என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health"

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
    • இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., துாரத்தில், புத்திர கவுண்டன்பாளையம் கல்வராயன்மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது.

    அக்ரஹாரம், அபிநவம், கணேசாபுரம், வடக்குக்காடு, காரைக்களம், கல்லேரிப்பட்டி, படையாச்சூர், கல்யாணகிரி, எம்.சி.ராஜா நகர், புத்திரகவுண்டன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுார் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஏத்தாப்பூர் முக்கிய மையமாக விளங்கிறது.

    இப்பகுதிமக்களின் நலன்கருதி, பழமையான ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே வசிஷ்டநதி கரை யோரத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது. மாவட்ட கமிட்டித் தலைவரான அப்போதைய எம்.எல்.சி ராவ்பகதுார் எல்லப் பச் செட்டியார் இந்த மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார். 1958 அக்டோபர் 7-ந் தேதி, அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பிரசவ விடுதி கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.

    இதனையடுத்து இந்த அரசு மருந்தகம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனை க்கூடம் உள்ளிட்ட வசதிகளும், 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வந்தது. இதற்குபிறகு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கவனமின்மையால், இந்த அரசு மருத்துவமனை, 25 ஆண்டுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.

    தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சை பெறுவதற்கு வழியும் வசதிகளும் இல்லை.

    இதனால், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, ஆத்துார், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதுமட்டுமின்றி பழைய கட்டடங்கள் வழுவிழந்து காணப்படுகிறது.

    எனவே, 93 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுாற்றாண்டு விழா காண்பதற்குள், விசாலமான புதிய கட்டடம் அமைத்து, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப்பிரிவு, ஸ்கேனிங், எக்ஸ்ரே,ஆய்வகம் மற்றும் மருத்துவர், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

    கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தவும், சேலம் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    • உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.
    • இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    உலக கழிவறை தினத்தை முன்னிட்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் சுகாதார நடை பயணம் நடந்தது.

    இந்த நடை பயணத்தை வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் மாதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் பள்ளி மாணவ -மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அலவாய்ப்பட்டி ஊராட்சி வெள்ளப் பிள்ளையார் கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் தோல் பாங்காக வெளியேற்ற...
    • பதினாறாம் நிமிடத்தில் பேராறாய்ப் பெருகும் வியர்வை...பரிசுத்தமாக்குகிறது உடலை!

    நடந்து பாருங்கள் நண்பர்களே...

    நடக்க நடக்க நமக்குள் நடக்கும் அற்புதங்களை உணராலாம். அனைத்தும் ஆதாரபூர்வ அறிவியல் உண்மைகள்!

    நாள் ஒவ்வொன்றையும் நலமாய்த் தொடங்கலாம்.

    நடக்கத் தொடங்கிய ஒன்றாம் நிமிடத்திலேயே ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது!

    அடுத்த நிமிடத்தில் அங்கம் எங்கும் ஊக்கத்துடன் அருவி போல் குருதி பரவுகிறது!

    மூன்றாம் நிமிடத்திலேயே மூட்டுக்களின் இறுக்கம் முற்றிலுமாகத் தளர்கிறது!

    நான்காம் நிமிடத்தில் நடை மிக எளிதாகிறது... நாடி சீராகிறது!

    ஐந்தாம் நிமிடத்தில் இருபத்து ஐந்து கலோரி ஆவியாகிறது... யாரும் அறியாமலே!

    ஆறாம் நிமிடத்திலேயே அவசியமற்ற கொழுப்பு நீக்கம் ஆரம்பம் ஆகிறது!

    ஏழாம் நிமிடத்தில் இதயத் துடிப்பு சீராகி... இன்னிசை ஆகிறது!

    நிமிடம் எட்டில் நாளங்கள் அனைத்தும் நெகிழ்ந்து விரிகின்றன!

    ஒன்பதாம் நிமிடத்தில் உயிர்வளி எனும் ஆக்ஸிஜன்... உடலெங்கும் நிறைகிறது!

    பத்தாம் நிமிடத்தில் மொத்த உடலும் மனமும்... சுத்தமாகித் தெளிகிறது!

    பனிரெண்டாம் நிமிடத்தில் பரவுகிறது உடலெங்கும் ஓர் பதமான சூடும் சுகமும்!

    பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் தோல் பாங்காக வெளியேற்ற...

    பதினாறாம் நிமிடத்தில் பேராறாய்ப் பெருகும் வியர்வை...பரிசுத்தமாக்குகிறது உடலை!

    நிமிடம் பதினெட்டில் நிரம்பி வழிகிறது மேலும் மேலும்...நிகரில்லா உயிர்வளி!

    இருபதாம் நிமிடத்தில் இதுவரை கரையா இறுகிய கொழுப்பும்... இளகத் தொடங்குகிறது!

    இருபத்தைந்தாம் நிமிடத்தில் இவ்வளவு புத்துணர்ச்சியா எனக்குள்? என்று மனம் வியக்கிறது!

    முப்பதாம் நிமிடத்தில் முழு உடலும் மனமும் முற்றிலுமாகத் தளர்கின்றன!

    முப்பந்தைந்தாம் நிமிடத்தில் மூளையின் மூலை முடுக்கெங்கும் முகிழ்க்கின்றன மகிழ் சுரப்புகள்!

    நாற்பதாம் நிமிடத்தில் நம்மைக் கவ்வியிருந்த மன அழுத்தம் நமக்கே தெரியாமல் விலகுகிறது.

    நாற்பத்தைந்தாம் நிமிடத்தில் நம் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து நம்மை ஆட்கொள்கிறது.

    ஐம்பதாம் நிமிடத்தில் ஆழ்கடல் போல் பேரமைதி அடைகின்றன உடலும் மனமும்.

    நிமிடம் ஐம்பத்தைந்தில் நினைத்துப் பார்க்க முடியாத நிம்மதி நெஞ்சில் நிறைகிறது.

    அறுபதாம் நிமிடத்தில் அன்றைய நாளுக்கான ஆற்றல் அனைத்தும் உங்களுக்குள்.

    உங்களுக்காக நீங்கள் ஒதுக்கும் இந்த உன்னத ஒரு மணி நேரத்தால் ஆனந்தமாகும் உடலும் மனமும்.

    -செல்வகுமார்

    • உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது.
    • முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திர துணையின்றி செய்யுங்கள்.

    பசி..

    உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா? தெரியாதல்லவா? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்?

    யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

    பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் வரும்போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்? எனவே பசித்த பின்னர் புசிக்க வேண்டும்

    தாகம்..

    அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. ஏசியில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

    வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

    எனவே தாகம் எடுக்கும்போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    உடல் உழைப்பு..

    ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

    இதற்கு நீங்கள் முன்னோர்கள் அருளிய யோக பயிற்சிகளை செய்யுங்கள், வீட்டு வேலைகளை இயந்திரத்துணையின்றி செய்யுங்கள்.

    யாருக்கு தூக்கம் வரும்.?

    உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு மட்டும் வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்கக்கூடாது.

    ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம். இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    பகலில் உறங்கி சமன் செய்து விடலாம் என நினைக்காதீர்கள். இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9 மணி. இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான நோய்கள் வரும்.

    ஓய்வு..

    உடல் கேட்கும்போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

    மன நிம்மதி..

    ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

    மனம் நிம்மதியாக இருக்க விருப்பத்துடன் வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

    எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று நினையுங்கள்.

    இவ்வாறு மனதையும் நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்தால் ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை அடைந்துவிடலாம்.

    -ஆதவன்

    • சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.
    • இரண்டு நாட்கள் கழித்து ஊறிய வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

    "குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்" என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக் கற்றாழையின் மற்றொரு பெயர்.

    தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

    கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

    இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

    கற்றாழை மடலைக் கீறி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

    கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

    சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

    இச்செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச்சிக்கல் தீரும்.

    வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப்புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

    கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

    தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லது கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

    -ப்யாரீப்ரியன்

    • ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.

    துணை தலைவர் அமலா கிராம நிர்வாக அலுவலர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரஜினி வரவேற்றார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமுடன் செயல்படுத்தி வருவதாகவும், சுகாதாரம், குடிநீர், தெரு விளக்கு பராமரித்து வருவதாகவும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    பின்னர் ஊராட்சிக்கு தேவையான 2023-24 ஆண்டிற்க்கான கிராம வளர்ச்சி திட்ட பணிகளை தயார் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அபிராமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள்.
    • வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.

    வெயில் காலம் கடுமையாக ஆரம்பமாகிவிட்டது. என் டாக்டர் நண்பர்கள் கூறிய எளிய கூல் டிரிங்ஸ்!

    நீர் மோரில் இஞ்சி தட்டி போட்டு கருவேப்பிலை, கொத்துமல்லியை தூவிவிட்டு, அலுவலகம் செல்லும் போது, ஒரு லிட்டருக்கு குறையாமல் கொண்டு செல்லுங்கள். காபி, டீ தவிர்த்துவிட்டு தாகம் எடுக்கும் போது எல்லாம் குடியுங்கள். எந்தவெய்யில் கால நோய்களும் அணுகாது. நீர் மோர் காவிரி வெள்ளம் போல இருக்க வேண்டும் என்றார்.

    ஒரு லிட்டர் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது உப்பு போட்டு வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும் போது குடிக்கலாம். வெயில் காலத்திற்கு நல்ல எனர்ஜி டானிக். செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தவிர்த்துவிடுங்கள் என்றார்.

    பாட்டியின் அனுபவ பகிர்வு : கோடை காலத்தில் நாவறட்சி தீர, இயற்கை பானங்கள் இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை சர்பத், தர்பூசணி பழம் எடுத்து கொள்ளலாம். இவற்றோடு பானகம் ஒன்றையும் அவ்வப்போது தயார் செய்து அருந்தலாம். இதற்கு வெறும் புளி, கருப்பட்டி, தண்ணீர் போதும்.

    புளியை தண்ணீரில் நன்கு கரைக்க வேண்டும். கருப்பட்டியை தட்டி அதோடு நன்கு கலக்க வேண்டும். பாத்திரத்தில் துணியால் வடிகட்ட வேண்டும். சுக்கும் ஏலக்காயும் சேர்த்து கொள்ளலாம். பானகம் ரெடி. இந்த பானக தயாரிப்பு இப்போது மெல்ல மறைந்து வருகிறது.

    கோடை காலத்தில், வெப்பத்தால் ஏற்படும் களைப்பை விரட்டும். பழரசத்தை விட நல்லது இந்த பானகம்.

    இதன் பார்முலா : கால்சியம் + இரும்பு சத்து + விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்.

    இரும்பு சத்தை அமினோ அமிலங்களை பனைவெல்லத்தில் இருந்தும், புளியிலிருக்கும் விட்டமின் சி-யானது பனைவெல்லத்துடன் இணைந்து, உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது. சுக்கின் நன்மை நம் எல்லோருக்கும் தெரியும். ஏலக்காய் உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகள், செரிமானத்தை சரி செய்யும். அற்புதமான பானகம். இந்த வெய்யிலுக்கு தயாரிப்பதும் எளிது.

    எது எப்படியோ, இவைகளுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.

    -ஆர்.எஸ். மனோகரன்

    • ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல் குறித்து கலை நிகழ்ச்சி நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • உலக சுகாதாரம் மற்றும் கல்வி பாதுகாப்பு அமைப்பின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள்

    விழுப்புரம்:

    உலக சுகாதாரம் மற்றும் கல்வி பாதுகாப்பு அமைப்பின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வேலூர் காவல்துறை சரகஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கவிஞர் கனககேசன்,பார்த்திபன், ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி பேசியதாவது,  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .

    அதுபோல் நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அனைத்து செல்வங்களையும் பெற முடியும் குறிப்பாக நாம் இருக்கும் வீடு நாம் இருக்கும் சுற்றுப்புறம் நாம் இருக்கும் பகுதி நாம் இருக்கும் ஊர் சுகாதாரமாக இருக்க வேண்டும். மேலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் மிக அற்புதமாக உள்ளது. இந்த அமைப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நான் கருதுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக இவ்வமைப்பின் நிறுவனர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில்அய்யனாரப்பன்,சுரேஷ்,சங்கீத்குமார்,ராகவேந்திரன், அய்யனார். சுரேந்திரன் பாஸ்கரன் சிவராஜ் சரத்குமார் சக்திவேல் ஐயப்பன் கந்தன் கல்யாண சுந்தரம் அபூபக்கர் சாந்தமுருகன், மணிகண்டன், ராம்குமார் உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே சுகாதார சீர்கேடு
    • வாழ்வாதாரம் காக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

    திருச்சி,

    தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ரெயில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்து செல்கிறார்கள். இதற்கிடையே திருச்சி மத்திய பேருந்து நிலையம் வ.உ.சி. ரோடு பகுதியில் 15-க்கும் மேற்பட்ட சாலையோர உணவு கடைகள் உள்ளன. இதில் பஸ், கண்டக்டர் டிரைவர்கள், வெளியூர் பயணிகள் உணவு அருந்தி வருகின்றனர். இங்கு சைவ மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் மேற்கண்ட சாலையோர உணவு கடைகளை சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.மேலும் அவர்கள் கூறும் போது, நாங்கள் கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை மாநகராட்சிக்கு சேவை வரி செலுத்தி வந்தோம். இப்போது மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற்று வரி செலுத்த தயாராக இருக்கின்றோம். மழைநீர் கடைகளில் தேங்கி நிற்பதால் மக்கள் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். வடிகால் மண் நிரம்பி அடைந்து கிடக்கிறது.நாங்கள் தான் தண்ணீரை அப்புறப்படுத்தி வியாபாரத்தை செய்கிறோம். இருப்பினும் திடீரென மழை பெய்தால் மீண்டும் தண்ணீர் சூழ்ந்து விடும். மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 19).கடலூர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார். சம்பவத்தன்று ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை மாநிலததில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஐஸ்வர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பராமரிக்கப்படுகிறது.
    • வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் மன அழுத்தம், உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

    நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம்.. அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம்? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.

    வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலணிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட ஷூ அணிவதை மார்டனாகவும், பெருமிதமாகவும் கொள்கிறோம்.

    மனிதன் காலணி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்படும் மாற்றம் பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒரு சுகாதார நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்..

    ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வேறும் கால்களுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்:-

    புவி இயற்கையாகவே நெகடிவ் சார்ஜ் (-) கொண்டது மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் கொண்டது. எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது.

    அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து வைட்டமின்- சி கிடைக்கிறது.

    உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பராமரிக்கப்படுகிறது.

    எலும்பு, கல்லிரல், மூளை (பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

    மற்றும் வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் மன அழுத்தம், உடல்வலி, தூக்கமின்மை, உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

    தொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்தஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் சீராக பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது. மிக முக்கியமாக இரத்த பாகுத்தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது. எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

    -பாலா

    ×