என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goods"

    • அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்.
    • மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சி பஞ்சநதிபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பகுதிநேர அங்காடியை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவி ட்டுள்ளார்.

    பட்டா இல்லாதவர்களுக்கு பேராவூரணி அருகே கொளக்குடி மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி பகுதி தென்னைக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பகுதிநேர அங்காடியில் முதல் விற்பனையை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் சுகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் துரைமாணிக்கம், அருள்நம்பி, தி.மு.க பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பொது விநியோக திட்ட ஆய்வாளர் பாலச்சந்தர், வட்ட வழங்கல் முதுநிலை ஆய்வாளர் தில்லைராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சேகர், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
    • சுய உதவிக்குழு பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பணி நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மதி அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் முதல் கட்டமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சாவூர் மாநகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை மதி அங்காடியை திறந்து வைத்தார்.

    இந்த விற்பனை அங்காடியின் செயல்பாடுகள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மனதார பாராட்டினார்.

    இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மேலும் 4 இடங்களில் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது.

    தற்போது இந்த 5 தஞ்சை தாரகைகள் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பூ மாலை வணிக வளாகத்தில் செயல்படும் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடிக்கு சென்றார்.

    அங்கு பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினரை பாராட்டினார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் முதன்முதலாக தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.25,94,106-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து இரண்டாம் கட்டமாக புவிசார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக இந்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய ரயில் நிலையங்களில் ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் என்ற திட்டத்தின் கீழ் தற்காலிக அங்காடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த அங்காடி மூலம் தற்போது வரை ரூ.11,26,130 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    மூன்றாம் குட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பழமையான கல்லணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது.

    தற்போது வரை ரூ.6,11,619 வரை மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நான்காம் கட்டமாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மதி அங்காடியை பழுது நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி புதுப்புலியுடன் தஞ்சை தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை ரூ.7,60,807-க்கான மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    5-ம் கட்டமாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் கடந்த ஜனவரி 14-ம் தேதி புதிய விற்பனை மையம் தொடங்கப்பட்டது.

    இன்று வரை அதில் ரூ.98,610-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இப்படி 5 தஞ்சை தாரகைகள் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . தொடர்ந்து இவற்றின் மதிப்பு அதிகரிக்கும்.

    மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அவர்களாலேயே சந்தை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் விதவைப் பெண்கள், கணவரால் கைவிட்ட பெண்கள் உள்ளிட்ட பல பெண்கள் வாழ்வில் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக கைவினை பொருட்கள் விற்பனை அங்காடி தொடங்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தை வாய்ப்பு, சுய உதவி குழு பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் மையப்படுத்தி இந்த பணி நடந்து வருகிறது.

    ரூ.51 லட்சத்தை தாண்டி பொருட்கள் விற்பனை செய்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், உதவி திட்ட அலுவலர் ஆசீர்வாதம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

    • ரஷியா-உக்ரைன் போர் காரணமாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • நுாற்பாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன.

    ராஜபாளையம்

    தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள், பேண்டேஜ் மருத்துவ துணி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது அதன்படி திருப்பூரில் இருந்து பின்னலாடைகள், ராஜபாளையத்தில் இருந்து பஞ்சு நூல் மற்றும் ராஜ பாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சம்சிகாபுரம் பகுதிகளில் இருந்து பாண்டேஜ் மருத்துவ துணி போன்ற பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஆனால் தற்போது தயாரிக்கப்பட்ட சரக்குகள், கிடங்குகளில் இருந்து எடுக்கப்படாமல் இருப்பு வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அந்த நாட்டு மக்கள் சிக்கன நடவடிக்கையில் உள்ளனர். அதாவது ஆடம்பர செலவுகளை குறைத்து, எரிபொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டும் செலவிடுகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கணிசமாக அளவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

    நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,680 கோடியாக குறைந்துள்ளது. 2022 ஏப்ரலில் ரூ.8,831 கோடியாக இருந்த பருத்தி நுால், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதி, நடப்பாண்டில், ரூ. 7 ஆயிரத்து 282 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.

    இதேபோல் செயற்கை நுாலிழை 'பேப்ரிக்' மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ. 3 ஆயிரத்து 477 கோடியாக இருந்தது. இந்தாண்டில், ரூ.3ஆயிரத்து 223 கோடிக்கு மட்டும் ஏற்றுமதி நடந்துள்ளது

    இதேபோல் சணல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.348 கோடியாக இருந்த நிலையில் தற்போது, ரூ.274 கோடியாக குறைந்துள்ளது. 'கார்பெட்' ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ.952 கோடியாக இருந்து, ரூ. 862 கோடியாக குறைந்துள்ளது.

    கைத்தறி ஜவுளி மற்றும் கைத்தறிகளில் உற்பத்தி யாகும் கார்பெட் ஏற்றுமதி ரூ.1,182 கோடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் ரூ.989 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு, அனைத்து வகை கட்டமைப்புகளுடன் சீரான பஞ்சு-நுால் விலையுடன் தயார்நிலையில் இருந்தும், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டு ள்ளது. நுாற்பாலைகளும், உற்பத்தியை குறைத்து உள்ளன.

    ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல், இயல்புநிலை திரும்பாது. போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் சீராக வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.

    இதேபோல் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இருவேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பல்வேறு நாடுகளை பாதிக்கிறது. எனவே அனைத்து தரப்பி னரும் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுமதி தொழில்து றையினரின் அதிகபட்ச எதிர்பார்ப்பு ஆகும்.

    • இரவு கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
    • மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது.

    மின்சார வயர் துண்டிப்பு

    நேற்று இரவு இந்த கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.

    இந்த நிறுவனத்தில் பணம் வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகத்தை யாராவது தொட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையிலான வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து, அந்த மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்களை எடுத்துச் சென்று, மேட்டூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் அதனை போட்டு சேதப்படுத்தினர்.

    கூரியர் நிறுவனத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்னதாக, அந்த பகுதியில் இருந்த தெரு விளக்குகள், கட்டிடத்தின் முன்பு இருந்த டியூப் லைட்டுகளை சேதப்ப டுத்தி, அந்த பகுதியை இருட்டாக்கிவிட்டு உள்ளே நுழைந்து பணத்தை திருடி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    அதிர்ச்சி

    வழக்கம்போல் இன்று காலை கூரியர் நிறு வனத்திற்கு வேலைக்கு வந்த ஊழியர்கள், ஷட்டர் உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிய டைந்த னர். பின்னர் இது தொடர்பாக மேட்டூர் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிவில் தான், கொரியர் நிறுவ னத்தில் இருந்து திருட்டுப் போன பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
    • 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறம் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்களை வினி யோகம் செய்து வருகிறது.

    இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேசன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு ள்ளது. இது காவல்துறை தலைவரின் நேரடி கண்கா ணிப்பில் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது.
    • இதையடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுககு புகார்கள் வந்தது. இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது மற்றும் இதர பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட 14 வழக்குகளில் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்ப டும். கடைகளில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றனர்.

    • பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவையும் கொள்ளை போனது.
    • கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.

    இவர் கடந்த 11-ந் தேதி திருச்சியில் உள்ள அவரது மகன் சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், ராதாகிருஷ்ணன் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    பின், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின், பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் இருந்து மோப்ப நாய், தடயவியல், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தெற்கு மடவளாகத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45).

    இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து திருவிடை மருதூர் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
    • ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள திம்மகுடி கிராமத்தில் அருள்ஜோதி தெருவில் வசிப்பவர் வந்தியத்தேவன் (வயது55). லாரி டிரைவர்.இவரது கூரை வீட்டில் உள்ள மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து நாசமடைந்தது.

    இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    • பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி –மளிகை பொருட்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நோய் தொற்றை தவிர்க்கும் வகையிலும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பாடுபடும் தூய்மை பணியாளர்களின் பங்கு மக த்தான போற்றுத லுக்குரியது.

    அவர்களது இன்றிய மையாத பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சை மாவட்டம் விளார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியா ளர்கள் அனைவருக்கும் ரூ. 50,000 மதிப்பிட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி – மளிகை பொருட்கள், புத்தாடைகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டது.

    ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளார் ஊராட்சி மன்றத்தலைவி மைதிலி ரெத்தினசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

    இந்த நிகழ்ச்சி யில் விளார் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வை யாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ரூ. 15 ஆயிரம் பணம், ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது.
    • தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஜெய் நகரில் வசித்து வருபவர் சுந்தர் ராமன் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் விட்டு சென்றிருந்தார்.

    நேற்று காலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ கட்டில் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடந்தது.

    இதில் அவர் வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சுந்தர்ராமன் பாபநாசம் காவல் நிலைய த்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொ ண்டனர்.

    மேலும் தஞ்சாவூரிலி ருந்து சோழா என்ற மோப்பநாய் வரவழை க்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார். சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் கூரை வீட்டில் வசித்து வருபவர் கருப்பையன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், முனீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.

    இந்நிலையில், அனைவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அன்று இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. மின்னல் தாக்கியதில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. மேலும், வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பேராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அடிப்படை உபகரணங்கள் வழங்கினார்.

    ×