என் மலர்
நீங்கள் தேடியது "Grievances"
- ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தர வேண்டும் மற்றும் தேங்கி நிர்க்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பல கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து மனுக்கள் பெறப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் ஈசான்ய தெரு 6வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் பாலமுருகன் தலைமை வைத்தார் கணக்கர்கள் ராஜகணேஷ் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜ சேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று க்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சீர்காழி ஈசான்ய தெருவில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈசான்ய தெருவில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர வேண்டும் மழைக் காலம் தொடங்கி விட்டதால் கொசு மருந்து அடிக்க வேண்டும் சீர்காழி நகராட்சி பகுதியில் வார சந்தை செயல்பட்ட வந்த நிலையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில் தற்போது வரை வாரசந்தை நடைபெறவில்லை உடனடி யாக மக்கள் பயன்பெறும் வகையில் இடத்தை தேர்வு செய்து வார சந்தை அமைத்து தினந் தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கூட்டத்தில் 6வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொ ண்டனர்.
- தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை.
- கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வேம்படி கிராமத்தில் உள்ள முத்தரையர் தெருவுக்கு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர்கள் சொந்த மனை பட்டா இல்லாமல் 60 குடும்பங்கள் இருந்து வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அம்மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் வருவாய் துறை அதிகாரிகளிடம் 15 நாட்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வேட்டங்குடி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள–வர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்றும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் இருவகொல்லை கிராமத்தில் தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தங்கி உள்ளார்கள்.வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், வழிகாட்டுதல் முறையை பின்பற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் வசதி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் சரவணன், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருண்மொழி, பொறியாளர்கள் தாரா, பலராமன், ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஒன்றியகுழு உறுப்பினர் அங்குதன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், விவசாய சங்க தலைவர் வில்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.
- ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்.
- குறைகள் இருப்பின், மேற்கண்ட கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.
அதன்படி நாளை (வியாழக்கிழமை) நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் 1 மணி வரை தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1, வல்லம் ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடத்தப்பட உள்ளது.
ஆகவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் புறநகர் பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், மேற்கண்ட கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொது மக்கள் குறைகளை தெரிவித்தால் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவேன் என்று அய்யப்பன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் மற்றும் துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்து கொண்டார். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், பேனர்கள் வைக்கவும் ஏற்கனவே உள்ள தடையை அமல் படுத்தவும், மீறுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மேலும் திருமணம் மண்டபத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இரவில் தூங்க முடியாத நிலை உள்ளது. கொசு மருந்து அடித்தாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுத்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
உசிலம்பட்டி நகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பொது இடத்தில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் விதித்து பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும். மேலும் வார்டுகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை என்னிடம் தெரிவித்தால் அதற்கு நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நல்லாட்சி வாரம் நடக்கிறது.
- அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
"பிரஷாசன் காவ்ன் கி அவுர் - PRASHASHAN GAON KI AUR - 2022" என்ற தலைப்பில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவைகளை மேம்படுத்துவதற்கும், நாடு தழுவிய பிரச்சாரம் நாளை (19-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை "நல்லாட்சி வாரமாக"(Good Governance Week) நடக்கிறது. பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கும், சேவைகள் வழங்குவதற்கும் சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மேற்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம். மேலும் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விசாரணை திருப்தியில்லாத மனுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் முகாம் நடந்தது.
- பொது மக்கள் தங்களுக்கு குறை, நிறைகள் இருந்தால் 78068-60806 மற்றும் 0452-2344989 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
மதுரை
மதுரை மாநகரில் காவல் நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் நல்ல முறையில் நடத்தப்ப டுவதை உறுதி செய்யவும், அவர்களது குறைகளை விரைவாக தீர்க்கவும், பொது மக்கள் காவல் நிலையத்தில் வெகுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், இவற்றை கண்காணிக்கவும் ''Grievance REdressal And Tracking System'' (GREAT) என்ற திட்டம் 10.10.2022 முதல் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது.
காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரர்கள் மற்றும் அவர்களது மனு விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் பதிவுகள், உடனுக்குடன் மாநகர காவல் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள சர்வர் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து மனுதாரர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் நடத்தப்பட்ட விதம், குறைகள் கேட்கப்பட்டனவா? என்ற விபரம் பெறப்படுகிறது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டபிறகு, மதுரை மாநகரக் காவல் நிலையங்களில் இதுவரை 4 ஆயிரத்து 706 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த புகார்தாரர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காவலர்கள் நடத்திய விதம், எடுக்கப்பட்ட நடவடி க்கைகள், விசாரணையின் விபரம் முதலியவற்றை கேட்டபோது 165 பேர் தங்களது மனுக்கள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் திருப்தியில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து 165 மனுதா ரர்களின் குறைகளை மீண்டும் கேட்டறிந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் இன்று மதுரை மாநகர் ஆயுதப்படை மாரியம்மன் கோவில் திருமண மண்ட பத்தில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
மேலும் மனுதாரர்களுக்கு சட்ட ஆலோசகர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் துணை கமிஷனர்கள் மோகன்ராஜ், சீனிவாச பெருமாள், வனிதா, போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொது மக்கள் தங்களுக்கு குறை, நிறைகள் இருந்தால் 78068-60806 மற்றும் 0452-2344989 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாநகர ேபாலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
- தங்கள் அடையாள அட்டையுடன் 2 பிரதிகளில் மனுக்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். தங்கள் அடையாள அட்டையுடன் 2 பிரதிகளில் மனுக்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் .
இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
- அதில், 2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.
3-வது நாளாக ஆய்வு
இந்நிலையில் 3-வது நாளாக மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியில் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தது.
2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார். மற்றொருவர் அப்பகுதியில் சில தெருக்களில் குண்டும், குழியுமாக இருப்பதாக கூறி மனு அளித்த பின் அதனால் ஏற்பட்ட சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டதும் சிலர் காயம் அடைந்த வீடியோவையும் காண்பித்தார்.
அமைச்சர் உறுதி
பின்னர் அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் கீதாஜீவன் நடந்தே சென்று பார்வையிட்டர். தொடர்ந்து ராஜமன்னார் தெருவில் பாதிப்புக்குள்ளான பகுதியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலர் ராமுத்தம்மாள், வட்ட செயலாளர் அந்தோணி லாசர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி, மீனாட்சி சுந்தரம், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் சிவா, மாரியப்பன், அல்பட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்டார்.
- உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பொன்னரகம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் சில பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்டார்.
பின்னர் அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர் மனோ மரியதாசன், துணை செயலாளர்கள் பீரிடா லெட்சுமி, லிங்கராஜ், துரை, பொருளாளர் பரமசிவம், வட்டப்பிரதிநிதிகள் நல்லதம்பி, ஆதிநாராயணன், தமிழரசன், ஜோசப், கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா சரவணன், கவுன்சிலர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மற்றும் மணி, அல்பட், முன்னாள் அறங்காவலர் அறிவழகன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மகிழ்ச்சிபுரம், விநாயகர் கோவில் அருகில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டார்.
- பொதுமக்களின் அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு வார்டாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு க்களை பெற்று வருகிறார்.
மாநகராட்சி 19-வது வார்டு
மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மகிழ்ச்சிபுரம், விநாயகர் கோவில் அருகில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக் கொண்டார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி, விதவை உதவித்தொகை, தையல் மிஷின் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள தெருக்களில் மழை காலங்களில் தேங்கிய மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் உருவா கின்றன. அதை அப்புறப் படுத்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அந்த பகுதியை அமைச்சர் கீதாஜீவன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
குறைகளை தீர்த்து வைப்பேன்
பின்னர் பொது மக்களிடம் கூறுகையில், 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக எந்த பணிகளும் நடைபெற வில்லை. இதனால் இப்பகுதி முழுமையான வளர்ச்சியை நோக்கி செல்லாத நிலை இருந்துள்ளது. இனி வரும் காலங்களில் முதல்-அமைச்சர் முக. ஸ்டாலின் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு திட்டங்களை உருவாக்குவார்.
அதன் மூலம் உங்களது பகுதியில் உள்ள அனைத்து குறை களையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் அன்ன லெட்சுமி, உதவி ஆணையர் சேகர், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ், கவுன்சிலர் டாக்டர் சோமசுந்தரி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாநகர தொண்டரணி அமைப்பா ளர் முருகஇசக்கி, துணை அமைப்பாளர் மணி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வார்டு அவைத்தலைவர் முனியசாமி, வட்ட செயலாளர் பத்மாவதி, துணைச்செயலாளர்கள் மாரி முத்து, பாலசுப்பிர மணியன், பரமசிவம், பொருளாளர் சீனிபாய், வட்டப்பிரதிநிதிகள் மேக நாதன், அமிர்தலிங்கராஜ், சுடலை, செபஸ்டீன், நிர்வாகிகள் மாடசாமி, ஹரிராம், ராமர், பெருமாள், சுடலைமணி, அந்தோணி ராஜன், முருகன் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது.
- காமில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம்
தஞ்சாவூர்
தமிழ்நாட்டில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969-ம் ஆண்டு முதல் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது.
இந்த மக்கள் நேர்காணல் முகாம் தொடர்ந்து நடத்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாகம் பிரிவின் படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் படி நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சை வட்டம் ராமாபுரம் சரகம் திருவேதிக்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்த ஆணையிடப்பட்டு உள்ளது.
எனவே இந்த முகாமில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
- தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
- 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வாசலில் தூய்மை பணியா ளர்களின் குடியிருப்புகளை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு குடியிருப்பாக சென்று தூய்மை பணியாளர்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவரிடம் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
பின்னர் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-
தூய்மை பணியாளர்க ளுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளது போல் மாநில அளவிலும் ஆணையம் அமைக்கபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற ஆணையம் அமைக்க வேண்டும்.
அவ்வாறு அமைக்கப்ப ட்டால் அனைத்து மாவட்டங்களும் சென்று ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க முடியும். நாங்கள் செல்லும் மாநிலங்களில் எல்லாம் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.
அதேநேரம் பணி நிரந்தரம் செய்யப்ப டுவதில் சில பிரச்சனைகள் இருப்பதையும் உணர்ந்துள்ளோம். கர்நாடக மாநிலத்தில் நேரடி ஊதியம் கொடுக்கும் முறை உள்ளது.
அதாவது நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் இருந்தாலும் ஊதியத்தை நகராட்சியோ, மாநகராட்சியோ நேரடியாக அளிக்கும். இதனால் சரியான ஊதியம் சரியான நேரத்தில் கிடைக்கும். பிஎஃப், இ.எஸ்.ஐ சரியான வகையில் இருக்கும். எனவே தமிழக அரசு இதுபோன்ற முறையை பின்பற்ற வேண்டும்.
விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது . கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் விஷவாயு தாக்கி 225 பேர் இறந்துள்ளனர் என்ற தகவல் வேதனை அளிக்கிறது.
இதனை தடுக்க தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு எந்திரங்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்திரம் உள்ளே நுழையா முடியாத அளவில் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களை இறக்கி பணியை செய்ய சொல்ல வேண்டும். அதுவும் கோர்ட் அறிவுரைகள் படி தொழிலா ளர்களின் உடல்நலம் பரிசோதித்து போதிய பாதுகாப்பு உபகரண ங்களுடன் தொட்டிக்குள் இறக்க வேண்டும். மேலே வந்த பிறகும் தொழிலாளர்களை உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
இது குறித்து போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், கவுன்சிலர் ஜெய்சதீஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.