என் மலர்
நீங்கள் தேடியது "handover"
- நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.
- 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.
தாராபுரம்:
தமிழகத்தில் அதிக அளவு விவசாய நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த நில சுவான்தாரா்களிடம் இருந்து நில உச்சவரம்பு சீா்திருத்த சட்டத்தின்கீழ் விவசாய நிலங்களை கையகப்படுத்திய தமிழக அரசு, அவற்றை நிலமற்ற ஏழை விவசாய கூலி தொழிலாளா்களுக்கு பிரித்து வழங்கியது.
அதன்படி திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியை சோ்ந்த தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நில சுவான்தாரா்களிடம் இருந்து கையகப்படுத்திய 55 ஏக்கா் விவசாய நிலத்தை பிரித்து 45 பயனாளிகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அரசு நில பட்டா வழங்கியது.பட்டா பெற்ற விவசாயிகளுக்கு அவா்களுக்கான நிலத்தை அளந்து பிரித்து எடுப்பதில் கடந்த 19 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும் அந்த நிலங்கள் நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு வழங்கிய நிலப்பட்டாக்களுக்கு உரிய இடத்தை 45 பயனாளிகளுக்கும் உடனடியாக பிரித்து நில அளவீடு செய்து வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.
இதைத்தொடா்ந்து திருப்பூா் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவருமான கே.சுப்பராயன், மாநில துணைச்செயலா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி ஆகியோா் அரசு வழங்கிய உச்சவரம்பு நிலத்துக்கான பட்டாக்களை பெற்றிருந்த 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.இதில் சிபிஐ., கட்சியின் தாராபுரம் பகுதி நிா்வாகிகள், பட்டாதாரா்கள் கலந்துகொண்டனா்.
- ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்
- 75 நாட்களுக்கு பின்னர் குணமடைந்தார்
கரூர்,
குளித்தலையை அடுத்த, கழுகூர் பஞ்., உடையாபட்டி பஸ் நிறுத்தம் அருகே, கடந்த டிசம்பர் 15ல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், 32 வயது, ஆந்திர மாநில இளைஞர் மஞ்சுநாதா என்பவர் மீட்கப்பட்டார்.
தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார், சாந்திவனம் மனநல மீட்பு குழு ஒருங்கி து ணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, ஓட்டுனர் வேல்முருகன் ஆகியோர் முயற்சியில், சாந்திவனம் மன நல மருத்துவம் மற்றும் மறு வாழ்வு பயிற்சி மையத்தில் அந்த இளைஞர் சேர்க் கப்பட்டார். 75 நாட்களுக்கு பின், குணமடைந்த மஞ்சுநாதாவை, ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், வெங்கமாவரிப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது சித்தி ஹேமலதா, ஊர் முக்கி பஸ்தர்கள் முன்னிலையில், சாந்திவனம் இயக் குனர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனதவாளன், செவிலியர் சித்ரா, ஓட்டுநர் மோகன்ராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.
- மேலூரில் பெண் தவறவிட்ட பணத்தை தம்பதி போலீசிடம் ஒப்படைத்தனர்.
- சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
மேலூர்
மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்தவர் நதியா. இவர் மேலூரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.வி. சாலா தெருவில் சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த கைப்பை தவறி கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் பணம் கொடுப்பதற்காக பணப்பையை தேடினார். அப்போது அதனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நதியா தவறவிட்ட பணத்தை தேடி வந்தனர்.
இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அ.வல்லாளபட்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியவர் மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் ஆகியோர் கீழே கிடந்த பணப்பையை கண்டெடுத்தனர். அதனை யார் தவற விட்டார்களோ என்று கருதி மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பணம் நதியா தவறவிட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
கீழே கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த தம்பதிகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
- சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ,சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன், காவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் தஞ்சாவூர் நகரம் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கடைகளில் விற்பனைக்கு இருந்த செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணையும், புகார் கொடுத்திருந்த ஐ.எம்.இ.ஐ எண்ணையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து கடை உரிமையாளரிடம் இருந்து அந்த செல்போன்களை மீட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது செல்போனை விற்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
வெளியூரில் கண்டுபிடிக்கப்பட்ட சில செல்போன்கள் அவர்களாகவே கொரியர் மூலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி விட்டனர்.
இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் , சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர் செல்போன்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
- இரட்டிப்பு மோசடி வழக்கில் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தார்.
- ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார். அதில் உள்ள பொருட்களை விற்றுக் கொடுத்தால் லாபம் கிடைக்கும் என்றிருந்ததை நம்பிய அவர் 16 தவணைகளாக ரூ.82 ஆயிரத்து 400-ஐ அனுப்பினார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இழந்த தொகை ரூ.82 ஆயிரத்து 400-ஐ போலீசார் மீட்டனர். பின்னர் அந்த தொகை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.
- குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை.
- 30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி 3 மாத பெண் சிசுவை போட்டுவிட்டு தாயார் சென்று விட்டார்.
குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அந்த பெண் குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு மற்றும் சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த லைப் லைன் டிரஸ்ட், தத்துவள மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்கப்பட்டன.
- செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக வழக்குகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, மயிலா டுதுறை மாவட்ட எல்லை க்குள் காணாமல் போன செல்போன்களை கண்டறிந்து மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவிட்டார். அதன் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில், சைபர் கிரைம் காவல் அய்வாளர் புயல் பாலச்சந்திரன், தலைமை காவலர் சுதாகர் மற்றும் போலீஸாரின் முயற்சியால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்க ப்பட்டன.
இைதயடுத்து, எஸ்.பி.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கைப்பற்றப்பட்ட செல்போ ன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஒப்படைத்தார்.
இதனால் செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தங்கையிடம் ஒப்படைக்கப்பட்டார்
- கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, தனது அண்ணனை அழைத்து சென்றார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் மீட்டு ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அவருக்கு கருணை இல்லத்தில் வைத்து மனநல மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குணமடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த நித்தின் (வயது 33) என்பதும், அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நித்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நித்தினின் தங்கை குசுமா நாராயணரெட்டி பெரம்பலூருக்கு வந்தார். அவரிடம் நித்தினை போலீசாரும், கருணை இல்ல நிர்வாகிகளும் ஒப்படைத்தனர். அவர்களுக்கு குசுமா நாராயணரெட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து, தனது அண்ணனை அழைத்து சென்றார்.
- பெரம்பலூர் நான்கு ரோட்டில் தவறவிட்ட மணி பர்ஸ் உரிய நபரிடம் ஒப்படைத்த எஸ்.ஐ.
- மணி பர்சை பெற்றுக் கொண்ட மாணவர் எஸ்ஐக்கு நனறி கூறினார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் நான்கு ரோட்டில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் டிராபிக் எஸ்ஐ வரதராஜன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்ததை கண்டு அதனை எடுத்த அவர், அந்த மணிபர்சில் உள்ளே 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 70 குவைத் தினார், ஆதார், பேன் கார்டு மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிலிருந்து செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது அந்த மணிபர்ஸ் பெரம்பலூர் அருகே உள்ள அரசலூர் கிராமத்தைசேர்ந்த கிஷோர் குமார் என்ற மாணவர் டூவிலரில் சென்றபோது தவறவிட்டுவிட்டார் என தெரியவந்தது. அவரை வரவழைத்த எஸ்ஐ வரதாராஜன் மணிபர்சை ஒப்படைத்தார். மணி பர்சை பெற்றுக் கொண்ட மாணவன் எஸ்ஐ வரதராஜன் மற்றும் ஊர்க்காவல் படை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
- பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.
திருப்பூர்:
காலாண்டு தேர்வு தொடங்கிய ஓரிரு நாளில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் சென்னையில் இருந்து திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெற்கு பகுதி பள்ளிகளுக்கான புத்தகம், நோட்டுகள் குப்பா ண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வடக்கு பகுதி பள்ளிகளுக்கு புத்தகங்கள் 15 வேலம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் இருப்பு வைக்கப்ப ட்டிருந்தது. தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து, புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை, மொழிப்பாடம், பிற பாடங்கள் உட்பட 70 ஆயிரம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐந்தாம் வகுப்புக்கு 14 ஆயிரம் புத்தகங்கள், குறைந்தபட்சமாக ஒன்றாம் வகுப்புக்கு 79 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன.
இவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்படும். பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் தீபாவளி பண்டிகை முடிந்து பட்டாம்பாக்கத் திலிருந்து சென்னை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரது லேப்டாப் பேக் தவறி விழுந்து விட்டது. அதில் ஒரு லட்சம் மதிப்பிலான லேப்டாப் மற்றும் வீடியோ கேமரா இருந்தது.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் அந்த சாலையில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.அதன்படி சாலையோரம் கிடந்த லேப்டாப் பேகை போலீசார் கண்டறிந்தனர். அதனை என்ஜீனியர் பாலாஜியிடம் பண்ருட்டி போலீசார் ஓப்படைத்தனர்.
- சரோஜா வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது.
- மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 60). இவர் நேற்று காலை தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்திருந்தார்.
அந்த சமயத்தில், அவர் வைத்திருந்த ரூ.500 பணம் திடீரென காணாமல் போனது. இது குறித்து அவர் சந்தை நிர்வாக அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (25) என்கிற மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி மூதாட்டி சரோஜா தவற விட்ட பணத்தை சந்தை பகுதியில் வைத்து கண்டுபிடித்து அதனை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அதனை உதவி நிர்வாக அலுவலர்கள் சிவசங்கர், பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் மூதாட்டி சரோஜாவிடம் ஒப்படைத்தனர். கூலித் தொழிலாளியின் இந்த நேர்மையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.