என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Bus"

    • பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
    • கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.

    பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.

    கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
    • ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரைக்குடி:

    திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பஸ் வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை. டிரவைர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை.

    தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பஸ்சை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதுவையில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பஸ்சில் வைப்பர் வேலை செய்யாததால் பஸ்சை இயக்க டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதுவையில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அரசு பஸ்கள் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் போக்குவரத்து கழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவையில் இருந்து  5.40 மணிக்கு சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே பஸ் இயக்கப்பட்டது.

    அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பஸ்சில் வைப்பர் வேலை செய்யாததால் பஸ்சை இயக்க டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். கையில் காகிதத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது கண்ணாடியை துடைத்த வாறு பஸ் இயக்கினார்.

    இருந்தபோதிலும் மழை அதிக அளவில் பெய்ததால் சாலையில் முழுவதும் தெரியாத நிலை ஏற்பட்டது. பஸ்சை சிறிது நேரம் நிறுத்தி கண்ணாடியை துடைத்த பிறகு இயக்கினார். இதனை அறிந்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

    இதன் வீடியோவை பஸ்சில் பயணித்த ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அரசு கவனம் செலுத்தி பஸ்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மரைகிராமங்கள் உள்ளன.

    இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு தாளவாடியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    தமிழகம்-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் அருகே செல்லும் போது அடந்த வனப்பகுதியில் பஸ் பழுதாகி நின்றது.

    டிரைவர் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கடும் அவதிபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்க்கு பிறகு தாளவாடியில் இருந்து குளியாடா செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் அனைவரும் சத்தியமங்கலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி பயணிகள் கூறும்போது:-

    மலைப்பகுதியில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப் படுவதால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. எனவே மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர், திருப்பூர் மண்டல அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் போது, பயண சீட்டை பெற்றுக் கொண்டு கட்டண தொகை கொடுக்கும் போது, நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர் என, சென்னை இந்திய ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை.

    எனவே இனி வருகிற காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் திருப்பூர் மண்டல பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு கட்டணம் கொடுக்கும் போது, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பயண சீட்டு கொடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் தகவல் பலகை மூலமாக இந்த தகவலை அனைத்து நடத்துனர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இத்தகைய நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏறுவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் மகளிா் சிலா் காத்திருந்தனா். இதனிடையே பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியபோது மகளிா் சிலா் பேருந்தை நிறுத்தியுள்ளனா். ஆனால், ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    ஆகவே அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அரசுப் போக்குவரத்துகழக திருப்பூா் 2 கிளை மேலாளா் வடிவேலிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மகளிா் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள்.
    • சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.

    சென்னை :

    சென்னையில் பஸ் பயணத்தின்போது, டிக்கெட் வாங்க வரும் பயணிகளிடம் 'சில்லரையா கொடுங்கப்பா..' என்று கூவி கூவி கண்டக்டர்கள் கேட்டு வாங்கிய காலம் போய், இன்றைக்கு சில்லரைகளை கொடுத்தாலே கண்டக்டர்கள் கடுப்பாகும் நிலையே நிலவுகிறது. குறிப்பாக ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள். பலர் 'நோட்டே இல்லையா?' என்று கேட்கிறார்கள். சிலர் முணுமுணுத்தபடியும், திட்டிக்கொண்டும் வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 'இது செல்லாது' என்று கூறி அந்த நாணயங்களை திருப்பி கொடுத்து விடுகிறார்கள்.

    ஏற்கனவே கடைகளில் ஒதுக்கப்படும் இந்த ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் தற்போது பஸ்களிலும் புறக்கணிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் தொடக்கத்தில் இந்த நாணயங்கள் அறிமுகமான போது ஆசையுடன் வாங்கிய மக்கள், இப்போது அதை கையில் வைத்திருக்கவே தயங்குகிறார்கள்.

    கண்டக்டர்கள் தரும் கெடுபிடியால் கொதித்து போன மக்கள் போக்குவரத்து துறையிடம் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை அளித்து வருகிறார்கள்.

    பொதுமக்களின் புகாரை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள், மண்டல-கிளை-உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநகர பஸ்களில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கண்டக்டர்கள் உரிய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் மீண்டும் அது அறிவுறுத்தப்படுகிறது.

    எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பெற்றுக்கொள்ள கண்டக்டர்கள் மறுக்கக்கூடாது. இதனை மீறி ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கண்டக்டரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து கண்டக்டர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கணவன்-மனைவி இருவரும் கரும்பு வெட்டும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
    • பிரேமலதா பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பொரசப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி பிரேமலதா (வயது 32). கணவன்-மனைவி இருவரும் கரும்பு வெட்டும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனம் புதூர் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பிரேமலதா பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார்.

     அவினாசி :

    ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை சுப்பிரமணியம் (வயது 49) ஓட்டி சென்றார்.ரவிச்சந்திரன்(55) நடத்துனராக இருந்தார். பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் பஸ் நேற்று இரவு 9.45 மணி அளவில் அவினாசியை அடுத்து வெள்ளியம் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார். எனவே அவர்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பஸ்சை திருப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக பஸ் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. இதனால் வீட்டின் சுவர் இடிந்தது. வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதில் பஸ்டிரைவர், ஒட்டுனர் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (40) ஆகிய மூவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவினாசி போலீசார் சம்பவ இடம் வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி. ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர், சிந்தாமணி, மீரான்குளம், பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு அரசு பஸ் தடம் 137டி இயங்கி வருகிறது.
    • திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம், கலுங்குவிளை, கருங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 232 அரசு பஸ்சும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    நெல்லையில் இருந்து மூலக்கரைப்பட்டி. ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர், சிந்தாமணி, மீரான்குளம், பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு அரசு பஸ் தடம் 137டி இயங்கி வருகிறது. இந்த பஸ் காலை, மாலை இருவேளை இந்த வழித்தடத்தில் இயங்கி வருகிறது.

    ஆனால் தற்போது காலை 4.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீயந்தூர், ராமானுஜம்புதூர் செல்லாமல் மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி சிந்தாமணி,மீரான்குளம் வழியாக நேரடியாக பேய்க்குளம் வந்து செல்கிறது. இதனால் இந்த பஸ்சை எதிர்பார்த்து ராமானுஜம்புதூர் மக்கள் ஏமாற்றமடையும் நிலை ஏற்படுகிறது.

    இந்த பஸ் இல்லாததால் ராமானுஜம்புதூர் பகுதி மக்கள் 8 கிலோமீட்டர் தூரமுள்ள பேய்க்குளம் வர கருங்குளம் சென்று வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதே போல் ராமானுஜம்புதூர் வழியாக பேய்க்குளம், சாத்தான்குளம், புத்தன்தருவைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 305 அரசு பஸ் கடந்த 4ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம், கலுங்குவிளை, பேய்க்குளம், சிந்தாமணி, ராமானுஜம்புதூர், கருங்குளம் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட தடம் எண் 232 அரசு பஸ்சும் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சை பயன்படுத்தி வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ராமானுஜம்புதூரை புறக்கணித்து செல்லும் தடம் 137டி அரசு பஸ்சை மீண்டும் அதே வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் நிறுத்தினார்.
    • பண்ருட்டி நோக்கி மணல் ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது.

    கடலூர்:

    திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் வெண்கரும்பூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் நிறுத்தினார். அப்போது அரசு பஸ்சின் பின்பக்கத்தில் பண்ருட்டி நோக்கி மணல் ஏற்றி சென்ற லாரி திடீரென மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பின்பக்கம் அமர்ந்திருந்த 2 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    மணல் லாரி மெதுவாக சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து பெண்ணாடம் போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையின் மையப் பகுதியான சந்திப்பில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • சிவப்பு நிற பஸ்கள் டிக்கெட் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றி சென்று விடுவதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையின் மையப் பகுதியான சந்திப்பில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.

    சிவப்பு நிற பஸ்கள்

    இங்கு ரெயில் மூலமாக வந்து இறங்கும் பயணிகள் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவப்பு நிற பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. ஆனால் சிவப்பு நிற பஸ்கள் டிக்கெட் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றி சென்று விடுவதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

    சிறைபிடிக்கும் போராட்டம்

    பஸ்களை சந்திப்பு பஸ் நிலையம் அருகிலேயே நிறுத்திவிட்டு செல்லும்படியும், ரெயில் நிலையம் வரைக்கும் கொண்டு வர வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் தொடர்ந்து பஸ்கள் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆட்டோ டிரைவர்கள் அரசு பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் ரெயில் நிலையம் முன்பு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்களுடன் ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையொட்டி அவர்களுடன் நெல்லை மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    ×