என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaggery"

    • கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
    • ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது.

     பரமத்திவேலூர்

    பரமத்திவேலூர் வட்டாரத்தில் அண்ணா நகர், சேளூர், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், ஜமீன் இளம்பள்ளி, சோழ சிராமணி ஜேடர்பா ளையம், கோப்பணம்பா ளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.

    பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கும் கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நேற்றைய ஏலத்தில் வெல்லம் விலை சற்று வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம், அண்ணா நகர் மற்றும் ஜேடர்பாளையத்தில் வெல்ல தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதைதொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அருண் தலைமையில் கபிலர்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அலுவலர்கள் ஜேடர்பாளையம் பகுதியில் செயல்படும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 16 ஆலைகள் தணிக்கை செய்யப்பட்டன. வெல்லம் பாகு தயாரிக்கும் இடம், பணியாளர்களின் சுத்தம், சர்க்கரை இருப்பு, வேதிப்பொருட்கள் இருப்பு போன்றவை தணிக்கை செய்யப்பட்டது. ஆய்வின் போது சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்கள் கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தரம் குறைவாக தயாரிக்கப்பட்ட வெல்லம், நாட்டுசர்க்கரை மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த 12 ஆயிரம் கிலோ சர்க்கரை, வேதிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு லேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    இந்த ஆய்வு குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் கூறுகையில், பிளாஸ்டிக் மட்டும் துணிக்கழிவுகள் போன்றவற்றை ஆலைகளில் எரிபொருளாக பயன்படுத்தக் கூடாது. மேலும் வெல்லம் தயாரிக்க சர்க்கரை, வேதிப்பொருட்கள் மற்றும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது. கலப்பட பொருட்கள் வைத்திருந்த ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த ஆய்வு வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

    • ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு எடுத்துக் கொள்ளவும்.
    • இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    நெல்லிக்காய் - 400 கிராம்

    இஞ்சி - 100 கிராம்

    வெல்லம் - 400 கிராம்

    எலக்காய் - 1/2 ஸ்பூன்

    நெய் - 4 ஸ்பூன்

    செய்முறை:

    • ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காய் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

    • நெல்லிக்காய் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்கவும். நெல்லிக்காயை லேசாக அழுத்தினால் வெந்துவிட்டதா என்று தெரியும்.

    • இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    • வேகவைத்த நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு எடுத்துக் கொள்ளவும்.

    • பாகு எடுத்த வெல்லத்தில் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் இஞ்சி விழுதை சேர்த்து நல்ல கெட்டியான பதத்திற்கு கிளறவும்

    • கிளறும் போது இடை இடையே நெய் சேர்க்கவும்.


    • நெல்லிக்காய் இஞ்சி மரப்பா பதத்திற்கு வந்து விட்டதா என்று சரிப்பார்க்க உங்கள் கையில் லேசாக நெய் தொட்டு மிதமான சூடு இருக்கும் போது எடுத்து உருட்டி பார்க்கவும் நல்ல உருண்டை பதம் வந்துவிட்டால் நீங்கள் செய்த நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடி என்று அர்த்தம்

    • அப்படி இல்லையென்றால் மறுபடியும் ஒரு 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

    • பின்னர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் உள்ள பாத்திரத்தில் மாற்றி உங்களுக்கு தேவையான வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    • இதோ சுவையான உடலுக்கு நல்ல ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடி.

    குறிப்பு: குழந்தைகளுக்கு இஞ்சியின் சுவை பிடிக்கவில்லை என்றால் இஞ்சிக்கு பதிலாக பாதாம் பருப்பு பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

    • பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
    • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 100 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல. இந்த பகுதியில் தயாராகும் வெல்லத்திற்கு தனி மவுசு உண்டு. குறிப்பாக செம்புகுடிப்பட்டி, அய்யனகவுண் டன்பட்டி, வலசை, கொண்டையம்பட்டி, கல்லணை, சம்பக்குலம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் ஆலை கரும்புகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்த கரும்புகளை விவசாயிகள் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தைப் பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். வெல்லம் பொங்கல் வைக்க பயன்படும் முக்கிய பொருளாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் இருந்து வந்தாலும் அலங்காநல்லூர் பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லத்திற்கு தனி மதிப்பும் சிறப்பும் உண்டு.

    இதுகுறித்து கரும்பு விவசாயி கல்லணையை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-

    எங்களுக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கிட்டத்தட்ட பரம்பரை பரம்பரையாக கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளாக ஆலையில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 5 முதல் 6 கொப்பரை வரை வெல்லம் தயாரிப்போம். தினம்தோறும் 500 கிலோ வரை வெல்லம் தயார் செய்து வருகிறோம். ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை மொத்த மார்க்கெட்டில் விலை போகிறது. 10 கிலோ கொண்ட ஒரு மணு ரூ.550 முதல் 700 வரை விலை போகிறது.

    ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 100 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம். 20 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து ஆலையில் நாட்டு வெல்லம் தயாரித்து வருகிறோம். வருடத்தில் 10 மாதம் வரை வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தவிர வேறு விவசாயிகளிடம் கரும்பு வாங்கி வெல்லம் தயாரிக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 40 டன் வரை கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு கொப்பரை வெல்லம் தயாரிப்பில் சுமார் 90 முதல் 95 கிலோ வரை வெல்லம் கிடைக்கும்.

    வெல்லம் தயாரிக்கும் பணிக்கு சுமார் 6 நபர்கள் வரை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட உழுவது, பார் போடுவது, தோகை உரிப்பது, இரண்டு முறை உரம் வைப்பது உள்ளிட்ட பராமரிப்பு செலவு மட்டும் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஆகிறது. கரும்பு வெட்டு கூலி, ஆலை ஆட்டு கூலி செலவு போக ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கரும்பு நடவிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பு தயாராக சுமார் 10 மாதங்கள் வரை ஆகிறது. இந்த ஆலை கரும்பு அறுவடை செய்து அதை வெல்லமாக காய்ச்சி பக்குவப்படுத்தப்பட்டு மண்டை வெல்லங்களாக தயாரித்து மொத்த வியாபாரத்திற்கு மதுரைக்கு அனுப்பப்படுகிறது.

    அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த மண்டை வெல்லத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கப் பட்டாலும் பிற மாநிலங்களில், அலங்காநல்லூர் பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு தனி மவுசு தான். வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய ஊதியம் கொடுக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை.

    வியாபாரிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். இதனால் இந்த தொழில் நலிவடைந்து போகிறது. அரசு நெல் கொள்முதலுக்கு விலை நிர்ணயித்தது போல இந்த நாட்டு வெல்லத்திற்கும் அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் எங்களைப் போன்ற நேரடி விவசாயிகள் கரும்பு ஆலை தொழிலாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.
    • இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.இவை மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை என தயாரிக்கப்படுகிறது.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் வருகிற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இனிப்பு பலகாரம் செய்யும் நிறுவனங்கள், அதிக அளவில் இனிப்புகளை செய்வர். இதனால் அதிக அளவில் வெல்லம் தேவைப்படுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வெல்ல சிப்பங்களை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். எனவே வெல்லம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் இரவு, பகலாக உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயார் செய்து அவ்வப்போது வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

    • சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.


    சேலம்:


    தமிழகத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்பு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும், இதைத்தவிர தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் விவசாயிகள் அனுப்புகின்றனர்.


    சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின்போது வெல்லம் தேவை அதிகரிக்கும்.


    இந்த நிலையில் வருகிற 4-ம் தேதி ஆயுதபூைஜ விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பெரும்பாலான வீடுகளில் சாமிக்கு படையலிட்டு பூஜை ெசய்து வழிபடுவார்கள். இதையொட்டி வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 30 சதவீதம் வெல்லத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.


    சேலத்தில் தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1300 முதல் ரூ.1350 என விற்பனை செய்யப்பட்டது. வருகிற தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு தயாரிக்க வெல்லத்தின் தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர்.


    • சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது.
    • 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

    சேலம்:

    சேலத்தில் கரும்புச் சாறினால் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு பொது மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் காமலாபுரம், ஓமலூர், நாலுகால்பாலம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர், தும்பல், டேனிஸ்பேட்டை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல இடங்களுக்கும் தவிர இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆடி மாதத்தையொட்டி வெல்லம்அதிகளவில் தேவைப்பட்டதால் கடந்த 6 மாதங்களில் ஜூன், ஜூலை வழக்கத்தைவிட வெல்லம் உற்பத்தியை அதிகப்படுத்தினர்.

    உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம் அவ்வப் போது விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆடிப்பண்டிகையை தொடர்ந்து, வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியும், செப்டம்பர் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கி, அக்டோபர் 4-ந் தேதி ஆயுதபூஜை விழாவும் நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

    சேலம் மாவட்டத்தில் கருப்பூர்,ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தினசரி 50 முதல் 60 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுக்க சேலம் மற்றும் தமிழகத்தில் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகை தருகின்றனர்.தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளோம்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. மண்டியில் 30 டன் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் வெல்லம் 60 சதவீதம் பெங்களூருக்கும், மீதமுள்ள 40 சதவீதம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் (1250 முதல்1350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

    • உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

    கரூர்:

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், பேச்சிப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் வேறு தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயா ரிக்கின்றனர். தயார் செய்யப் பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை. செய்து வருகின்றனர்.

    இங்கிருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,180 ரூபாய்க்கும், அச்சுவெல்லம், 1,200 ரூபாய் விற்பனையானது. இந்த வாரம் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,250 ரூபாய்க்கும், அச்சு வெல்லம், ஒரு சிப்பம், 1,250 ரூபாய்க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன், 2,400 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • கபிலர்மலை சுற்று வட்டார பகுதி உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளான அண்ணா நகர், பொன்மலர்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிப்பாளையம், பாகம் பாளையம், பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குறும்பலமகாதேவி, சிறு நல்லிக்கோவில்,தி. கவுண்டம் பாளையம் ,திடுமல், இருக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ரூ.2,400வீதம் விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். பின்னர் வெல்லங்களை நன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,180-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,200 -க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250 விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • உற்பத்தியாகும் வெல்லத்துக்கு முன்பு கேரளாவில் நல்ல ‘கிராக்கி’ இருந்தது.
    • கூடுதல் வரி விதிப்பை தவிர்த்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை ஏழு குள பாசனப்பகுதிகளில்கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ளது.இங்குள்ள விவசாயிகள், விளைநிலங்களில் ஆலை அமைத்து, வெல்லம் உற்பத்தியில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் ஒப்பந்த அடிப்படையில் வெல்லம் உற்பத்திக்கு கரும்பு விற்பனை செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் வெல்லத்துக்கு முன்பு கேரளாவில் நல்ல 'கிராக்கி' இருந்தது.

    குறிப்பாக ஓணம் சீசனை இலக்காக வைத்து ஏழு குள பாசனப்பகுதி மற்றும் அமராவதி பாசனப்பகுதிகளில், வெல்லம் உற்பத்தி செய்வது வழக்கம்.பல்வேறு காரணங்களால் கேரளாவில், தமிழகத்தில் உற்பத்தியாகும் வெல்லத்துக்கு வரவேற்பு குறைந்தது.ஓணம் சீசனிலும், அம்மாநில வியாபாரிகள் கொள்முதலுக்கு ஆர்வம் காட்டவில்லை.இவ்வாறு தொடர் பாதிப்பு ஏற்பட்டாலும், உற்பத்தியை முழுமையாக கைவிட முடியாத நிலை விவசாயிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் உள்ளது.

    தற்போதைய சீசனில் 30 கிலோ கொண்ட வெல்ல சிப்பம் 1,140 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    இது குறித்து வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: -

    வெல்லத்துக்கான உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. கரும்பு சாறு எடுத்தல், பாகு தயாரித்தல் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.கரும்பு வெட்டும் பணிக்கும் பிற மாவட்டங்களில், இருந்து ஆட்களை அழைத்து வருகிறோம். இதனால் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விலை அதிகரிக்காமல், குறைந்து வருகிறது.பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக வெல்லத்தை எடுத்துச்செல்லும் போது வரி விதிக்கப்படுகிறது. இத்தொழிலை காப்பாற்ற வெல்லத்துக்கு ஆதார விலை நிர்ணயித்து ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் வரி விதிப்பை தவிர்த்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். 

    • மாரப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,220க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220 விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அண்ணா நகர், சேளூர், செல்லப்பம்பா ளையம், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், பெரிய மருதூர் ,சின்ன மருதூர் ,ஆனங்கூர், அய்யம்பாளையம், வடகரை–யாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோழசிராமணி, சிறு–நெல்லிகோவில்,தி. கவுண்டம்பாளையம், திடுமல், கபிலக்குறிச்சி, மாரப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர் .பின்னர் வெல்லங்களைநன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர்.தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர் .வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,135க்கும், அச்சுவெல்லம் ரூ1,110 க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,220க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,220 விற்பனையானது.கரும்பு ஒரு டன் ரூ2,300 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ள தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. #diwali
    நொய்யல்:

    தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே இனிப்பு வகைகள் பிரதானமாக இருக்கும். இதற்காக வெல்லம் தயாரிக்கும் பணி கரூர் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

    நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச் செல்வதற்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,300-க்கு விற்பனை செய்கின்றனர்.

    கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை நவீன எந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதத்துடன் பாகு வந்தவுடன், மர அச்சுத் தொட்டியில் ஊற்றி உலர வைத்து குப்புற கவிழ்த்து மர சுத்தியலால் தட்டுகின்றனர். அதிலிருந்து அச்சு வெல்லம் விழுகிறது.

    அதேபோல மரத்தொட்டியில் கரும்பு பாகை ஊற்றி உலர வைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. பின்னர் நன்கு உலர வைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கப்படுகிறது. தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் இந்த பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,150-க்கும் வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். இந்த வாரம் ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1,200-க்கும், அச்சு வெல்லம் ரூ.1200-க்கும் வாங்கிச் செல்கின்றனர். வெல்லத்துக்கு ஓரளவு விலை கிடைப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #diwali
    ×