிராசிங்கிலும் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சம்பவம் காரணமாக பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரடைந்துள்ளது என தெரிவித்தனர்.

இந்த விபத்து நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் அதிகாரி கம்லோசன் காஷியப் கூறுகையில், சிறிய ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த ரெயில் பாலத்தை நக்சலைட்டுகள் நாசப்படுத்தியதாகவும், அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விபத்து ஏற்பட்ட சுற்றுவட்டாரங்களில் நக்சலைட்டுகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். #Chhattisgarh