என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Houses"

    • பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்புகள் குலுக்கல் முறையில் 10.11.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
    • செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதிப்பிரிவு பொன்னையராஜபுரம், உப்பிலிபாளையம் 272 அடுக்குமாடி குடியிருப்புகள், வெள்ளக்கிணறு பகுதி நிலை 2 மற்றும் நிலை 3, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் உடுமலைப்பேட்டை எஸ்.எம்.டி. திட்டங்களும் மற்றும் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்ற சுயநிதி திட்டங்களான கணபதி சுயநிதி திட்டங்கள் பகுதி I, II, III மற்றும் சிங்காநல்லூர் சுயநிதி திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், மற்றும் மனைகளுக்கு 5.10.2022 மற்றும் 21.10.2022 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்புகள் குலுக்கல் முறையில் 10.11.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    இக்குலுக்கல் சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்கள்.

    • வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை.
    • சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர நடவடிக்கை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்ன ங்குடி, கீழையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பார்வையிட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,

    மேலும் சின்னங்குடி மீனவர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், அரசினர் உயர்நிலைப்பள்ளி சுற்றி குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதியளித்தார்.

    அதைத் தொட ர்ந்து கீழையூர், கிடாரங்கொ ண்டான், புன்செய், தலைச்சங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிரு ப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
    • நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    காங்கயம்:

    காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 11 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத காங்கயம் சத்யா நகா், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்

    • ஆத்திரமடைந்த புரோகிதர்கள் ஐயாவாளை சபித்தனர்.
    • நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருவிசநல்லூரில் ஸ்ரீதரஐயவாள் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பக்திநெறி தவறாமல் வாழ்ந்து வந்தார்.

    ஒரு சமயம் தன் தந்தையாருக்கு நீத்தார் கடனைச்செலுத்து வதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதற்காக புரோகி தர்கள் சிலரை வரவழைத்து சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு அந்த புரோகிதர்களை நீத்தாராக பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகு தான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும்.

    அந்த நேரத்தில் வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்துவிட்டார். உடனே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று, பசியால் மயங்கி கிடந்த அவருக்கு ஊட்டிவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள் ஐயாவாளை சபித்தனர். இங்கு தீட்டுபட்டுவிட்டது. நீ கங்கைக்கு சென்று நீராடி வந்தால் தான் அவை சரியாகும் என கூறினர். ஐயவாளும் கங்கை சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகும். அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என கடவுளை நினைத்து வேண்டினார்.

    அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது. உடனடியாக மக்கள் ஐயவாளிடம் வந்து முறையிட்டு கங்கையை அடக்குமாறு வேண்டினர். அதே போல் ஐயாவாளும் செய்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று நடைபெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை அமாவாசையை கங்காவரதண மகோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 4.00 மணி முதல் புனித நீராடல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நீராடினர். பின்னர் காவிரி ஆற்றுக்கு சென்று அங்கும் நீராடி மடத்தில் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதர ஐயவாளை வழிபட்டனர்.

    • செங்கிப்பட்டியில் எங்களுக்கு சொந்தமாக குடிமனையோ, வீடுகளோ கிடையாது.
    • ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி சேர்ந்த பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் காமராஜ், மாதர் சங்க மாவட்ட செயலாளர்கள் தமிழ் செல்வி , தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா செங்கிப்பட்டியில் எங்களுக்கு சொந்தமாக குடிமனையோ, வீடும் கிடையாது.

    ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிட மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கி உள்ளது. அதில் நீண்டகாலமாக குடியேறாமல் காலிமனை உள்ளது.

    குடியேறாமல் இருக்கும் காலி குடிமனை பட்டாவை ரத்து செய்து புதிதாக குடியேறி இருக்கும் எங்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது.
    • நீர்வள ஆதாரத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில மாதங்களாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி நகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட சுள்ளிக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள 58 வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறை சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டிருந்தது.

    இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றனர். இந்நிலையில் அப்பகுதியில் 8 வீட்டினர் மட்டும் பலமுறை கூறியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இதையடுத்து நீர்வள துறை ஆய்வாளர் செல்வராஜ், திருமுருகன் பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், கிராம நிர்வாக அலுவலர் யுகேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோர் முன்னிலையின் பொக்லைன் எந்திரம் மூலம் நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 8 வீடுகளை அகற்றினர். முன்னதாக வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் அகற்றி மாற்று இடங்களில் வைத்தனர்.  

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடந்து வருகிறது. இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
    • நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 70) என்பவர் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீ சார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசே கரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பா ளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் மேலும் அசம்பாவி தங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜேடர்பாளையம் பகுதி யில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் நித்யாவின் உறவினர்க ளுக்கு இந்த தீ வைப்பு சம்ப வத்தில் தொடர்பு இருக்க லாம் என்று கூறப்படும் நிலையில், அவர்களை அழைத்து போலீசார் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வன்முறை களுக்கு தீர்வு காண வேண்டும். பதட்டமான சூழ்நிலை தொடர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
    • கல்வீடு கட்டி தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பழங்குடியினர் பல இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கல்வீடு கட்டி தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் மனு அளித்தனர்.

    எனவே வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முயற்சியில் பழங்குடியினர் நலத் துறையில் தலா ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. இன்று பகத்சிங் நகரில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

    இதில் வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.கே.டி முரளி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிவாசகம், முருகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

    இதில் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதி செய்து கொடுக்காததால் பயனாளிகளால் புறக்கணிக்கப்பட்ட சுனாமி வீடுகள் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • சீமை கருவேல மர காடுகளுக்குள் வீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மக்களை சுனாமி பேரலை பாதிப்பிலிருந்து பாதுகாக்க திட்டம் வகுத்து கோடிகளை கொட்டி 144 கான்கிரீட் வீடுகளை கட்டி மணல் குடியில் ரம்மியமான கிராமம் அமைக்கப்பட்டது. அங்கு அடிப்படை வசதிகளோ வாழ்வாதார முன்னேற்பாடுகளோ செய்து கொடுக்கப் படாததால் குடியிருப்பு காலியாகி கருவேலமரம் மண்டிக்கிடக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி சுனாமி தாக்கியதில் தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது. இதனால் திரும்பும் திசையெங்கும் மரண ஓலம் பசி பட்டினியில் வாடிய மக்களை மீள் கட்டமைப்பு செய்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதிலும் குறிப்பாக வீடுகளை இழந்து தவிக்கும் பாதுகாப்பாற்ற மீனவ மக்களுக்கு இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை கவலையின்றி பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை மத்திய அரசின் நிதி உதவியோடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டப்பட்டது.

    அதனை பேரலை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்து கடந்த 2009-10-ம் நிதியாண்டில் வழங்கப்பட்டது.

    இந்தமாதிரியான மீனவ குடியிருப்புகள் பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதியில் கட்டப் பட்டுள்ளதை போல் ராமநாதபுரம் மாவட்டம் மணக் குடியில் அமைந்துள்ளது.

    மணக்குடி ஆற்றுநீர் கடலில் கலக்கும் ரம்மியமான முகத்துவாரம் பகுதி இயற்கையின் பசுமை மாறாது மண்மணக்கும் இடமாக இருக்கும் இந்த மணக்குடியில் க ழிவறை, படுக்கை அறை, வரவேற்பறை என அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 144 கான்கிரீட் சுனாமி வீடுகள் ரூ.425.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு ஆழிப் பேரலையில் பாதிக்கப்பட்டு பகுதியில் வாழ்ந்துவந்த மீனவ மக்களுக்கு வழங்கப்பட்டது.

    மீனவ கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரமே மீன்பிடி தொழில்தான். தற்போது மீனவ கிராமங்களிலிருந்து மீள்குடியேற்றம் என்ற பெயரில் வேளாண் பகுதியில் அவர்களை குடியேற்றியதால் வாழ்வாதாரத்திற்கு அவர்களால் என்ன செய்ய இயலும்?.

    இந்த கிராம மக்கள் போக்குவரத்து, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் வாழ தகுதியற்று தனித்து விடப்பட்டதை போல இருந்ததால் பேரெழுதி பூஜை போட்டு மகிழ்வோடு குடியேறினர். மக்கள் ஒரு சில மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வீட்டை காலி செய்ய தொடங்கி ஒட்டுமொத்த கிராமமே காலியானது.

    வசிக்க மக்கள் இல்லாததால் மெல்ல மெல்ல சமூக விரோதிகளின் கூடாரமாகி சீமை கருவேலமரம் வளரவே வீட்டை சுற்றி காடு என்ற நிலை மாறி இப்போது சீமை கருவேலமர காடுகளுக்குள் வீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மது, மாது என ஊருக்கு ஒதுக்குபுறமாக எந்த தொந்தரவும் இல்லாத ரிசார்ட்டாக மாறியுள்ள மணக்குடி சுனாமி வீடுகள் இப்போது சமூக விரோதி களின் கூடாரமாக மாறி வருகிறது.

    இது தொடர்பாக கருப்பன் குடும்பன் பச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சதீஷ்குமார் கூறுகையில், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தகுதி வாய்ந்த சரியான பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு வீடு ஒதுக்கியதால் இங்கு குடியேற மக்கள் முன்வர வில்லை. மணக்குடி சுனாமி குடியிருப்பில் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப் படாததால் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என பாதிக்கப்பட்ட பயனாளிகள் கூறுகின்றனர் என்றார்.

    • வீடுகளில் சிலாப்புகள் அடிக்கடி கீழே விழுந்ததால் வீடுகளை பராமரிப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 414 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பழைய வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன.

    நெல்லை:

    ஆதிதமிழர் பேரவையின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் இன்று நெல்லையில் நிருபர்களி டம் கூறியதாவது:-

    பாளை சாந்திநகர் அம்பேத்கர் நகரில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1992-ம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்டு 1997-ல் பணிகள் முடிக்கப்பட்டு 366 வீடுகள் எங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வந்தோம். அந்த வீடுகளில் சிலாப்புகள் அடிக்கடி கீழே விழுந்ததால் வீடுகளை பராமரிப்பு செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

    அதன் அடிப்படையில் 2017-ம் ஆண்டு பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகும் உரிய முறையில் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. எனவே பழைய வீடு களை இடித்து விட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரி களுக்கும் கோரிக்கை வைத்தோம்.

    இதைத்தொடர்ந்து 414 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பழைய வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன. ஆனால் 7 மாதமாகியும் இதுவரை புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்காமல் இருப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே நாங்கள் வெளியில் அதிக வாடகையில் வசித்து வருகிறோம்.

    இந்த பணிகளை ஆண்டு கணக்கில் கிடப்பில் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்னும் 10 நாட்களுக்குள் புதிய குடியிருப்புகள் பணிகள் தொடங்க வேண்டும். இல்லா விட்டால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன், திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென்மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
    • ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சாமராயப்பட்டி, பாப்பான்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் சாமராயப்பட்டி கிராமத்தில் விவசாயி சபரிஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 350 அடி நீளம் உள்ள கோழிப்பண்ணை பலத்த சேதம் அடைந்தது. மேலும் சூறாவளி காற்றால் கோழிப் பண்ணையின் மேற்கூரைகள் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டது .கோழி பண்ணையில் வளர்த்து வந்த சுமார் 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சாமராயபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் இது வரை பார்க்காத வண்ணம் சூறாவளி காற்றுடன் திடீரென மழை பெய்தது. விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .ஆயிரக்கணக்கான கோழிகளும் பரிதாபமாக உயிரிழந்தன . ஆகையால் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் சூறாவளி காற்றால் சேதமான வீடுகள் மற்றும் கோழிப்பண்ணைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    • ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.
    • ஒவ்வொரு வீடும் 320 சதுரடியில் மழை நேரங்களில் தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்னும் விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    இதுவரையில் மாவட்டம் முழுவதும் 10 செந்தமிழ் நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் 2 கட்டங்களை உள்ளடக்கியது.

    பட்டா கொடுப்பதற்காக தகுதியான இடத்தை நேரடி பேச்சுவார்த்தை அந்த மூலம் தனியாரிடம் இருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவு நீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்ட மாகும்.

    2-வது கட்டமாக ஒவ்வொரு பயனாளிக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டி கொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இதில் முதல் கட்டமாக 10 செந்தமிழ் நகர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2-வது கட்டமாக 4 செந்தமிழ் நகரில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பூதலூர் ஒன்றியம் புதுக்குடி ஊராட்சியில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்க ளுக்கு 13 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த வீடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

    முன்னதாக கலெக்டர் உள்ளிட்டோரை நரிக்குறவர் சமுதாய மக்கள் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

    இந்த வீடுகள் மாவட்ட கலெக்டரின் தன் விருப்பநிதி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனுதவி திட்டத்தின் மூலமாகவும் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. வீடுகளை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறி யதாவது:-

    விளிம்பு நிலை மக்களின் நலனில், மிகுந்த அக்கறை கொண்டு, கடந்த ஆண்டு, அவர்களின் குடியிருப்புக்கு நேராக சென்று, அவர்களோடு உணவு சாப்பிட்டு குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்வதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.

    மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விளிம்புநிலை மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    குறிப்பாக, சாதி சான்றிதழ் போன்ற, அடிப்படை தேவைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும்.

    அடுத்த கட்டமாக வீடு, மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் தற்போது தஞ்சை மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் 40 சென்ட் நிலத்தை தனியார் ஜனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் விலையின்றி இந்த இடத்தை விளிம்பு நிலை மக்களுக்கு அளித்தனர்.

    இதையடுத்து இங்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    நல்ல தரமான வீடுகளாக கட்டப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு வீடும் 320 சதுர அடியில் மழை நேரங்களிலே, தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

    இந்த 13 வீடுகளும் திறந்து வைக்கப்ப ட்டுள்ளது.

    இதனால், இந்த விளிம்புநிலை மக்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். முதல்-அமைச்சரின் இந்த சிறப்பு திட்டத்தில் இந்த வீடுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, பூதலூர் ஒன்றியக் குழுத் தலைவர் அரங்கநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×