என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inauguration ceremony"

    • திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் .
    • தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிறார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், பிரசவ காத்திருப்பு அறை மற்றும் சித்தா பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

    அதன்படி உடுமலை தாலுகாவில் எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மானுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆண்டியூர், கே.வல்லகொண்டாபுரம், அவினாசி தாலுகாவில் முறியாண்டம்பாளையம், தாராபுரம் தாலுகாவில் டி.ஆலம்பாளையம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    உடுமலை தாலுகாவில் அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை மற்றும் மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் சிலை அமைக்கப்பட்டது.
    • கருப்பசாமிபாண்டியன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் அருகில் கடந்த 1985-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு கெட்டியம்மாள்புரம் ராமையா தேவரால் சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலையை பராமரித்து வந்தனர்.

    இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 38ஆண்டு கால பழமையான சிமென்ட் சிலையை அகற்றி, அதற்கு பதிலாக புதியதாக முழுஉருவ வெண்கல சிலையையும், மணிமண்டபத்தையும், அதே இடத்தில் புதுப்பித்து அமைத்திட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    முதன்முதலில் சிலை அமைத்து கொடுத்த ராமையா தேவரின் மகன்களும், தொழிலதிபர்களுமான ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெண்கல சிலை அமைப்பதற்கும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினரின் தொடர் முயற்சிகளால் முத்துராமலிங்கத்தேவருக்கு கற்களால் மணிமண்டபமும், புதிய வெண்கல சிலையும் அமைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை திறப்பு விழா நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடைபெற்றது.

    விழாவிற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ் தேவர் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ஏ.ஆர்.காசிப்பாண்டியன், ஏ.ஆர்.ராமசுப்பிரமணியன் வெள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆர்.முத்தையா, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன், வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், பார்வர்டு பிளாக் மூத்த உறுப்பினர்கள் ஆறுமுகம் என்ற மருதுபாண்டியன், கால்வாய் முத்துபாண்டியன், மாவட்ட தலைவர் சிவராமன்கார்த்திக், மாநில மாணவரணி செயலாளர் கொம்பையாபாண்டியன், தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் துரைசரவணன், ஒன்றிய செயலாளர் சகாயம், நகர செயலாளர் விஜயன், நேதாஜி இளைஞர் படை தலைவர் ராமசாமி மற்றும் துரையப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பாற்கடல் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் ஆகியோர் முன்னிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வெண்கல சிலை, மண்டபத்தை திறந்து வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர்களும் மாநில அமைப்பு செயலாளர் களுமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ., இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர்கள் என்.சின்னத்துரை, சுதா பரமசிவம், முருகையாபாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர்முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், தொண்டர்கள், அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து சமுதாய பிரமுகர்கள், வணிகர் சங்கத்தினர், தொழில்அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஸ்ரீவைகுண்டம் நகர அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன் நன்றி கூறினார்.

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமத்தின் நிறுவனர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார்.
    • சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் எஸ்.ரகுபதி, நீதிபதிகள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    தற்போது எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரிக்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தொடக்க விழா மற்றும் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமத்தின் நிறுவனர் தொழில் அதிபர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார்.

    சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி மற்றும் பால்தாய் தங்கப்பழம், ரம்யாதேவி முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    சட்டக் கல்லூரியின் துணை முதல்வர் கலைச் செல்வி வரவேற்றார். சட்ட கல்லூரியினை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

    நூலகத்தை ஐகோர்ட் நீதிபதி பவானி சுப்புராயன், மூட் கோர்ட் ஐகோர்ட் நீதிபதி தாரணியும், முதல் மாணவர் சேர்க்கையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும் தொடங்கி வைத்தனர். கல்லூரி கலையரங்கத்தினை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியை வி.எஸ்.ஆர்.ஜெகதீசன் தொகுத்து வழங்கினார்.


    தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நீதிபதிகள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    திறப்பு விழாவில் நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி குமரகுரு, பன்னீர்செல்வம், சிவகிரி நீதிபதி பிரியங்கா, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், தென்காசி தனுஷ்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் ராஜா, தென்காசி பழனி நாடார், கடையநல்லூர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி, ராஜ பாளையம் தங்க பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட செய லாளர் சிவபத்ம நாபன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், வாசுதேவநல்லூர் பேரூராட்சித் தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், மகாத்மா காந்தி சேவா சங்கம் தவமணி, சுமங்கலி சமுத்திரவேலு, சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், சிவகிரி நீதிமன்ற அலுவலர்கள், கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சட்டக் கல்லூரியின் பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.

    • விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
    • கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் தலைமையில் பல்லடம் தொகுதி பூமலூர் பகுதியில் விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     விழாவில் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட ஆலோசகர் முருகானந்தம், தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இவ்விழாவில் மங்கலம் பகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் சம்சுதீன், துணை தலைவர் விக்னேஷ், பொருளாளர் நவீன், இளைஞரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பூர் மேற்கு பகுதி தலைவர் விஜய், பல்லடம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் 35 வது பேட்ச் டி.பார்ம், 31-வது பேட்ச் பி.பார்ம், 7- வது பேட்ச் பார்ம் டி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரி செயலாளர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். வத்திராயிருப்பு அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன், சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை மயக்கவியல் நிபுணர் ஜெகநாத் பிரபு ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு மருந்தியல் துறையின் எதிர்காலம் குறித்து பேசினர்.

    அரவிந்த் ஹெர்பல் லேப் நிர்வாக இயக்குநர் பரத்ராஜ், மெட் பிளஸின் சீனியர் மேனேஜர் வெங்கட் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவமனை டீன் சேவியர் செல்வா சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரிக்கும் ,மெட் பிளஸ், அரவிந்த் ஹெர்பல் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

    • புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
    • ஊராட்சி செயலாளர் கவிதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சியில், ரூ.19 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உத்தமராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, தி.மு.க.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன்,ஊராட்சி செயலாளர் கவிதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை சூர்யா நகர் அருகே ஜெய பாரத் ஹோம்சின் டைட்டன் சிட்டி தொடக்க விழா நடந்தது.
    • இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது

    மதுரை

    மதுரையை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரை சூர்யாநகரில் டைட்டன் சிட்டி என்ற பெயரில் 300 வீடுகள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா நடந்தது.

    ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார். ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குநர் நிர்மலாதேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஜெயபாரத் ஹோம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், சகோதரர்கள் அழகர், முருகன், செந்தில், சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் பேசுகையில், கட்டுமானத்துறையில் 27 வருடங்களாக உள்ளோம். 3-வது தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

    மதுரை மற்றும் கோவையில் எங்களது நிறுவனம் சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வாடிக்கையாளரும் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு வீடுகளை கட்டி தர சொல்கிறார்கள். நாங்களும் தரமான வீடுகளை கட்டித்தந்து கட்டுமானத்துறையில் அனைவரும் பாராட்டும் வகையில் வீடுகளை கட்டித் தருகிறோம்.

    மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டுகிறேன். டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளோம் என்றார்.

    அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி நடந்தது. இதனை ஆயிரக்

    கணக்கானோர் கேட்டு ரசித்தனர்.

    • தமிழர் தேசம் கட்சியின் பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது.
    • மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.

    மதுரை

    மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது. ஆலாத் தூரில் உள்ள கணேஷ் மகாலில் மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் கட்சியின் நிறுவனரும், தலைவருமான கே.கே. செல்வகுமார் கலந்து கொண்டு தென்மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரை யாற்றுகிறார்.

    மாநில பொதுச் செய லாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப் பாளர் குரு மணிகண்டன் உள்பட தலைமை நிர்வாகி கள் பேசுகிறார்கள்

    இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட பொறுப் பாளர்கள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொள்கின்ற னர்.

    தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட பொறுப் பாளர் அறிமுக விழா விற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்காடு ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தேசிய கொடி ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இதில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜூ, ஒன்றிய பொறியாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், சுந்தரம் உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது.
    • தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், சிவகங்கை மாவட்ட அலுவலர் சத்திய கீர்த்தி, உதவி அலுவர் தாமோதரன், பேரூராட்சித் தலைவர் நஜுமுதீன், நிலைய அலுவலர் பிரகாஷ், குமரேசன், பேரூராட்சி அலுவலர் கோபிநாத், பேராசிரியர் ஆபிதீன், ஒன்றிய துணைச்செயலர் சிவனேசன், துணைத்தலைவர் இப்ராகிம், இளைஞரணி பைரோஸ்கான், தகவல் தொழில் நுட்பஅணி கண்ணன், அழகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
    • நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    4.89 ஏக்கர் நிலத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டிட மான 'ஏ' பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்ப ளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    'பி' பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்ட ரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது.

    மூன்றாவது கட்டிடமான 'சி' பிளாக்கில் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ந் தேதி அந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், திட்டமிட்ட தேதியில் ஜனாதிபதியின் சென்னை வருகை ரத்தாகி உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்கிறார். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் அந்த விழா ஒத்திவைக்கப் பட்டு, ஜூலை முதல் வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் பொன்முடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விக்கிரவாண்டிஎம்.எல்.ஏ. புகழேந்தி, மாவட்ட விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ.லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சீலா தேவி, மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விசுவநாதன், திருவெண்ணைநல்லூர் யூனியன் சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஒன்றியகுழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏமப்பூர் தேவி செந்தில், டி.எடையார் சுந்தரமூர்த்தி வரவேற்றனர். இதில் தமிழக உயர்கல்வி த்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள்எம்.எல்.ஏ. புஷ்பராஜ் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட பிரதிநிதி பக்தவச்சலு மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு ,நந்தகோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சுபாஷ், மஞ்சுளா மாவட்ட விவசாய அணி துணை அமைப்பா ளர் விசுவநாதன், ஒன்றிய விவசாய அணி அமை ப்பாளர் வெங்க டேசன், தலைமைக் கழக பேச்சாளர் சிறுவனூர் பரசுராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்  

    ×