என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liberation Tigers Party"

    • திருப்பூர் பெரியார் சிலை முன்பிருந்து தொடங்கி, திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை பேரணி நடக்கிறது.
    • அவிநாசி பொன்.துரைசாமி , மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    திருப்பூர்:

    அம்பேத்கர் நினைவுநாளையொட்டி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திட வலியுறுத்தி திருப்பூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் பேரணி இன்று மாலை 3மணிக்கு திருப்பூரில் நடக்கிறது. திருப்பூர் பெரியார் சிலை முன்பிருந்து தொடங்கி, திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை பேரணி நடக்கிறது.

    பேரணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்குகிறார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் துரைவளவன் வரவேற்று பேசுகிறார். முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு பேரணியை தொடங்கி வைக்கிறார். சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பல்லடம் ரங்கசாமி, திருப்பூர் தெற்கு செல்வம், திருப்பூர் வடக்கு மூர்த்தி, காங்கயம் ஜான் நாக்ஸ் , துணை செயலாளர்கள் திருப்பூர் தெற்கு இளையராஜா, அவிநாசி பொன்.துரைசாமி , மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மண்டல அமைப்பு செயலாளர்கள் (கோவை-நீலகிரி) கலையரசன், திருப்பூர்-பொள்ளாச்சி வளவன் வாசுதேவன் ஆகியோர் அம்பேகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

    உயர்நீதிமன்ற வக்கீலும், மாநில செயலாளருமான பார்வேந்தன் பேரணி சிறப்புரையாற்றுகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் யாழ்ஆறுச்சாமி, திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட தலைவர் முகில் ராசு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநகர தலைவர் சண்.முத்துக்குமார், ஆதித்தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி துைண செயலாளர் ஈழவேந்தன், ஆதிதமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் பவுத்தன், தலித் விடுதலை கட்சி துணை பொதுச்செயலாளர் விடுதலை செல்வன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகின்றனர்.

    கிருத்துவ சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் கிப்டன் டேவிட்பால், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பழ.சண்முகம், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி குடியரசு, திருப்பூர் துணை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பேரணியை வழி நடத்துகின்றனர்.பேரணிக்கான ஏற்பாடுகளை விடுதலைசிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார்

    உடுமலை

    திருமாவளவனின் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்குமாவட்டம் சார்பில் நடைபெற்றது.

    உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட எலையமுத்தூர்,செல்வபுரம், கல்லாபுரம், பூளவாடி, கண்ணவ நாயக்கனூர் ,தளி, தீபாலப்பட்டி, வல்லகுண்டபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம் தலைமையில் விழா நடைபெற்றது .கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார் . சிறப்பு அழைப்பாளராக ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன் , மாநில நிர்வாகிகள் கிப்டன் டேவிட் பால், சத்தியமூர்த்தி,உடுமலை ஒன்றிய பொருளாளர் சக்திவேல்,எல்லை முத்தூர் ராமலிங்கம் ,செல்வபுரம் மாரிமுத்து ,தீபாலபட்டி திருமூர்த்தி, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, கடத்தூர் புதூர் முகாம் துணைச் செயலாளர் பிரபு, கடத்தூர் குணசேகரன், மாதவராஜ் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிகவினர்.
    • நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளு முற்று ஏற்பட்டது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 20-ந்தேதி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் குவிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அன்று இரவு கொடிக்கம்பத்தை 62 அடி உயர கொடி கம்பத்தை நட்டு வைத்து கொடியேற்ற முயன்றனர்.

    இதையறிந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து கொடிக்கம்பம் நாட்டுவதற்கு அனுமதி வாங்கவில்லை என்று கூறி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அதிகாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியரும், கீழ்வேளூர் ஆய்வாளரும் ஒருதலைபட்சமாக நடந்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். நாகை மற்றும் திருவாரூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

    இதில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும்.
    • சீமான் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்த உஞ்சைஅரசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எதிர்பார்பாகவும், வேட்கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை தணிய வேண்டும்.

    கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பிரச்சனையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதை வி.சி.க. வழிமொழிகிறது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடம் என்ற ஒன்று இல்லை என்று கூறியிருப்பது குறித்து பலமுறை விளக்கம் அளித்திருக்கிறோம்.

    திராவிடர் வேறு தமிழர் வேறு என்பது போல ஒரு விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங்பரிவார்களுக்கு துணை போவதாக அமையும்.

    இதை தமிழக கவர்னர் ஆர்.என். ரவியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் விரும்புகிறார்கள். இதை பா.ஜனதா அரசியலாக்கி வருகிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு துணை போகிற வகையில் சீமான் போன்றவர்களின் விவாதங்கள் அமைந்திருக்கிறது.

    தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும். ஆரியம் என்பதற்கான நேர் எதிரான கருத்தியலை கொண்டது திராவிடம் ஆகும். இதன் அடிப்படையில் தான் திராவிட அரசியலை கையாளுகிறோம். ஆனால், சீமான் தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.

    தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

    • கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    திண்டிவனம்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி மஞ்ச கொல்லை கிராமத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் குடி போதையில் அந்த வாலிபரை கடுமையாக அடித்தும், காலால் முகத்தில் உதைத்தும் அராஜகம் செய்தாக கூறப்படுகிறது.

    அந்த வாலிபர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.

    இந்த நிலையில் வன்னியர் சமூக மக்களிடம் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க அப்பகுதிக்கு சென்று வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சமாதானம் செய்துள்ளார்.

    ஆனால் விடுதலை சிறுத்தைகள் விநிர்வாகி ஒருவர்.தா. அருள்மொழியை கழுத்தை அறுத்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அது காணொளியாக முகநூலில் வலம் வந்தது.

    இந்த நிலையில் வன்னியர் சங்க தலைவர் மீது கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் வந்தனர்.

    அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் செய்யவிடாமல் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை போலீசார் தடுத்ததால் அப்பகுதியில் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • மும்பையில் அம்பேத்கரின் நினைவிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
    • 350 அடி உயரத்தில் அவரது வெண்கலச் சிலை நிறுவப்படுகிறது.

    சென்னை:

    அம்பேத்கர் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுவதை யொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மும்பையில் உள்ள சைத்யபூமி எனும் சட்ட மேதை அம்பேத்கரின் நினைவிடம் பல ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு 350 அடி உயரத்தில் அவரது வெண்கலச் சிலை நிறுவப்படுகிறது.

    இத்துடன் அவரது பெருவாழ்வை விவரிக்கும் கண்காட்சியகம், ஆராய்ச்சி மாணவர்களுக்கான நூலகம், கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

    அரசமைப்பு சட்டம் மற்றும் 'புத்தமும் அவரது தம்மமும்' என்ற நூல் ஆகிய இரண்டும் அம்பேத்கர் எனும் பேராற்றலின் பெருங்கொடைகள். இவை தீயவற்றை எரிக்கும் தூயவை. ஜனநாயக அறத்தை காக்கும் பேரரண். இந்த இரண்டையும் குறிவைத்துள்ள சனாதனத்தை அடையாளம் கண்டு, அதை முறியடிக்க அவரது நினைவு தினத்தில் உறுதியேற்போம். அவரது ஞான பேராயுதங்களை ஏந்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விக்கிரவாண்டியில் விஜய் பேசியது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    ஜெயங்கொண்டம்:

    அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட உயிர்களும், ஏராளமான கால்நடைகளும், விவசாய பயிர்களும் அழிந்துள்ளன.

    இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

    ஆகவே தமிழ்நாடு அரசும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார். இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம் போல போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னை ஒரு மாதத்திற்கு முன்பாகவே அழைத்திருந்தார்கள்.

    இருந்தபோதிலும் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளேன். புத்தக வெளியீட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    விக்கிரவாண்டியில் விஜய் பேசியது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது.

    நானும் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் அரசியல் சாயம் பூசப்படும். விஜய் மட்டும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கட்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். விஜய்க்கும் எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை, முரண்பாடும் இல்லை.

    ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக பேசி வருவது அவரது தனிப்பட்ட கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
    • ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இன்று மதியம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுரை பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய டங்ஸ்டன் சுரங்கம் அமைவது குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.

    ஆனால், நாங்கள் இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். வருகிற 12-ந்தேதி டெல்லி செல்கிறோம். திரும்பி வரும்போது நிச்சயம் வெற்றி செய்தியோடு வருவோம் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மேடை ஏறி முதலமைச்சர் குறித்து பேசி உள்ளார். இதனை கேட்ட மக்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியின் பிடி இருக்கிறது.

    மன்னர் ஆட்சி என்றால் தந்தைக்கு பின்னால் மகன், மகனுக்கு பின்னால் மகன் என்பது தான். அவர்களை துடைத்தெரியும் காலம் வந்துவிட்டது. ஆதவ் அர்ஜுனா பேச்சும், வி.சி.க. தலைவர் பேச்சும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமித்ஷா படத்தை கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர்.
    • அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர்:

    ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கண்டித்து ஒசூர் தொகுதி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் எம்.ஜி.ரோடில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது.

    இந்த நிலையில், மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென அமித் ஷாவின் உருவ படத்தை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர், கட்சியினரிடமிருந்து படத்தை கைப்பற்ற முயன்றார்.

    ஆனால் கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு, சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி, அமித் ஷாவின் படத்தை முழுவதுமாக எரித்தனர்.

    மேலும், அவரது படத்தை கீழே போட்டு கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ், ஜீபி கிருஷ்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம்.
    • கர்நாடகாவில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப் பட உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி பானை சின்னத்தையும் சமீபத்தில் ஒதுக்கியது. இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    சென்னை அசோக் நகர் கட்சி தலைமை அலுவலகத்தில் 24-ந் தேதி மாலை 4 மணிக்கு இந்த விழா நடை பெறுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகள் வரை தேர்தலை புறக்கணித்து மக்கள் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தது.

    1999-ம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இறங்கியது. தமிழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தி ஒரு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இணையாக பணியாற்றி வருகிறது.

    1990-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி கட்சியின் தலைவர் பொறுப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டார். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது விடுதலை சிறுத்தை கட்சி வெளி மாநிலங்களிலும் பரவி வருகிறது.

    மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம். கர்நாடகாவில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப் பட உள்ளது.

    தென் இந்தியாவில் தலித் தலைமையிலான ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும். திருமாவளவனின் தலைமையை ஏற்று அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பும் பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.
    • விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்றார்.

    ராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக உறுதியளித்துள்ளார்.

    1980 களில் இருந்து ஆயுதப் போராட்டத்தின் போது, ராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் நிலங்களை அபகரித்தது.

    குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் பலாலி இராணுவத் தளத்தைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்காக தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.

    2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2015 முதல் அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்கள் சிலவற்றை அரசு உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தது. இருப்பினும் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் அரசு வசமே உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபராக  தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக வடக்கு பகுதியின் முக்கிய நகரமான யாழ்ப்பாணத்திற்கு திசநாயக நேற்று [வெள்ளிக்கிழமை] வருகை தந்தார். அங்கு யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதிகளுடன் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தார்.

    அப்போது, வடக்குப் பகுதி தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்று அங்கு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் அனுர குமார திசநாயக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும்.
    • சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமூலைக்கிணறு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு பேசியதாவது:-

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. தேர்தல் வரப்போகிறது என்றால் என்ன பொருள்? 2026 தேர்தலில், ஆட்சியிலே அதிகாரத்திலேயே பங்கு பெறக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் வலிமை பெற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும். திருமாவளவன் முதலமைச்சராக வர வேண்டும். இதுதான் நமது கனவு. தலைவர் ஒருநாள் நிச்சயம் முதலமைச்சராக வருவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    1990-ம் ஆண்டு தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றும் போது இந்த கொடி விரைவில் கோட்டையில் பறக்கும் என்றார். இப்போது நாம் கோட்டைக்கு நமது கொடி கட்டி தான் செல்கிறோம். கோட்டைக்குள் கொடி கட்டிக் கொண்டு செல்லும் இயக்கமாக நமது இயக்கத்தை மாற்றியுள்ளார் நமது தலைவர்.

    ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் நமது கனவு என அம்பேத்கர் கூறியுள்ளார். அனைவரையும் இணைத்துச் செல்ல வேண்டும். சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.

    இன்று புதிதாக கட்சி ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்க வேண்டும். அதை மனப்பாடம் செய்து விட்டு ஓட்டு கேட்பது போல் நின்று விட்டு சென்று விடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×