என் மலர்
நீங்கள் தேடியது "Israel Palestine war"
- ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது
- தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது என்றார் டிரம்ப்
நேற்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறது.
சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாற்றி கொள்ளும் உடன்படிக்கையின்படி ஈரானிற்கு அமெரிக்கா 6 பில்லியன் டாலர் வழங்கியிருந்தது.
இந்நிலையில், இந்த இரு சம்பவங்களையும் இணைத்து குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீது குற்றம் சாட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெட்கக்கேடானது. முழு பலத்துடன் தன்னை காத்து கொள்ளும் உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய ஜோ பைடன் அரசாங்கத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் ஹமாஸ் அமைப்பிற்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய தொகை ஹமாஸ் அமைப்பிற்கு சென்றிருக்கிறது.
இவ்வாறு டிரம்ப் குற்றம் சாட்டினார்.
ஆனால், இச்செய்தியை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ், "அமெரிக்காவின் 2 பெரிய கட்சிகளும், தன்னை காக்க போராடும் இஸ்ரேலுடன் கை கோர்க்க வேண்டிய வேளையில் இத்தகைய வெட்கக்கேடான பொய் செய்தியை டிரம்ப் வெளியிடுகிறார்" என பதிலளித்தார்.
- நேற்று காலை, ஹமாஸ் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்தியது
- இஸ்ரேலிற்கு கல்வி, பணி மற்றும் சுற்றுலாவிற்காக இந்தியர்கள் சென்று வருகிறார்கள்
யூத மதத்தினருக்கான உலகின் ஒரே நாடான இஸ்ரேலுடன் அதன் அண்டையில் உள்ள பாலஸ்தீனம் பல தசாப்தங்களாக சண்டையிட்டு வருகிறது. பாலஸ்தீனத்தில் பல போராளி குழுக்கள் இந்த நோக்கத்திற்காக செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது இரு தரப்பினருக்கும் போர் நடைபெறுவதும், பல திடீர் தாக்குதல்கள் மற்றும் உயிர்சேதங்களுக்கு பிறகு சில மாதங்கள் அமைதி திரும்புவதும் வழக்கம்.
ஆனால் நேற்று காலை, எதிர்பாராதவிதமாக இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் பெரும் உயிர்பலியை சந்தித்தது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருப்பதாக அறிவித்த இஸ்ரேல், "ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது" என எச்சரித்து போரை தீவிரமாக்கியுள்ளது.
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் நிலையை எடுத்திருக்கும் அதே சமயம் ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார். பல வருடங்களாக இஸ்ரேலிற்கு கல்வி, பணி மற்றும் சுற்றுலாவிற்காக இந்தியர்கள் சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் அதிகரிக்கும் போர் பதற்றத்தின் காரணமாக இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு விமான சேவையை வழங்கி வந்த டாடா குழுமம் இயக்கும் ஏர் இந்தியா, வரும் அக்டோபர் 14 வரை பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவினரின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்திய-டெல் அவிவ் இருவழி விமான சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
- ஹமாஸ் தாக்குதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
- இஸ்ரேலின் பதிலடியில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்
யூத மதத்தினருக்கான உலகின் ஒரே நாடான இஸ்ரேலுக்கும் அதன் அண்டையில் உள்ள பாலஸ்தீனத்திற்கும் பல வருடங்களாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. அவ்வப்போது இரு தரப்பினரும் பரஸ்பர ராணுவ தாக்குதல்களில் ஈடுபடுவதும் பிறகு சில மாதங்கள் தாக்குதல் நிறுத்தம் நடைபெறுவதும் வழக்கம். இஸ்ரேலுக்கெதிராக பாலஸ்தீனத்தில் பல பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று காலை, பாலஸ்தீனித்தின் ஹமாஸ் உள்ளிட்ட பல பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான், தரை, மற்றும் கடல் வழியாக ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இத்தாக்குதலால் இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; 1800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
"ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது" என எச்சரித்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருக்கிறது.
இஸ்ரேலில் சனிக்கிழமையன்று நடைபெற்றதை போன்ற சம்பவம், இனி எப்போதும் நடைபெறாதவாறு பார்த்து கொள்ளப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்தார்.
இந்நிலையில், இரு நாட்டிற்கும் இடையே உள்ள காசா முனை (Gaza Strip) பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படை நடத்திய பதிலடி தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டவர்கள் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவ படை தெரிவித்திருக்கிறது.
மேலும் பல போராளிகளின் மறைவிடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அங்கு இஸ்ரேலிய படையினர் இல்லாத நகரமே இல்லை எனுமளவிற்கு எதிர்தாக்குதலை தீவிரமாக்கியுள்ளது இஸ்ரேல்.
பயங்கரவாதிகளின் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்க கூடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிஸ்ஸி என்பவர்களால் துவங்கப்பட்டது
- இஸ்ரேலை ஒரு நாடாக ஹமாஸ் அங்கீகரிக்க மறுத்தது
வான்வழி தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள, இஸ்ரேல் "இரும்பு குவிமாடம்" (Iron Dome) எனும் அதி நவீன கட்டமைப்பை உருவாக்கியிருந்தது.
ஆனால் நேற்று காலை, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இதனை ஊடுருவி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் அதிகமான ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இது மட்டுமின்றி வான், தரை மற்றும் கடல் வழியே தனது அமைப்பாளர்களை கொண்டு இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையை தாண்டி இஸ்ரேலுக்குள் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது ஹமாஸ்.
உலகெங்கும் இந்த அமைப்பின் பின்னணியை குறித்து பெரிதும் விவாதிக்கின்றனர்.
1987ல் எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவம் (Egyptian Muslim Brotherhood) எனும் அமைப்பை சேர்ந்த அஹ்மத் யாசின் (Ahmed Yassin) மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிஸ்ஸி (Abdel Aziz Al-Rantissi) ஆகியவர்களால் துவங்கப்பட்டது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் என்றால் "தணியாத அதீத ஆர்வம்" (zeal) என பொருள்படும்.
இஸ்ரேல், மேற்கு கரை மற்றும் காசா முனை (Gaza Strip) பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரே நாட்டை உருவாக்குவதையே லட்சியமாக கொண்டது ஹமாஸ்.
1990களில் பாலஸ்தீனின் முன்னாள் அதிபர் யாசர் அராஃப்த் துவக்கிய ஃபடாஹ் (Fatah) எனும் இஸ்ரேலுக்கு எதிரான அமைப்பு, 2004ல் அராஃபத்தின் மறைவிற்கு பிறகு பலமிழக்க தொடங்கியது. அதற்கு பிறகு பாலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு மக்கள் ஆதரவும், குறிப்பாக இளைஞர்கள் ஆதரவும் கூடியது.
இந்த அமைப்பினருக்கு தவா (Dawah) எனும் கலாசார பிரிவும், இஜ்ஜத் தின் அல்-கஸ்ஸாம் (Izzat Din al-Qassam) எனும் ராணுவ பிரிவும் உள்ளது. ஹமாஸிற்கு ஈரான், சிரியா மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் ஆதரவும் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலும் பாலஸ்தீனத்திலும் ஹமாஸ் அமைப்பிற்கு பெரும் ஆதரவு உள்ளது. ஈரான், சிரியா, ஏமன், கத்தார் மற்றும் ஜோர்டான் உட்பட பல நாடுகள் ஆதரவளிக்கிறது.
ஆனால், எகிப்து, மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா ஹமாஸை ஆதரவிக்கவில்லை. மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மறுத்து, ஆயுத போராட்டத்தை ஊக்குவிக்கும் ஹமாஸிற்கும், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலமாக சிக்கலை தீர்த்து கொள்ள விரும்பும் ஃபடாஹ் அமைப்பிற்குமிடையே சித்தாந்த மோதல்கள் நடைபெறுகிறது.
2021-22க்கான பாலஸ்தீனியத்தின் உள்நாட்டு தேர்தலில் ஹமாஸ் பங்கேற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
தங்கள் மீதான நேற்றைய தாக்குதலுக்கு பதில் தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ள இஸ்ரேல், ஹமாஸை முற்றிலுமாக ஒழித்து விட உறுதியுடன் போரிட்டு வருகிறது. நீண்டகாலமாக செயல்பட்டு வந்த இந்த பயங்கரவாத அமைப்பின் முடிவு, இந்த போரின் இறுதியில் தெரிந்து விடும்.
- அலெக்சாண்ட்ரியாவில் போம்பே தூண் எனும் பிரபலமான சுற்றுலா தலம் உள்ளது
- காயமடைந்தவரை இஸ்ரேலுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது
மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள அரபு நாடான எகிப்தின் முக்கிய சுற்றுலா நகரம் அலெக்சாண்ட்ரியா (Alexandria).
கடற்கரை நகரமான அலெக்சாண்ட்ரியாவில் உள்ள பிரபலமான "போம்பே தூண்" (Pompey's Pillar) எனும் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த ஒரு குழுவினரின் மீது அந்நாட்டு காவல்துறை அதிகாரி ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் 2 இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும் ஒரு எகிப்து நாட்டை சேர்ந்தவரும் உயிரிழந்தனர்; மற்றொரு இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் காயமடைந்தார். அவரை இஸ்ரேலுக்கு அனுப்பும் முயற்சியில் எகிப்தும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
துப்பாக்கி சூடு நடத்திய அந்த அதிகாரி காவலில் எடுக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட அந்த சுற்றுலா பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
சமூக வலைதளங்களில் இது குறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் சுடப்பட்ட இருவர் தரையில் கிடப்பதையும், அதில் ஒருவருக்கு தலையிலிருந்து ரத்தம் வெளியாவதும் காண முடிகிறது. சுற்றுலா குழுவை சேர்ந்த இஸ்ரேலி பெண்கள் "ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ்" என உரத்த குரலில் உதவி கேட்பதையும் காண முடிகிறது.
நேற்று முன் தினம் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் நடத்தியதனால், பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதிக்குள் பெரும் தாக்குதல் வேட்டையை நடத்தி வருகிறது. இப்பின்னணியில், எகிப்தில் இஸ்ரேலியர் சுட்டு கொல்லப்பட்டுள்ளது உலகெங்கும் உள்ள இஸ்ரேலியர்களிடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.
- இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளனர்
- இரு தரப்பிற்கும் பல உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன
கடந்த சனிக்கிழமை காலை, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசி, தரை வழியாகவும் மற்றும் நீர் வழியாகவும் பல வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தள்ளதாக கூறி இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது வரை இரு தரப்பிலும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த போரின் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் இன்று எதிரொலித்தது.
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இந்தியாவின் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 500 புள்ளிகள் வரை சரிந்து 65,434 எனும் அளவை எட்டியது. பிறகு சற்று மேலெழுந்து 65,769 அளவை எட்டியுள்ளது.
தற்போது 65,576 எனும் அளவை தொட்ட நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.
தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty) 142 புள்ளிகள் சரிந்து 19,510 எனும் அளவை எட்டியது. தற்போது 19,529 எனும் அளவை தொட்ட நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா மற்றும் கனடா உட்பட பல நாடுகள் இருந்து வருகின்ற நிலையில், ஈரான், கத்தார் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக 2020 மற்றும் 2021 வருடங்களில் சரிந்திருந்த உலக பொருளாதாரம் பிறகு மெல்ல மீண்டு எழ ஆரம்பித்த நிலையில் ரஷிய உக்ரைன் போரினால் மீண்டும் சற்று நலிவடைய ஆரம்பித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீன போரில் பல நாடுகளும் பங்கு பெற ஆரம்பித்தால் உலக பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கி செல்லும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் உயிரிழந்தனர்
- மிருகங்களோடு சண்டையிடுகிறோம்; அதற்கு ஏற்ற வழிமுறைகளில் போரிடுகிறோம்
தெற்கு இஸ்ரேல் பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது.
வான்வழியாக 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் திட்டமிட்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இத்தாக்குதலில் இஸ்ரேலில் பொதுமக்கள் பலரை உள்ளடக்கிய 700க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் மீது போர் தொடுத்திருக்கிறது. ஹமாஸ் ராணுவத்தை முற்றிலும் அழிக்க போவதாக தன் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா முனை (Gaza Strip) எனப்படும் முக்கிய பிரதேசத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் இஸ்ரேல் கொண்டு வந்து விட்டது.
"அப்பகுதியில் அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. அனைத்தும் மூடப்பட்டு விட்டது. மின்சாரம், உணவு, குடிநீர், எரிபொருள் உள்ளிட்ட எதுவும் அங்கு கிடைக்காமல் செய்து விட்டோம். நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை; மிருகங்களோடு போரிடுகிறோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம்," என இது குறித்து இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Gallant) தெரிவித்தார்.
- தற்போது வரை இப்போரில் இரு தரப்பிலும் 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்
- இந்தியா இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக இருந்து வருகிறது
கடந்த சனிக்கிழமையன்று காலை இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதாக அறிவித்து பாலஸ்தீன எல்லை பகுதியான காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி இரு தரப்பிலும் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் உறுதிபட தெரிவித்துள்ளது. இப்போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் இப்போருக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில், இந்தியாவிற்கான பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா (Abu Alhaija) இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததன் பதில் நடவடிக்கையே ஹமாஸ் தாக்குதல். பாலஸ்தீன பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்பை இஸ்ரேல் நிறுத்தி கொண்டால் இஸ்ரேல் மீதான தாக்குதல்களும் நிற்கும். இந்த போருக்கு சர்வதேச நாடுகளும் ஒரு காரணம். ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 800க்கும் மேற்பட்ட தீர்மானங்களை இயற்றியது. ஆனால், இஸ்ரேல் அத்தீர்மானங்களின்படி நடந்து கொள்ளவில்லை. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இந்தியா ஒரு நட்பு நாடு. எனவே இந்தியா இப்பிரச்சனையில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையே தூதுவராக செயல்பட்டு ஒரு சுமூக முடிவு எட்ட முயற்சி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அல்ஹைஜா கூறினார்.
- இஸ்ரேல் ஹமாஸ் போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது
- காசா டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் மட்டுமே இருக்கும்
"ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்" (Operation Al-Aqsa Flood) என்ற பெயரில் ஒரே நேரத்தில் 5000க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவியும், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் மூலமாகவும் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக சிறை பிடித்தது.
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ள 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதி காசா (Gaza). ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா, இந்திய தலைநகர் டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் இருக்கும். இங்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
காசாவில் இரண்டு இடங்களில் மட்டுமே எல்லையை கடக்கும் இடங்கள் உள்ளன. இரண்டு திசைகளில் இஸ்ரேலும், ஒரு திசையில் எகிப்தும், மற்றொரு திசையில் மத்திய தரைகடலும் காசாவை சூழ்ந்துள்ளது. அங்கிருந்து உள்ளேயும் வெளியேயும் மக்கள் செல்வதை இஸ்ரேல் தீவிரமாக கண்காணிக்கிறது.
ஆனால் நிலம், நீர் மற்றும் வான்வழியை மட்டுமே இஸ்ரேல் கண்காணிப்பதால், அதை தாண்டி பூமிக்கடியில் சுரங்கம் அமைத்து அவ்வழியில் ராணுவ ஆயுதங்களும், தளவாடங்களும் காசாவிற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆயுத கடத்தலில் ஈடுபடுபவர்கள் மத்திய தரை கடல் பகுதியின் கரையோரங்களில் சுரங்கங்கள் அமைத்து இஸ்ரேல் கண்காணிப்பை தாண்டி காசாவிற்கு உள்ளே கொண்டு சென்றுள்ளனர். ஈரான் நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபாஹர்-3 (Fajr-3) ஃபாஹர்-5 (Fajr-5) ராக்கெட்டுகள் மற்றும் எம்-302 ராக்கெட்டுகள், ஈரானிலிருந்தும் சிரியாவிலிருந்தும் இந்த சுரங்க பாதைகள் வழியே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறும் போது அமெரிக்கா தான் பயன்படுத்திய ஆயுதங்களை அங்கேயே விட்டுச்சென்றது. அவை அந்நாட்டின் தலிபான் அமைப்பினரின் உதவியுடன் ஹமாஸிற்கு இதே வழியாக வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
- இஸ்ரேலிய பாதுகாப்பு படை துல்லியமாக தாக்குதல்கள் நடத்தி வருகிறது
- 2002 முதல் மொஹம்மத் டெய்ஃப் ஹமாஸ் அமைப்பின் மூளையாக செயல்பட்டு வருகிறார்
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி உடனடியாக இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது.
போர், ஐந்தாம் நாளான இன்றும் தீவிரமாக தொடர்கிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (Israeli Defence Force) தாக்குதல்கள் துல்லியமாக திட்டமிடப்பட்டு காசா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருந்த இடங்கள், அவர்களின் ஆயுத கிடங்குகள், பயங்கரவாதிகளின் செயலாக்கங்களுக்கு திட்டம் தீட்டப்படும் இடங்கள், பீரங்கி தாக்குதல் கட்டுப்பாட்டு தளங்கள் உட்பட பல இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் முக்கிய மையமாக விளங்கும் அல் ஃபர்கான் (Al-Furqan) பகுதியில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்தன. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூளையாக செயல்படும் மொஹம்மத் டெய்ஃப் எனும் பயங்கரவாதியின் தந்தையின் இல்லமும் அடங்கும்.
இத்தாக்குதலில் அவரது சகோதரர், தந்தை, குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரோக்கிய குறைபாடு காரணமாக சக்கர நாற்காலியில் வலம் வரும் நபரான டெய்ஃப், 2002 முதல் ஹமாஸ் அமைப்பிற்கு பயங்கரவாத திட்டங்களை வகுத்து தருவதில் முன்னிலை தலைவராக உள்ளார். இஸ்ரேல் ராணுவத்தினரால் தேடப்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளில் முக்கிய நபரான டெய்ஃப் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.
- இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
- இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது
கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.
தற்போது 5-வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.
இந்நிலையில், சீனா இப்போரில் யாரை ஆதரிக்கிறது என இதுவரை தெளிவாக கூறவில்லை.
"இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகைமையை கைவிட்டு பொது மக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம். அனைத்து விதமான வன்முறையையும் பொதுமக்களின் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம்" என சீனா அறிக்கை வெளியிட்டு நிறுத்தி கொண்டது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சீனா நடுநிலை வகிக்க முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- காசா முழுவதும் குண்டு வீச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது
- அனைத்து முக்கிய சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது
கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடுத்திருக்கிறது. காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தேடி தேடி வேட்டையாடி வருகின்றனர்.
காசா முழுவதும் குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள் உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் துண்டித்து விட்டது. இஸ்ரேலின் தாக்குதலால் காசாவிலுள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகிறது.
தற்போது அதிதீவிரமாக 5-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேர அவசர உதவி சேவையை குறித்து இந்தியா அறிவித்திருக்கிறது.
"பாலஸ்தீனத்தில் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் அங்குள்ள இந்தியர்களுக்கான அலுவலகத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்" என இந்தியர்களுக்கான அலுவலகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர, அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்களுக்காக இங்கு வெளியுறவு துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1800118797 (இலவச எண்)
+91-11 23012113
+91-11-23014104
+91-11-23017905
+919968291988