என் மலர்
நீங்கள் தேடியது "Happy"
- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் பங்கேற்றன.
- கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை.
நாகப்பட்டினம்:
குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர்வதில் நெருக்கடியை சந்திக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை வழங்கினர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் இதில் பங்கேற்றன.
மாணவர்கள் அதிக அளவில் வருகை தந்து, கல்விக் கடன் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். மொத்தம் 304 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதற்கான கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தெரிவித்தார்.
கல்விக் கடன் கேட்டு வங்கிகளுக்கு அலையும் நிலையை மாற்றி, ஒரே இடத்தில் வங்கிகளை வரவைத்து, கடன் வழங்கும் முறையில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தியதற்காக மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர் என்று ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
- மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- மிளகாய், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு இந்த மழை போதுமானதாக உள்ளது என்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நெல், மிளகாய், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது களை எடுப்பு, பூச்சிமருந்து தெளிக்கும் பணி, உரமிடுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சில நாட்களாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர்.
இந்த நிலையில் மாண்டஸ் புயலால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும். பரவலாக மழை பெய்தது. அபிராமம் பகுதியிலும், ஒரளவுக்கு மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அபிராமம் விவசாயிகள் கூறுகையில், அபிராமம், அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால், மிகவும் சிரமப்பட்ட நிலையில் நெல், பருத்தி, மிளகாய், உளுந்து பயிர்கள் கருகும் நிலைக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில் மாண்டஸ் புயலால் அபிராமம் பகுதி யில் ஒரளவுக்கு பெய்த மழையால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் மிளகாய், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு இந்த மழை போதுமானதாக உள்ளது. இந்த மழையால் பண்ணையில் உள்ள மிளகாய் நாற்றுகளை வயலில் நடுவதற்கும் மிளகாய் கன்றுகள் நன்றாக வளருவதற்கும் இந்த மழை போதுமானதாக உள்ளது என்றனர்.
- கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
- தமிழகத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
நெல்லை:
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
பள்ளிகள் சுத்தம்
அதன்பின்னர் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைக்கும், வருகிற 14-ந்தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பையொட்டி ஏற்கனவே அனைத்து பள்ளிகளும் வர்ணம் பூசப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு விட்டது. இதேபோல் மாவட்டங்களில் சிறிய பழுதடைந்த பள்ளிகளும் பழுது பார்க்கப்பட்டது.
பூங்கொத்துடன் வரவேற்பு
நெல்லை மாவட்டத்தில் முதல் நாளான இன்று பள்ளிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாணவ-மாணவிகளை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்ததால் பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
டவுன் கல்லணை பெண்கள் பள்ளியில் மேயர் சரவணன் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பேட்டை ராணி அண்ணா மகளிர் பள்ளியில் மாணவி களுக்கு சாக்லெட் கொடுத்து வரவேற்றார்.
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. சீருடை அணிந்து உற்சாகமாக வந்த மாணவர்கள் காலையில் இறை வணக்கத்துடன் தங்களது படிப்பை தொடங்கினர்.
முதல் நாளிலேயே பாடங்களை நடத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவால் மாணவர்களின் விடுமுறை காலம் குறித்து ஆசிரியர்கள் கேட்டறிந்தனர். அதே நேரத்தில் பெரும்பாலான பள்ளிகளில் முதல் நாளிலேயே அனை வருக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப் பட்டு விட்டன.
போக்குவரத்து அதிகரிப்பு
பள்ளிகள் திறப்பையொட்டி இன்று காலையிலேயே மாநகர பகுதிகளில் அதிக அளவு ஆட்டோக்கள், பள்ளி பஸ், வேன்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது. அவர்களை பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லெட் கொடுத்து வரவேற்றனர்.
அதே நேரத்தில் முதல் நாள் என்பதால் பெரும்பாலானோர் குழந்தைகளை பள்ளிக்கு தங்களுடனே அழைத்து சென்று கொண்டு விட்டனர். மாணவர்கள் விடுமுறை நாட்களில் எங்ககெல்லாம் சுற்றுலா சென்றார்கள்?, பொழுதை பயனுள்ளதாக கழித்தார்களா? என்பது பற்றி ஆசிரியர்கள் கலந்துரையாடினர். மேலும் ஒருசில பள்ளி ஆசிரியர்கள் அறிவு சார்ந்த நீதிக்கதைகளை மாணவர்களுக்கு கூறினர்.
+3
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது.
- பள்ளிகள் திறப்பையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
பன்னீர் தெளித்து வரவேற்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி லும் இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை யொட்டி கடந்த 2 நாட்களாகவே பள்ளி அறை கள் சுத்தப்படுத்தப் பட்டு தயார்படுத்தப்பட்டது.
பள்ளிக்கு வருபவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடு களை பள்ளி தலைமை யாசிரியர்கள் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று காலையில் மாணவ-மாணவிகளை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் நுழைவு வாயிலில் நின்று சாக்லெட், பூங்கொத்து கொடுத்தனர். ஒருசில பள்ளிகளில் குழந்தை களுக்கு கைகள் மற்றும் கண்ணங்களில் சந்தனம் வைத்தும், பன்னீர் தெளித்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
புத்தகங்கள் வினியோகம்
மாநகர பகுதியில் இன்று பள்ளிகள் திறப்பையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்கனவே அரசு தொடக்க பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப் பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர் களுக்கு இன்று முதல் நாளிலேயே புத்தகங் கள் வழங்கப்பட்டது. காலை யில் இறை வணக்கத்துடன் பள்ளி கள் தொடங்கின.
இதனையொட்டி மெயின் சாலைகளில் உள்ள பள்ளிகள் முன்பு சற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அவற்றை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர். அதன் பின்னர் குழந்தைகளுக்கு நீதிபோதனை கதைகளை ஆசிரியர்கள் கூறினர்.
பெரும்பாலான பள்ளி களில் நீண்ட நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவ-மாணவிகள் சென்றதால் ஏதோ புதிய இடத்தை பார்ப்பதுபோல் ஒருவித தயக்கத்துடனே பள்ளிக்கு வந்திருந்தனர். இதுதவிர கடந்த கல்வி யாண்டில் அங்கன்வாடி களில் படித்துவிட்டு புதிதாக தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து அறைகளில் அமர்த்தி வைத்தனர்.
ஆனாலும் அங்குள்ள புதிய ஆட்கள், புதிய சூழ்நிலைகளை கண்டு குழந்தைகள் தேம்பித் தேம்பி அழுதனர். அவர்களை சமாதானப்ப டுத்துவதற்காக ஆசிரியர்கள் அவர்களுக்கு சாக்லெட், பிஸ்கெட், விளையாட்டு பொம்மைகள் கொடுத்த தையும் பார்க்க முடிந்தது. மேலும் சிலர் பள்ளி சுவர்களில் வரைந்துள்ள கார்ட்டூன் பொம்மைகளை காண்பித்து சமாதானப் படுத்தினர்.
ஒருசில குழந்தைகள் அதிக அளவில் அழுது கொண்டே இருந்ததால், அவர்களை பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
- பூக்கள் தூவியும் சந்தனம், குங்குமம் இட்டு இனிப்புகள் வழங்கினர்.
- வித்தியாசமான வரவேற்பு செயலால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இன்று 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. காலையில் ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
தஞ்சை அருகே திருவையாறுஅவ்வை மழலைப் தொடக்கப் பள்ளியில் மாணவ- மாணவிகள் வித்தியாச மான முறையில் வரவேற்கப்பட்டனர்.
முதலில் அவ்வையா ருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர் ஆசிரியைகள் திருக்குறள் கூறி அதற்கேற்றவாறு நடனமாடி மாணவ- மாணவிகளை உற்சாகத்து டன் வரவேற்ற னர்.
பூக்கள் தூவியும் சந்தனம், குங்குமம் இட்டு இனிப்புகள் வழங்கினர்.
ஆசிரியர்களின் இந்த வித்தியாசமான வரவேற்பு செயலால் மாணவ- மாணவிகள் மட்டுமன்றி பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நிரந்தரமாக பொது இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
- கோரிக்கை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ரெங்கநாதபுரம் பகுதியில் தனியார் இடத்தில் அரசு கொள்முதல்நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் நிரந்தரமாக பொது இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் திறக்கவேண்டுமென விவசாயிகள் நீண்ட நாட்க ளாக நுகர்பொருள்வானிப கழகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிராம பொது இடத்தில் அரசு நெல் கொள்முதல்நிலையம் திறக்கப்பட்டு நெல்கொள்மு தல் செய்யும் பணி தொடங்கியது.
தொடக்கவிழா நிகழ்ச்சியில் மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாட்சா ரவி, விவசாயிகள் கார்மேகம், பாலா. ராஜேந்திரன், கமலக ண்ணன், பெரியண்ணன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
பொது இடத்தில் அரசு கொள்முதல்நி லையம் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
+2
- நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது.
- 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணி இதுவரை முழுமையாக நிறைவடையாமல் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகரின் இதயப்பகுதியாக விளங்கும் சந்திப்பு பஸ் நிலையம் பஸ்கள் போக்குவரத்து, பயணிகள் நடமாட்டம் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிப்பு
நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப் பட்டது. இதில் நெல்லை 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பஸ் நிலைய த்தையும் முழுமை யாக இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.
அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணி பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளை தொட்ட பிறகும் இதுவரை முழுமையாக நிறைவடை யாமல் நிற்கிறது. இதனால் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பயணிகள் கோரிக்கை
எனவே இந்த பஸ் நிலைய பணிகள் முழுமை யாக முடிவடையும் வரை காத்தி ருக்காமல் வியா பாரிகள், பொது மக்கள், ரெயில் நிலை யத்திற்கு வரும் பயணிகள் ஆகியோ ரின் நலன் கருதி தற்காலி கமாக பஸ் நிலையத்தை சுற்றியாவது பஸ்கள் இயக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 10 நாட்களாகவே மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் பஸ் நிலைய பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிக்காக சுற்றிலும் அடைக்கப் பட்டிருந்த தகரங்களை உள்ளே தள்ளி வைத்து விட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.
மாநகர பஸ்கள் இயக்கம் தொடங்கியது
அதேநேரத்தில் முதல்கட்டமாக மாநகர பகுதிக்குள் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மற்றும் விரிவாக்க பகுதிகள், புதிய பஸ் நிலையங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை மட்டுமே சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ராஜா பில்டிங் சாலையில் பயணிகள் வசதிக்காக 5 இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டது. தற்காலிகமாக பஸ்களை இயக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் அந்த வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், முன்னாள் மண்டல சேர்மன் தச்சை சுப்பிர மணியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், கவுன்சிலர்கள் உலகநாதன், கிட்டு, கந்தன், பவுல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை
பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறும்போது, நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இன்னும் 60 நாட்களில் திறக்கப்படும். சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிய சாலைகளும் விரைவில் அமைக்கப்படும் என்றார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
சந்திப்பு பஸ் நிலையம் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்களும், வியாபாரிகளும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், பணிக்கு செல்லும் பெண்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.
இதுகுறித்து நெல்லை அருகே உள்ள தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்த மீனா கூறும்போது, நான் கொங்கந்தான் பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படாததால் தினமும் தாழையூத்தில் இருந்து வரும் பஸ்சை எதிர்பார்த்து அதில் ஏறி அங்கிருந்து வண்ணார் பேட்டை செல்கிறேன். பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்து தினமும் சென்று வந்தேன்.
இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்கப்படுவதால் பஸ் பயணம் சிரமம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. இங்கு வந்து இறங்கினால், சுற்றிலும் அனைத்து விதமான கடைகளும் இருக்கிறது. இதில் நமக்கு தேவையான பொருட்கள் எதுவானாலும் எளிதாக வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் வண்ணார் பேட்டையில் அப்படி இல்லை என்றார்.
தென்காசி- பாபநாசம் பஸ்கள்
சந்திப்பு பகுதியில் ஒரு ஸ்டூடியோ வில் வேலை பார்க்கும் ஆலங் குளத்தை சேர்ந்த ரமேஷ் கூறு கை யில், 5 ஆண்டுகளுக்கு பிறகு பஸ்களை இயக்கு வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது டவுன் பஸ்களை இயக்கியது போல், பாப நாசம், சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களையும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க வேண்டும். ஏனெனில் அந்த இடங்களில் இருந்து சந்திப்பில் உள்ள கடைகள், நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்கள் தனியார் கண் ஆஸ்பத்திரி, தேவர் சிலை பகுதிகளில் இருந்து நடந்து தான் வரவேண்டி உள்ளது. எனவே விரைவில் அதனையும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கழிப்பறை வசதி
நெல்லை தச்ச நல்லூரை சேர்ந்த வாடகை கார் டிரை வர் முருகன் கூறுகை யில், பஸ்கள் ஓட தொடங்கி உள்ளதால் பள்ளி செல்ப வர்கள், பெண்கள் நிம்மதி அடைந்து ள்ளனர். இங்கு வெவ்வேறு வழித்தட ங்களுக்கு செல்லும் பஸ்களு க்காக 5 நிறுத்த ங்கள் அமைக்க ப்பட்டு ள்ளது. ஆனால் அதனை முறையாக எடுத்து கூற போக்குவரத்து அதிகாரிகள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.
எங்கு நமது ஊருக்கான பஸ் நிற்கும் என்று தெரியாமல் வயதானவர்கள் சற்று சிரமப்படுகின்றனர். அதேபோல் கழிப்பறை வசதிகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவை முக்கியம். எனவே ஓரிரு நாட்களில் அதனையும் நடை முறைப்படுத்த வேண்டும். மழை பெய்துவிட்டால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடும். எனவே அதற்கு முன்பாக சாலை அமைக்க வேண்டும் என்றார்.
- கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் தேயிலை மகசூல் அதிகரித்தது.
- தமிழக அரசு தேயிலை விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை தொழிலையே நம்பியுள்ளனர்.
தேயிலை தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கும் கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொழிற்சாலைகளுக்கு தேவையான தேயிலைகள் கிடைக்காமல் ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் இருந்து எடுத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் தேயிலை மகசூல் அதிகரித்தது. இதனால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது அனைத்து பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து அதிகப்படியான தேயிலை அறுவடை செய்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்து லாபம் ஈட்டி வருகின்றனர். இதற்கிடையே தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி, உரம் விலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு தேயிலை விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகிழ்ச்சியான ஞாயிறு” கொண்டாட்டம் நடைபெறுகிறது.
- கலைநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி சார்பில் "மகிழ்ச்சியான ஞாயிறு" கொண்டாட்டம் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மண்டலம்-2, 17வது வார்டு புதிய பேருந்து நிலையம் அருகில், 60 அடி ரோடு, கண்ணகி நகர், எம். எஸ். நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே கடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை போல், இந்த நிகழ்ச்சியையும் தமிழ்நாட்டில் சிறந்த நிகழ்ச்சியாக்க அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
- சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
குண்டடம்:
குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்டபகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
இது குறித்து மேட்டுக்கடையை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது;-
குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம்.
இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களைஅதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவாகிறது.
இந்தநிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடையை தீவிரமாக செய்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அதிக விலைக்கு விற்பனையானதால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்து ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கடந்த சீசனில் பெறும் நஷ்டம் அடைந்தனர்.
நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை என்றாலும் குறைந்த அளவு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தற்போது அறுவடை செய்து கொண்டனர்.
அவர்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
- மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.
இறைவன் காலடியில் மலர் போடுங்கள்!
ஒரு கூடை அரளியைச் சேகரித்துக்கொண்டு, ஒவ்வொரு நாமமாகச் சொல்லி நிதானமாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து பாருங்கள்.
அதுவும் மலர்களை சுவாமியின் மீது தூக்கி வீசாமல், அழகாக ஒவ்வொரு மலராக அலங்காரம் செய்வது போல் சுவாமி காலடியில் வைத்துப்பாருங்கள்.
உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும், இனம் புரியாத ஆனந்தம் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும்.
நாள் முழுவதும் சந்தோஷமாகக் கழியும்.
மஞ்சள் மலர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அபார சக்தி உண்டு.
அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் முதலில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும்.
மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்ததும், 6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும்.
தாமரை, செண்பகம், முல்லை, பிச்சி, அரளி, துளசி உள்பட பல்வேறு மலர்கள் புஷ்பாஞ்சலிக்கு பயன்படுத்தப்படும்.
புஷ்பாஞ்சலி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.8,500 செலுத்தி ரசீது பெற்று சென்றால் அவர்கள் பெயரில் அய்யப்பனுக்கு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.
புஷ்பாஞ்சலிக்கு தேவையான மலர்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
கோவில் சார்பில் மலர்கள் பயன்படுத்தப்படும்.
தரமற்ற பூக்கள் பூஜைக்கு பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஏற்பாட்டை திருவாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது.
- சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
- புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
ராகு கால பூஜைக்கான மலர்கள்
ராகு கால நேரம் என்பது வாரத்தில் அனைத்து நாட்களிலும் உண்டு.
இதில் செவ்வாய் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் செய்யப்படும் ராகு கால பூஜை மிகவும் சிறப்பானது.
இதைத்தவிர மற்ற நாட்களிலும் ராகு கால பூஜை செய்யலாம்.
ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு விதமான மலர்களைக் கொண்டு பூஜை செய்வதால் வாழ்வில் நிம்மதியும் வளங்களும் பெருகும்.
சூரிய கிரகத்துக்கு ஞாயிற்று கிழமைகளில் பாரிஜாதம் மற்றும் வில்வ மலர்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
சந்திர கிரகத்துக்கு திங்கள் கிழமைகளில் வெள்ளை அலரி மலர் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் கிழமைகளில் செவ்வரளி, செந்தாமரை மற்றும் செம்பருதி மலர் கொண்டு ராகு கால பூஜை செய்வது செவ்வாய் தோஷம் விலகும்.
புதன் கிரகத்துக்கு புதன் கிழமைகளில் துளசி கொண்டு பூஜிக்கலாம்.
வியாழக்கிழமைகளில் குரு கிரகத்துக்கு மஞ்சள் நிற மலர்கள் மற்றும் சாமந்தி மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும்.
சுக்கிரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் வெள்ளை அரளி கொண்டு பூஜை செய்யலாம்.
சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் நீல நிற சங்கு மலர் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
மேற் கண்ட ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு பூஜை செய்தால் இல்லத்தில் அமைதி மற்றும் சுபிட்சம் பெருகும்.